Thursday, August 30, 2018

வெறும் வயிற்றில் இந்த உணவுகளை எப்பவும் சாப்பிடாதீங்க!!

நல்ல உணவுகளாகவே இருந்தாலும் அதையதை அந்தந்த நேர்த்தில் சாப்பிட்டால்தான் நன்மை. நேரங்காலம் தெரியாமல் சாப்பிட்டால் அவை எதிர்வினையைத் தான் தரும்.
கீரை மிகவும் நல்லது. ஆனால் இரவில் சாப்பிட்டால் அஜீரணம் உண்டாக்கிவிடும். பால் நல்லது. ஆனால் தூங்குவதற்கு சற்று முன் குடித்தால் கெடுதல், அப்படி சில உணவுகள் வெறும் வயிற்றில் சாப்பிடவே கூடாது. அவற்றிலுள்ள அமிலத்தன்மை குடலின் உட்சுவரில் உள்ள படலத்தை அழித்துவிடும்.

வெந்தய டீ


வாரம் 3 முறை வெந்தய டீ குடித்தால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!!
வெந்தயம் இல்லாத சமையல் இருக்காது இட்லி மாவு முதல், செய்யும் குழம்பு வரை எல்லாற்றிலும் நாம் வெந்தயம் சேர்க்காமல் சமையல் செய்வதில்லை. அது வாசனை மற்றும் ருசி மட்டுமல்ல மிகவும் சத்துக்கள் நிறைந்தது.
வெந்தயம் கசப்புத்தன்மை கொண்டதால் குறைந்த அளவே நாம் வெந்தயத்தை சேர்க்கின்றோம். அதனால் வெந்தயத்தின் சத்துக்கள் சரியாக நமது உடலுக்கு சேர்வதில்லை. அதன் முழுச்சத்துக்களையும் பெற வெந்தய தேநீர் மிகச் சிறந்ததாக இருக்கும்.

Tuesday, August 28, 2018

வசம்பு

வசம்பைச்சுட்டு, கரியைத் தேனில் குழைத்து, குழந்தைகளின் நாக்கில் பூச, நன்றாகப் பேசுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்; குழந்தைகளுக்கு ஏற்படும் வாந்தி, பேதி கட்டுப்படும்.
வசம்பு காய்ச்சலைக் குறைக்கும், குடல் வாயுவைக் கலைக்கும், வயிற்றுப் புழுக்களை வெளியேற்றும், ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்தும்,பசியுண்டாக்கும்.

வசம்பை விளக்குத் தீயில் சுட்டு, தாய்ப்பாலில் 3 முறை உரைத்து குழந்தைகளின் நாக்கில் தடவ நாக்குத் தடுமாற்றம் (திக்குவாய்), வாயில் நீரொழுகல் தீரும். 

Sunday, August 26, 2018

குழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க

குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற சந்தேகம் வந்தவுடனேயே வசம்பைச் சுட்டுப் பொடியாக்கித் தேனில் குழைத்துக் குழந்தையின் நாக்கில் தடவி கொஞ்சம் கொஞ்சமாக உள்ளுக்குக் கொடுத்தால் வயிற்றில் பூச்சிகள் எளிதில் இறந்து விடுகின்றன.
சிறு குழந்தைகள் இனிபபு வகைகள் போன்றவற்றை அதிகம் சாப்பிடுவதால் பூச்சிகள் உண்டாகும். இதற்கு ஒரு எளிய வைத்தியம். தித்திப்பு மாதுளையை முதல் நாள் சாப்பிடக் கொடுத்து மறுதினம் பாலில் சிறிது விளககெண்ணையைக் கலந்து கொடுத்தால் பூச்சிகள் வெளியேறும்.

கொக்கிப் புழுக்கள் தொந்தரவிலிருந்து விடுபட, துளசிச் சாற்றுடன் எலுமிச்சைச் சாற்றைக் கலந்து குடித்து வரவும் தினமும் சில இலைகளை மென்று வந்தாலே புழுக்கள் வெளியேறும்.

கொட்டைப் பாக்கை சந்தனம் போல் இழைத்து சுமார் ஒரு ஸ்பூன் அளவு காலை வெறும் வயிற்றில் சிறிது பாலில் அல்லது தண்ணீரில் கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்க, குடல் பூச்சிகள் மொத்தமும் அன்றே வெளிவரும். கடும் பத்தியம் கிடையாது குழந்தைகளின் வயதுக்கேற்ப அளவைக் கூட்டியோ குறைத்தோ கொடுக்கலாம்.

வேப்பிலைக் கொழுந்துடன் சிறிது உப்பைச் சேர்த்து மையாக அரைத்து சுண்டைக்காய் அளவு உருண்டைகளாக்கி இரண்டு உருண்டைகளை (ஒரு குழந்தைக்கு) வெறும் வயிற்றில் சாப்பிடச் செய்யவும் பூச்சிகள் செத்து வெளியில் வந்துவிடும்.
நன்றி : தமிழரசி - புது தகவல்கள் 

Monday, August 20, 2018

*குளியல் பொடி* *தலைக்கு சீயக்காய்* #பொடுகு முடி உதிர்தலை தடுக்க#


கடலை மாவு - 1/2 கிலோ
பாசிப்பயறு மாவு - 1/2 கிலே
பூலாங்கிழங்கு பொடி - 200 கிராம்
ஆவாரம்பூ பொடி - 250 கிராம்
குப்பைமேனி பொடி - 100 கிராம்
சந்த
ம் - 100 கிராம்                                                                                                                                                 வெட்டி வேர் பொடி - 100 கிராம்

Sunday, August 5, 2018

மனித உடலில் உள்ள மூலப் பொருள்கள்

70 கிலோ கிராம் எடையுள்ள மனித உடலில் உள்ள மூலப் பொருள்கள்:
1. ஆக்ஸிஜன் 43 கிலோ கிராம்
2. கார்பன் 16 கிலோ கிராம்
3. ஹைட்ரஜன் 7 கிலோ கிராம்
4. நைட்ரஜன் 1.8 கிலோ கிராம்
5. கால்சியம் 1.0 கிலோ கிராம்
6. பாஸ்பரஸ் 780 கிராம்
7. பொட்டாசியம் 140 கிராம்
8. சோடியம் 100 கிராம்
9. குளோரின் 95 கிராம்
10. மக்னீசியம் 19 கிராம்

Saturday, August 4, 2018

வெந்நீர் அருந்தினால் இளமையாக இருக்கலாம் !

என்றென்றும் இளமையாக இருக்க தண்ணீரை அதிகளவில் உட்கொள்வது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது என பெரியவர்கள் முதல் மருத்துவர்கள் வரை சொல்லக்கேட்டிருப்போம்.
ஆனால், மிதமான நீரை பருகுவதை விட வெந்நீரை குடிப்பதால் அதிகளவில் நன்மைகள் உண்டு என்பது நம்மில் பலருக்கும் தெரியுமா என்பதே சந்தேகம் தான். தினமும் வெந்நீரை காலையில் அருந்துவது உடல் நலத்திற்கு ஆரோக்கியமானது என கூறுகின்றனர்.

Friday, August 3, 2018

நோய்கள் என்றால் என்ன?

நமது உடலில் இயற்கையாகவே 3 சக்திகள் உள்ளன..
இயங்கு சக்தி. -32 %
செரிமானசக்தி- 32 %
நோய் எதிர்ப்பு சக்தி - 36 %

காய்ச்சல் வரும்போது சாப்பிடாமல் இருந்தால்,அந்த செரிமான சக்தியான 32% ..நோய் எதிர்ப்பு சக்தியுடன் சேர்ந்து 32+36 % =68% /ஆக மாறி விடும்....