திரிபலா என்பது பாரம்பரிய ஆயுர்வேத மருந்து. இது ஒரு நித்ய ரசாயனமாகவும், காயகல்பமாகவும் கருதப்படுகிறது. மூன்று பழங்கள் சேர்ந்த கூட்டுப்பொருள்தான் திரிபலா. அந்த மூன்று மூலிகைகள்: கடுக்காய் (Terminalia chebula), தான்றிக்காய் (Terminalia belerica), நெல்லிக்காய் (Emblica officinalis).