Friday, January 30, 2015

குடல்புண், வயிற்றுப்போக்கை குணமாக்கும் அல்லி பூ

நீரில் மிதக்கும் அகன்ற நீள்வட்ட இலைகளையும் நுண்குழலுடைய இலைக் காம்புகளையும் உடைய நீர்ச்செடி அல்லி. இதன் மலர்கள் நீர்மேல் மிதந்து கொண்டிருக்கும்.

நீர்ச்சத்துள்ள உணவுகள் - Water Rich Foods - இயற்கை மருத்துவம்

ஆரோக்கியமாக இருப்பதற்கு தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டுமென்று மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள்.மேலும் தினமும் குறைந்தது மூன்று லிட்டர் தண்ணீர் பருக வேண்டுமென்றும் கூறுவார்கள்.ஏனெனில் தண்ணீர் அதிகம் குடிப்பதால், உடலில் வறட்சி ஏற்படாமல் இருப்பதோடு, உடலில் உள்ள அனைத்து டாக்ஸின்களான நச்சுப் பொருட்களும் வெளியேறி, உடல் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.

உடல் நலத்தை பாதுகாக்கும் பச்சைப் பட்டாணியின் மருத்துவ குணங்கள் :-

பார்வைக்கு மட்டுமின்றி, சமைக்கவும், சுவைக்கவும் அருமையானது பச்சைப் பட்டாணி. எந்த உணவுடனும், கைப்பிடி அளவு பட்டாணி சேர்த்தால் அருமையான சுவைமிகு உணவாக மாறும்.

காடை முட்டை

கோழி முட்டைகளை விட, காடை முட்டையில் மருத்துவ குணங்கள் அதிகம் இருப்பதாக, கால்நடை மருத்துவ பல்கலைக்கழக அதிகாரி தகவல் தெரிவித்து உள்ளார்.

பொன்னாங்கண்ணி கீரை

பொன்னாங்கண்ணி கீரை என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான் எனினும் அதிலே பொதிந்துள்ள மருத்துவ குணங்கள் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பொன்னாங்கண்ணிக்கீரை பூமியில் இருந்து பொன் சத்தை உறிஞ்சி நீரான நிலையில் தன்னுள் பெற்று இருக்கிறது. 

சிறுநீரக கல் பிரச்சனையை இயற்கை முறையில் குணப்படுத்தலாம்

சிறுநீரக கல் பிரச்சினைக்கு ஆபரேஷன் (அறுவை சிகிச்சை) இல்லாமல் இயற்கை முறையில் குணப்படுத்தலாம்.சீறுநீர் கல்லடைப்பு இருக்கிறது அறுவை சிகிச்சை மூலம் தான் குணப்படுத்த முடியும் என்ற பேச்சுக்கு இனி இடமே இல்லை. எந்த அறுவை சிகிச்சையும் இல்லாமல் பணச்செலவே இல்லாமல் இயற்கை முறைப்படி உடனடியாக குணப்படுத்தலாம்.

ஆரோக்கியம் தரும் மூலிகை தண்ணீர்


வயிற்றில் பூச்சி, வாய்வு பிரிதல் பிரச்சனை, வயிற்றுவலி, குடல் இறைச்சல், போன்ற பிரச்சனைகளுக்கு தீர ஒரு லிட்டர் தண்ணீரில் அரை  தேக்கரண்டி ஓமம் போட்டு சூடாக்கி வடிக்கட்டி குடித்தால் பிரச்சனைகள் தீரும். ஒருலிட்டர் தண்ணீரில் அரைதேக்கரண்டி சீரகம் போட்டு சிறிது  சூடாக்கி குடித்து வந்தால் அஜீரணக்கோளாறு, வயிற்று உப்புசம் மற்றும் உடல்சூடு போன்றவை தணியும்.

Wednesday, January 28, 2015

இயற்கை மருத்துவம்,

சீதபேதி கடுமையாக உள்ளதா? ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து 3 வேளை கொடுக்க குணமாகும்.

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு படும் காயங்கள் விரைவில் ஆறிட sugar patients wounds relief oil

100 மில்லி தேங்காய் எண்ணெயில் ஒரு கைபிடி அளவு சிகப்பு அரளிப் பூவை போட்டு ஒரு கண்ணாடி பாட்டிலில் 3-5 நாள் வெயிலில் வைக்கவும்.
நன்றாக சாறு எண்ணெயில் இறங்கிவிடும். பிறகு ஒரு மெல்லிய துணியில் வடிகட்டி பூவை பிழிந்து எடுத்துவிடவும் .இப்போது பாட்டிலில் எண்ணெய்யை பத்திரமாக வைத்துக்கொண்டு மேல் பூச்சாக உபயோகப்படுத்தவும் .நாள்பட்ட பெரிய புண்ணையும் எந்நிலையில் ஆற்றிடும் தன்மை வாய்ந்தது
இது கடுமையான விஷம் ,மிகவும் கவனமாக மேல் பூச்சாக மட்டும் உபயோகப்படுத்தவும் .குழந்தைகளுக்கு எட்டாத இடத்தில் வைக்கவும்

சுண்டக்காயின் மருத்துவ குணம்....

நாம் அன்றாடம் உணவில் சேர்க்கும் சுண்டைக்காய் ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.இந்த காய் கசப்பு சுவை கொண்டிருந்தாலும் உடலுக்கு ஊட்டச்சத்தாக மாறி உடலை ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளையும் கொடுக்கிறது.

தேனின் பல்வேறு மருத்துவ குணங்கள் :-

01 உடல் ஆரோக்கியத்திற்கு தேன் வழி வகுக்கும், தேனும் வெந்நீரும் கலந்து அருந்தினால் பருத்த உடல், மெலியும், ஊளைச் சதை குறையும் உடல் உறுதி அடையும்.
02 தேனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து அருந்தினால் வாந்தி, குமட்டல் ஜலதோஷம், தலை வலி குணமாகும்.

சுவைமிகுந்த கிஸ்மிஸ்பழத்தின் மருத்துவ குணங்கள்:-

செடியில் இருந்து பசுமையாக பறித்த பழங்களை உண்பதில் உள்ள சத்துக்களைப் போல உலர் பழங்களை உண்பதிலும் அதிக சுவையும்,சத்துக்களும் நிறைந்து காணப்படுகின்றன. நாம் உணவில் சுவைக்காக சேர்த்துக் கொள்ளும் உலர் திராட்சையானது கிஸ்மிஸ்பழம் என்று அழைக்கப்படுகிறது. உலர் திராட்சை பழத்தில் உடலுக்கு வலிமை தரும் சத்துக்கள் நிறைந்துள்ளன.

Tuesday, January 27, 2015

பித்தப்பை கற்களை நாமாகவே அகற்றலாம்..!

புற்றுநோய்க்கு அடிகோலும் பித்தப்பை கற்களை, நாமே இயற்கை வழியில் அகற்றலாம். மேலும் இந்த வழிமுறை, வலுவிழந்த நமது கல்லீரலை, புத்துணர்வு பெறவும் உதவுகிறது.

சிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற பாரம்பரிய முறை இஞ்சி ஒத்தடம் - விஞ்ஞானயின் ஆச்சரியமான உண்மை சம்பவம் !

இம்முறை சிறுநீரக செயல்பாட்டை நமது பாரம்பரிய முறையில்எளிமையாக மிக குறைந்த செலவில் திருப்ப பெற்ற ஒரு விஞ்ஞானயின் உண்மை சம்பவம் என்பதாலும், தேதி வாரியாக செயல்பாடுகள் (ஆங்கில வலைப்பூவில் அவரது மகன் ) பதிவு செய்யப்பட்டுள்ளதாலும், மற்றவர்களுக்கு நிச்சயம் பயனளிக்குமென்பதாலும் இதனை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

சைனஸ் பிரச்னை தடுக்க... தவிர்க்க..

சைனஸ் என்றால் என்ன?
நமது மூக்கைச் சுற்றி, நான்கு காற்றுப் பைகள் உண்டு. மூளை  மூக்கு, கன்னம்  மூக்கு, மூக்கு நெற்றி இணையும் இடம், கண்கள் மற்றும் மூக்குக்கு இடைப்பட்ட பகுதிகளில் இந்த காற்றுப் பைகள் அமைந்திருக்கின்றன. இந்த காற்றுப் பைகள், நாம் சுவாசிக்கும் ஆக்சிஜனை குறிப்பிட்ட வெப்பநிலையில் நுரையீரலுக்கு எடுத்துச் செல்ல உதவுகின்றன. இந்த காற்றுப் பைகளே சைனஸ் பகுதி என அழைக்கப்படுகின்றன.

Sunday, January 25, 2015

வீட்டுக் குறிப்புகள்,

ஷூக்கள் த‌ண்‌ணீ‌ர் ப‌ட்டு ரொம்பவும் ஈரமாக இருக்கின்றனவா. அவற்றினுள் கொஞ்சம் நியூஸ் பேப்பரை அடைத்து வைத்து விடுங்கள். பேப்பர் எல்லா ஈரத் தையும் இழுத்துக் கொண்டு விடும்.

Friday, January 23, 2015

72மணி நேரத்தில் நுரையீரலை சுத்தம் செய்வது எப்படி?

நுரையீரல் பாதிக்கின்ற அளவிற்கு ஒருசிலர் எந்த கெட்ட பழக்கத்தையும் தொடர்வதில்லை. ஆனால் அவர்களுக்கு நுரையீரல் தொடர்பான பிரச்னை இருக்கும்.

Wednesday, January 21, 2015

தழும்புகளை நீங்க

உடல் அழகைக் கெடுப்பதில் தழும்புகள் முக்கிய பங்கினை வகிக்கிறது. அத்தகைய தழும்புகள் விபத்து அல்லது அலர்ஜியின் காரணமாக ஏற்படும். இவ்வாறு ஏற்படும் தழும்புகளை நீக்குவது மிகவும் கடினமான ஒரு செயல். நிறைய பெண்கள் வேலை செய்யும் போது, இந்த மாதிரியான தழும்புகளைப் பெறுவார்கள்.

Tuesday, January 20, 2015

தூதுவளை அடை

தேவையான பொருட்கள்:
தூதுவளை கீரை – 100 கிராம் புழுங்கல் அரிசி – 200 கிராம் துவரம் பருப்பு – 50 கிராம் 
கடலை பருப்பு – 50 கிராம் காய்ந்த மிளகாய் – 3 உப்பு – தேவைக்கு பெருங்காய பொடி – 1 தேக்கரண்டி நல்லெண்ணெய் – தேவைக்கு 

தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் ?

தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது?? துரதிஷ்ட வசமாக மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனியாக இருந்திருப்பவராக உள்ளனர் !!!

Sunday, January 18, 2015

ஓமத்தின் மருத்துவ குணங்கள்.......!

உடல் பலம் பெற
சிலர் எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் தேறமாட்டார்கள். இன்னும் சிலர் பார்க்க பலசாலி போல் தோற்றமளிப்பார்கள். ஆனால் மாடிப்படி ஏறி இறங்கினாலோ அல்லது சிறிய பொருளை தூக்கினாலோ உடனே சோர்ந்து போவார்கள்.

மறதி தொல்லையா?

ஒரு தேக்கரண்டி தேனில் 5 மிளகு பொடியை குழைந்து சாப்பிட்டு வந்தால் மறதி மறைந்துவிடும்.
இருமலால் அவதியா? உலர்ந்த திராட்சையை பாலில் இட்டு காய்ச்சி குடித்து வந்தால் நீங்கும். ஒரு சிட்டிகை மஞ்சள், மிளகுப்பொடியை தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தாலும் குணமாகும்.

சிவப்பு அரிசி அடை

தேவையானவை: 
சிவப்பு அரிசி - ஒன்றரை கப், கடலைப்பருப்பு - கால் கப், பாசிப்பருப்பு, துவரம்பருப்பு சேர்த்து - கால் கப், மிளகு, சீரகம், சோம்பு - தலா கால் டீஸ்பூன், மிகவும் சிறியதாக

இரசம் சாதம்

தென்னிந்திய உணவுப் பட்டியலில் (குறிப்பாக தமிழகத்தில்) இரசம் ஓர் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. மதிய உணவு விருந்துகளில் இதன் முக்கியத்துவம் அதிகம். தென்னிந்தியாவில் இரசம் இல்லா மதிய உணவு இல்லை என்றே கூறலாம்.

சேப்பகிழங்கு கீரை

சேப்பகிழங்கு,சாமை கிழங்கு, யானை கால் செடி என பலப்பெயர்களில் அழைக்கபடுகிறது இது இந்தியா முழுவதும் மருந்திற்காகவும்.உணவிற்காகவும் பயிரிடப்படுகிறது.இந்த யானை கால் செடி தரைக்கு அடியில் கிழங்கை விளைவிக்ககூடியது...இதன் கிழங்கை பயன்படுத்தும் அளவிற்கு கூட இதன் கீரையை அதிகம் விரும்புபவர்கள் யாரும் இல்லை.சேப்பகிழங்கில் ஆயிரம் வகை உள்ளது..இதன் இலையை பொருத்து கிழங்கு வகைபடுத்தபடுகிறது.

சோரியாஸிஸ்

தடித்துச் சிவந்த நிறத்தில் சாம்பல் பூத்தது போன்ற செதில் செதில்களாக மூடப்பட்ட படை அல்லது பற்று போன்ற இச் சரும நோய் தலை, பிடரி, முழங்கையின் பின்புறம், முழங்கால் மற்றும் இடுப்பின் பின் பகுதி போன்ற இடங்களில் தோன்றித் தொல்லை தரும்.

நெல்லிக்காய் சாதம்

தேவையான பொருட்கள்
சாதம் - 1 கோப்பை; பெரிய நெல்லிக்காய் - 6; உளுத்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 1/2 தேக்கரண்டி; பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி; 

எஃக் 65

தேவையான பொருட்கள்:                                                                                                                                                     முட்டை – 4; சோம்பு – 1 ஸ்பூன்; பூண்டு – 5; சின்ன வெங்காயம் – 5; மிளகாய் தூள் – 1

எள்ளோரை

தேவையான பொருட்கள் :
அரிசி - ஒரு டம்ளர் ( 200 கிராம்) 

எட்டு வடிவ நடை பயிற்சி..!

எளிய முறையில் பிரமிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த வழிமுறை..
“எட்டு வடிவ நடைப்பயிற்சி”.

Saturday, January 17, 2015

கர்ப்பம் அடைவதில் ஏற்படும் சிக்கலை தவிர்க்க வழிகள்

பெண்களுக்கு மாதாமாதம் சினைமுட்டை ஒரு சுழற்சி முறையில் வெளியேறும். இதைத்தான் நாம் பீரியட்ஸ் என்கிறோம். ஆனால் சிலருக்கு இது சரியானபடி ஏற்படாது. இதற்கு முக்கியக் காரணம் நம்முடைய ஹார்மோன்களின் செயல்பாடுதான். 

ஆயுள் நீடிக்க மூலிகை மருத்துவம் !!



சளிக் காய்ச்சல்
புதினா கீரையை நீரில் போட்டு கொதிக்க வைத்து டீ டிகாஷன் போல் செய்து சாப்பிட்டால் சளியால் வரும் காய்ச்சல் குணமாகும்.

பச்சை பயிறு

பச்சை பயிறை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!
பொதுவாக பருப்பு வகைகளில் நிறைய ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால், அன்றாட உணவில் சிறிது பருப்புக்களை சேர்த்துக் கொண்டால், உடலை ஆரோக்கியமாக பராமரிக்கலாம். அதிலும் பருப்புக்களில் ஒன்றான பச்சை பயிறு மற்றும் பாசிப் பருப்பை தவறாமல் வாரம் ஒருமுறை உட்கொண்டு வந்தால், அதில் நிறைந்துள்ள சத்துக்களால் எண்ணற்ற நன்மைகளைப் பெறலாம்.

காலை உணவை தவிர்க்கக் கூடாது. ஏன்.............?

நாம் அதிகமாகத் தவிர்க்கும் உணவு காலை உணவு. உண்மையில், அறவே தவிர்க்கக் கூடாததும் காலை உணவு தான். ஏனெனில், காலை உணவு என்பது விரதத்தை முடிப்பது.

நாவறட்சி, உடல் வெப்பம் தணிக்கும் அத்திக்காய்

அத்தியின் பட்டை, பிஞ்சு, காய் ஆகியவை சதை, நரம்பு ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும் மருந்தாகவும், பழம் மலமிளக்கியாகவும், பிஞ்சு, பழம், பால் ஆகியவை காமம் பெருக்கியாகவும் செயற்படும். சீதக்கழிச்சல், வயிற்றுக்கடுப்பு, நீரிழிவு இதனால் உண்டாகும் தாகம், நாவறட்சி, உடல் வெப்பம், முதலியவை நீலங்கும். இரத்தம் சுத்தமாகும், மூட்டு வீக்கம், கீல்வாத நோய்கள், நீரிழிவினால் ஏற்பட்ட புண்கள் போன்றவை நீங்கும்.

Friday, January 16, 2015

செவ்வாழை

திருமணமான தம்பதியர் குழந்தை பேறுக்காக மருத்துவரையோ, ஜோசியரையோ நாடுவர்.
அவர்களுக்கு செவ்வாழை அருமருந்தாகும்.

Saturday, January 10, 2015

சில கீரையில் உள்ள சத்துக்கள் ....

வெந்தயக் கீரை : கால்ஷியம் 395 கிராம், வைட்டமின் ஏ 2340 மைக்ரோ கிராம், இரும்புச் சத்து 1.93மி.கி. உள்ளன. பார்வைக் கோளாறு ரத்த சோகையைப் போக்கும். (கீரைகளை நன்கு கழுவவும்)

கால் ஆணி நீங்க

பாதங்களைத் தாக்குவதில் பித்தவெடிப்பிற்கு அடுத்தபடியாக இருப் பது கால் ஆணி. இது பாதத்தைத் தரையில் வைக்க முடியாத அளவிற்கு பிரச்சனையை ஏற்படுத்தும். கால் ஆணி என்பது அதிகமான உடல் அழுத்தம் காரணமாக உருவாகிறது.

விளக்கெண்ணெயின் மருத்துவ குணங்கள்

பயனை பார்க்கும் முன்...
விளக்கெண்ணெய் தயாரிக்கப் பயன்படும் ஆமணக்கு முத்து, மன்னராட்சிக் காலத்தில் வரிவிதிப்பிற்கு உள்ளாகியுள்ளது. இதை, 'ஆமணக்கங் கொட்டை வண்டி ஒன்றுக்குக் காசு பத்தும் பொதி (பெரிய மூடை) ஒன்றுக்குக் காசு அரையும் பாக்கம் (சிறிய மூடை) ஒன்றுக்குக் காசு காலும்' என்று கி.பி. 1300ஆம் ஆண்டு பிரான்மலைக் கல்வெட்டு குறிப்பிடுகின்றது.

Friday, January 9, 2015

உருளைக்கிழங்கு ஆலு பரோட்டா

தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு - 4  மைதா மாவு - 4 கப்  பச்சைமிளகாய் - 1  சீரகம் - 1 டீஸ்பூன்  சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
மசாலாத் தூள் - 1 டீஸ்பூன்  மிளகாய்த் தூள்       - 1/2 டீஸ்பூன்  கொத்தமல்லி தூள் - 1/2 டீஸ்பூன்
கரம்மசாலா பொடி - 1 1/2 டீஸ்பூன்  சோம்புத்தூள்  - சிறிது  உப்பு - தேவையான அளவு

பருப்பு அடை

தேவையான பொருட்கள் :
பச்சைப்பயறு -1கப் துவரம் பருப்பு-1கப் உளுத்தம் பருப்பு-1கப் பெருங்காயம்-சிறிது
தேங்காய் எண்ணெய்-1கப் பச்சை மிளகாய்-4 கொத்துமல்லி இலை-1/2கொத்து
உப்பு-ருசிக்குத் தக்க அளவு

Thursday, January 8, 2015

வாழைப்பழ முட்டை தோசை!!!

தேவையான பொருட்கள்:
வாழைப்பழம் – 1 (நன்கு கனிந்தது) முட்டை – 2 சர்க்கரை – தேவையான அளவு தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு

முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்க

வீட்டில் உள்ள பொருட்களை வைத்து முகத்தில் வரும் கரும்புள்ளிகளை நீக்க முடியும். இதற்காக அழகு நிலையங்களுக்கு செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவை என்னவென்று பார்க்கலாம்..

கறிவேப்பிலைக் குழம்பு (பிரசவக் குழம்பு)

தேவையானவை:
கறிவேப்பிலை – கைப்பிடி அளவு, கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன், மிளகு 10, காய்ந்த மிளகாய் – 2, உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன், துவரம்பருப்பு – ஒரு டீஸ்பூன், புளி – ஒரு நெல்லிக்காய் அளவு, சீரகம் – ஒரு டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், நல்லெண்ணெய் – 100 மில்லி, உப்பு – தேவையான அளவு.

தீயல்

(தீயல் என்பது திருநெல்வேலியின் அல்வாவைப்போல் சிறப்பு மிகுந்தது)
தேவையான பொருட்கள்
தேங்காய் துருவல், வெங்காயம், வெண்டைக்காய், கருணைக்கிழங்கு, கத்தரிக்காய், புளி

சோரியாஸிஸ் - வீட்டு வைத்தியம்.

சமுதாயத்தில் அவர்கள் நடத்தப்படுகின்ற விதமும், அதனால் அவர்கள் அனுபவிக்கும் தாழ்வு உணர்ச்சியும் எவர் மனதையும் இளகச் செய்யும்.
தடித்துச் சிவந்த நிறத்தில் சாம்பல் பூத்தது போன்ற செதில் செதில்களாக மூடப்பட்ட படை அல்லது பற்று போன்ற இச் சரும நோய் தலை, பிடரி, முழங்கையின் பின்புறம், முழங்கால் மற்றும் இடுப்பின் பின் பகுதி போன்ற இடங்களில் தோன்றித் தொல்லை தரும்.

எலுமிச்சையில் கொட்டிக் கிடக்கும் மருத்துவ குணங்கள்

எலுமிச்சங்காய், பழம், இலை, வேர் இவை அத்தனையும் மருத்துவப் பயன்களை உள்ளடக்கியது. தீராத தாகத்தை தணிக்க எலுமிச்சம்பழ ரசத்தோடு குளிர்நீர் சேர்த்து உடன் போதிய சர்க்கரை சேர்த்து குடிப்பது வழக்கம். 

அமிர்தப்பொடி – இது பத்திய ரசம் வைக்க உதவும்.

தேவையான பொருட்கள்:
தனியா – 1 சிறிய கிண்ணம் ஓமம்- அரைக் கிண்ணம் மிளகு- கால் கிண்ணம் சீரகம் -1 கிண்ணம் சுக்கு-உடைத்தது கால் கிண்ணம் கண்டதிப்பிலி 1 கிண்ணம் துவரம் பருப்பு- அரை கிண்ணம் காய்ந்த கறிவேப்பிலை நொறுக்கியது- அரை கிண்ணம்
பெருங்காயம் ஒரு கட்டி

இருமலை போக்கும் மஞ்சள், மிளகு, பால்,

விடாமல் அடிக்கடி இருமிக் கொண்டிருப்பவர்களுக்கும், நெஞ்சில் சளி உறைந்திருப்பவர்களுக்கும் அருமருந்து தான் மஞ்சள், பால் மற்றும் மிளகு.
* குறைந்தது ஒரு வாரத்திற்கு இரவில் ஒரு டம்ளர் பாலில் ஒரு சிட்டிகை அளவுக்கு மஞ்சள் தூள், மிளகுத்தூளை சேர்த்து அருந்தி வரவேண்டும். நான்கைந்து நாளிலேயே சளி, இருமல் பறந்தோடி விடும்.

தேங்காயின் மருத்துவ குணங்கள்

தேங்காயை சமையலில் உபயோகிப்பதில் தவறே இல்லை. அதை எப்படி உபயோகிக்கிறோம் என்பதில்தான் விஷயமே இருக்கிறது. தினசரி 30 முதல் 40 கிராம் தேங்காயை உபயோகிக்கலாம். அதை அப்படியே பச்சையாக சேர்த்துக் கொள்கிற வரை பிரச்னையில்லை. துருவி, பால் எடுத்துக் கொதிக்க வைக்கிற போதுதான் அதில் கொழுப்பு அதிகரிக்கிறது. அதே மாதிரிதான் கொப்பரையும். சில வகை உணவுகள் கொப்பரை சேர்ப்பதால் கூடுதலாக ருசிப்பதுண்டு.

சளி, இருமல் போக்கும் கஷாயம்

குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை சளி, இருமல் என்று அவதிப்படும் சீஸன் இது. இந்த கை வைத்தியத்தை முயற்சி செய்து பாருங்கள். செய்வதும் எளிது, உடலுக்கும் நல்லது, விளைவுகளும் இல்லாதது.

இயற்கை மருத்துவம்,

நெருப்பில் சுட்ட வெங்காயத்தை சாப்பிட்டு வர இருமல் கபக்கட்டு முதலியன நீங்கும்.
பல் கூச்சம் இருந்தால் புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஒரிரு நாளில் குணமாகும்.

Wednesday, January 7, 2015

60 செகண்டுகளில் ஹார்ட் அட்டாக் ஏற்பட்டவர்களை காப்பாற்றும் வீட்டு மருந்து

இயற்கை மருத்துவர் ஜான் கிறிஸ்டோபரின் 35 வருடங்கள் மருத்துவ சேவையில், ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு பாதிக்கபட்டவர்கள் இந்த எளிய மருத்துவத்தால் ஒரு நபர் கூட இறந்ததில்லை என்று சொல்கிறார். ஆனால் பாதிக்கப்பட்டவரின் மூச்சு நின்றுவிடாமல் இருக்க வேண்டும். இவருடைய மிளகாய் பொடி தேநீர் 60 செகண்டுகளில் பழைய நிலைக்கு திரும்ப கொண்டு வந்து, சில நிமிடங்களில் பாதிக்கப்பட்டவர்கள் நடமாட தொடங்கிவிடுவார்கள் என்கிறார். அதனால் வீட்டில் மிளகாய் பொடி தயாராக வைத்திருக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறார்.

சளி மற்றும் தொண்டை புண் பிரச்சினை தீர அதிமதுரம் டீ:

தேவையான பொருட்கள் :
அதிமதுரம் தூள் – 1 ஸ்பூன் தண்ணீர் – 200 மில்லி தேன் அல்லது நாட்டு சர்க்கரை அல்லது கருப்பட்டி – சுவைக்கேற்ப

Tuesday, January 6, 2015

மஞ்சள் காமாலை உருவாக காரணம் மற்றும் அதற்கான தீர்வுகள்

பொதுவாக மஞ்சள் காமாலை நோய்த் தொற்றானது பித்த அதிகரிப்பால் வருகிறது. பித்தமானது பல காரணங்களால் மிகுதியாகி ரத்தத்தில் கலந்து விடுவதால் மஞ்சள் காமாலை நோய் ஏற்படுகிறது. உடல் உஷ்ணத்தாலும், இரவில் கண்விழித்து வேலை பார்ப்பதாலும் தூக்கமின்மையாலும் வயிற்றில் புளிப்புத்தன்மை ஏற்பட்டு சளி பிடித்து, ரத்தம் சூடேறி, காமாலைக் கிருமிகள் உண்டாகி, மஞ்சள் காமாலை நோயைத் தோற்றுவிக்கிறது.

கருவில் வளரும் குழந்தை ஆணா? பெண்ணா? தெரிஞ்சுக்க சூப்பர் வழிகள்....

பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது, வயிற்றில் வளர்வது ஆண் குழந்தையா? பெண் குழந்தையா? என தெரிந்து கொள்ள அதிக ஆர்வம் காட்டுவர்.
இதற்கு நம் முன்னோர்கள் சில அறிகுறிகளை கணித்து வைத்துள்ளனர். அதை கொண்டு உங்கள் வயிற்றில் வளரும் குழந்தை என்னவென்று தெரிந்து கொள்ளலாம்.

பொடுகு தொல்லை நீங்க

1. சாம்பார் வெங்காயம் (சின்ன வெங்காயம்) கொஞ்சம் எடுத்து அரைத்து தலையில் தேய்க்கனும். அப்புறம் 15நிமிஷம் கழித்து குளிக்கனும்
2. பாலுடன் மிளகு பவுடரை சேர்த்து தலையில் தேய்க்கவும். 15 நிமிஷம் கழித்து குளிக்கவும்.

இருமல், தொண்டை கரகரப்பு

பாலில் பூண்டைப் போட்டு காய்ச்சிக் குடித்தால் இருமல், ஜலதோஷம், தொண்டைக் கரகரப்பு போகும்.

Monday, January 5, 2015

கண்டங்கத்தரி

கண்டங்கத்தரிக்கு கண்டகாரி, முள்ளிக்காய் என்கின்ற வேறு பெயர்கள் உண்டு. சித்த 
மருந்துகளில் புகழ் பெற்ற மருந்து "தசமூலம்" என்பதாகும். இது பத்து மூலிகைகளின் வேர்களை கொண்டு தயாரிக்கப்படுவதாகும். இந்த பத்து வகை மூலிகைகளில் கண்டங்கத் திரியும் ஒன்றாகும்.

உடல் நலத்தை பாதுக்காக்கும் பீட்ரூட்

உடல் நலத்தை பாதுக்காக்கும் பீட்ரூட்டின் மருத்துவ குணங்கள் :-
அழகிய நிறமும் நிறைய சத்துக்களும் கொண்ட காய் பீட்ரூட். இதனுடைய நிறத்திற்காகவே இதனை அனைவரும் விரும்பி உண்கின்றனர். ‌பீட்ரூட்டில் உள்ள கார்போஹைட்ரேட்ஸ் சர்க்கரை துகள்களாக இருப்பதால் இது விரைவில் ஜீரணமாகி நம் ரத்தத்துடன் கலந்து விடுகிறது.

மஞ்சள் கரிசலாங்கண்ணி கீரை சூப்

தேவையான பொருட்கள் வருமாறு:- 
மஞ்சள் கரிசலாங்கண்ணி கீரை-½ கட்டு, கொத்தமல்லி இலை-¼ கட்டு, கறிவேப்பிலை, மஞ்சள், பூண்டு -சிறிதளவு, வெங்காயம்-1, பச்சை மிளகாய்-1, உப்பு- சிறிதளவு. 

Sunday, January 4, 2015

இயற்கை வைத்தியம்

கருத்தரிக்க உதவும்...
அதிமதுரம், திராட்சை இவை இரண்டையும் சமமாகப் பொடி செய்து 50லிருந்து 100 கிராம் வரை எடுத்து தண்ணீ­ரில் அரைத்து பாலில் கலக்கி பெண்களின் மாதவிடாய் தொடங்கிய நாள் முதல் ஐந்து தினங்கள் சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான பெண்களுக்குக் கருத்தரிக்கும். கருத்தரிக்கும் வரை 3 மாதங்கள் சாப்பிட்டால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.

அரிசிகளில் சிலவகை இதோ உங்களுக்காக !!!

கருங்குருவை:
விரண தோல் நோய்களையும், குறிப்பிட்ட விஷத்தையும் போக்கும். யோக சக்தியையும் தரும்.
மாப்பிள்ளை சம்பா:
இது புரதம், நார், தாது, உப்புச்சத்து நிறைந்தது. இதன் நீராகாரத்தை சாப்பிட்டால் நரம்புகள் வலுப்படும். ஆண்மைத் தன்மை அதிகரிக்கும்

நுங்குவின் மருத்துவ குணங்கள்:-

வெயிலின் உஷ்ணத்தை தணிக்க பலவித பானங்களை அருந்துகிறோம். தர்ப்பூசணி, ஆரஞ்சு போன்ற விதவிதமான பழவகைகளை சாப்பிடுகிறோம். ஆனால் அவைகளை எல்லாம்விட சிறந்தது, நுங்கு. உடலுக்கு குளிர்ச்சியை தருவதில் இது முதலிடத்தை வகிக்கிறது.

இயற்கை மருத்துவம்

* வேப்பிலையை அரைத்து சாப்பிட்டு வெந்நீர் குடித்தால் ரத்த சோகை குணமாகும்.
* பூண்டை உணவில் அதிகமாகச் சேர்த்துக் கொண்டால் பிபீ பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். ரத்த அழுத்தம் சீராகும்.

Saturday, January 3, 2015

குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு உணவு முறைகள்:-

பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு நல்ல மூளை வளர்ச்சியைத் தரும் உணவுகளை தர வேண்டும். உணவானது உடலுக்கு மட்டும் நன்மையைத் தருவதில்லை, மூளைக்கும் நன்மையைத் தருகிறது. இத்தகைய மூளையை ஆரோக்கியமாக வைக்கும் உணவுகளை உண்பதால் குழந்தைகளின் நினைவாற்றல் அதிகரிப்பதோடு, அவர்களது ஞாபக சக்தியும் கூடுகிறது. அத்தகைய உணவுகள் என்னென்னவென்று பார்க்கலாம்.

கரிசலாங்கண்ணி பருப்புக்கூட்டு

தயார் செய்ய தேவையான பொருட்கள் வருமாறு:-
கீரை- ஒரு கட்டு, தேங்காய் துருவல் - சிறிதளவு, வத்தல்- 4, தேவையான அளவு புளி, 
சிறிய வெங்காயம்- 4, தேவையான அளவு உப்பு, துவரம் பருப்பு- 150 கிராம், 

பல் கோளாறுகள் நீங்க

பல் ஈறு வீக்கத்திற்கு நெல்லிக்காயை நசுக்கி ஈறுகளில் தேய்த்து வாருங்கள். சீக்கிரத்தில் குணமடையும்.
அரைக்கீரை வேர், நில வேம்பு, சிறிது மஞ்சள் மூன்றையும் சேர்த்துக் கஷாயம் தயாரித்து வாய் கொப்பளித்தால் பல்வலி, பல் கூச்சம் போன்ற பல் சம்பந்தமான நோய்கள் குணமாகும்.

Thursday, January 1, 2015

மூட்டுத் தேய்மானம் பற்றியும் அதனை சரி செய்யும் இயற்கை வைத்திய முறைகளும்

மூட்டுத் தேய்மானம் இன்று அதிகமாகக் காணப்படும் ஒரு பிரச்சினை. இதை Osteoarthritis அல்லது sandhigata vatam என்று அழைப்போம். முதுமை, உராய்வு, அதிக வேலை செய்வது போன்றவற்றால் மூட்டுகளில் தேய்வு நிலை உண்டாகிறது. மூட்டுகளுக்கும், எலும்புகளுக்கும் இடையே cartilage என்று சொல்லக்கூடிய ரப்பரைப் போன்ற ஒரு பொருள் உள்ளது. ஆயுர்வேதம் இதை ஸ்லேஷ்மதர கலை என்று அழைக்கிறது. இது இருப்பதால் ஓர் எலும்பின் மேல் மற்றொரு எலும்பு நகர்ந்து போக முடியும். இந்த cartilage என்ற எலும்புச் சவ்வு தேயும்போது எலும்புகள் ஒன்றோடு ஒன்று உராயும். இதனால் வலி, வீக்கம், தசை இறுக்கம் போன்றவை உருவாகும்.

உடல் நலத்தை பாதுகாக்கும் செம்பருத்தி பூவின் மருத்துவ குணங்கள்

மற்றொரு பெயர்: செம்பரத்தை
தாவரவியல் பெயர்: Hibiscus rosa-sinensis
அடையாளம்: சிவப்பு நிற மலர்கள் பூக்கும், சுமாரான உயரத்துக்கு வளரும் புதர்த் தாவரம். பல்வேறு நிறங்கள், இதழ் எண்ணிக்கையில் வேறுபாட்டுடன் செம்பருத்தியில் பல வகைகள் உள்ளன. வருடம் முழுவதும் பூக்கக் கூடியது. வீடுகள், தோட்டங்களில் அதிகம் வளர்க்கப்படுகிறது. இதன் கிளைகளைக் கொண்டு இனப்பெருக்கம் செய்யலாம்.

வெந்தய கீரை - அத்திப்பழ சூப்

வெந்தய கீரை சூப் செய்வதற்கு தேவையான பொருட்கள் வருமாறு:- 

கீரை- ஒரு கட்டு, புளி சிறிதளவு, அத்திப்பழம்- 3 எண்ணம், திராட்சை 50 கிராம், 
தேன் சிறிதளவு. 

வீட்டில் வளர்க்கும் அழகு செடிகளின் பயன்கள்

வீட்டிலேயே வளர்க்கக் கூடிய சில குறுஞ்செடிகளில் காற்றில் உள்ள நச்சுக்களைச் சுத்தப்படுத்தும் குணம் நிரம்பி இருக்கிறது என்று நாசா விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி கூறுகிறது.
தமிழ்நாட்டுச் சீதோஷ்ண நிலையில் வாழும் தன்மையையும், அதிக நன்மைகளையும் கொடுக்கும் இந்தச் செடிகளைப் பற்றிய அறிமுகம் இதோ...!!

வெற்றிலை

வெற்றிலை... இது வெற்று இலை இல்லை... வெற்றி இலை...
மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே வெற்றிலை பயன்பாட்டில் இருந்து வருகிறது. வெற்றிலையில் கால்சியம், இரும்புச்சத்து ஆகியன அதிகம் உள்ளது. இது தவிர வெற்றிலையைப் பயன்படுத்தி பல நோய்களையும் குணப்படுத்தலாம். அரைடம்ளர் தேங்காய் எண்ணெயில் 5 வெற்றிலையை போட்டு கொதிக்க விடவும். இலை நன்கு சிவந்ததும் வடிகட்டி பாட்டிலில் அடைத்து வைத்துக் கொண்டு சொரி, சிரங்கு, படைக்கு தடவி வந்தால் நல்ல குணம் கிடைக்கும்.