Thursday, July 19, 2018

கறிவேப்பிலை

கறிவேப்பிலை மருத்துவத்தின் மகத்துவம் பற்றி பார்போம் வாருங்கள்! தொடர்ந்து 3 மண்டலம் (144 நாட்கள்) கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால்?…
பொதுவாக உணவில் நறுமணத்திற்காகவும் சுவைக்காகவும் சேர்க்கப்படும் கறிவேப்பிலையை அனைவரும் தூக்கி எறிந்துவிடும் அந்த கறிவேப்பிலையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக சாப்பிட்டு வந்தால் என்ன நன்மைகளெல்லாம் கிடைக்கும் என்று தெரியுமா?

Wednesday, July 18, 2018

மருதாணி

மருதாணி பொதுவாக வெப்பத் தன்மையும் துவர்ப்புச் சுவையும் கொண்டது. மருதாணி இலை பித்தத்தை அதிகமாக்கும்; இலைகள் கை, கால்களில் தோன்றும் சேற்றுப் பண்கள், அழுக்குப்படை, கட்டி, பித்த வெடிப்புகள் ஆகியவற்றை குணமாக்கும்.
மருதாணி வேர், நோய் நீக்கி உடலைத் தேற்றும்; மருதாணி பூக்களைச் சேகரித்து உலர்த்தி தலையணை போல் செய்து படுத்து வர நல்ல தூக்கம் உண்டாவதுடன், தலைப் பேன்களும் குறையும்.
மருதாணி மலர்கள், சிறியவை. வெண்மை, இள மஞ்சள் அல்லது இளஞ்சிவப்பு நிறமானவை. மணம் கொண்டவை. பெரிய நுனிக் கொத்துகளில் தொகுப்பாகக் காணப்படும்.

சாப்பிடும் முறை

1. கிழக்கு நோக்கிச் சாப்பிட ஆயுள்வளரும். தெற்கு நோக்கிச் சாப்பிட புகழ் உண்டாகும். மேற்கு நோக்கிச் சாப்பிட செல்வம் வளரும். வடக்கு நோக்கிச் சாப்பிடக் கூடாது
2. பித்ருக்களின் திதியன்று வீட்டில் அன்னதானம் செய்ய முடியாவிட்டால் உணவு விடுதியில் (ஹோட்டல்) பத்து டோக்கன் வாங்கி ஏழைகளிடம் கொடுத்து உண்ணச் செய்யலாம் .அவர்களிடம் பணமாகக் கொடுக்கக் கூடாது.

அத்திப்பழம்

அத்திப்பழம்
------------------------

அத்திப் பூத்தாப்போல இருக்கே?’ என்று ஒரு பழமொழி உண்டு. உண்மையில் அபூா்வமாக பூப்பதாக நினைக்க வேண்டாம். அது பூக்கலேன்னா எப்படி அத்திக்காயும் அத்திப்பழமும் நமக்குக் கிடைக்கும். அந்தப் பூ நம்ம கண்ணுக்கு அவ்வளவா தெரியறது இல்ல. ஏன்னா அது அடிமரத்திலயிருந்து உச்சி வரைக்கும் மரத்த ஒட்டியே காய்க்கும். அதனால் இதை “காணாமல் பூப் பூக்கும் கண்டு காய் காய்க்கும்” என்ற விடுகதையிலும் சொல்வர்.

Tuesday, July 17, 2018

இஞ்சி கேரட் ஜூஸ்

உடலில் தேங்கி இருக்கும் கெட்ட கொழுப்புக்களை 24 மணிநேரத்தில் வெளியேற்ற இதைக் குடிங்க
இஞ்சி கேரட் ஜூஸ் தயாரிப்பு முறை :
எத்தனை கிளாஸ் வேண்டுமோ அதற்கேற்ப கேரட் எடுத்துக் கொள்ளுங்கள். இங்கே ஒரு கிளாஸ் இஞ்சி கேரட் ஜூஸ் செய்யும் முறை விளக்கப்பட்டிருக்கிறது.

ஒரு கேரட் எடுத்து நன்றாக தோல் நீக்கி சுத்தம் செய்து கொள்ளுங்கள். பின்னர் அதனை சிறிது சிறுதாக நறுக்கி அரைத்து பேஸ்டாக்க வேண்டும்.பின்னர் அதில் ஒரு இன்ச் அளவுள்ள இஞ்சியை சேர்த்து அரைக்க வேண்டும்.
அதனை அப்படியே கிளாஸில் ஊற்றலாம். அல்லது வடிகட்டியும் ஊற்றலாம்.இஞ்சியை அப்படியே அரைப்பதற்கு பதிலாக இஞ்சிச் சாறு எடுத்தும் சேர்க்கலாம். உடன் ஒரு ஸ்பூன் தேன் மற்றும் சிறிதளவு மிளகுத்தூளைச் சேர்த்து பருகலாம். (வெள்ளைச் சர்க்கரை, கூடுதலான தண்ணீர் சேர்க்க வேண்டாம்.)

Wednesday, July 11, 2018

கடுக்காய்

தாயைக் காட்டிலும் சிறந்தது இந்த உலகில் உண்டா? இருக்கிறது என்கிறார்கள் சித்தர்கள்.
கடுக்காய்தான் அது.
அம்மாவோ ஆறு சுவைகள் ஊட்டி, பிணியற்ற உடலை மட்டுமே தேற்றுவாள். அறுசுவையும் கொண்ட கடுக்காய், நோய் ஓட்டி உடல் தேற்றும். அப்படியானால் நோயைப் போக்கும் கடுக்காய்தானே தாயினும் சிறந்தது என்கிறார் அகத்திய சித்தர்.

மூலிகைகளில் தலைசிறந்த மூலிகை கடுக்காய். எண்ண முடியாத மருத்துவ குணங்கள் கொண்டது. இதைத் தேடி ஏழு கடல், ஏழு மலை தாண்டி எல்லாம் செல்ல வேண்டியதே இல்லை. எல்லா நாட்டு மருந்துக்கடைகளிலும் குறைந்த விலைக்கு கிடைக்கும் மூலிகைச்சரக்கு இது. ஒவ்வொரு வீட்டிலும் உப்பு சர்க்கரை மாதிரி வாங்கி வைத்திருக்க வேண்டிய பொருளும்கூட.

Wednesday, July 4, 2018

இயற்கை மூலிகை குளியல் பொடி



குளியல்பொடி தயாரிக்கும் முறை
கஸ்தூரி மஞ்சள்
கிளியூரம்பட்டை
சடாமாஞ்சில்
பூலாங்கிழங்கு
பூஞ்சாந்துப்பட்டை
பச்சிலை
கோரைக்கிழங்கு

நாவல் பழம்

நாவல் பழத்தின் மருத்துவக் குணம்
நாவல் பழத்தின் துவர்ப்புச் சுவை ஒரு சிறப்பு அம்சமாகும். 
நாவல் பழம் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். இரத்தத்தில் இரும்புச்சத்தை அதிகரிக்கும். 
இதனால் இரத்தத்தின் கடினத் தன்மை மாறி இலகுவாகும்.
மேலும் இரத்தத்தில் கலந்துள்ள இரசாயன வேதிப் பொருட்களை நீக்கி சிறுநீர் மூலம் வெளியேற்றும்.

Tuesday, July 3, 2018

தேன்... தேன்... #தேன்...

1~ பாலில் தேன் கலந்து இரவில் சாப்பிட, நல்ல தூக்கம் வரும்.
#இதயம் பலம் பெறும்.
2~ மாதுளம் பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால்,
புது #ரத்தம் உண்டாகும்.
3~ பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால்,
நல்ல #சக்தி உண்டாகும்.