Monday, October 29, 2018

அன்னாசி பூ – STAR ANISE- மருத்துவகுணங்கள்...

ஒவ்வொரு வீட்டுச் சமையறையிலும் சமையலுக்கு பயன்படும் பொருட்களின் மருத்துவக் குணங்கள் பற்றி அறிந்துவருகிறோம். இவற்றின் அளப்பறிய பயன்களை அறியாமலே நாம் பயன்படுத்தி வந்துள்ளோம். நம் முன்னோர்களின் அனுபவ முறையில் கண்டறிந்த மருத்துவ மூலிகைகள்தான் இவை. இவற்றை முழுமையாகப் பயன்படுத்தி வந்ததால் நோயின்றி வாழ்ந்தனர்.

Friday, October 26, 2018

பதினான்கு விதைகள்... பிரம்மாண்ட பலன்கள் ! # 14 Seeds Benefits

ன்றாடம் சமையலுக்கு நாம் காய்கறிகளையும் பழங்களையும் பயன்படுத்துகிறோம். சரி, அவற்றில் உள்ள முக்கியமான ஒன்றை வீணடிக்கிறோம். என்னவென்று தெரியுமா? விதைகள். காரணம், விதைகள்தானே என்கிற அலட்சியம். விதைகளின் மகத்துவத்தையும் மருத்துவக் குணங்களையும் அறியாததால்தான், அவற்றைத் தூர எறிகிறோம்.

Wednesday, October 24, 2018

சீரகம்

சீரகத்தின் மருத்துவப் பயன்கள்:
1. சீரகத்தை வாழைப்பழத்துடன் பிசைந்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ரத்த மூலம் தீரும்.
2. சீரகத்தையும், உப்பையும் சேர்த்து மென்று தண்ணீர் குடித்தால் வயிற்று வலி உடனே தீரும்.
3. சீரகத்துடன் கற்கண்டை கலந்து மென்று தின்றால் இருமல் போகும்.
4. சீரகப்பொடியோடு தேன் கலந்து சாப்பிட்டால் விக்கல் அகலும்.
5. சீரகத்தை அரைத்து மூல முளையில் பூசினால் மூலம் வற்றும்.

Tuesday, October 23, 2018

பழங்கள்

நிறைய பேருக்கு தெரியாத விஷயம் என்னவென்றால் நமது மூளை சுறுசுறுப்பாக வேலை செய்ய அதிகம் உதவுவது பழங்கள்தான். தினமும் பழங்கள் சாப்பிட்டால் நமது மூளைக்கு நேர்மறை அதிர்வுகளைத் தருகின்றன.
சித்தர்களும் காய் கனிகளையே பல நாட்கள் உண்டு நீண்ட ஆயுளுடன், திடகாத்திர ஆரோக்கியத்துடன் வாழ்ந்திருந்ததை நமது வரலாறு கூறும்.
பழங்கள்... நார்ச்சத்து, நீர்ச்சத்து, வைட்டமின் சி நிரம்பியவை. அதோடு நமது திசுக்களை அழித்துவிடாமல் பாதுகாக்கும் பைடோ கெமிக்கல்ஸ் நிரம்பியவை. அன்றாடம் பழங்களைச் சாப்பிடுவதால் புற்று நோய், இருதய நோய், மாரடைப்பு, மறதி, காட்ராக்ட் மற்றும் மூப்பில் வரக்கூடிய பல நோய்களைத் தடுக்கலாம். பழங்களைச் சாப்பிடுவதால் நமக்கு மன அழுத்தம் ஏற்படாமல் தடுக்கலாம்.

Saturday, October 6, 2018

ரோஜா இதழ்போல சிவப்பழகு


முகத்தையும் சருமத்தையும் பேணி பாதுகாக்க இயற்கை மூலிகைகள் நம்மிடையே நிறைந்து கிடக்கின்றன. இந்த மூலிகைகளை பயன்படுத்தி நீங்களே முக அழகைப் பெறலாம்.
அழகை விரும்பாத மனிதர்களே இருக்க முடியாது. அழகான முகத்தை பெற இன்றைக்கு பலவிதமான ரசாயனக் கலவைகளை முகத்தில் பூசுகின்றனர். சிலர் அழகு நிலையங்களை நோக்கி படையெடுக்கின்றனர்.

Tuesday, October 2, 2018

எந்த காய்கறியில்... என்ன சத்துக்கள்...!

வாழைத் தண்டு: கால்ஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுக்கள், வைட்டமின் பி, சி ஆகியவை உள்ளன. இது சிறுநீர் பாதையில் கல் அடைப்பு இருந்தால் கரைக்க உதவும்.
வாழைப்பூ: கால்ஷியம், பாஸ்பரஸ், புரதச்சத்து, நார்ச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின் பி, சி உள்ளன. மலச்சிக்கலை போக்க உதவும்.
வாழைக்காய்: இரும்புச் சத்து, போலிக் ஆசிட், வைட்டமின் ஏ, பி, சி உள்ளன. கர்ப்பிணி பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் ரத்தசோகையைத் தடுக்க உதவும்.

Saturday, September 29, 2018

வெந்தயம்


வெயில் காலத்தில் உடம்பு சூடு பிடித்து, அதனால் சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், வயிற்று வலி போன்றவற்றை சந்திப்போம்.
இந்த மாதிரியான தருணத்தில் உடல் வெப்பத்தை தணிப்பது எப்படி என்று யோசிப்போம்.
அதிலும் சிம்பிளான வழி என்னவென்று தான் பலரும் தேடுவோம். அதற்கு மிகவும் எளிமையான ஒரு வழி ஒன்று உள்ளது.
அது என்னவெனில் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சிறிது வெந்தயத்தை வாயில் போட்டு, தண்ணீர் குடிக்க வேண்டும்.

Tuesday, September 11, 2018

பெண் குழந்தைகள் அவசியம் சாப்பிட வேண்டிய உளுந்தங்களி எப்படி செய்வது?

பெண் குழந்தைகள் அவசியம் சாப்பிட வேண்டிய உளுந்தங்களி எப்படி செய்வது?
இந்த காலத்தில் டீன் ஏஜ் பெண்குழந்தைகளுக்கு சீரற்ற மாதவிடாய், ஹார்மோன்
கோளாறுகள், கர்ப்பப்பை வீக்கம், வெள்ளைப் படுதல் போன்றவை தென்படுகின்றன.
இவற்றிற்கு போதுமான சத்துக்கள் கிடைக்காமல் இருப்பதும் நல்ல உணவுகளை

சாப்பிடாமல், துரித உணவுகளையும், கார்பனேட்டட் பானங்களை குடிப்பதாலும், அவை கர்ப்பப்பையும் பாதிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Friday, September 7, 2018

பேரீச்சம் பழம்

முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழமாக பேரீச்சம் பழம் விளங்குகிறது.🔹

🔻ஆண்கள் தங்களுடைய ஆண்மைத் தன்மையை அதிகரிக்க தேனுடன் பேரீச்சம்பழம் சேர்த்து சாப்பிட ஆண்மை பெருகும். தாது புஷ்டி உண்டாகும்.🔹

🔻பெண்கள் மாதவிலக்கு காலங்களில் கால்சியம் மற்றும் இரும்புச் சத்து குறைபாடு ஏற்படும். இதை சரிசெய்ய பேரீச்சம் பழம் சாப்பிட வேண்டும். ஒழுங்கற்ற மாத விலக்கை ஒழுங்கு படுத்தவும் பேரீச்சம் பழம் உதவுகிறது.🔹

இயற்கை மருத்துவம்

1. உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்!
2. துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் ஏற்படாது.3. 1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள்,
3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கோப்பை நீரில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை 3-4 மாதங்களுக்கு தொடர்ந்து எடுத்துக் கொண்டுவந்தால் உடல் எடை குறையும்.
4. காலை உணவிற்கு முன் தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டு வரவேண்டும், ஒரு 3-4 மாதங்களுக்கு இதைச்செய்தால் உடல் எடை குறையும்.
5. தினமும் காலையில் முழுதாக வளர்ந்த 10-12 கருவேப்பிலைகளை சாப்பிட்டு வரவும், 3-4 மாதங்களில் உடல் பருமனில் மிகுந்த மாற்றத்தை காணலாம்.

Tuesday, September 4, 2018

இயற்கை மருத்துவம்

நீங்களும் மருத்துவர் ஆகலாம் !!!
• ஒரு தம்ளர் வெந்நீரில் ஒரு ஸ்பூன் சர்க்கரை, ஒரு ஸ்பூன் நெய் விட்டு கலக்கிக் குடித்தால் வயிற்று வலி மாயமாய் மறைந்துவிடும்.
• உடல் பருமனைக் குறைக்க இரவு ஒரு ஸ்பூன் ஓமத்தைத் தண்ணீரில் போட்டு, காலையில் வடிகட்டி ஒரு ஸ்பூன் தேனுடன் கலந்து குடித்து வந்தால் போதும்.
• அவரை இலையை அரைத்து தினமும் காலையில் முகத்தில் தடவி வந்தால், முகத்தில் இருக்கும் தழும்புகள், முகப்பருக்கள் நீங்கிவிடும்.
• பால் கலக்காத தேநீரில் தேன் விட்டுக் குடித்தால் தொண்டைக்கட்டு சரியாகும்.
• சுக்கைத் தூளாக்கி எலுமிச்சைச் சாறில் கலந்து தின்றால் பித்தம் குறையும்.
• மூட்டு வலியா? தேங்காய் எண்ணெய் - எலுமிச்சைச் சாறை கொதிக்கவிட்டு ஆறியபின் மூட்டுக்களில் தேய்த்தால் நிவாரணம் கிடைக்கும்.

80 வகையான வாதம் மூட்டுக்களில் நோய்கள் தோன்றக் காரணம்

முதுகுவலி,மூட்டுவலி,பக்கவாதம்(BACKPAIN,OSTEP ARTHRITIS, HEMPLEGIA)
சிசுக்களை திடுக்கிட வைத்தல், உதைத்தல், ஜீவ ஜந்துக்களை காலால் மிதித்தும் கையால் முரித்தல், வறுமையுற்ற முதியோர்களுக்குக் காலினால் ஏவலிடுதல், இவற்றால் வாத சம்பந்த வியாதிகள் அணுகும். 
உயிர்ப் பிரானிகளைகளைக் கட்டியும் தூக்கி ஊஞ்சலாடவிட்டும்,அறுத்தல், பசுவை அடித்தல்,ஜீவராசிகளின் வயிற்றைக்கீரி குடல் வெளிவரக் காணல் இவற்றால் வாத நோய் 84ல் ஆநந்த வாய்வு என்னும் ரோகம் சம்பவிக்கும் 
ஜீவ ஜந்துக்களின் கை கால்களை முறித்தெரிதல்,ஊர்வன,பறவை,காகம்,நாகம் இவற்றைக் காரணமின்றி வலிவிற் கொன்ற தோஷத்தால் கை,கால்களில் குத்தல் குடைச்சல் கரணைகளிற் பிடிப்பு முடக்கு வீக்கம் அணுகுமென்றறிக. 

Thursday, August 30, 2018

வெறும் வயிற்றில் இந்த உணவுகளை எப்பவும் சாப்பிடாதீங்க!!

நல்ல உணவுகளாகவே இருந்தாலும் அதையதை அந்தந்த நேர்த்தில் சாப்பிட்டால்தான் நன்மை. நேரங்காலம் தெரியாமல் சாப்பிட்டால் அவை எதிர்வினையைத் தான் தரும்.
கீரை மிகவும் நல்லது. ஆனால் இரவில் சாப்பிட்டால் அஜீரணம் உண்டாக்கிவிடும். பால் நல்லது. ஆனால் தூங்குவதற்கு சற்று முன் குடித்தால் கெடுதல், அப்படி சில உணவுகள் வெறும் வயிற்றில் சாப்பிடவே கூடாது. அவற்றிலுள்ள அமிலத்தன்மை குடலின் உட்சுவரில் உள்ள படலத்தை அழித்துவிடும்.

வெந்தய டீ


வாரம் 3 முறை வெந்தய டீ குடித்தால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!!
வெந்தயம் இல்லாத சமையல் இருக்காது இட்லி மாவு முதல், செய்யும் குழம்பு வரை எல்லாற்றிலும் நாம் வெந்தயம் சேர்க்காமல் சமையல் செய்வதில்லை. அது வாசனை மற்றும் ருசி மட்டுமல்ல மிகவும் சத்துக்கள் நிறைந்தது.
வெந்தயம் கசப்புத்தன்மை கொண்டதால் குறைந்த அளவே நாம் வெந்தயத்தை சேர்க்கின்றோம். அதனால் வெந்தயத்தின் சத்துக்கள் சரியாக நமது உடலுக்கு சேர்வதில்லை. அதன் முழுச்சத்துக்களையும் பெற வெந்தய தேநீர் மிகச் சிறந்ததாக இருக்கும்.

Tuesday, August 28, 2018

வசம்பு

வசம்பைச்சுட்டு, கரியைத் தேனில் குழைத்து, குழந்தைகளின் நாக்கில் பூச, நன்றாகப் பேசுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்; குழந்தைகளுக்கு ஏற்படும் வாந்தி, பேதி கட்டுப்படும்.
வசம்பு காய்ச்சலைக் குறைக்கும், குடல் வாயுவைக் கலைக்கும், வயிற்றுப் புழுக்களை வெளியேற்றும், ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்தும்,பசியுண்டாக்கும்.

வசம்பை விளக்குத் தீயில் சுட்டு, தாய்ப்பாலில் 3 முறை உரைத்து குழந்தைகளின் நாக்கில் தடவ நாக்குத் தடுமாற்றம் (திக்குவாய்), வாயில் நீரொழுகல் தீரும். 

Sunday, August 26, 2018

குழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க

குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற சந்தேகம் வந்தவுடனேயே வசம்பைச் சுட்டுப் பொடியாக்கித் தேனில் குழைத்துக் குழந்தையின் நாக்கில் தடவி கொஞ்சம் கொஞ்சமாக உள்ளுக்குக் கொடுத்தால் வயிற்றில் பூச்சிகள் எளிதில் இறந்து விடுகின்றன.
சிறு குழந்தைகள் இனிபபு வகைகள் போன்றவற்றை அதிகம் சாப்பிடுவதால் பூச்சிகள் உண்டாகும். இதற்கு ஒரு எளிய வைத்தியம். தித்திப்பு மாதுளையை முதல் நாள் சாப்பிடக் கொடுத்து மறுதினம் பாலில் சிறிது விளககெண்ணையைக் கலந்து கொடுத்தால் பூச்சிகள் வெளியேறும்.

கொக்கிப் புழுக்கள் தொந்தரவிலிருந்து விடுபட, துளசிச் சாற்றுடன் எலுமிச்சைச் சாற்றைக் கலந்து குடித்து வரவும் தினமும் சில இலைகளை மென்று வந்தாலே புழுக்கள் வெளியேறும்.

கொட்டைப் பாக்கை சந்தனம் போல் இழைத்து சுமார் ஒரு ஸ்பூன் அளவு காலை வெறும் வயிற்றில் சிறிது பாலில் அல்லது தண்ணீரில் கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்க, குடல் பூச்சிகள் மொத்தமும் அன்றே வெளிவரும். கடும் பத்தியம் கிடையாது குழந்தைகளின் வயதுக்கேற்ப அளவைக் கூட்டியோ குறைத்தோ கொடுக்கலாம்.

வேப்பிலைக் கொழுந்துடன் சிறிது உப்பைச் சேர்த்து மையாக அரைத்து சுண்டைக்காய் அளவு உருண்டைகளாக்கி இரண்டு உருண்டைகளை (ஒரு குழந்தைக்கு) வெறும் வயிற்றில் சாப்பிடச் செய்யவும் பூச்சிகள் செத்து வெளியில் வந்துவிடும்.
நன்றி : தமிழரசி - புது தகவல்கள் 

Monday, August 20, 2018

*குளியல் பொடி* *தலைக்கு சீயக்காய்* #பொடுகு முடி உதிர்தலை தடுக்க#


கடலை மாவு - 1/2 கிலோ
பாசிப்பயறு மாவு - 1/2 கிலே
பூலாங்கிழங்கு பொடி - 200 கிராம்
ஆவாரம்பூ பொடி - 250 கிராம்
குப்பைமேனி பொடி - 100 கிராம்
சந்த
ம் - 100 கிராம்                                                                                                                                                 வெட்டி வேர் பொடி - 100 கிராம்

Sunday, August 5, 2018

மனித உடலில் உள்ள மூலப் பொருள்கள்

70 கிலோ கிராம் எடையுள்ள மனித உடலில் உள்ள மூலப் பொருள்கள்:
1. ஆக்ஸிஜன் 43 கிலோ கிராம்
2. கார்பன் 16 கிலோ கிராம்
3. ஹைட்ரஜன் 7 கிலோ கிராம்
4. நைட்ரஜன் 1.8 கிலோ கிராம்
5. கால்சியம் 1.0 கிலோ கிராம்
6. பாஸ்பரஸ் 780 கிராம்
7. பொட்டாசியம் 140 கிராம்
8. சோடியம் 100 கிராம்
9. குளோரின் 95 கிராம்
10. மக்னீசியம் 19 கிராம்

Saturday, August 4, 2018

வெந்நீர் அருந்தினால் இளமையாக இருக்கலாம் !

என்றென்றும் இளமையாக இருக்க தண்ணீரை அதிகளவில் உட்கொள்வது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது என பெரியவர்கள் முதல் மருத்துவர்கள் வரை சொல்லக்கேட்டிருப்போம்.
ஆனால், மிதமான நீரை பருகுவதை விட வெந்நீரை குடிப்பதால் அதிகளவில் நன்மைகள் உண்டு என்பது நம்மில் பலருக்கும் தெரியுமா என்பதே சந்தேகம் தான். தினமும் வெந்நீரை காலையில் அருந்துவது உடல் நலத்திற்கு ஆரோக்கியமானது என கூறுகின்றனர்.

Friday, August 3, 2018

நோய்கள் என்றால் என்ன?

நமது உடலில் இயற்கையாகவே 3 சக்திகள் உள்ளன..
இயங்கு சக்தி. -32 %
செரிமானசக்தி- 32 %
நோய் எதிர்ப்பு சக்தி - 36 %

காய்ச்சல் வரும்போது சாப்பிடாமல் இருந்தால்,அந்த செரிமான சக்தியான 32% ..நோய் எதிர்ப்பு சக்தியுடன் சேர்ந்து 32+36 % =68% /ஆக மாறி விடும்....

Thursday, July 19, 2018

கறிவேப்பிலை

கறிவேப்பிலை மருத்துவத்தின் மகத்துவம் பற்றி பார்போம் வாருங்கள்! தொடர்ந்து 3 மண்டலம் (144 நாட்கள்) கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால்?…
பொதுவாக உணவில் நறுமணத்திற்காகவும் சுவைக்காகவும் சேர்க்கப்படும் கறிவேப்பிலையை அனைவரும் தூக்கி எறிந்துவிடும் அந்த கறிவேப்பிலையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக சாப்பிட்டு வந்தால் என்ன நன்மைகளெல்லாம் கிடைக்கும் என்று தெரியுமா?

Wednesday, July 18, 2018

மருதாணி

மருதாணி பொதுவாக வெப்பத் தன்மையும் துவர்ப்புச் சுவையும் கொண்டது. மருதாணி இலை பித்தத்தை அதிகமாக்கும்; இலைகள் கை, கால்களில் தோன்றும் சேற்றுப் பண்கள், அழுக்குப்படை, கட்டி, பித்த வெடிப்புகள் ஆகியவற்றை குணமாக்கும்.
மருதாணி வேர், நோய் நீக்கி உடலைத் தேற்றும்; மருதாணி பூக்களைச் சேகரித்து உலர்த்தி தலையணை போல் செய்து படுத்து வர நல்ல தூக்கம் உண்டாவதுடன், தலைப் பேன்களும் குறையும்.
மருதாணி மலர்கள், சிறியவை. வெண்மை, இள மஞ்சள் அல்லது இளஞ்சிவப்பு நிறமானவை. மணம் கொண்டவை. பெரிய நுனிக் கொத்துகளில் தொகுப்பாகக் காணப்படும்.

சாப்பிடும் முறை

1. கிழக்கு நோக்கிச் சாப்பிட ஆயுள்வளரும். தெற்கு நோக்கிச் சாப்பிட புகழ் உண்டாகும். மேற்கு நோக்கிச் சாப்பிட செல்வம் வளரும். வடக்கு நோக்கிச் சாப்பிடக் கூடாது
2. பித்ருக்களின் திதியன்று வீட்டில் அன்னதானம் செய்ய முடியாவிட்டால் உணவு விடுதியில் (ஹோட்டல்) பத்து டோக்கன் வாங்கி ஏழைகளிடம் கொடுத்து உண்ணச் செய்யலாம் .அவர்களிடம் பணமாகக் கொடுக்கக் கூடாது.

அத்திப்பழம்

அத்திப்பழம்
------------------------

அத்திப் பூத்தாப்போல இருக்கே?’ என்று ஒரு பழமொழி உண்டு. உண்மையில் அபூா்வமாக பூப்பதாக நினைக்க வேண்டாம். அது பூக்கலேன்னா எப்படி அத்திக்காயும் அத்திப்பழமும் நமக்குக் கிடைக்கும். அந்தப் பூ நம்ம கண்ணுக்கு அவ்வளவா தெரியறது இல்ல. ஏன்னா அது அடிமரத்திலயிருந்து உச்சி வரைக்கும் மரத்த ஒட்டியே காய்க்கும். அதனால் இதை “காணாமல் பூப் பூக்கும் கண்டு காய் காய்க்கும்” என்ற விடுகதையிலும் சொல்வர்.

Tuesday, July 17, 2018

இஞ்சி கேரட் ஜூஸ்

உடலில் தேங்கி இருக்கும் கெட்ட கொழுப்புக்களை 24 மணிநேரத்தில் வெளியேற்ற இதைக் குடிங்க
இஞ்சி கேரட் ஜூஸ் தயாரிப்பு முறை :
எத்தனை கிளாஸ் வேண்டுமோ அதற்கேற்ப கேரட் எடுத்துக் கொள்ளுங்கள். இங்கே ஒரு கிளாஸ் இஞ்சி கேரட் ஜூஸ் செய்யும் முறை விளக்கப்பட்டிருக்கிறது.

ஒரு கேரட் எடுத்து நன்றாக தோல் நீக்கி சுத்தம் செய்து கொள்ளுங்கள். பின்னர் அதனை சிறிது சிறுதாக நறுக்கி அரைத்து பேஸ்டாக்க வேண்டும்.பின்னர் அதில் ஒரு இன்ச் அளவுள்ள இஞ்சியை சேர்த்து அரைக்க வேண்டும்.
அதனை அப்படியே கிளாஸில் ஊற்றலாம். அல்லது வடிகட்டியும் ஊற்றலாம்.இஞ்சியை அப்படியே அரைப்பதற்கு பதிலாக இஞ்சிச் சாறு எடுத்தும் சேர்க்கலாம். உடன் ஒரு ஸ்பூன் தேன் மற்றும் சிறிதளவு மிளகுத்தூளைச் சேர்த்து பருகலாம். (வெள்ளைச் சர்க்கரை, கூடுதலான தண்ணீர் சேர்க்க வேண்டாம்.)

Wednesday, July 11, 2018

கடுக்காய்

தாயைக் காட்டிலும் சிறந்தது இந்த உலகில் உண்டா? இருக்கிறது என்கிறார்கள் சித்தர்கள்.
கடுக்காய்தான் அது.
அம்மாவோ ஆறு சுவைகள் ஊட்டி, பிணியற்ற உடலை மட்டுமே தேற்றுவாள். அறுசுவையும் கொண்ட கடுக்காய், நோய் ஓட்டி உடல் தேற்றும். அப்படியானால் நோயைப் போக்கும் கடுக்காய்தானே தாயினும் சிறந்தது என்கிறார் அகத்திய சித்தர்.

மூலிகைகளில் தலைசிறந்த மூலிகை கடுக்காய். எண்ண முடியாத மருத்துவ குணங்கள் கொண்டது. இதைத் தேடி ஏழு கடல், ஏழு மலை தாண்டி எல்லாம் செல்ல வேண்டியதே இல்லை. எல்லா நாட்டு மருந்துக்கடைகளிலும் குறைந்த விலைக்கு கிடைக்கும் மூலிகைச்சரக்கு இது. ஒவ்வொரு வீட்டிலும் உப்பு சர்க்கரை மாதிரி வாங்கி வைத்திருக்க வேண்டிய பொருளும்கூட.

Wednesday, July 4, 2018

இயற்கை மூலிகை குளியல் பொடி



குளியல்பொடி தயாரிக்கும் முறை
கஸ்தூரி மஞ்சள்
கிளியூரம்பட்டை
சடாமாஞ்சில்
பூலாங்கிழங்கு
பூஞ்சாந்துப்பட்டை
பச்சிலை
கோரைக்கிழங்கு

நாவல் பழம்

நாவல் பழத்தின் மருத்துவக் குணம்
நாவல் பழத்தின் துவர்ப்புச் சுவை ஒரு சிறப்பு அம்சமாகும். 
நாவல் பழம் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். இரத்தத்தில் இரும்புச்சத்தை அதிகரிக்கும். 
இதனால் இரத்தத்தின் கடினத் தன்மை மாறி இலகுவாகும்.
மேலும் இரத்தத்தில் கலந்துள்ள இரசாயன வேதிப் பொருட்களை நீக்கி சிறுநீர் மூலம் வெளியேற்றும்.

Tuesday, July 3, 2018

தேன்... தேன்... #தேன்...

1~ பாலில் தேன் கலந்து இரவில் சாப்பிட, நல்ல தூக்கம் வரும்.
#இதயம் பலம் பெறும்.
2~ மாதுளம் பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால்,
புது #ரத்தம் உண்டாகும்.
3~ பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால்,
நல்ல #சக்தி உண்டாகும்.

Thursday, June 28, 2018

கருஞ்சீரகம்

கருஞ்சீரகத்தில் ‘தைமோகியோனின்’ என்ற வேதிப்பொருள் உள்ளது. இது சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. இதில் உடலுக்கு நன்மை செய்யக்கூடிய கொழுப்பு உள்ளதால் கெட்ட கொழுப்பு குறையும். ஒவ்வாமையும் நீங்கும். தோல் நோய்களுக்கு கருஞ்சீரகம் சிறந்த மருந்து. இதனை பொடி செய்து கரப்பான் மற்றும் சொரியாஸிஸ் நோய் இருப்பவர்கள் தேய்த்து குளித்து வரலாம்.
புண்களால் ஏற்படும் தழும்புகளும் மறையும். குளியலுக்கு பயன்படுத்தும் பொடிகளில் கருஞ்சீரகத்தை அரைத்து சேர்த்து, பயன்படுத்துவது நல்லது.

Tuesday, June 26, 2018

திரிபலா தரும் நன்மைகள்...

திரிபலா பொடியை இரவில் சாப்பிட்டால், நன்மைகள் ஏராளமாகக் கிடைக்கும். அதை மனதில் கொள்ளவும்.
* முதுமையைத் தாமதப்படுத்தி, இளமையைத் தக்க வைக்க உதவுகிறது.
* இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இதயநோய்கள் வராமல் தடுக்கிறது. புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடும்.
* உணவுப் பாதை நச்சுப்பொருட்களை நீக்கி, குடல் இயக்கத்தைச் சீராக்குகிறது. செரிமானக் கோளாறுகளைச் சரி செய்கிறது. உடலில் உள்ள நச்சுப்பொருட்களை நீக்கும். சிறந்த மலமிளக்கியாகவும் செயல்படுகிறது.

Friday, June 22, 2018

புதினா கஷாயம்

வீசிங் ,வரட்டு இருமல் , குரல் மங்கல், தொண்டையில் சளிகட்டு நீங்கிட ....
" புதினா கஷாயம் "
* ஒரு கைப்பிடி அளவு புதினா இலை.
* ஐந்து மிளகு நசுக்கி
* ஐந்து பூண்டு பல் நசுக்கி.
* ஐந்து வெற்றிலை

இவைகளை 250 மில்லி தண்ணீரில் இட்டு காய்ச்சி வடிகட்டி அதில் அதிமதுரப்பொடியை மூன்று விரல்களால்(திரிகடி பிரமாணம் ) எடுத்து போட்டு கலக்கி தினசரி காலை ,மாலை ,ஆகாரத்திற்கு முன் 21 நாட்கள் சாப்பிட்டு வர
வீசிங் ,மூக்கடைப்பு, ஈஸ்னோபிலியா, தும்மல்,வரட்டு இருமல்,தொண்டை சளிகட்டு ,குறல்மங்கல் ,காது அடைப்பு நீங்கும்
நன்றி : ஸ்ரீ ஷீரகிரி வேலவன் 

Tuesday, June 19, 2018

உடலில் இரத்தம் அதிகரிக்க, ஆண்மை பெருக மூன்று சிறந்த இயற்கை உணவுகள் இதோ!

அத்திப்பழம், பேரிச்சம்பழம், தேன் ஆகிய மூன்றுமே சிறந்த இயற்கை ஆரோக்கிய உணவுகளாகும். இவை அனைத்தும் நீங்கள் நாள்தோறும் சாப்பிட்டு வந்தால் உடல் வலிமை, நோய் எதிர்ப்பு சக்தி விரைவாக அதிகரிக்கும். இதில், பேரிச்சம்பழம் – தேன் கலவை ; மற்றும் அத்திப்பழம் – தேன் கலவை சாப்பிட்டு வருவதால் உடலில் இரத்தம் அதிகரிக்கும், ஆண்மை பெருகும்…

Saturday, June 16, 2018

குழந்தை பாக்கியம் தள்ளிப் போகிறதா? இதோ இயற்கை வைத்திய முறை…

மாதவிலக்கு கோளாறுதான் குழந்தை பேறு தள்ளி போக காரணம் என்றால் அந்தக் கோளாறு நீங்கி, கருத்தரிக்கறதுக்கு இயற்கை வைத்திய முறைகள் உள்ளது. அது குறித்து பார்க்கலாம்.
மாதவிலக்கு கோளாறு காரணமாக குழந்தை பாக்கியம் தள்ளிப் போகிறதா?
இப்ப எல்லாம் குழந்தை இல்லைனு ஏக்கப்படற தம்பதிகளோட எண்ணிக்கை அதிகமாயிடுச்சு. குழந்தை பாக்கியம் கிடைக்காம போறதுக்கு உடல்நிலை, வாழ்க்கைமுறை, உணவுப் பழக்க வழக்கம்னு பல விஷயங்கள் காரணமா இருக்கு! மாதவிலக்குக் கோளாறுகள் இருந்தாலும்கூட கருத்தரிக்கறதுல சிக்கல் வரும். மாதவிலக்கு கோளாறுதான் காரணம் என்றால் அந்தக் கோளாறு நீங்கி, கருத்தரிக்கறதுக்கு இயற்கை வைத்தியமுறைகள் உள்ளது. அது குறித்து பார்க்கலாம்.

இளநரை போக்க கறிவேப்பிலையை எப்படி பயன்படுத்த வேண்டும்தெரியுமா?

இளவயதிலேயே தலைமுடி நரைக்க ஆரம்பித்து முதுமையை வெகுவிரைவில் கொண்டு வந்து விடுகின்றது. இவர்கள் தினமும் உணவில் சேர்க்கும் கறிவேப்பிலையை ஒதுக்காமல் சாப்பிட வேண்டும்.
கறிவேப்பிலையை தலையில் தேய்க்கும் எண்ணெயில் போட்டு காய்ச்சி ஆறவைத்து பாட்டிலில் அடைத்து தலையில் தேய்த்து வந்தால் இளநரை மாறும்.மேலும் வாரத்துக்கு ஒரு முறை, ஒரு பிடி கறிவேப்பிலையை அரைத்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள்.
அதனுடன் சீயக்காய், ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்து, சிறிது நேரம் ஊற வைத்து அலசும்போது, கூந்தல் கருகருவென வளர ஆரம்பிக்கும். முடி செம்பட்டையாக இருந்தாலும் கருமையாக்கி கண் சிமிட்ட வைத்திடும்.

சுண்டைக்காய்

நாம் அன்றாடம் உணவில் சேர்க்கும் சுண்டைக்காய் ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இந்த காய் கசப்பு சுவை கொண்டிருந்தாலும் உடலுக்கு ஊட்டச்சத்தாக மாறி உடலை ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளையும் கொடுக்கிறது.
மார்புச் சளியை கரைக்க சுண்டைக்காய் வழியமைப்பதாக ஆராய்ச்சிகள் குறிப்பிடுகின்றன. அந்த வகையில் சுண்மைக்காயின் நன்மைகளை கீழே காணலாம்.

Tuesday, June 12, 2018

பெண்களுக்கு உதவும் அற்புத பாட்டி வைத்தியம்.

பெண்கள் கண்டிப்பாக ஆறு மாதங்களாவது குழந்தைகளுக்கு தாய்ப்பால் தர வேண்டும்.
மார்பகங்கள் எடுப்பான தோற்றம் பெற அமுக்காரா, அதிமதுரம், முல்தானி மட்டி மூன்றையும் சம அளவில் எடுத்து அரைத்துக் கொள்ளவும். பின்பு பருப்பு வேகவைத்த தண்ணீரில் இந்தக் கலவையை குழைத்து பற்று போட்ட வேண்டும்.
* மாதவிலக்கு நேரங்களில் ஏற்படும் மார்பக வலியைக் குறைக்க சுடுதண்ணீர் ஒத்தடம் கொடுக்கலாம்.
* மார்பக வலியைக் குறைக்க உளுந்தை அரைத்து பற்றுப் போட்டு அதன் மீது வெந்நீர் ஒத்தடம் கொடுக்கலாம்.
* வைட்டமின் ஏ சத்துள்ள கீரை வகைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். அகத்திக் கீரை மற்றும் முருங்கைக் கீரையை அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் புற்றுநோய் வாய்ப்புகளை குறைக்க முடியும்.

Monday, June 11, 2018

என்டோகிரைன் சுரப்பிகளில் ஏற்படும் பிரச்சனைகளை தைராய்டு நோய் என்று அழைக்கிறோம். இது மிகவும் சகஜமான ஒரு நோயாகும். பயப்படவோ அச்சப்படவோ தேவையில்லை. அதாவது நம் உடல் தைராய்டு ஹார்மோன்களை அதிகம் உற்பத்தி செய்வதே தைராய்டு நோயாகும்

*மூளை முதல் மலக்குடல் வரை... உறுப்புகளை பலப்படுத்த எளிய வழிகள்*

🔯ஆயுர்வேத ரகசியங்கள்🔯
*******************************
*மூளை முதல் மலக்குடல் வரை... உறுப்புகளை பலப்படுத்த எளிய வழிகள்*
*நேரமின்மை* இன்றைக்கு ஒரு பெரும் பிரச்னை. இதனால் வாழ்க்கைத் தரம் குறைந்து வருகிறது. நோய்களே இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது வருத்தப்படவேண்டிய செய்தி. நேரத்தை குறைந்த அளவில் எடுக்கும், சில எளிய வீட்டு வைத்தியங்கள் நிறையவே உள்ளன. அவை நம் ஆரோக்கியத்தின் கவசமாகும். அவற்றைத் தெரிந்து கொண்டால், நோய் வரும் முன் நம்மைக் காத்துக்கொள்ளலாம். அதாவது, ரத்தம் சுத்தமில்லாமல் இருப்பது, அதைத் தொடர்ந்து உள்ளுறுப்புகள் பாதிப்பதே நோயாக வந்து நம்மைத் துன்புறுத்துகிறது. ஆகவே, நோய் வரும் வாய்ப்பையே தடுத்துவிட்டால் ஆரோக்கியம் எப்போதும் நம் வசமே. அன்றாடம் பயன்படுத்தும் இயற்கை விளைப்பொருட்களின் மூலம் நம் உடலின் உறுப்புகளைப் பலப்படுத்தும் வழிமுறைகளைப் பற்றிப் பார்க்கலாம்.

Thursday, May 31, 2018

உடம்பில் உள்ள சளி உடனே வெளியேற நீங்கள் செய்ய வேண்டிய எளிய முறை!

பொதுவாக சிலருக்கு குளிர் காலங்களில் சளி பிடித்தால் எந்த மருந்தை உட்கொண்டாலும் குணமாகாது.
செய்முறை :
மூன்று பழுத்த எலுமிச்சை பழத்தை எடுத்து, அதை பாதியாக வெட்டி, ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் இரண்டு டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி, அதில் தேவையான அளவு உப்பு போட்டு, நன்கு கொதிக்க வையுங்கள் பின்பு.கொதிக்க வைத்த இரண்டு டம்ளர் நீர், ஒரு கப் அளவு குறையும் வரை கொதிக்க விடுங்கள். 

Tuesday, May 29, 2018

எல்லா நோய்களுக்கும் நம் முன்னோர்கள் கண்டுபிடித்த ஓர் இயற்கை மருந்து!

மருத்துவரிடம் சென்றால் ஒவ்வொரு பிரச்னைக்கும் நிறைய மருந்துகள் கொடுப்பார்கள். ஆனால் நம்முடைய முன்னோரோ இயற்கையான வழியில், எல்லா நோயையும் தீர்க்கும் ஒரு மருந்தை பரிசீலிக்கிறார்கள். அதென்ன அப்படி ஓர் அதிசய மருந்து.
வெந்தயம். – 250 gm
ஓமம் – 100 gm
கருஞ்சீரகம் – 50 gm
மேலே உள்ள 3 பொருட்களையும் சுத்தம் செய்து அதை தனியாக கருகாமல் வறுத்து, தூள் செய்து ஒன்றாக கலந்து ஒரு கண்ணாடி குடுவையில் வைத்துக்கொள்ள வேண்டும்.

இந்த ஒரு பொருள் ஆஸ்துமா பிரச்சனைக்கு குட்-பை சொல்ல வைக்கும்...!

வெங்காயத்தால் கிடைக்கும் நன்மைகள்
னைவரது சமையலறையிலும் இருக்கும் ஒரு பொதுவான உணவுப் பொருள் தான் வெங்காயம். இது உணவின் சுவையை அதிகரிக்க உதவுவதோடு மட்டுமின்றி, ஏராளமான ஆரோக்கிய நன்மைகளையும் தன்னுள் கொண்டது. இதற்கு வெங்காயத்தில் அடங்கியுள்ள மருத்துவ பண்புகள் தான் முக்கிய காரணம். ஆனால் வெங்காயத்தைக் கொண்டு ஆஸ்துமா பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என்பது தெரியுமா?

Tuesday, May 22, 2018

நித்தியகல்யாணி

பொதுவாக உலகிலுள்ள எல்லா செடிகளும், காய்களும், பூக்களும் ஒரு குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே கிடைக்கும். எடுத்துக்காட்டாக நாம் அனைவரும் விரும்பும் ரோஜா பூக்கள். இவை ஒரு குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே கிடைக்கும். உலகிலுள்ள பெரும்பாலான தாவரங்களுக்கு இந்த விதி பொருந்தும். நித்திய கல்யாணி செடியோ எல்லா காலங்களிலும், எல்லா தட்ப வெட்பத்திலும் வளரும். இதன் அழகிய பூக்கள் அனுதினமும் பூத்துக் குலுங்குவதாலேயே இதற்கு நித்ய கல்யாணி என்ற பெயர் ஏற்பட்டது. "நித்ய(ம்) என்றால் தினமும் என்று பொருள், "கல்யாணி" என்றால் மலர்தல் என்ற பொருளைக் குறிக்கும்.
#நித்தியகல்யாணி என்று அழைக்கப்படும் இந்த மலரைப்பற்றிய உண்மைகளையும், அருமருந்தாகிய இதன் தன்மைகளையும் நாம் இக்கட்டுரையில் காணலாம். உலகின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் இந்த நித்ய கல்யாணியின் தாவரவியல் பெயர் காதரென்தஸ் ரோளியஸ்.

Friday, May 4, 2018

உணவே மருந்து

No automatic alt text available.

புற்றுநோய் - CANCER ) கேன்சர் ஒரு நோய் என்னும் வார்த்தையே பொய்.

உங்களால் நம்ப முடியாது ஒரு அதிர்ச்சியான உண்மை என்னவென்றால் புற்றுநோயை என்பது நோய் அல்ல வியாபாரம்.
புற்றுநோய் என்பது இன்று பரவி வரும் கொடிய நோய் மட்டுமின்றி குழந்தைகள், சிறார்கள், மற்றும் பெரியவர்கள் என அனைவரிடமும் பாரபட்சம் பார்க்காமல் பற்றிக்கொள்ளும் கொடிய நோய் ஆகும்.
இந்த பதிவை நீங்கள் மற்றவர்களுடன் பகிர்வதன் மூலம் இந்த மோசமான வியாபாரத்தை உலகம் முழுவதும் செய்பவர்களையும் தடுத்து நிறுத்தலாம்.
"கேன்சர் இல்லா உலகம்" - (WORLD WITHOUT CANCER) எனும் புத்தகம் உ ங்களில் எத்தனை பேருக்கு தெரியும். இன்றும் உலகம் முழுவதும் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்படுவதற்கு தடுக்கப்படுவதும், தடுக்கப்படுவதற்கு உண்டான காரணமும் உங்களில் எத்தனை பேருக்கு தெரியும். 

தொப்புளில் எண்ணை போடுங்கள்!

நமது தொப்புள் (நாபி) தாய் மூலம் நமக்கு வழங்கப்பட்ட ஒரு அற்புதமான பரிசு. ஒரு 62 வயது மனிதன் தனது இடது கண் பார்வையை சற்று இழந்தார். அவரால் இரவு நேரத்தில் மிகவும் சிரமப்பட்டு தான் பார்க்க முடியும். அவரது கண்கள் நல்ல நிலையில் இருந்தன. ஆனால் ஒரே ஒரு பிரச்சனை அவரது கண்களுக்கு இரத்தம் வழங்கும் நரம்புகளில் இரத்தம் வற்றிப்போயிற்று. அவர் மீண்டும் பார்க்க முடியாது என்று என்று கண் நிபுணர்கள் மூலம் அறிவிக்கப்பட்டது.
அறிவியல் படி, கரு வளரும் பொழுது முதலில் தொப்புள் பகுதி உருவாக்கப்படுகிறது. பிறகு, அது தொப்புள் கொடி மூலம் தாயின் நஞ்சுக்கொடியுடன் இணைகிறது.

Wednesday, April 18, 2018

உடலில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற

அன்றாடம் நாம் சாப்பிடும் உணவுகளால் உடலினுள் டாக்ஸின்கள் தேங்கிக் கொண்டிருக்கும். ஒருவரது உடலில் டாக்ஸின்களின் தேக்கம் அதிகம் இருந்தால், அதனால் நோய்த்தாக்குதலும் அதிகரிக்கும். எப்படி தினமும் குளித்து உடலின் வெளிப்புறத்தை சுத்தமாக வைத்துக் கொள்கிறோமோ, அதேப் போல் உடலின் உட்பகுதியையும் சுத்தம் செய்ய வேண்டும். அதற்கு ஒருசில பானங்கள் பெரிதும் உதவியாக இருக்கும். அதுவும் நம் வீட்டுச் சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டே எளிய முறையில் பானங்களைத் தயாரிக்கலாம்.

Thursday, April 5, 2018

மூலிகை குளியல் பொடி



பொருட்கள்:
சந்தனம், அகில், அதிமதுரம், மரிக்கொழுந்து, துளசி, கஸ்தூரி மஞ்சள், ரோஜா இதழ்கள், வெட்டி வேர், ஜாதிக்காய், திரவியப்பட்டை,
மகிழம் பூ, ஆவரம் பூ, வேம்பு, செம்பருத்தி பூ, பூலான் கிழங்கு, கோரைக்கிழங்கு, கார்போகரசி, விளாமிச்சை, ஆரஞ்சு பழத்தோல்,
பச்சை பயறு மற்றும் கடலை பருப்பு.

Friday, March 23, 2018

*வெந்தயம்*

வெந்த+அயம்
அயம் என்றால் *இரும்பு*
உடலுக்குத் தேவையான அதிகப்படியான இரும்புச் சத்தைக் கொண்டது *வெந்தயம்*
சூடா *வெந்தய_டீ குடிச்சா என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?*
வெந்தயம் மிக எளிதாக கிடைக்கும் பொருள்.
எளிதாக கிடைக்கும் எதன் பலனையும் நாம் கண்டுகொள்வதிலை.
அப்படித்தான் வெந்தயத்தின் மகிமையும் நாம் உதாசீனப்படுத்துகிறோம்.

*மூளை முதல் மலக்குடல் வரை... உறுப்புகளை பலப்படுத்த எளிய வழிகள்*

*மூளை*
கறிவேப்பிலைத் துவையலை 48 நாள்கள் சாப்பிட்டு வந்தால் மூளையின் செயல்பாடு சீராகி, நாம் சுறுசுறுப்புடன் இருப்போம்.
தாமரைப்பூவை நீர் விட்டு காய்ச்சி தினசரி மூன்று வேளையும் ஒரு டம்ளர் அளவுக்கு குடித்து வந்தால் மூளையின் செயல்பாடு மேம்படும். இதை 48 நாள்களுக்குக் குடித்து வரலாம்.
குறைந்தது ஆண்டுக்கு இருமுறையாவது கைகளில் மருதாணி வைத்தால், மனம் தொடர்பான கோளாறுகள் நீங்கும். அதன் குளிர்ச்சி மூளைக்கு ஓய்வைத் தரும்.

Wednesday, March 21, 2018

வயிற்றுப் புண்

இந்தியாவில் சுமார் 1 மில்லியனுக்கும் அதிகமாக வயிற்றுப் புண் எனப்படும் அல்சரால் பாதிப்படைகிறார்கள். உடலுக்கென்றே தனி கடிகாரம் இயங்குகிறது.அந்தந்த நேரத்திற்கு தகுந்தாற்போல் உடல் உள்ளுறுப்புகள் செயல்படும். சரியான நேரத்திற்கு அமிலம் சுரக்கும். அந்த சமயத்தில் வயிற்றில் உணவில்லையென்றால் அது காலியான வயிற்றில் பரவி, குடலின் சுவர்களை அரிக்கத் தொடங்கும். தினமும் இது தொடர்கதை ஆனால் பின்னர் அமிலம் அரித்து புண்ணாகி அதுவே வயிற்றுப் புண் எனப்படும் அல்சர்.

பற்சொத்தையிலிருந்து விடுபட

தேவையான பொருட்கள்
  • கிராம்பு எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
  • உப்பு – 1 டேபிள் ஸ்பூன்
  • பூண்டு ஜூஸ் – 1 டேபிள் ஸ்பூன்

சளி பிடித்திருந்தால் உடனே வெளியேற்ற

காலநிலை மாற்றம் வந்தாலே பலரும் அனுபவிக்கும் ஓர் பிரச்சனை தான் சளி, இருமல். குறிப்பாக குளிர்காலம் அல்லது பனி காலத்தில் தான் இப்பிரச்சனைகளால் அதிகம் அவஸ்தைப்படக்கூடும். இந்த சளி, இருமலை பலர் கடைகளில் விற்கப்படும் மருந்துகளை வாங்கி குடித்து தற்காலிகமாக நிவாரணம் காண்பர். ஆனால் இந்த சளி, இருமலுக்கு நமது சில பாட்டி வைத்தியங்கள் நல்ல தீர்வை வழங்கும் என்பது தெரியுமா?

Sunday, March 11, 2018

26 வகையான நோய்களுக்கும் ஒரே மருந்து - கடுக்காய்

26 நோய்களுக்கும் தீர்வளிக்கும் ஒரே மூலிகை காய்! – தினசரி ஒரு ஸ்பூன் போதுங்க.. (நம்புங்க நண்பர்களே)
சித்த‍ மருத்துவம் குறிப்பிடும் எந்த ஒரு மூலிகையிலும் நீங்கள் எடுத்துக் கொண்டாலும் அதில் பக்க‍விளைவுகளோ அல்ல‍து பின் விளைவுகளோ கிடையாது. அந்த வரிசையில் 26 (இருபத்தி ஆறு) விதமான நோய்களுக்கும் ஒரே மருந்தாக தீர்வளிக்கும் வல்ல‍மை கொண்ட ஓர் அதிசய மூலிகைத்தான் இங்கு நாம் பார்க்க‍ இருக்கிறோம். அது கடுக்காய்!
கடுக்காயால் குணமாகும் நோய்களை முதலில் பார்ப்போம்.

இடுப்பு,வயிறு அழகாக இருக்க

அழகான ‘சிக்’ இடுப்புக்கும், ஆலிலை போன்ற வழு, வழு வயிற்றுக்கும் ஆசைப்படாத பெண்களே கிடையாது! ஆசைப்பட்டா போதுமா… நடக்கணுமேங்கிறீங்களா? அப்போ, இதப் படிங்க

Saturday, March 10, 2018

நாள்பட்ட மூட்டு வலிக்கு நம் முன்னோர்கள் செய்த அற்புத நாட்டு மருந்து

எலும்புகளில் வலிமையை அதிகரிக்கவும், எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தடுக்கவும் ஓர் அற்புத பானம்
மஞ்சள் கிழங்கு ஓர் கிருமிநாசினி பண்புகள் நிறைந்த பொருள். இது உடலின் மூலை முடுக்குகளில் இருக்கும் தீங்கு விளைவிக்கும் கிருமிகளை அழித்து, நல்ல பாதுகாப்பை வழங்கக்கூடியது.

Wednesday, March 7, 2018

பாதாள மூலி






Image may contain: food





பாதாள மூலி
சித்த மருத்துவத்தில், சப்பாத்திக்கள்ளிச் செடிகளுக்கு, தனி இடம் உண்டு, நச்சு நீக்கவும், "அல் சைமர்" எனும் ஞாபக மறதி வியாதிக்கு சரியான மருந்தாகவும் எல்லாவற்றுக்கும் மேலாக, மனிதர்களை அச்சுறுத்தும் புற்று வியாதிகளைப் போக்கும் மருந்தாகவும், அவை வராமல் தடுக்கும் ஒரு உடல் மெய்க்காப்பாளனாக, விளங்குகின்றன, சப்பாத்திக்கள்ளிச் செடிகள். மிகச்சிறந்த நோய் எதிர்ப்பு மூலிகையான இது இரத்தத்தில் வெள்ளை அணுக்கள் உற்பத்திக்கு பெருந்துணையாகிறது.

Saturday, February 3, 2018

கருவுறும் தருவாயில் இருக்கும் பெண்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்

திருமணம் ஆன சில மாதங்களிலேயே, என்ன ஏதாவது விசேஷமா? என்று உறவினர்கள் கேட்பார்கள். இதற்கு, கருவுற்றிருக்கிறாயா என்று அர்த்தம். அப்படி கருவுறும் தருவாயில் இருக்கும் இளம்பெண், கருவுக்கு ஊட்டம் அளிக்கக் கூடிய உணவு, கரு தங்காமல் தாமதப்படுத்தும் உணவு என பிரித்துப் பார்த்துதான் சாப்பிட வேண்டும்.

Monday, January 29, 2018

*சில உபயோகமான மருத்துவ டிப்ஸ் !!!*_🥣🥣🥣🥣🥣🥣🥣🥣🥣🥣🥣🥣

1. தக்காளியை சமைக்காமல் பச்சையாக மென்று சாப்பிடுவதால் வாய்ப்புண் ஆறும் தக்காளி ஜூஸை வாயில் விட்டு கொப்பளித்து விழுங்கினாலும் உடனடி பலன் தெரியும்
2. சாப்பிட்ட பின்பு ஒரு வெள்ளரிக்காய் துண்டை வாயில் போட்டு நாக்கினால் மேலண்ணத்தில் 30 வினாடிகள் அழுத்துங்கள். அதிலுள்ள பைடோ கெமிக்கல்ஸ் துர்நாற்றம் உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழித்து வாயை புத்துணர்வுடன் வைக்கும்
3. வெந்தயக்கீரை கொத்தமல்லி இரண்டையும் மைய அரைத்து தலையில் பூசிக் குளிக்க தலைமுடி பட்டுப்போல் மின்னும்.

Sunday, January 21, 2018

தேங்காயில் காணப்படும் மருத்துவ குணங்கள்

🥥🥥🥥🥥🥥🥥🥥🥥🥥🥥🥥
தேங்காயில் உள்ள “ஃபேட்டி ஆசிட்” (Fatty Acid) உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கிறது. உடல் எடையைக் குறைக்கிறது என்று சமீபத்திய ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
இது மருத்துவ உலகினர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
“தேங்காயில், தேங்காய் எண்ணெயில் கொழுப்புச் சத்து அதிகம்.
உடலுக்கு ஆகாது. குறிப்பாக சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள் தேங்காயைத் தொடக்கூடாது” என்ற பிரசாரத்துக்கு இந்த ஆய்வு பெரும் சவால் விடுத்துள்ளது.

`எதைத் தின்றால் `பித்தம்’ தெளியும்?

’வாதம், பித்தம், கபம்...........
`எதைத் தின்றால் `பித்தம்’ தெளியும்?’, `ஒருவேளை `வாத’க் குடைசலாய் இருக்குமோ’, `நெஞ்சில் `கபம்’ கட்டியிருக்கு...’ என்கிற உரையாடல்கள் இன்று கொஞ்சம் கொஞ்சமாக வழக்கொழிந்து வருகின்றன.
ஆனால், நம் மூத்த தலைமுறையில் இந்த மூன்றும் மிக முக்கியமானவை. `வாதம், பித்தம், கபம்’ அல்லது `வளி, அழல், ஐயம்’ எனும் மூன்று விஷயங்களும் நம் பாரம்பரிய மருத்துவத்தின் அடித்தளங்கள்.

நோய்கள் வராமல் தடுக்கும்.வந்தாலும் விரட்டும் மருந்து கஞ்சி

ஆரோக்கியமாக வாழ்வது அத்தனை பெரிய சவாலான விஷயமெல்லாம் இல்லை என்று எளிமையான வழிகளைப் பின்பற்றியே அசாத்தியமாக வாழ்ந்துகாட்டி விட்டுச் சென்றுள்ளனர் நம் முன்னோர். அதற்கு எண்ணற்ற உதாரணங்கள் உண்டு. அவற்றில் ஒன்றுதான் மருந்துகஞ்சியும்.
நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் உணவுப்பொருட்களை ஒன்று சேர்த்தே, மருந்து கஞ்சியாக வைத்து அருந்தித் தங்கள் ஆரோக்கியத்தைப் பேணி வந்துள்ளனர். நோய்கள் அதிகரிக்கும் தற்போதைய சூழலுக்கு இந்த மருந்து கஞ்சி மிகவும் நல்லது’’ என்கிறார் சித்த மருத்துவர் கஸ்தூரி.அதன் மருத்துவ குணங்கள் பற்றியும், மருந்து கஞ்சி எவ்வாறு தயார் செய்வது என்பது பற்றியும் தொடர்ந்து விளக்குகிறார்.

தொண்டை வலி விரட்ட சில டிப்ஸ்

தொண்டை வலி என்பது எல்லா வயதினருக்கும் எந்த நேரத்திலும் வரக்கூடியது. இவ்வாறு தொண்டை வலி ஏற்பட்டால் எச்சில் விழுங்கக்கூட முடியாது. சாப்பிடும்போதும் சிரமம் இருக்கும். எனவே இதை விரட்ட சில டிப்ஸ்...
சுகாதாரமின்மை மற்றும் வைரஸ், பாக்டீரியா தொற்றுதான் தொண்டையில் துவங்கி உடலில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. தொண்டையில் புண் இருக்கும்போது தொண்டை கரகரப்பு மற்றும் அரிப்பு இருக்க வாய்ப்புள்ளது. இதற்கு சிகிச்சை எடுத்துக் கொண்டால் சில நாட்களில் குணமாகிவிடும். சுகாதாரமற்ற தண்ணீரை குடிக்கும்போது வைரஸ் தொற்றும், சுகாதாரமற்ற உணவுகளை உட்கொள்ளும்போது பாக்டீரியா தொற்றும் உண்டாகிறது. இதன் அடுத்தக்கட்டமாக தொண்டை வறட்சி, குரல் கரகரப்பு, காய்ச்சல், மூக்கில் நீர்வடிதல் போன்ற தொந்தரவுகள் ஏற்படும். பாக்டீரியா தொற்றால் ஏற்படும் தொண்டைப்புண் எளிதில் அடுத்தவருக்கும் பரவுகிறது.

மஞ்சள் பற்களை வெண்மையாக்க சில டிப்ஸ்

வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப்போகும் என்பது தெரிந்தாலும் வாயில் ஏற்படும் சில பிரச்சனை நம்மை சிரிக்கவே விடாது. அதில் முக்கியமான காரணங்களில் ஒன்று பற்களில் கறை ஏற்படுவது. உடலில் ஏற்படும் ரசாயன மாற்றங்கள்,உணவுப்பழக்கம், வாழ்க்கை முறை போன்ற பல்வேறு காரணங்களால் பற்களில் கறை ஏற்படுவதுண்டு, பிறரிடம் பேசுவதற்கே தயக்கத்தை ஏற்படுத்திடும் பற்களின் கறையை போக்க நிறைய செலவு செய்ய வேண்டும் என்று அவசியமில்லை. வீட்டிலேயே எளிதாக போக்கலாம்.

Saturday, January 13, 2018

போக்க வேண்டியதும் ! துவங்க வேண்டியதும் !

------------------------------------
போக்க வேண்டியது !
----------------------------------------
1 - இரசாயன வேளாண்மையில் விளைந்த உணவுப்பொருட்கள்
2 - டீ
3 - காபி
4 - வெள்ளை சர்க்கரை
5 - வெள்ளை சர்க்கரையில் செய்த இனிப்பு.

எந்தெந்த உணவுகள் என்னென்ன நோய்களை விரட்டும்?

நோய் எதிர்ப்பு சக்தி கூட - சுக்கு காபி குடிக்க வேண்டும்.
பசியை தூண்டுவதற்கு– புதினா, வெற்றிலை, சீரகம், பிரண்டை தண்டு.
தொண்டை வலி – திப்பிலி, துளசி, புதினா, தூதுவளை.
கர்ப்பபை, சிறுநீரக கல்லடைப்பு – வாழைத்தண்டு, திராட்சை, மாதுளை விதைகள்.
முதுகுத் தண்டுவலி – அருகம்புல், உளுந்து அவியல், பப்பாளி.