Wednesday, June 28, 2017

சிறுநீர் கோளாறுகளுக்கு தீர்வு காண

மலம் கழிப்பதில் நமது முன்னோர்கள் சிரமம் கண்டதில்லை, அவர்கள் சிறுநீர் கழிக்கும் பிரச்சனைகள் என ஒன்றை அறிந்ததே இல்லை. ஆனால், நாம் அப்படியா... காலை கடன் கழிப்பதே பெரும் போராட்டம் தான் பலருக்கு.
இதோ! நன்னாரி வேர், கறிவேப்பிலை கொண்டு தயாரிக்கப்படும் இந்த ஆயுர்வேத மருந்து எல்லா விதமான சிறுநீர் கோளாறுகளையும் சரி செய்யும்...
தேவையான பொருட்கள்!
நன்னாரி வேர்,
கறிவேப்பிலை,
சின்ன வெங்காயம்,
வெந்தயம்,
மிளகு சோம்பு மற்றும்
சீரகம்

Monday, June 26, 2017

இயற்கை மருத்துவம்

தேள் கொட்டினால்: எலுமிச்சைப் பழ விதைகளையும், உப்பையும் கலந்து அரைத்துக் குடித்து விட்டால் தேள் கடி நஞ்சு இறங்கி விடும்
கல்லில் சில சொட்டுத் தண்ணீரை தெளித்து அதில் புளியங்கொட்டையைச் சூடு உண்டாகும் படி தேய்த்து, தேள் கடித்த இடத்தில் உடனே வைத்தால் ஒட்டிக் கொள்ளும். நஞ்சு இறங்கியதும் புளியங்கொட்டை விழுந்து விடும்.
சிறிது நாட்டு வெல்லத் தூளுடன் கொஞ்சம் சுண்ணாம்புச் சேர்த்துச் சிறிதளவு புகையிலையையும் கலந்து நன்றாகப் பிசைந்து தேள் கடித்த இடத்தில் வைத்துக் கட்டினால் நஞ்சு இறங்கி விடும்.

Sunday, June 25, 2017

வசம்பு

வசம்பு வெப்பத்தை உண்டாக்கி பசியைத் தூண்டி வயிற்றிலே இருக்கின்ற வாயுவை அகற்றக்கூடிய தன்மை உடையது.
வாய் குமட்டலையும், வாந்தியையும் உண்டாக்க வசம்பை நன்கு பொடி செய்து ஒரு கிராம் அளவு உட்கொள்ள வேண்டும்.
வசம்பை வறுத்துப் பொடித்துக் கால் கிராம் தேனில் கொடுத்து வர சளி, வாயு ஆகியவற்றூ அகற்றுப் பசியை மிகுக்கும்.
வசம்பைச் சுட்டுச் சாம்பலாக்கி தேனில் குழைத்து நாவில் தடவ வாந்தி, ஒக்காளம் தீரும்.

இயற்கை மருத்துவம்

1. ஒரு 30 வினாடிகள்...    இரு காது துவாரங்களையும் விரல்களால் அடைத்துக்கொள்ளுங்கள்...
நின்று போகும் தீராத விக்கல்!
2. ஒரே ஒரு சிறு கரண்டி அளவுக்கு சர்க்கரையைவாயில் போட்டு சுவையுங்கள்.. பறந்து போகும் விக்கல்!
3. கொட்டாவியை நிறுத்த...   கொட்டாவி வருவதற்கான காரணம்: Oxygen பற்றாக்குறை தான்..
அதனால்...    ஒரு நான்கு அல்லது ஐந்து தடவை, நன்கு மூச்சை இழுத்து விடுங்கள்...
கொட்டாவி போய், நன்கு சுறுசுறுப்பாகி விடுவீர்கள்!
5. உடல் துர் நாற்றத்தைப்போக்க...   குளிக்கும் போது நீங்கள் குளிக்கும் தண்ணீரில் ஒரே ஒரு தக்காளிப் பழத்தின் சாற்றினை கலந்து பிறகு குளிக்கவும்... அவ்வளவு தான்...   நாள் முழுக்க புத்துணர்வுடன் திகழ்வீர்கள்!
6. வாய் துர்நாற்றத்தால் சங்கடமா? எலுமிச்சை சாற்றில் சிறிது உப்பு சேர்த்து குடித்து வந்தாலும்,
வாயைக் கொப்பளித்து வந்தாலும் வாய் துர்நாற்றம் நீங்கும்.

Saturday, June 24, 2017

இயற்கை மருத்துவம் :-


1) என்றும் 16 வயது வாழ ஓர் 🍈 ""நெல்லிக்கனி.""
2) இதயத்தை வலுப்படுத்த🌺 ""செம்பருத்திப் பூ"".
3) மூட்டு வலியை போக்கும் 🌿 ""முடக்கத்தான் கீரை.""
4) இருமல், மூக்கடைப்பு குணமாக்கும் 🍃""கற்பூரவல்லி"" (ஓமவல்லி).
5) நீரழிவு நோய் குணமாக்கும் 🌿""அரைக்கீரை.""
6) வாய்ப்புண், குடல்புண்களை குணமாக்கும் 🌿""மணத்தக்காளிகீரை"".
7) உடலை பொன்னிறமாக மாற்றும் 🍂""பொன்னாங்கண்ணி கீரை.""
8) மாரடைப்பு நீங்கும் 🍊""மாதுளம் பழம்.""
9) ரத்தத்தை சுத்தமாகும் 🌱""அருகம்புல்.""
10) கான்சர் நோயை குணமாக்கும் 🍈"" சீதா பழம்.""

உணவுப்பொருட்கள் கெட்டுப்போகாமல் இருக்க டிப்ஸ்!...

* பப்பாளிப் பழத்தின் காம்பு, தரையை நோக்கி இருக்குமாறு வைத்தால், பழம் விரைவில் அழுகாது.
* புளியை அப்படியே ஜாடியில் கொட்டி வைத்தால் சீக்கிரம் பிசுபிசுத்துவிடும். அதனால் கொஞ்சம் புளி அதன் மேல் சிறிது அளவு உப்பைத் தூவ வேண்டும். பின்னர் கொஞ்சம் புளி... கொஞ்சம் உப்பு எனச் சேமித்தால், புளியில் பூச்சி, புழு வராமல் தடுக்கலாம். புளியின் இயல்பும் கெட்டுப்போகாமல் இருக்கும்.
* தேங்காயை அதன் கண் பகுதி மேல் நோக்கியவாறு வைத்தால், சீக்கிரம் அழுகாது.

Tuesday, June 6, 2017

முடவாட்டுக்கால் கிழங்கு

மூட்டு வலிக்கு சிறந்த தீர்வு ,
சிறு குழந்தைகளாக இருக்கும்பொழுது நாம் மேற்கொள்ளும் பயிற்சிகளும் உட்கொள்ளும் ஊட்டச்சத்தான உணவுகளுமே, பிற்காலத்தில் நமது உடல் வலுவாக மாறுவதற்கு காரணமாக அமைகின்றன. கலை விளையாட்டாகவும், வீர விளையாட்டாகவும் நாம் பின்பற்றி வந்த பலவிதமான விளையாட்டுகள், நமது முழங்கால் மூட்டுகளுக்கும், குதிகாலுக்கும் வலுவை தருவதாகவே இருக்கின்றன.

Sunday, June 4, 2017

அல்சரை குணப்படுத்தும் அற்புத வீட்டு வைத்தியங்கள்

அல்சரை உண்டாக்குவதில் ஹெலிகோபேக்டர் பைலோரி என்ற கிருமி முக்கியப் பங்கு வகிக்கிறது. தவிர, காரம், மசாலா நிறைந்த உணவுகளாலும் மதுபானம் அருந்துதல், புகையிலைப் பழக்கம், புகைப்பிடித்தல் மற்றும் கணையத்தில் ஏற்படும் கட்டியினாலும், மருத்துவக் கதிரியக்கத்திற்கு உட்படுத்துவதாலும், மனக்கவலை மற்றும் பரபரப்பினாலும் வயிற்றுப் புண் ஏற்படுகிறது. அதற்கான தீர்வுகள் சித்த மருத்துவத்தில் நிறைய குறிப்பிடப்பட்டுள்ளன. 

சர்க்கரை நோயாளிகளுக்கான சிறந்த ஆவாரம் பூ டீ

ஆவாரம்பூவில் இன்சுலின் சுரப்பைத் தூண்டும் இன்சுலின் பூஸ்டர்கள் நிறைந்துள்ளன. சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது. இந்த டீ செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
ஆவாரம் பூ, இலை, பட்டை, வேர், விதை ஐந்தும் சேர்த்துச் செய்த பொடி - 2 டீஸ்பூன்
அல்லது காய்ந்த ஆவாரம் பூ - 10 - 15, 

பசியின்மையை போக்கும் பிரண்டை

பசியின்மையை போக்க கூடியதும், எலும்புக்கு வலு சேர்க்கும் தன்மை கொண்டதும், எதிர்ப்பு சக்தி உடையதுமான பிரண்டையின் சிறப்பை பற்றி இன்று நாம் பார்ப்போம்: பிரண்டை எலும்பை ஒட்டக்கூடிய தன்மை கொண்டது. எலும்பை பலப்படுத்தும் பிரண்டை ரத்த ஓட்டத்தை சீர்படுத்தி உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க கூடியது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. காடு, மலை, சாலை ஓரங்களில் இந்த பிரண்டை கிடைக்கும். அழகுக்காகவும் இது வளர்க்கப்படுகிறது.

தொடர் தும்மல் நீங்க

* பப்ளிமாசு பழங்களை எடுத்து நறுக்கி அதனுடன் எலுமிச்சை பழச்சாறு சேர்த்து நன்றாக காய்ச்சி சிறிது தேன் கலந்து காலை, மாலை குடித்து வந்தால் தும்மல் குறையும்.
* ஒரு கைப்பிடி அளவு ரோஜா இதழ்களை எடுத்து அரை டம்ளர் தண்ணீர் விட்டுச் சுண்டக் காய்ச்சி அந்தத் தண்ணீரை வடிகட்டி, அதனுடன் ஒரு தேக்கரண்டி அளவு சீரகத்தை அரைத்து போட்டு அந்த நீரை ஒரு சுத்தமான துணியில் நனைத்து முகர்ந்து கொண்டு இருந்தால் அடிக்கடி வரும் தும்மல் குறையும்.
* பரட்டைக் கீரை சாறில் திப்பிலியை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி, தேனில் நான்கு சிட்டிகை அளவு குழைத்துச் சாப்பிட்டால் தும்மல் குறையும்.

தெரிந்துகொள்வோம்


  • ஒரு கப் தயிரை தவறாமல் சாப்பிட்டு வந்தால் அல்சர் வரவே வராது.......!
  • தினமும் ஒரு ஏலக்காயை தேனோடு உண்பது கண் பார்வைக்கும், நரம்பு மண்டலத்திற்கும்மிகவும் நல்லது.......!
  • தினமும் இரண்டு அல்லது மூன்று ஓமம் சாப்பிட்டால் ஒரு மனிதனுக்கு தேவையான இரும்புச் சத்தில் பத்து சதவீதம் கிடைக்கிறது.......!
  • குழந்தைகளுக்கு முகத்தில் பாலுண்ணி தோன்றியதும், வெங்காயத்தை வெட்டி அதன் மேல் தேய்த்துவிட்டால் இரண்டு மூன்று தினங்களில் உதிர்ந்து விடும்.......!
  • மஞ்சள், பூண்டு இவை இரண்டையும் பால் விட்டு அரைத்து தலைக்கு பற்றுப் போட்டால், தலைவலி நீங்கும்.......!
நன்றி : தயாளன் 

Saturday, June 3, 2017

சீரகம்

தினமும் 1 டீஸ்பூன் சீரகம் சாப்பிட்டா  15 கிலோ வரை குறைக்க முடியும்…!!!

அன்றாட உணவில் சேர்த்து வரும் வாசனை மிகுந்த மசாலா பொருளான சீரகம் உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் என்பது தெரியுமா? அதிலும் தினமும் சீரகத்தை தொடர்ந்து எடுத்து வந்தால், 20 நாட்களில் நல்ல மாற்றத்தைக் காணலாம். சீரகம் உடல் எடையைக் குறைக்க உதவுமா என்பது குறித்து சமீபத்தில் ஆய்வு ஒன்று நடைபெற்றது.

இயற்கை மருத்துவம்

1. ஒரு 30 வினாடிகள் இரு காது துவாரங்களையும் விரல்களால் அடைத்துக்கொள்ளுங்கள்...
நின்று போகும் தீராத விக்கல்!
2. ஒரே ஒரு சிறு கரண்டி அளவுக்கு சர்க்கரையைவாயில் போட்டு சுவையுங்கள்.. பறந்து போகும் விக்கல்!
3. கொட்டாவியை நிறுத்த... கொட்டாவி வருவதற்கான காரணம் Oxygen பற்றாக்குறை தான் அதனால் ஒரு நான்கு அல்லது ஐந்து தடவை, நன்கு மூச்சை இழுத்து விடுங்கள் கொட்டாவி போய், நன்கு சுறுசுறுப்பாகி விடுவீர்கள்!