Saturday, September 29, 2018

வெந்தயம்


வெயில் காலத்தில் உடம்பு சூடு பிடித்து, அதனால் சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், வயிற்று வலி போன்றவற்றை சந்திப்போம்.
இந்த மாதிரியான தருணத்தில் உடல் வெப்பத்தை தணிப்பது எப்படி என்று யோசிப்போம்.
அதிலும் சிம்பிளான வழி என்னவென்று தான் பலரும் தேடுவோம். அதற்கு மிகவும் எளிமையான ஒரு வழி ஒன்று உள்ளது.
அது என்னவெனில் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சிறிது வெந்தயத்தை வாயில் போட்டு, தண்ணீர் குடிக்க வேண்டும்.

Tuesday, September 11, 2018

பெண் குழந்தைகள் அவசியம் சாப்பிட வேண்டிய உளுந்தங்களி எப்படி செய்வது?

பெண் குழந்தைகள் அவசியம் சாப்பிட வேண்டிய உளுந்தங்களி எப்படி செய்வது?
இந்த காலத்தில் டீன் ஏஜ் பெண்குழந்தைகளுக்கு சீரற்ற மாதவிடாய், ஹார்மோன்
கோளாறுகள், கர்ப்பப்பை வீக்கம், வெள்ளைப் படுதல் போன்றவை தென்படுகின்றன.
இவற்றிற்கு போதுமான சத்துக்கள் கிடைக்காமல் இருப்பதும் நல்ல உணவுகளை

சாப்பிடாமல், துரித உணவுகளையும், கார்பனேட்டட் பானங்களை குடிப்பதாலும், அவை கர்ப்பப்பையும் பாதிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Friday, September 7, 2018

பேரீச்சம் பழம்

முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழமாக பேரீச்சம் பழம் விளங்குகிறது.🔹

🔻ஆண்கள் தங்களுடைய ஆண்மைத் தன்மையை அதிகரிக்க தேனுடன் பேரீச்சம்பழம் சேர்த்து சாப்பிட ஆண்மை பெருகும். தாது புஷ்டி உண்டாகும்.🔹

🔻பெண்கள் மாதவிலக்கு காலங்களில் கால்சியம் மற்றும் இரும்புச் சத்து குறைபாடு ஏற்படும். இதை சரிசெய்ய பேரீச்சம் பழம் சாப்பிட வேண்டும். ஒழுங்கற்ற மாத விலக்கை ஒழுங்கு படுத்தவும் பேரீச்சம் பழம் உதவுகிறது.🔹

இயற்கை மருத்துவம்

1. உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்!
2. துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் ஏற்படாது.3. 1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள்,
3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கோப்பை நீரில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை 3-4 மாதங்களுக்கு தொடர்ந்து எடுத்துக் கொண்டுவந்தால் உடல் எடை குறையும்.
4. காலை உணவிற்கு முன் தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டு வரவேண்டும், ஒரு 3-4 மாதங்களுக்கு இதைச்செய்தால் உடல் எடை குறையும்.
5. தினமும் காலையில் முழுதாக வளர்ந்த 10-12 கருவேப்பிலைகளை சாப்பிட்டு வரவும், 3-4 மாதங்களில் உடல் பருமனில் மிகுந்த மாற்றத்தை காணலாம்.

Tuesday, September 4, 2018

இயற்கை மருத்துவம்

நீங்களும் மருத்துவர் ஆகலாம் !!!
• ஒரு தம்ளர் வெந்நீரில் ஒரு ஸ்பூன் சர்க்கரை, ஒரு ஸ்பூன் நெய் விட்டு கலக்கிக் குடித்தால் வயிற்று வலி மாயமாய் மறைந்துவிடும்.
• உடல் பருமனைக் குறைக்க இரவு ஒரு ஸ்பூன் ஓமத்தைத் தண்ணீரில் போட்டு, காலையில் வடிகட்டி ஒரு ஸ்பூன் தேனுடன் கலந்து குடித்து வந்தால் போதும்.
• அவரை இலையை அரைத்து தினமும் காலையில் முகத்தில் தடவி வந்தால், முகத்தில் இருக்கும் தழும்புகள், முகப்பருக்கள் நீங்கிவிடும்.
• பால் கலக்காத தேநீரில் தேன் விட்டுக் குடித்தால் தொண்டைக்கட்டு சரியாகும்.
• சுக்கைத் தூளாக்கி எலுமிச்சைச் சாறில் கலந்து தின்றால் பித்தம் குறையும்.
• மூட்டு வலியா? தேங்காய் எண்ணெய் - எலுமிச்சைச் சாறை கொதிக்கவிட்டு ஆறியபின் மூட்டுக்களில் தேய்த்தால் நிவாரணம் கிடைக்கும்.

80 வகையான வாதம் மூட்டுக்களில் நோய்கள் தோன்றக் காரணம்

முதுகுவலி,மூட்டுவலி,பக்கவாதம்(BACKPAIN,OSTEP ARTHRITIS, HEMPLEGIA)
சிசுக்களை திடுக்கிட வைத்தல், உதைத்தல், ஜீவ ஜந்துக்களை காலால் மிதித்தும் கையால் முரித்தல், வறுமையுற்ற முதியோர்களுக்குக் காலினால் ஏவலிடுதல், இவற்றால் வாத சம்பந்த வியாதிகள் அணுகும். 
உயிர்ப் பிரானிகளைகளைக் கட்டியும் தூக்கி ஊஞ்சலாடவிட்டும்,அறுத்தல், பசுவை அடித்தல்,ஜீவராசிகளின் வயிற்றைக்கீரி குடல் வெளிவரக் காணல் இவற்றால் வாத நோய் 84ல் ஆநந்த வாய்வு என்னும் ரோகம் சம்பவிக்கும் 
ஜீவ ஜந்துக்களின் கை கால்களை முறித்தெரிதல்,ஊர்வன,பறவை,காகம்,நாகம் இவற்றைக் காரணமின்றி வலிவிற் கொன்ற தோஷத்தால் கை,கால்களில் குத்தல் குடைச்சல் கரணைகளிற் பிடிப்பு முடக்கு வீக்கம் அணுகுமென்றறிக.