நல்ல உணவுகளாகவே இருந்தாலும் அதையதை அந்தந்த நேர்த்தில் சாப்பிட்டால்தான் நன்மை. நேரங்காலம் தெரியாமல் சாப்பிட்டால் அவை எதிர்வினையைத் தான் தரும்.
கீரை மிகவும் நல்லது. ஆனால் இரவில் சாப்பிட்டால் அஜீரணம் உண்டாக்கிவிடும். பால் நல்லது. ஆனால் தூங்குவதற்கு சற்று முன் குடித்தால் கெடுதல், அப்படி சில உணவுகள் வெறும் வயிற்றில் சாப்பிடவே கூடாது. அவற்றிலுள்ள அமிலத்தன்மை குடலின் உட்சுவரில் உள்ள படலத்தை அழித்துவிடும்.