இதைச் சொல்லித் தான் தெரிய வேண்டிய அவசியம் இல்லை. சோடாவில் கார்போனேட்டட் ஆசிட் அதிகம் இருப்பதால், இவற்றை வெறும் வயிற்றில் குடித்தால், அவை வயிற்றில் உள்ள ஆசிட்டுகளுடன் கலந்து, அதனால் குமட்டல் மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும்.
கரும்புள்ளி சருமத்தின் அழகை பாழ்படுத்தும். கிருமிகள், இறந்த செல்கள் மற்றும் அழுக்குகள் தங்கி கரும்புள்ளிகளாக வெளிப்படும். இந்த கரும்புள்ளிகளை எளிதால அகற்றி விடலாம்.
சருமத்தை சுத்தப்படுத்துவதே எளிய வழி. சோப்பை போட்டு தேய்ப்பதால் வறட்சி அதிகமாகுமே தவிர, ஆழமான சென்று இந்த கரும்புள்ளியை அகற்றாது.
இத தினமும் குடிச்சா, இனிமேல் முதுகு வலியே வராது தெரியுமா?
இங்கு முதுகு அல்லது இடுப்பு வலியைப் போக்கும் அற்புத பானம் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
பலருக்கும் கடுமையான இடுப்பு அல்லது முதுகு வலி இருக்கும். இப்பிரச்சனை உள்ளவர்களால் எந்த ஒரு கனமான பொருளையும் தூக்க முடியாது. ஏன் நீண்ட நேரம் நிற்கவோ, உட்காரவோ கூட முடியாது. சிலருக்கு முதுகு, இடுப்பு, கால் ஆகிய மூன்று பகுதிகளிலும் ஒரே நேரத்தில் கடுமையான வலி இருக்கும். இந்த வகையான முதுகு வலி இடுப்புமூட்டுக்குரிய நரம்புகளில் உள்ள பிரச்சனையால் வருவதாகும்.
விந்து அதிகரிக்க
1, வில்வ பழ சதையை கற்கண்டு கூட்டி தினமும் காலையில் உண்டு வர விந்துவை அதிகபடுத்தும்.
வில்வப் பழம் பல நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும். அதை கொண்டு வந்து
ஓட்டை நீக்கி விட்டு உள்ளிருக்கும் காய்ந்த சதையை மட்டு எடுத்து வெயிலில்
நன்றாக காயவைத்து பொடித்து கொள்ளவும். இதனுடன் கற்கண்டு தூளையும் நன்றாக
சேர்த்து புட்டியில் பத்திரபடுத்தி கொள்ளவும். இதை தினமும் உபயோகித்து
வரலாம்.
இருதய இரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க அருந்தும் பானத்திற்கு உரிய மூலப்பொருள்கள். 1 கப் எலுமிச்சை சாறு 1 கப் இஞ்சிச் சாறு 1 கப் புண்டு சாறு 1 கப் ஆப்பிள் சைடர் விநிகர். எல்லாச் சாறுகளையும் ஒன்றாக கலக்குங்கள். இலேசான இளஞ்சூட்டில் (சிம்மரில்) 60 நிமிடம் கொதிக்க வையுங்கள். நான்கு கப் மூன்றாக குறையும். சூடு ஆறியவுடன் சாறு இருக்கும் அளவுக்கு சம அளவு இயற்கைத் தேனை கலந்து ஜாரில் வைத்துக் கொள்ளுங்கள். நாள்தோறும் காலை உணவுக்கு முன் ஒரு டீ ஸ்புன் பானத்தை அருந்துங்கள். மகிழ்ச்சியுடன் பானத்தை அருதுங்கள்....சுவையாகவும் இருக்கும். நீங்களே உங்களை பைபாஸ் அறுவை சிகிச்சையிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள்.
நன்றி - ஸ்ரீ சமஸ்கிருத ஆயுர்வேத சர்வதேச ஆய்வு இதழ் - தமிழாக்கம்; Mannargudi Banukumar
சித்தர்களின் வாக்குப்படி மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் நீர்கள் நோய் தடுப்பில் சிறப்பிடம் பெறுகின்றன. உணவுக்கு உணவாகவும், மருந்துக்கு மருந்தாகவும் பயன்படுகின்றன. இச்சுவை நீர்களை காலை, மாலை வெறும் வயிற்றில் உட்கொள்வதால் விரைவில் பலன் கிடைக்கிறது. சாதாரண சுவைநீர்கள், மூலிகை சேர்வதால் நோய் தடுக்கும் சுகநீராய் மாறுகிறது.
ஆவாரம்பூ நீர்
"ஆவாரைப் பூத்திருக்க சாவாரைக் கண்ட துண்டோ" என்ற பழமொழிக்கு ஏற்ப நீரிழிவுக்கு ஆவாரைப்பூவின் அற்புதத்தை அறியலாம். மஞ்சள் நிறமுள்ள இப்பூ தங்கச்சத்தை தன்னகத்தே கொண்டுள்ளது. ஆவாரம்பூ சுவை நீர் நீரிழிவு, பெரும்பாடு, குடற்புண், நீர்க்கடுப்பு, வெள்ளைப்போக்கு ஆகியன வராமல் தடுக்கிறது. நூறு மில்லி நீரில் பத்து ஆவாரம் பூக்களை போட்டு காய்ச்சி, வடிகட்டி காய்ச்சிய பாலில் கலந்து இனிப்பு சேர்த்து தேவையெனில் காபித்தூள் அல்லது டீத்தூள் கஷாயத்தில் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் குடிக்கவும்.
எள்ளில் இருந்து ஆட்டி எடுக்கப்படும் நல்லெண்ணைய்யை அதிகம் பயன்படுத்துபவர்கள் நாம். இது வெளிப்பூச்சுக்கும், உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் பயன்படுகிறது. தென்னிந்தியாவில் அதிகமாக சமையலுக்குப் பயன்படுத்தப்படும் எண்ணை இதுதான். இந்தியா, சீனா, துருக்கி போன்ற நாடுகளில் எள் அதிகமாகப் பயிரிடப்படுகிறது. எள்ளில் வெள்ளை எள், கறுப்பு எள், சிவப்பு எள் என்ற மூன்று வகை உண்டு. மேலும் காட்டெள், சிற்றெள், பேரெள் போன்ற வகைகளும் உண்டு.
வழுக்கையில் முடி வளர - கீழாநெல்லி வேர் !! சொட்டைக்கு நேர்வாளங்கொட்டை !! புழுவெட்டுக்கு நவச்சாரம்
1) வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேக வைத்த நீரைக் கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும். குறைந்தது 3 மாதம் செய்ய வேண்டும்.
2) கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும். (வாரம் 2 முறை )
3)வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.
குளிர்காலம் வந்தாலே ஓயாத இருமல் ஜலதோஷம் உண்டாகும். அதிலும் குழந்தைகளுக்கும் வயதானவர்களுக்கும் நெஞ்சில் கபம் கட்டி மூச்சு விடவே சிரமப் படுவார்கள். அவர்களுக்காக எளிய முறையில் கஷாயம் தயாரிக்கும் முறையை இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது.
இவற்றால் பக்க விளைவுகள் இல்லை. இதனை 3 வேளைக்கும் அருந்தி வந்தால் எப்பேர்பட்ட கபமும் கரைந்து வெளியேறிவிடும். எப்படி செய்வது என பார்க்கலாம்.
சிலருக்கு உடலின் ஏதேனும் ஒரு பகுதியில் கொழுப்புக் கட்டிகள் இருக்கும். இதை லிபோமா என்று அழைப்பர். கொழுப்புத் திசுக்கள் சருமத்தின் உட்பகுதியில் வளர்ச்சி பெறுவதால் ஏற்படும் நிலை தான் இது. லிபோமாக்கள் புற்றுநோய் கட்டிகள் அல்ல மற்றும் அது புற்றுநோய் கட்டிகளாகவும் மாறாது. இது பெரும்பாலும் கழுத்து, தொடை, அக்குள், மேற்புற கைகள் போன்ற இடங்களில் தான் வரும். சிலருக்கு இந்த கட்டிகள் எந்த இடத்தில் வேண்டுமானாலும் வரும்.
உடலில் அதிகமான அசதி, எந்த செயலை செய்ய வேண்டு மானாலும், பிறகு செய்து கொள்ளலாம் என்று தள்ளிப்போடும் மனநிலை, உற்சாகமின்மை, எதிலும் ஆர்வமின்மை, உண்பதற்கு கூட எழுந்து போய் உட்கார்ந்து உண்ண வேண்டுமே என்று எண்ணுவது, தூக்கமின்மை உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால், ரத்தசோகை இருப்பதை அறியலாம்.
உடலில் ஹீமோகுளோபின் குறையும் பொழுது, அந்த அணுக்கள் குறைந்த ரத்தம், உடல் முழுவதும் உற்சாகமாக ஓட முடிவதில்லை. உடலின் பாகங்கள் சுறுசுறுப்பாக இயங்க முடிவதில்லை. உடல் களைப்பு அடைகிறது.