Saturday, June 29, 2019

பலாபிஞ்சுவின் மருத்துவகுணங்கள்..












..
படம் இதைக் கொண்டிருக்கலாம்: செடி
புற்றுநோய் வராமல் தடுக்க (குறிப்பாக குடல்புற்று நோய்) பலாபிஞ்சு சிறந்த மருந்தாக சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளார்கள் அது மட்டுமல்ல வயோதிக முதிர்வை தவிர்க்கவும், வெண்புள்ளிகள் போன்ற தோல் வியாதிகளுக்கும் பயன்தருகின்றது.
💥Knee pain /Joint Pain - Arthritis and ulcer - நல்ல தீர்வாகும்.

சோம்புவின் மருத்துவ குணங்கள்

சோம்பில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. இது உடலில் உள்ள பல பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வளிக்கும். அதிலும் இன்றைய மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறையால், பல்வேறு உடல் உபாதைகளால் அவஸ்தைப்பட நேரிடுவதால், சோம்பு கொண்டு தேநீர் தயாரித்து தினமும் குடித்து வருவது மிகவும் நல்லது.

Thursday, June 27, 2019

ரத்தம் பிளேட்லெட்கள் அதிகரிக்க

உடம்பில் உள்ள இரத்த நாளங்கள் பழுதடைந்தால், இந்த பிளேட்லெட்கள் ஒன்றுக்கொன்று பின்னி பிணைந்து இரத்தம் கசிவதை தடுக்கிறது. அதே போல் உடம்புக்கு வெளியே வெட்டுக் காயங்கள் அல்லது சிராய்ப்புகள் ஏற்பட்டு இரத்தம் கொட்டுவதை தடுத்து அதை உறைய வைக்கவும் செய்கிறது. பிளேட்லெட்கள் எனும் இந்த குருதிச்சிறுதட்டுகள் இடத்தை பொறுத்து வேவ்வேறு வகையில் நமக்கு பயன்படுகிறது.

தும்பை – மருத்துவ பயன்கள்

தும்பை முழுத்தாவரமும் இனிப்பு, காரச் சுவைகளும், வெப்பத் தன்மையும் கொண்டது. சளியைக் கட்டுப்படுத்தும்; மலமிளக்கும்; கோழையகற்றும்; மாதவிலக்கைத் தூண்டும்.
தும்பை இலைச்சாறு, தலைவலி, வாதநோய் போன்றவற்றைக் குணமாக்கும். தும்பை பூ, தாகம், காய்ச்சல், கண்ணோய் போன்றவற்றிற்கு மருந்தாகும்.
தமிழகமெங்கும், கிராமங்களில் சாதாரணமாகக் காணப்படும் செடி வகைகளில் தும்பைச் செடியும் ஒன்றாகும். பச்சைப்பசேல் நிறத்தில், கத்திபோல் நாலாபுறமும் நீட்டிக் கொண்டிருக்கும்.

வீட்டு மருத்துவம்

சளிக் காய்ச்சல்
புதினா கீரையை நீரில் போட்டு கொதிக்க வைத்து டீ டிகாஷன் போல் செய்து சாப்பிட்டால் சளியால் வரும் காய்ச்சல் குணமாகும்.
இருமல், தொண்டை கரகரப்பு
பாலில் பூண்டைப் போட்டு காய்ச்சிக் குடித்தால் இருமல், ஜலதோஷம், தொண்டைக் கரகரப்பு போகும்.

30 வகையான நோய்களை குணப்படுத்தும் அருகம்புல்

அருகம்புல்லின் துளிர் இலைகள், அதன் கட்டைகள் (தண்டு), வேர் ஆகிய அனைத்துமே மருத்துவப் பயன்களை உடையன ஆகும். அறுகம்புல் தோலின் மேல் ஏற்படும் வெண்புள்ளிகளை குணப்படுத்த வல்லது.
மேலும் சிறுநீரகக் கோளாறுகள் (சிறுநீரில் ரத்தம் கலந்து வெளியேறுதல் உட்பட), ஆஸ்துமா என்னும் மூச்சு முட்டல், உடலில் ஏற்படும் துர்நாற்றம், நெஞ்சுச்சளி, தீப்புண்கள், கண்களில் ஏற்படும் தொற்று நோய்கள், உடற்சோர்வு, ரத்தத்தில் உள்ள சர்க்கரை சத்து அதிகப்படுதல், வயிற்றுப் போக்கு ஆகிய நோய்களையும் போக்க வல்லது.
மேற்கூறிய நோய்கள் மட்டுமின்றி பின்வரும் பெயர்களுடைய ஏராளமான நோய்களையும் அறுகம்புல் வேரறுக்க வல்லது. அவை பின்வருமாறு:-

Wednesday, June 26, 2019

தைராய்டு பாதிப்பிலிருந்து மீள இத தேடி கண்டுபிடிச்சி சாப்பிடுங்க !

தேங்காய் பூ என்பது முற்றிய தேங்காயில் உண்டாகும் கருவளர்ச்சியே ஆகும். தேங்காய்பூவில், தேங்காய் மற்றும் இள நீரில் இருப்பதை இருப்பதை விட அதிக சத்துக்கள் இருக்கிறது. இள நீரில் இருக்கும் சதைப் பற்றினைப் போல ருசி இருக்கும்.

Saturday, June 1, 2019

இயற்கை மருத்துவம்,

* அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.
* விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.
* கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.
* சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.

#பயன்உள்ளதகவல் #

1. ஒரு 30 வினாடிகள்...இரு காது துவாரங்களையும் விரல்களால் அடைத்துக்கொள்ளுங்கள்... நின்று போகும் தீராத விக்கல்!
2. ஒரே ஒரு சிறு கரண்டி அளவுக்கு சர்க்கரையைவாயில் போட்டு சுவையுங்கள்.. பறந்து போகும் விக்கல்!
3. கொட்டாவியை நிறுத்த... கொட்டாவி வருவதற்கான காரணம்: Oxygen பற்றாக்குறை தான்.. அதனால்...
ஒரு நான்கு அல்லது ஐந்து தடவை, நன்கு மூச்சை இழுத்து விடுங்கள்... கொட்டாவி போய், நன்கு சுறுசுறுப்பாகி விடுவீர்கள்!