Sunday, November 30, 2014

மனித உடம்பின் 99 இரகசியங்கள் !

யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்
1. நன்கு வளர்ந்த ஒரு மனிதனின் உடலில் மொத்தம் 206 எலும்புகள் உள்ளன. ஆனால் அவன் குழந்தையாக இருக்கும் போது அவனுடைய உடலில் 300 எலும்புகள் இருக்கும் அவன் வளர வளர அவற்றில் 94 எலும்புகள் மற்ற எலும்புகளுடன் இணைந்து விடுகிறது...

உஷ்ணக்கட்டிகளை குணப்படுத்தும் சப்பாத்திக்கள்ளி :-

சப்பாத்திக்கள்ளி இது ஒரு பாலைவனத்தாவரம் வறண்டபகுதியில் செழித்து, வளர்ந்து காணப்படும் ஒருவகை தாவரம்தான் சப்பாத்திக்கள்ளி. நமது இரத்தத்தில் பலவிதமான செல்கள், கனிம, கரிமப்பொருட்கள் கலந்துள்ளன. இவை உறுப்புகளுக்கு தேவையான ஊட்டச்சத்தை தருவதுடன் செல் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றன.

கால்சியம் அதிகம் இருக்கும் உணவுகள்!!!

சத்துக்களில் கால்சியம் மிகவும் இன்றியமையாதது. கால்சியம் சத்து உடலில் குறைவாக இருந்தால், எலும்புகள் ஆரோக்கியமின்றி இருப்பதோடு, இரத்த செல்கள் உருவாவதிலும் பிரச்சனைகள் ஏற்படும். தற்போது நிறைய மக்கள் மூட்டு வலியால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். இவற்றிற்கு காரணம் உடலில் கால்சியம் சத்தானது மிகவும் குறைவாக இருப்பதால் தான். மேலும் கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை சரியாக உட்கொள்ளததும் ஒரு வகையில் காரணம்.

பொடுகு தொல்லையிலிருந்து விடுபடுவது எப்படி???

தலையின் மேற்புற தோலில் உள்ள இறந்த போன உயிரணுக்கள் மொத்த மொத்தமாக செதில் செதிலாக உதிரும். இதைதான் நாம் பொடுகு என்கிறோம். பெரும்பாலன இளைஞர்கள் இன்று பொடுகுத் தொல்லையினால் பாதிக்கப் படுகின்றனர்.

தலையில் நீர் கோர்த்து அவதிப்பட்டால்

தலையில் 'நீர் கோர்த்து'க் கொண்டு, அதனால் தலைப் பாரம், தலைவலியால் அவதிப்படுபவர்கள் பலர். ஆனால் பொதுவாக ஆண்களைவிட பெண்களே தலையில் நீர் கோர்த்துக் கொள்ளும் பிரச்சினையால் அதிகம் கஷ்டப்படுகின்றனர்.

நாள் முழுவதும் சுறுசுறுப்பாய் இயங்கிட..!

நாள் முழுவதும் சுறுசுறுப்பாய் இயங்கிட..!

•தலையை பின்புறம் 10 முறையும் முன்புறம் 10 முறையும் சாய்க்கவும்.

•தலையை நன்றாக பின்நோக்கி வைத்துக் கொண்டு, வாயை நன்றாகத் திறந்து அசைத்து மூடவும்.

•தலையை ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்திற்கு திருப்பவும்.

•பிறகு தலையை வலது தோள்பட்டை வரை கொண்டு சென்று மறுபடி இடது தோள்பட்டைக்கு கொண்டு செல்லவும். இது போல் 10 முதல் 20 தடவை செய்யவும்.

•வாய்க்குள் காற்றை நிரப்பி மூடவும். பின்னர் காற்றை வெளியேற்றவும். இதுபோல் 10 முறை செய்யவும்.

•கண்களை வட்டமாக சுற்றிப் பார்க்கவும். இதுபோல் ஒரு 2 நிமிடம் செய்யவும்.

•கழுத்தை நேராக இருக்குமாறு வைத்து தரையில் உட்கார்ந்து கழுத்தை கொஞ்சம்-கொஞ்சமாக சாய்க்கவும். அதே போன்று மெதுவாக மூச்சை இழுத்து விட்டுக் கொண்டு கழுத்தை மேலே உயர்த்தவும்.

•இரு புருவங்களுக்கும் மேலே ஒற்றை விரல்களால் சில நிமிடங்கள் வரை அழுத்திக் கொண்டேயிருந்து விடவும்.

•கண்களைச் சுற்றி சுருக்கங்கள் விழுவதால் வெகு சீக்கிரம் வயதாகி விட்டது போன்று தோற்றம் ஏற்படும். கீழ்க்கண்ட பயிற்சியின் மூலம் கருப்பு வளையங்கள் நீங்க வாய்ப்புள்ளது.

•முதலில் நேராகப் பார்த்து பிறகு கொஞ்சம் கொஞ்சமாகப் பார்வையைத் தூக்கி மேலே பார்த்து, பிறகு கீழே பார்க்கவும். இதே போன்று வலப்புறமும், இடப்புறமும் பார்க்கவும்.

•விரல்களின் அடிப்புறத்தால் முகம் முழுக்க மெதுவாக அழுத்தினால் முகத்தில் உள்ள தளர்ச்சி நீங்கும்.
முடிந்தவரை பகிருங்கள்....பகிருங்கள்....பகிருங்கள்....
•தலையை பின்புறம் 10 முறையும் முன்புறம் 10 முறையும் சாய்க்கவும்.

இயற்கை மருத்துவம்,

1. மல்லி விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும்.
2. தினமும் குடிநீரைக் காய்ச்சும் போது ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம். தேவைப் பட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். மருத்துவ குணங்களைக் கொண்ட இப்பொருள், ஜீரணத்துக்கு உதவும், வாயுவை அகற்றும், மலச்சிக்கல் இருக்காது. தண்ணீரும் குடிக்கச் சுவையாக இருக்கும்.
3. வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும்.

இயற்கை மருத்துவம்,

1. புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும்.
2. குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டிய நாளில் மட்டும் கீரை சாப்பாட்டுக்கு கொடுக்கக் கூடாது.

Saturday, November 29, 2014

வைட்டமின் சி அதிகம் உள்ள பச்சைப்பட்டாணி

பச்சைப் பட்டாணியில் உடலுக்குத் தேவையான சத்துகளை கொடுக்கக்கூடிய phytonutrients, தாதுச்சத்துகள், வைட்டமின்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடென்ட் ஆகியவை அடங்கியுள்ளன. பீன்ஸ், தட்டைப்பயறு ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது பட்டாணியில் கலோரிகள் குறைவு.

இரத்தச்சோகையை போக்கும் எள் :

எள் (Sesamum Indicum) ஒரு மருத்துவ மூலிகை. எள்ளில் வெள்ளை, கருமை, செம்மை என மூன்று பிரிவுகள் உள்ளன.
கறுப்பு எள் அதிக மருத்துவப் பண்புகள் கொண்டது. இதில் அதிகளவு சுண்ணாம்பு சத்து நிறைந்துள்ளது.

மனித வாழ்வின் தொடக்கம் ஆப்பிளில் இருந்துதான் என்னும் நம்பிக்கையை, ஆதாம் - ஏவாள் கதை விதைக்கிறது. விஞ்ஞானம், புவி ஈர்ப்பு விசை கோட்பாடுகளின் தொடக்கத்தை ஐசக் நியூட்டன் மூலம் உருவாக்குகிறது. ஆங்கிலக் கல்வியின் தொடக்கமும் ஆப்பிளில்தான். ஆரோக்கியத்தின் அடையாளமாக ஆங்கில மருத்துவம் சுட்டிக் காட்டுவதும் ஆப்பிளைத்தான். ஆக ஆப்பிள் ஏதோ ஒரு விதத்தில், நம் வாழ்வில் இன்றியமையாத இடத்தைப் பிடித்திருக்கிறது. ஆப்பிள் வளர்ந்து பரவிய வரலாறு ஆப்பிள் முதன்முதலாக தோன்றியது எங்கே? என்பது குறித்து உறுதியான தகவல்கள் இல்லை. மத்திய ஆசிய நாடுகளான கஜகஸ்தான், தஜிகிஸ்தான், கிர்கிஸ்தான் ஆகியவற்றில் ஏதோ ஒன்றிலோ அல்லது சீனாவிலோ தோன்றியிருக்கலாம் என கருதப்படுகிறது. ஒரு சிலர் ரோமில்தான் ஆப்பிள் தோன்றியது என்கிறார்கள். ஆனால் மனிதர்களால் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, பயிர் செய்யப்பட்டு வந்த பழம் என்பது பெரும்பான்மையான ஆய்வாளர்களின் ஒருமித்த கருத்து. தொல்லியல் ஆய்வாளர்கள் சுவிட்சர்லாந்தில் கண்டு பிடித்த சில தொன்மையான பொருட்களை, விஞ்ஞான முறைப்படி (கார்பன் டேட்டிங்) சோதனை செய்தனர். அந்த ஆய்வில், 'கிறிஸ்து தோன்றுவதற்கு சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, ஸ்விஸ்-இன் ஆதிகுடி மக்கள், ஆப்பிளை உணவாக பயன்படுத்தியிருக்கலாம்' எனத் தெரிவிக்கிறார்கள். கி.மு. 13-ம் நூற்றாண்டில் எகிப்தை ஆண்ட பாரோ வம்சத்து மன்னன் இரண்டாம் ரமீஸஸ், நைல் நதி பிரதேசத்தில் ஆப்பிளை பயிரிடுமாறு விவசாயிகளுக்கு ஆணையிட்டதாக வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர். கி.மு முதலாம் நூற்றாண்டில் ஜெர்மனியின் எல்லையில் இருக்கும் 'ரைன்' பள்ளத்தாக்கில், 35 வகையான ஆப்பிள்கள் காணப்பட்டதாக மற்றொரு தகவல் கூறுகிறது. அதே கால கட்டத்தில் சீனா மற்றும் பாபிலோனிலும் ஆப்பிள் இருந்திருக்கிறது. கி.பி. 1470-ல் 'பார்த்தலோமஸ் ஆங்கிலிகஸ்' என்னும் கிரேக்க அறிஞர், பல்கலை களஞ்சியம் ஒன்றை தயாரித்தார். அதில் ஆப்பிள் பற்றியும், ஆப்பிளில் இருந்து தயாரிக்கப்படும் 'சிடர்' என்னும் பானம் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார். 1556-களில் ஆறாம் எட்வர்ட் மற்றும் முதலாம் எலிசபெத் மகாராணி ஆகியோரின், மருத்துவ ஆலோசகராக ஜான் காயஸ் என்பவர் இருந்தார். எட்வர்டும், எலிசபெத் மகாராணியும் உடல் நலிவுற்ற தருணங் களில், அவர்களிடம் ஆப்பிளை மருந்தாக, ஊட்டச் சத்து உணவாக உண்ணும்படி ஜான் காயஸ் பரிந்துரைத்திருக்கிறார். 1600-களில் இங்கிலாந்து தேசத்தினர் அமெரிக்காவை ஆக்கிரமிக்கையில், அங்கு சில ஆப்பிள் வகைகள் விளைந்திருப்பதை கண்டனர். ஆனால் அவை மிக குறைவான மகசூலைத் தரும் வகைகள் என்பதாகவும் குறிப்பிட்டிருக்கின்றனர். 1623-ல் மாசாசூட்ஸ் மாகாணத்தில் வந்திறங்கிய வில்லியம் பேக்ஸ்டன் என்பவர், ரகத்தில் மிக உயர்ந்த ஆப்பிள் விதைகளை மூட்டையாக கட்டி எடுத்து வந்தார். அதை பாஸ்டனில் உள்ள பீகான் மலை பிரதேசத்தில் பயிரிட்டார். ஆப்பிள் இந்தியாவுக்குள் வந்தது, மிக சமீபத்தில்தான். தொழுநோயாளிகளை குணப்படுத்தும் நோக்கில், சாமுவேல் இவான் ஸ்டோக்ஸ் என்பவர் 1904-ம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு வந்தார். இமாச்சல பிரதேசத்தில் வந்திறங்கிய அவர், அங்கேயே ஆக்னஸ் என்கிற ரஜபுத்திர கிறித்துவ பெண்ணை மணந்தார். அவர்தான் சிம்லாவின் தட்பவெப்பம் ஆப்பிள் விளைச்சலுக்கு உகந்தது என்று கருதி, ஆப்பிள் செடிகளை நட்டு சாகுபடி செய்தார். இன்று இந்தியா உலக ஆப்பிள் உற்பத்தியில் சீனா, அமெரிக்கா, துருக்கி, போலந்து ஆகிய நாடுகளுக்கு அடுத்து ஐந்தாவது இடத்தில் உள்ளது. அது சரி.. ஆப்பிளுக்கு தமிழில் என்ன பெயர் தெரியுமா? அரத்திப் பழம் மற்றும் குமளிப்பழம். ஆப்பிளின் குறிப்பிடத்தக்க வகைகள் ரோஸாசியே எனப்படும் பூக்கும் தாவர குடும்பத்தைச் சார்ந்தது ஆப்பிள் பழம். இதில் உலகம் முழுக்க 7,000 பிரபலமான வகைகளும், மிக அரிதான 2,800 வகைகளும் இருக்கின்றனவாம். ரெட் டெலிசியஸ், காலா, க்ரான்னி ஸ்மித், கோல்டன் டெலிசியஸ், பியூஜி, பிங்க் லேடி போன்றவை குறிப்பிடத்தகுந்த சில வகைகள். அமெரிக்கர் ஒருவரின் சுவாரசியமான கண்டுபிடிப்புப்படி, நீங்கள் ஒரு நாளைக்கு ஒரு வகை என, தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், உலகம் முழுக்க உள்ள ஆப்பிள் வகைகளை சாப்பிட்டு முடிக்க 27 வருடங்களும் மூன்று மாதங்களும் ஆகுமாம். 'ரெட் டெலிசியஸ்' பெருவில் முதன் முதலில் பயிரிடப்பட்ட இனமாகும். 1872-ம் ஆண்டு முதல் அமெரிக்காவின் பிரபலமான ஆப்பிள் வகை இது. சிவப்பு நிறமாக இருக்கும் இவற்றின் தோல், சற்று கடினமானது. உலகில் உள்ள ஆப்பிள்களில் இதுதான் மிகச் சுவையானது எனக் கருதப்படுகிறது. 'காலா' என்னும் வகை கனடாவில் கண்டறியப்பட்டது. மெலிதான தோல், சிவந்த தோலில் பச்சை, மஞ்சள் மற்றும் வெள்ளை நிறங்கள் திட்டுத்திட்டாக காணப் படும். 'கோல்டன் டெலிசியஸ்' வகை ஆப்பிள்கள், அமெரிக்காவின் மேற்கு வெர்ஜினியாவில் உருவாக்கப்பட்ட இனமாகும். இது பொன் நிறத்தில் இருக்கும். பொதுவாக ஆப்பிள்களை அரிந்து வைத்தால், 'பெர்ரஸ் ஆக்ஸைட்' என்னும் வேதிப்பொருள் 'பெர்ரிக் ஆக்ஸைடாக' மாறுவதனால் விரைவில் பிரவுன் நிறத்துக்கு மாறிவிடும். ஆனால் 'கோல்டன் டெலிசியஸ்' வகை ஆப்பிள்கள் அவ்வளவு சீக்கிரத்தில் மாறாது. சாலட், இனிப்பு சாஸ் தயாரிக்க இந்த வகை ஏற்றது. 'பியூஜி' ஜப்பானின் கண்டுபிடிப்பு. இளஞ்சிவப்பு நிறத்தில் அளவில் மிகப் பெரியதாக இருக்கும் இவை, குறைந்த அளவு இனிப்பு சுவை கொண்டது. அமிலத்தன்மையும் மிகக்குறைவு. எனவே இதனை சமையலுக்கு பயன்படுத்துவார்கள். 'க்ரான்னி ஸ்மித்' ஆஸ்திரேலியாவைச் சார்ந்த 'மேரி ஆன் ஸ்மித்' என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. பச்சை நிறத்தில் காணப்படும் இந்த வகை ஆப்பிள்கள், வருடம் முழுவதும் காய்க்கும் தன்மை கொண்டவை. (பெரும்பாலானவை இரண்டு அல்லது மூன்று மாதங்கள் மட்டுமே காய்க்கும்). தோல் தடித்திருக்கும். உள்ளிருக்கும் சதைப் பகுதியும் கடினமாக இருக்கும். நீண்ட நாள் வைத்திருக்கலாம். சாஸ், சாலட், சமையலுக்கு என பலவிதங்களில் இதனை பயன்படுத்தலாம். 'பிங்க் லேடி' வகை ஆப்பிள்களும் ஆஸ்திரேலியாவின் கண்டுபிடிப்புதான். ஆப்பிள்கள் வளர குளிர் பிரதேசங்கள்தான் ஏதுவானவை. ஆனால் 'பிங்க் லேடி' வெப்பமான இடங்களிலும் வளரக்கூடியவை. மிதமான அளவு, ரோஜா வண்ணத்தில் காணப்படும். இன்னும் விசித்திரமான, வித்தியாசமான பல வகைகள் உள்ளன. ஆப்பிளைப்பற்றி மட்டும் படிப்பதற்காக 'போமாலஜி' என்ற அறிவியல் பிரிவு ஒன்று இருக்கிறது என்றால், எத்தனை விரிவான கடல், ஆப்பிளுக்குள் ஒளிந்திருக்கிறது என்பதை உணரமுடியும். ஆப்பிள் செய்திகள் கஜகஸ்தான் நாட்டில் உள்ள ஆப்பிள் காடுகள் நிறைந்த ‘அல்மாட்டி' நகரத்தின் பெயருக்கு பொருள் ‘ஆப்பிள்களின் தந்தை' என்பதாகும். ரோம் தேசத்தில் வணங்கப்படும் 'போமோனோ' என்னும் கடவுள், ஆப்பிளின் தெய்வமாகும். ஒரு காலத்தில் டென்மார்க், ஸ்வீடன் போன்ற ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில், ஆசிரியர்களுக்கு மிகக்குறைவான ஊதியமே வழங்கப்பட்டதாம். மாணவர்களின் பெற்றோர், கூடை கூடையாய் ஆப்பிள் கொடுத்து அதை ஈடு செய்தனராம். ஆசிரியர்களின் ஊதியம் உயர்த்தப்பட்ட பின்னும், ஆப்பிள் ஒன்றை கவுரவப் பரிசாகக் கருதி பெற்றோர்கள் தருவது இன்றைக்கும் வழக்கத்தில் இருக்கிறதாம். ஆப்பிள் செடி தனியாக வளரக்கூடிய தன்மை குறைவானது. தனக்கு அருகில் இன்னொரு ஆப்பிள் செடி இருந்தால் நிறைய காய்க்கவும், நீண்ட நாள் உயிர்த்திருக்கவும் செய்யுமாம். எனவே இரண்டிரண்டாகத்தான் நடுவார்கள். அதோடு தேனீக்கள் அருகில் இருந்தால்தான் இனப்பெருக்கமும் நடக்குமாம். அதனால் அமெரிக்காவில் ஆப்பிள் செடி வாங்கினால், கூடவே தேனீக்கள் வளரும் சூழலும் இருக்குமாறு பார்த்துக் கொள்வார்கள். ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் பேணும் தன்மை ஆப்பிளுக்கு இயல்பாக உண்டு என்பதை இதன்மூலம் உணரலாம். அதனால்தானோ என்னவோ ஆப்பிளுக்கு சீன மொழியில் 'பிங்' என்று பெயர். அதன் பொருள் அமைதி. சீன புத்தாண்டு அன்று ஆப்பிளை மற்றவர்களுக்குத் தருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். யூதர்களுக்கும் இந்த பழக்கம் உண்டு. பழகிய மனிதர்களுக்கு பழங்களைத் தருவது பழங்காலந் தொட்டு மனிதர்களின் வழக்கம்தான். சக மனிதர்களின் மீதான பற்றுதலை அது காண்பிக்கிறது. அற்புதங்கள் நிறைந்த ஆப்பிளை நாம் பிறருக்குத் தருவது அன்பின் பரிமாற்றம் மட்டுமல்ல, ஆரோக்கியத்தின் பறைசாற்றலும் கூட... (இன்னும் பேசுவோம்) ஆப்பிளின் மருத்துவப் பயன்கள்- 'தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரை அணுக வேண்டிய அவசியமில்லை' என்பது ஆங்கிலப் பழமொழி. கலோரிகளில் குறைவானது ஆப்பிள். மேலும் கரைபடக் கூடிய நார்ச்சத்துக்கள் ஆப்பிள்களில் அதிகம் என்பதால், கொலஸ்ட்ராலைக் குறைக்கும் ஆற்றல் பெற்றது. ஆப்பிள்கள் ஒரு பெண்ணின் கருத்தரிக்கும் வாய்ப்பை அதிகரிக்கும். ஆப்பிள் பழத்தை, தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் 'பார்கின்ஸன்' எனப்படும் வாதம், 'அல்சைமர்' எனப்படும் மறதி நோய் வராது. மூளைக்கு மிகுந்த சக்தியளிக்கும் தன்மை ஆப்பிளுக்கு உண்டு. பல் ஈறுகள் கெட்டிப்படும் என்பதால், இரவு படுப்பதற்கு முன் ஆப்பிள் சாப்பிடலாம். நரம்பு பலவீனம் நிவர்த்தியாகும். இதய நோய் பாதிப்பு, புற்றுநோய் வராமல் தடுக்கும். ஆப்பிள் சாப்பிடுவதால் உடலில் உள்ள செல்கள் புதுப்பிக்கப்படுகின்றன.

னித வாழ்வின் தொடக்கம் ஆப்பிளில் இருந்துதான் என்னும் நம்பிக்கையை, ஆதாம் - ஏவாள் கதை விதைக்கிறது. விஞ்ஞானம், புவி ஈர்ப்பு விசை கோட்பாடுகளின் தொடக்கத்தை ஐசக் நியூட்டன் மூலம் உருவாக்குகிறது. ஆங்கிலக் கல்வியின் தொடக்கமும் ஆப்பிளில்தான். ஆரோக்கியத்தின் அடையாளமாக ஆங்கில மருத்துவம் சுட்டிக் காட்டுவதும் ஆப்பிளைத்தான். ஆக ஆப்பிள் ஏதோ ஒரு விதத்தில்,  நம் வாழ்வில் இன்றியமையாத இடத்தைப் பிடித்திருக்கிறது. 

அதிசய பானம் (Miracle Drink)

சில பழங்கள் காய்கறிகளில் அதிக பலன்கள் உண்டு. அவற்றில் ஆப்பிள், பீட்ரூட், கேரட் போன்றவை இன்றியமையாதது. இவை மூன்றையும் சேர்த்து உருவாக்கப்படும் ஜூஸினை மிராக்கிள் டிரிங் என்று கூறுவர். இவற்றை அடிக்கடி பருகி வந்தால் பல வியதிகளை குணப்படுத்தும் தன்மை இதற்கு உண்டு என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

வெந்தயக்கீரை

உடல் நலத்தை பாதுகாக்கும் வெந்தயக்கீரையின் மருத்துவ குணங்கள்:-
வெந்தயக்கீரையைக் கூட்டு வைத்துப் பகலில் சாப்பிட்டால் வாய்வு தொல்லை போகும். மூன்றே நாட்களில் வாயு முழுவதையும் கலைத்து விடும். வயிற்று உப்பிசம் இருந்தாலும் தணிந்து விடும்.

இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும் வெள்ளை சாதம்

ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டும் சாதத்தை உட்கொள்வது நல்லது. ஆனால் இதை அளவாக உட்கொண்டால் நல்லது தான். அளவுக்கு அதிகமாக சாதத்தை உட்கொள்ளும் போது, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். 

கிட்னி ஃபெயிலியர், புற்றுநோய்

அனைவரின் கவனத்திற்கும்....
உங்களது உறவினர், நண்பர் யாரேனும் கிட்னி ஃபெயிலியர், புற்றுநோய் உள்ளிட்ட எந்தவொரு கொடிய நோய்களினால் பாதிக்கப்பட்டிருந்தாலும் அவர்களை கீழ்கண்ட முகவரிக்கு அழைத்துச் செல்லுங்கள்.

பூசணி–வெள்ளரிக்காய் புற்று நோயை குணப்படுத்தும்

புற்று நோயை குணப்படுத்த பலவித மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. தற்போது வெள்ளரிக்காய், பூசணிக்காய், தர்பூசணி மற்றும் பழச்சாறு புற்று நோயை குணப்படுத்தும் தன்மை வாய்ந்தது. இவை நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் திறன் படைத்தது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பாதாம் பருப்பு

திகமான சத்துக்களைக் கொண்ட பருப்பு வகைகளில் ஒன்றாக உள்ளது, பாதாம் பருப்பு.
பாதாம் பருப்பு உடலில் கொழுப்பை அதிகரிக்கும் என்ற தவறான எண்ணம் பலருக்கு உண்டு. பாதாம் இனிப்புகளில் சேர்க்கப்படும் சர்க்கரையும், கொழுப்பும்தான் உடல் கொழுப்புக்கும் வேறு பல நோய்களுக்கும் கொண்டுச் செல்கிறது. இவை இரண்டையும் நீக்கிவிட்டால் பாதாம் பருப்பு உடல் செழிக்கச் செய்யும் ஓர் ஆரோக்கியமான உணவுதான். இதன் மகத்துவத்தை அறியாத பலர் இதனை உணவில் சேர்த்துக் கொள்வதில்லை.

இயற்கை மருத்துவம்

மார்பு சளி
மணலிக் கீரையுடன் சுக்கு, மிளகு, திப்பிலி, சித்தரத்தை, பனை வெல்லம் ஆகியவற்றைச் சேர்த்துக் கஷாயமாக்கிச் சாப்பிட்டால் மார்புச் சளி குணமாகும்.

முடக்கத்தான் கீரையின் மருத்துவ குணங்கள் :-

முடக்கத்தான் வேலிகளில் காட்டுச் செடியாக வளர்ந்து கிடக்கும் ஒரு வகைக் கீரை. இதன் இலை துவர்ப்புச் சுவையுடையது.
* முடக்கத்தான் கீரையை எண்ணெயில் வதக்கி மிளகாயும், உப்பும் சேர்த்துத் துவையல் அரைத்துத் தொடு கூட்டன்கப் பயன்படுத்தினால் சுவையாக இருக்கும்.

உடலில் உள்ள கொழுப்பை கரைக்க உதவும் உணவுகள்

உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை (metabolism) ஊக்குவிக்க சிறந்த வழி என்றால், கொழுப்பை குறைக்கும் உணவுகளை வழக்கமான ஆகாரத்தில் சேர்த்து கொள்வதாகும். சரி இப்போது உடலில் தங்கியிருக்கும் கொழுப்பை வெளியேற்ற உதவும் உணவுகளை பார்க்கலாம்.

Friday, November 28, 2014

நோயற்ற வாழ்விற்கு 30 குறிப்புகள்.....

1. தண்ணீர் நிறைய குடியுங்கள்.
2. காலை உணவு ஒரு அரசன்/அரசி போலவும், மதிய உணவு ஒரு இளவரசன்/இளவரசி போலவும்,இரவு உணவை யாசகம் செய்பவனைப் போலவும் உண்ண வேண்டும்.

மருத்துவ குணம் நிறைந்த வாழை :-

வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வாழைப்பழம் ஒரு மென்மையான மலமிளக்கி. ஆகும். மேலும் வயிற்றுப் போக்கு சீதபேதி ஆகியவற்றை எதிர்த்து போக்கவல்லது. குடற்புண்களையும், ரத்தக் கசிவையும் (இன்டஸ்டினல் லிசென்ஸ்) போக்க வல்லது.

திரிபலா - பல உடல் பிரச்சனைகளை சரிசெய்யும் ஒரே மருந்து

திரிபலா - பல உடல் பிரச்சனைகளை சரிசெய்யும் ஒரே மருந்து
இன்றைய காலத்தில் கடினமாக உழைப்பதை விட, புத்திசாலித்தனமாக வேலையை முடிப்பதே மிகவும் முக்கியம். அதைப்போல் நமது பிரச்சனைகளை சரியாகத் தீர்க்கும் விதமாக எதையும் கையாள வேண்டியுள்ளது. இதற்கு உடலும் உள்ளமும் முழுத் தகுதியுடன் இருந்தால் தான் இவை சாத்தியமாகும். உடலும் உள்ளமும் முழுத்தகுதியுடன் விளங்குவதற்கு, அன்றாட வேலைகளை ஒரு ஒழுங்கு முறையுடன் செய்து வர வேண்டும். முறையான மற்றும் கட்டுப்பாடான உணவுப்பழக்கத்தைப் பின்பற்ற வேண்டும். வாழ்க்கையை உடலளவில் மிகவும் வசதியான முறையில் வாழ்கிறோம். ஆனால், மனதளவில் மிகவும் அழுத்தம் நிறைந்த வாழ்க்கையை தான் வாழ்கிறோம். இத்தகைய வாழ்க்கை முறை சீக்கிரமாகவே முதுமையாக உணர வைத்து விடும் அல்லது பல நோய்களுக்கு வழிவகுக்கும்.

இயற்கை மருத்துவம்,

* சிறிது தண்ணீரில் ஒரு கரண்டி ஓமம் போட்டு கொதிக்க வைத்து, அதில் 100 மில்லி தேங்காய் எண்ணெயை விட்டு மீண்டும் கொதிக்க விட்டு வடிகட்டி கொள்ளுங்கள். வடிகட்டியதோடு கற்பூரப் பொடியைக் கலந்து இளஞ்சூட்டுடன் இடுப்பில் நன்றாகத் தேய்த்து வர இடுப்பு வலி நீங்கும்.

குழந்தைகளின் ஜீரண கோளாறை போக்கும் ஓமம்

ஓமம் சித்த ஆயுர்வேத மருந்துகளில் அதிகம் இடம்பெறுகிறது. சீதளத்தால் உண்டாகும் சுரம், இருமல், செரிமானம் சரியாக இல்லாதது, வயிற்று பொருமல் பேதி, குடலிரைச்சல், பல் சம்மந்தமான நோய்கள், இரைப்பு நோய் (ஆஸ்துமா) ஆசனவாய் நோய்கள் இவைகளை ஓமம் போக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி தரும் வெல்ல பாகு நெல்லிக்காய்

தேவையான பொருட்கள் :
நெல்லிக்காய் - ஒரு கிலோ 
வெல்லம் அல்லது கருப்பட்டி- அரைக்கிலோ
பால் - இரண்டு கரண்டி
தண்ணீர் - தேவையானஅளவு

நெல்லிக்காய்

அதியமானால் அவ்வைக்குக் கொடுக்கப்பட்டது’ என்ற சங்க காலக் கதைகள் முதல், 'நெல்லிக்காய் கலந்த கூந்தல் வளர்ச்சித் தைலம்’ என சமீபத்திய விளம்பரங்கள் வரை நெல்லிக்காயின் புகழுக்குக் குறைவே இல்லை. 

Thursday, November 27, 2014

தாய் பால் கொடுக்கும் போது கோபப்பட கூடாதாம்.....!!

தாய் மார்களே உங்கள் குழந்தைக்கு தாய் பால் கொடுக்கும் போது நீங்கள் கோபப்பட கூடாதாம்.....!! ஆபத்தாம்...!!

கோபத்தின் உச்சத்தில் இருக்கும் தாய் தன் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தால் அந்த கோப உணர்ச்சியினால் ஏற்படும் கெடுதல்கள் அந்த பாலையே நஞ்சாக்கி, குழந்தை இறக்கும் வாய்ப்பை கூட ஏற்படுத்துகிறதாம். எனவே தாய்மார்கள் பாலூட்டும் போது அமைதியான சூழ்நிலையில் தாய்ப்பாலுட்ட வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.

கடிகளைக் கண்டறிதல்...

இரவில் நச்சுப்பூச்சி ஏதேனும் கடித்து விட்டால், என்ன கடித்தது என்பதை அறியாமல் மருத்துவம் செய்வது கடினம்.
இந்நிலையில் கடிபட்டவருக்கு ஆடு தின்னாப்பாளை என்ற செடியின் வேரைக் கொடுத்துச் சுவைக்கச் சொன்னால்......

வாட்டர் தெரபி

காலையில் படுக்கையில் இருந்து எழுந்ததும், வெறும் வயிற்றில் 1.5 லிட்டர் தண்ணீரைக் குடிக்க வேண்டும். அதாவது 5 முதல் 6 டம்ளர்கள் வரைத் தண்ணீரைக் குடிக்கவும். அதற்குப் பின் முகத்தைக் கழுவ வேண்டும். இதற்குப் பெயர் தான் வாட்டர் தெரபி என்று பெயர். இந்த வாட்டர் தெரிபியன் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் வெறும் வயிற்றில் 1.5 லிட்டர் தண்ணீரைக் குடிப்பதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பும், குடித்த 1 மணி நேரத்திற்கு பின்பும் எதுவும் சாப்பிடக் கூடாது. மேலும் இந்த வாட்டர் தெரிபியை கடைபிடிப்பவர்கள், 1.5 லிட்டர் தண்ணீரைக் குடிப்பதற்கு முந்தைய இரவில் மது அருந்தக்கூடாது. தேவைப்பட்டால் வாட்டர் தெரபிக்கு சூடேற்றிய தண்ணீரையோ அல்லது வடிகட்டிய தண்ணீரையோ பயன்படுத்தலாம்.

தயிர்

1. ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக்கம் நன்றாக வரும்.
2. தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும்.
3. தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து.

இயற்கை மருத்துவம்,

# பப்பாளிப் பழத்தைத் தேனில் ஊறவைத்துச் சாப்பிட்டால் மூல நோய் குணமாகும்.
# வெந்தயக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால், சளித் தொல்லை நீங்கும்.

அழகு குறிப்புக்கள்,


தேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை போட்டுக் குழைத்து உடம்பிற்கு தடவி, பயத்தமாவை தேய்த்துக் குளித்தாள் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.
——————————————————————————–
ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.
——————————————————————————–
முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும்.
——————————————————————————–
பருமனாக இருப்பவர்கள் எடையை குறைக்க தினமும் காலையில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான வெந்நீரில் ஒரு மூடி எலுமிச்சை பழச்சாற்றை பிழிந்து அதனுடன் அரை ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் எடை குறையும்.
——————————————————————————–
நகங்களை வெட்டும் முன் எண்ணெயை தடவிவிட்டு, சிறிது நேரம் கழித்து நகத்தை வெட்டினால், விரும்பும் வடிவத்திலும், அழகாகவும் வெட்ட இயலும்.
——————————————————————————–
கூந்தலில் எண்ணெய் பசை அதிகமாக இருந்தால், கோழி முட்டையில் கொஞ்சம் சர்க்கரையை கலந்து தலையில் லேசாக தடவிக்கொண்டு பிறகு தலைக்கு ஊற்ற வேண்டும். இதனால் எண்ணெய் பசை நீங்கி முடி அழகு பெறும்.
——————————————————————————–
தேநீரில் வடிகட்டிய பின், மிஞ்சும் தேயிலைத் தூளில் எலுமிச்சை சாறை பிழிந்து, தலையில் தேய்த்துக் குளித்தால், தலைமுடி பளபளப்பாகும்.
——————————————————————————–
வேப்பிலை, புதினா, சிறிது மருதாணி மற்றும் குப்பைமேனி இலைகளை காயவைத்து, தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் சிறிது எடுத்து, பாலில் குழைத்து, முகத்தில் பூசி, 20 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முகம் வோடிக்குரு வராமல், வெளியில் கறுத்துப் போகாமல் இருக்கும்.
——————————————————————————–
இளம் சூடான ஒரு லிட்டர் நீரில், இரண்டு ஸ்பூன் உப்பைப் போட்டு, கண்களை கழுவினால் கண்கள் பிரகாசமாக இருக்கும்.
——————————————————————————–
கை, கால் முட்டிகளில் கறுப்பு நிறம் அதிகமாக இருந்தால், தொடர்ந்து அந்த இடத்தில் எலுமிச்சம்பழ சாற்றை தேய்த்து சோப்பு போட்டு குளிக்க வேண்டும் நாளடைவில் கறுப்பு நிறம் போய் விடும். தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.
——————————————————————————–
இரவு படுக்கும் முன், புதினா சாறு இரண்டு தேக்கரண்டி, அரை மூடி எலுமிச்சம்பழ சாறு ஆகியவற்றுடன் பயிற்றம்பருப்பு மாவை கலந்து முகத்தில் தடவிக் கொண்டு பத்து நிமிடம் ஊறிய பிறகு ஐஸ் ஒத்தடம் கொடுக்க முகம் சுத்தமாகும். பருவினால் ஏற்பட்ட தழும்பும் மறையும்.
——————————————————————————–
ஆப்பிள் பழத்தை சின்னச் சின்ன துண்டுகளாக வெட்டி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும்.
——————————————————————————–
முகத்தில் உள்ள முடிகளை அகற்ற, முட்டையின் வெள்ளை கரு, சர்க்கரை, சோளமாவு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பசைபோல் ஆனதும் முகத்தில் தடவவும். காய்ந்தவுடன் மெதுவாக பிய்த்து எடுத்தால் முட்டையுடன் முடியும் எளிதில் வரும்.
——————————————————————————–
மோரை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவினால் வறண்ட சருமம் புதுப் பொலிவடையும்.
——————————————————————————–
பழுத்த வாழைப் பழத்தை நன்றாகப் பிசைந்து முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து கழுவினால், சருமம் மிகவும் மிருதுவாகும்.
——————————————————————————–
ஆரஞ்சு பழத்தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து பாலுடன் கலந்து சருமத்தில் தடவி அரைமணி நேரம் கழித்து கழுவி வந்தால், வெயிலில் ஏற்பட்ட கருமை மறையும்.
——————————————————————————–
பால், கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாறும்.
——————————————————————————–
தேங்காய்ப் பாலுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் ஐந்து நிமிடம் மசாஜ் செய்தால் சோர்வடைந்து சருமம் புத்துணர்ச்சி பெறும்.
——————————————————————————–
தக்காளி பழத்தை இரண்டாக நறுக்கி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும்.
——————————————————————————–
தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.

சித்த மருத்துவ குறிப்புகள் :

தலைவலி
ஐந்தாறு துளசி இலைகளோடு ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

சித்த மருத்துவ குறிப்புகள்

1. மாம்பழம்:
முக்கனிகளில் முதன்மையானது. இதில் உயிர்சத்து 'A' உள்ளதால் நல்ல கண் ஒளி
தருகிறது. இரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் சாப்பிடுவதினால் ரத்த அழுத்தம்
சீராகும். குழந்தைகளும் சாப்பிடலாம்.

Tuesday, November 25, 2014

சாமையின் மகத்துவம் :-

சாமை என்பது சிறுவகை தானியங்களில் ஒன்றாகும், இது ஒரு புல் இனத்தை சார்ந்த பயிராகும், மலை கிராமங்களில் உள்ள மலை கிராம மக்கள் சாமையினை உணவு பொருளாக பயன்படுத்தி வந்தனர். அனைத்து மக்களும் சாமையின் உணவாக சாப்பிட்டு வருகின்றனர். பொதுவாக மக்கள் உணவு பொருளாக பயன்படுத்தி வரும் தானிய வகைகளை பெருவகை தானியம், சிறுவகைதானியம் என இரண்டாக பிரிக்கலாம்.

முலாம்பழம்

'ருவகாலத்துக்கு ஏற்ப இயற்கை நமக்கு அளிக்கும் சில பழங்களைத் தவிர்த்து, எப்போதும் எங்கேயும் கிடைக்கும் 'எவர்க்ரீன்’ பழங்களுக்கு என்று தனிச் சிறப்பு உண்டு. அவற்றில் முக்கிய இடம் வகிப்பது முலாம்பழம். இதை நறுக்கியதும் நாசியைத் துளைக்கும் மணமும் பளீர் ஆரஞ்சு நிறமுமே ஈர்க்கும். முலாம் பழத்தின் சத்துக்கள், சிறப்புகள் குறித்து கோவை சித்த மருத்துவர் சசிகலாவிடம் கேட்டோம்.

இயற்கை மருத்துவம்,

1. மல்லி விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும்.

பருப்பு சாதம்

தேவையான பொருட்கள் :
பாசி பருப்பு - 1 கப் அரிசி - 2 கப் வெங்காயம் - 2 தக்காளி - 2 வர மிளகாய் - 4 சீரகம் - 1 டீஸ்பூன் கடுகு - 1/2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன் பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன் குழம்பு மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் கொத்தமல்லி - 1/2 கப் (நறுக்கியது) தண்ணீர் - 4 கப் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு

கோபத்தை கையாள எளிய வழிகள்

கோபத்தை தவிர்த்து சிரித்து வாழ்வோம்
1. கோப உணர்ச்சிகள் அதிக இரத்த அழுத்தம், கண் சிவப்பு அமில சுரப்பு, அல்சரை உண்டு பண்ணும் & மிருக குணத்தை உச்ச நிலைக்கு உயர்த்திடும்.

Monday, November 24, 2014

நோய்களை தகர்க்கும் முருங்கை

இன்றைய சூழ்நிலையில் நோய் பாதிக்கப்படாதவர்களே இல்லை என்கிற நிலை உள்ளது. உணவு, தண்ணீர், காற்று போன்றவைகளால் ஏராளமான நோய்கள் உருவாகி மக்களை தாக்குகின்றன. தற்போது விவசாய நிலங்கள் பெருமளவில் குறைந்து வருகிறது. என்றாலும் இருக்கும் இடத்தில் விவசாயம் செய்கின்றனர். ஆனால் இவை இயற்கையான முறையில் விவசாயம் செய்ய முடியாத நிலையில் ரசயான உரங்களை கொண்டு உணவு பொருட்களுடன் தயாரிக்கப்படுகிறது. இந்த ரசாயன உரமானது உணவு பொருட்களுடன் சேர்ந்து நமது உடலுக்குள் தஞ்சமடைந்து விடுகிறது.

இயற்கை மருத்துவம்,

1. நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது.
2. வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்.

அருமருந்தான அருகம் புல்....

இந்த அருகம்புல்லில் அதிக விட்டமின், தாதுப்பொருள் இருப்பதை அறிந்து ஜெர்மனியர் சப்பாத்திமாவுடன் சேர்த்து ரொட்டி செய்து சாப்பிடுகின்றனர். இந்தப்புல்லை நன்கு சுத்தம்செய்து கழுவி சாறு எடுத்து ஐந்துபங்கு சுத்த நீருடன் கலந்து சாப்பிட்டுவந்தால் நரம்புத்தளர்ச்சி, மலச்சிக்கல், இரத்தஅழுத்தம், அதிகமான எடை ஆகியவை குணமாகும்.

கிவி பழத்தின் மருத்துவ பயன்கள் :-

கிவியின் நன்மைகள் கிவி பழத்தில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இதனை ஒரு நாளைக்கு ஒன்று சாப்பிட்டு வந்தால், மூச்சுக்கோளாறான ஆஸ்துமா நீங்கும்.

அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவதால் வரும் பல நன்மைகள் ? தினமும் அதிகாலையில் தூக்கத்தில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவது இப்போது பிரபலமாகி வருகிறது. 1. காலையில் எழுந்ததும் பல் துலக்கும் முன்பே 4 x 160ml டம்ளர் தண்ணீர் அருந்துங்கள். 2. பல் துலக்கி வாய் அலம்பிய பின் 45 நிமிடங்களுக்கு உணவோ, நீராகாரம் எதுவாயினும் உட்கொள்ளக் கூடாது. 3. 45 நிமிடங்களுக்குப் பின் வழமையான உங்கள் உணவை உட்கொள்ளலாம். 4. காலை உணவின் பின் 15 நிமிடங்களுக்கும், மதிய மற்றும் இரவு உணவின் போது 2 மணி நேரங்களுக்கும் எதுவும் உட்கொள்ள வேண்டாம். 5. முதியோர், நோயாளிகள் மற்றும் 4 டம்ளர் நீரை எடுத்த எடுப்பிலேயே அருந்த முடியாதவர்கள் ஆரம்பத்தில் கொஞ்சம் கொஞ்சமாக நீர் உட்கொண்டு நாளடைவில் 4 டம்ளர் அளவு நீர் அருந்த பழகலாம். மேற்குறிப்பிட்ட முறையை பின்பற்றும் நோயாளிகள் தமது நோய் நீங்கி சுகமடையலாம். மற்றவர்கள் ஆரோக்கியமான வாழ்கையை சந்தோஷிக்கலாம். எந்த நோய்க்கு எத்தனை நாட்கள் இந்த முறையை பின்பற்ற வேண்டும் என்ற விபரங்கள் பின்வருமாறு: உயர் இரத்த அழுத்தம் – 30 நாட்கள். வாய்வுக் கோளாறுகள் – 10 நாட்கள். சர்க்கரை வியாதி – 30 நாட்கள். புற்றுநோய் – 180 நாட்கள். காசநோய் – 90 நாட்கள்.

அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவதால் வரும் பல நன்மைகள் ?
தினமும் அதிகாலையில் தூக்கத்தில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவது இப்போது பிரபலமாகி வருகிறது.

இயற்கை மருத்துவம்

1. உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்!
2. துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் ஏற்படாது.

பயனுள்ள வீட்டுக் குறிப்புகள்:

தேங்காய் தண்ணீரை வீணாக்காமல் ரசத்தில் சேர்த்தால் ரசம் மிகவும் ருசியாக இருக்கும்
எந்த கறை ஆடையில் பட்டாலும் சிறிது வினிகர் போட்டுது துவைத்தால் கறை இருந்த இடம் தெரியாது.
ஆப்ப சட்டி பணியார சட்டிகளி்ல் எப்பொழுதும் எண்ணெய் தடவியே வைத்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் ஆப்பம் பணியாரம் செய்யும்போது எளிதாக செய்யலாம்.
கொதிக்கவைத்து ஆறிய நீரில் சீரகப் பொடியை போட்டு 12 மணி நேரம்ஆகி குடித்தால் இரத்த கொதிப்பு சீராகும்.

பல்லில் கரை போக வழி

என்னதான் டூத் பிரஷ் உபயோகித்து ஒரு முறைக்கு இரண்டு முறை பல் தேய்த்தாலும் நமது பற்களில் காரை (decay) கொஞ்சம் கொஞ்சமாக படிந்து விடுகிறது.
பல் மருத்துவக்கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு முதலில் சொல்லித் தருவதே அவர்களின் பற்களை சுத்தம் செய்துகொண்டு வரச்சொல்வது தான்..

இஞ்சி...

இஞ்சி வைத்தியம்
இஞ்சிக்கு ஏராளமான மருத்துவ குணங்கள் உண்டு. நம் உண்ணும் உணவில் இஞ்சி கலந்து சாப்பிடுவதால் உணவு எளிதில் ஜீரணமாகிறது. அந்தவகையில்,

எந்தந்த கீரையைச் சாப்பிடுவதால் என்ன பயன் ?

கீரையுடன் சிறிது எண்ணெய் விட்டு வேக வைத்தால், பசுமை மாறாமல் இருக்கும்.
வல்லாரைக் கீரை சாப்பிடுவதால் ஞாபகசக்தி அதிகரிக்கும் என்பது உண்மையே. அதற்காக, அள்ளி வைத்துக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தால்... தலைவலி, மயக்கம் என்று படுத்த ஆரம்பித்துவிடும் ஜாக்கிரதை!

Saturday, November 22, 2014

சர்க்கரைவள்ளிக்கிழங்கு

சர்க்கரை வள்ளிக்கிழங்கு, ருசிக்க மட்டும் சுவையானதல்ல, இதயத்தின் செயல்பாட்டிற்கும் நன்மை பயக்கும். இதில் நிறைய ஸ்டார்ச்சத்தும், நோய் எதிர்பொருட்களும் உள்ளன. மாவுச் சத்து நிறைந்த சர்க்கரை வள்ளிக் கிழங்கு, சராசரியான ஊட்டம் தரக்கூடியது. 

வேப்பம்பூவின் பயன்கள்

வேப்பின் பல பயன்களை பற்றி அறிந்திருப்போம். வேப்பிலையை வேறு எந்த மாதிரி எல்லாம் உபயோகப்படுத்தலாம் என இங்கே பார்க்கலாம். பித்த பிரச்சனை மற்றும் கிருமியால் அவதி படுபவர்கள் வேப்பம்பூவை ரசம் வைத்து சாப்பிடுவது மிகவும் நல்லது. அவ்வாறு சாப்பிட்டால் உடலில் ஏற்படும் அதிகப்படியான பித்தம் குறைகிந்துவிடும். உடலில் உள்ள ஒரு சிறு கிருமிகளும் அழிந்து விடும்.

கருஞ்சீரகம்

குளிர்ச்சியால் ஏற்படும் நோய்களுக்கு கருஞ்சீரகம் நல்ல நிவாரணியாகும். கருஞ்சீரகத்தை வறுத்துத் தூளாக்கி எண்ணெயில் ஊறவைத்துப் பிறகு மூக்கில் சொட்டுகள் விட்டால் கடுமையான ஜலதோஷம் நீங்கும்.கபம்,குளிர் காய்ச்சல், குறட்டை, மூக்கடைப்பு ஆகியவற்றுக்குக் கருஞ்சீரகம் நல்ல பலன் தரும்.

Friday, November 21, 2014

உடல் எடையைக் குறைக்க உதவும் பழங்கள்

ஒரு காலத்தில் போதுமான, சத்தான உணவின்றி மக்கள் அவதிப்பட்டு வந்தார்கள் என்றால், தற்போது அதிகப்படியான உணவால் அல்லது உடல் உழைப்பின்மையால் உடம்பு பெருத்து அவதிப்படும் நிலை அதிகரித்திருக்கிறது. 'எனக்கு எடை கூடிடுச்சு... 
எப்படிக் குறைக்கிறதுன்னு தெரியலை' என்று பலரும் கவலையோடு பேசுவதைக் கேட்க முடிகிறது. உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று சில நாட்கள் தீவிர உணவுக் கட்டுப்பாட்டில் இருப்பவர்கள், பின்னர் அதற்கும் சேர்த்து கூடுதலாக சாப்பிடுவதுதான் நடக்கிறது. 

காலில் ஏற்படும் பித்த வெடிப்பை போக்குவதற்கான டிப்ஸ்

* பப்பாளி பழத்தை நன்கு நைசாக அரைத்து, அதை பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதிகளில் தேய்க்க வேண்டும். அவை உலர்ந்ததும், பாதத்தை தண்ணீரில் நனைத்து தேய்க்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால், பித்த வெடிப்பு குணமாகும்.
* மருதாணி இலைகளை நன்றாக அரைத்து, பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலர விட வேண்டும். பின், தண்ணீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகும்.

Thursday, November 20, 2014

வில்வஇலை

கண் வலி, கண் சிகப்பு, கண் அரித்தல் போன்ற நோய்களை குணமாக்கும் 
இந்த மரம் தெய்வீக மூலிகை மரம். வில்வமர நிழல், காற்று இவற்றிலும் மருத்துவ சக்தி இருக்கிறது.

கொடிப் பசலைக் கீரை

கொடி வகையைச் சேர்ந்த இக்கீரை கொம்புகள், வேலிகளைச் சுற்றிப் படரும். இக்கீரை இனிப்புச் சுவை கொண்டது. தேகச் சூட்டைத் தணித்து உடலுக்கு நல்ல குளிர்ச்சியைத் தரும்.

சால மீன் குழம்பு

அசைவ உணவுகளில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உகந்தது மீன் உணவு. மீன் வறுவலைவிட குழம்புக்கு ருசி அதிகம். அதுவும் முதல் நாள் இரவு வைத்த மீன் குழம்பை மறு நாள் காலை டிபனுக்குத் தொட்டுக் கொண்டு சாப்பிடுவதற்கு இணையே இல்லை. சுவையான சால மீன் குழம்பு செய்யக் கற்றுத் தருகிறார் டாரிஸ் தாசைய்யா. வெங்காயம் சேர்க்காமல் செய்யப்படுவதுதான் இந்தக் குழம்பின் சிறப்பு.

உடல் நலத்தை பாதுகாக்கும் பீன்சின் மருத்துவ குணங்கள்

மனிதன் ஆரோக்கியமாக வாழ உடலின் பல்வேறு உறுப்புகள் கட்டாயம் செயல்படவேண்டியது அவசியமாகும். மனிதன் உயிருடன் வாழ இதயம் தொடர்ந்து சுவாசிக்கவேண்டியுள்ளது. இவ்வாறு காற்றை சுவாசிப்பதில் நுரையீரல் பெரும் பங்கு வகிக்கிறது. இதில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் அது மனிதன் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும். நுரையீரல் பாதிப்பால் ஆண்டுதோறும் உலகம் முழுவதும் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான இளைஞர்கள் உயிரிழக்கின்றனர்.

கேரட் மருத்துவம்:-

  • பால், வெண்ணைய் சாப்பிட்டால் நிறைய வைட்டமின் 'ஏ' கிடைக்கும். அதற்கு வசதியில்லாதவர்கள் நிறைய கேரட் சேர்த்துக்கொண்டால் கிட்டத்தட்ட அதே அளவு வைட்டமின் 'ஏ' சத்தினை மலிவாகப் பெறலாம். 
  • வாழ்நாள் இறுதிவரை கண்களுக்கு கண்ணாடி அணியாமல் தவிர்க்க கேரட் நிறைய சாப்பிடவும். 

சமையல் உணவுகளில், மிகவும் தீமை தரும் உணவுகள் தவிர்க்க வேண்டிய உணவுகள் எவை எவை?

இன்றைய சூழலில் நடைமுறையில் இருக்கும் சமையல் உணவுகளில், மிகவும் தீமை தரும் உணவுகள் தவிர்க்க வேண்டிய உணவுகள் எவை எவை????

ஆரோக்கியம் தரும் உணவுகள்

பாதாம் பால்

 குழந்தைகள் மற்றும் கைக்குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக்களை அளிக்ககூடிய சிறந்த உணவாகும். பாதாம் பால் தோல் நிறத்தை அதிகரிக்க செய்து முகத்திற்கு பொழிவை தருகிறது.. பாதாமை தொடர்ச்சியாக சாப்பிடுவதன் மூலம் இதயம் மற்றும் மூளையின் செயல்பாடுகள் மேம்படுவது மட்டுமல்லாமல் தசைகளை வலுவடையச்செய்கிறது. மேலும் முடி வளர்ச்சியை அதிகப்படுத்தவும் பாதாம் உதவுகிறது.

Wednesday, November 19, 2014

உடல் எடையை குறைக்க உதவும் பழச்சாறுகள்...

ஜூஸ் குடித்தால் அடிக்கடி பசி ஏற்படுவதை குறைத்து நீண்ட நேரம் வயிற்றினை நிறைத்து வைத்திருக்கும். இதனால் கண்ட கண்ட உணவு பொருட்களை சாப்பிடமாட்டோம். இப்போது உடல் எடையை குறைக்க உதவும் பழச்சாறுகளை பார்ப்போம்.

வெங்காயம்

* நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறுது வெல்லத்தை சேர்த்து அரைத்து சாப்பிட்டால் பித்தம் குறையும்.
* வெங்காய நெடி சில தலைவலிகளை குறைக்கும். வெங்காயத்தை வதக்கி சாப்பிட்டால் உஷ்ணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்.

Friday, November 14, 2014

உடல் பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்

நெல்லிக்காயை கொட்டை நீக்கி சுத்தம் செய்து, சாறு எடுத்து அதனுடன் சிறிது இஞ்சிச்சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் கொழுப்பு குறையும்.
கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் இவைகளை பொடியாக்கி வெந்நீரில் கலந்து காலையில் குடித்தால் எடை குறையும். சிறிது வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து பருகி வந்தால் உடல் பருமன் குறையும்.

Thursday, November 13, 2014

30 வகையான நோய்களை குணப்படுத்தும் அருகம்புல் :-

அருகம்புல்லின் துளிர் இலைகள், அதன் கட்டைகள் (தண்டு), வேர் ஆகிய அனைத்துமே மருத்துவப் பயன்களை உடையன ஆகும். அறுகம்புல் தோலின் மேல் ஏற்படும் வெண்புள்ளிகளை குணப்படுத்த வல்லது.

நிலக்கடலை

நிலக்கடலை குறித்த மூட நம்பிக்கைகள் அவ நம்பிக்கைகள் இந்தியா முழுவதும் சர்வதேச நிறுவனங்களால் திட்டமிட்டு பரப்பிவிடப்பட்டுள்ளது.
நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அது கொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால் நிலக்கடலை காய்பிடிக்கும் பருவத்துக்கு பிறகு எலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதை காணலாம்.

Wednesday, November 12, 2014

கொசு விரட்டி செடிகள்

கொசுக்கடி என்றால் அரிப்பை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் மலேரியா போன்ற சில நோய்களையும் பரப்பும். கொசுக்களை விரட்ட கொசு விரட்டி சுருள்கள், கொசு விரட்டி கிரீம்கள், எலெக்ட்ரானிக் கொசு விரட்டிகள் மற்றும் மூலிகை லோஷன்கள் ஆகியவற்றை  பயன்படுத்தினாலும்,அனைவருக்கும் அது பயன்தருவதிலை.மாறாக நாசி குழி, சருமம் மற்றும் தொண்டை பிரச்சனைகள் போன்ற சில பக்கவிளைவுகளையே ஏற்படுத்துகிறது. கொசுவை விரட்ட சிலர் ரசாயனங்களையும் பயன்படுத்துகின்றனர். இது உடல் நலத்திற்கும், சுற்றுச் சூழலுக்கும் தீய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 

ஏலக்காய்

* மன அழுத்தப் பிரச்சினை உள்ளவர்கள், 'ஏலக்காய் டீ' குடித்தால் இயல்பு நிலைக்கு வருவார்கள். டீத் தூள் குறைவாகவும், ஏலக்காய் அதிகமாகவும் சேர்த்து டீ தயாரிக்கும்போது வெளிவரும் இனிமையான நறுமணத்தை நுகர்வதாலும், அந்த டீயைக் குடிப்பதால் ஏற்படும் புத்துணர்வை அனுபவிப்பதாலும் மன அழுத்தம் சட்டென்று குறைகிறது.

இயற்கை மருத்துவம்,

1. கர்ப்பிணிப் பெண்கள் அடிக்கடி இளநீர், தர்ப்பூசனி பழம் ஆகியவை சாப்பிட்டால் குழந்தை வெளுப்பாகப் பிறக்கும். அழகாகவும் இருக்கும்.
2. கடுக்காயை வாயில் ஒதுக்கி வைத்தால் வாய்ப்புண் ஆறும்.

சர்க்கரை நோய்

சர்க்கரை நோய் பாதிப்பில் சிக்கும் மக்கள் பெருகிக்கொண்டே வருகின்றனர். மருந்துகளைக் கூட முறையாக பயத்தோடு எடுத்துக் கொள்கின்றனர். ஆனால், என்ன உணவு உட்கொள்வது என்பதில் குழம்பியே இருக்கின்றனர். 

அவரைக்காய்

* கொடிகாய்களிலே சிறந்தது அவரைக்காய் மலிவான விலையில் நிறைய ஊட்டசத்துகளை தருவது அவரை.புரதம் சுண்ணாம்புசத்து, இரும்பு, வைட்டமின் சத்துகள் இதில் உள்ளன.

Monday, November 10, 2014

வாழை இலை

வாழை இலையில் நாம் சாப்பிடுவதால் என்ன என்ன பயன்கள் ஏற்படுகிறது !!
இன்றைக்கு நாகரிகம் முன்னேறிவிட்டது என்று சொல்லி எத்தனையோ பாரம்பரியமான விஷயங்களை, நம் முன்னோர்கள் அற்புதமாய் கண்டுபிடித்து வைத்திருக்கிற விஷயங்களை தவறவிட்டு விட்டோம்.

மருந்தில்லா மருத்துவம் - இய‌ற்கை வைத்தியம்

1.வெறும் வயிற்றில் இஞ்சி சாறில் தேன் கலந்து பருகினால் சோர்வு நீங்கும், மார்புச் சளி அகலும்.
சளிக் காய்ச்சல்
2.புதினா கீரையை நீரில் போட்டு கொதிக்க வைத்து டீ டிகாஷன் போல் செய்து சாப்பிட்டால் சளியால் வரும் காய்ச்சல் குணமாகும்.

Wednesday, November 5, 2014

மாதவிடாய் குறைப்பாடு நீங்க

தாமதமாகும் மாதவிலக்கை வரவழைக்க
சூதகத் தடை (ஹோர்மோன் பிரச்னை) உள்ள பெண்களுக்கு உடம்பு பருத்து மூன்று, ஆறு மாதங்களுக்குக் கூட மாதவிலக்கு வராமல் இருக்கும். முள்ளு முருங்கை இலையையும் கல்யாண முருங்கை இலையையும் உரல் அல்லது மிக்சியில் போட்டு அரைத்துக்கொள்ளவும். (அரைக்கும்பொழுது இலேசாக தண்ணீர் தெளித்துக் கொள்ளலாம்). இதைத் தினமும் காலையில் வெறும் வயிற்றில் 3 தேக்கரண்டி சாப்பிட வேண்டும். சாறு எடுத்த மூன்று மணி நேரத்திற்குள் சாப்பிட்டால்தான் சிகிச்சை பலனளிக்கும்.

முட்டை சுர்கா

தேவையான பொருட்கள் :
வறுத்த பச்சரிசி மாவு - 200 கிராம், முட்டை - 1, சின்னவெங்காயம் - 5, பச்சை மிளகாய் - 1
கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு

துளசி மருத்துவம்

எளிய காயகல்பம் துளசி ஆகும். காலை குளித்தப்பின் 5 துளசி இலைகளை உண்டு நீர் குடியுங்கள். கால் மணி நேரம் கழித்து உணவு உட்கொள்ளுங்கள். தவறாமல் இப்படி செய்தால் நரை, திரை, மூப்பு, பிணி இன்றி நீண்ட ஆயுள் பெறலாம்.

புளித்த ஏப்பம் acid reflux இதிலிருந்து விடுபட ஆலோசனைகள் :

# வெந்தயப் பொடியை மோரில் கலந்து சாப்பிடலாம். வெந்தயக் கீரையுடன் பயத்தம் பருப்பு சேர்த்துக் கூட்டு செய்தும் சாப்பிடலாம்.
# சாம்பார் செய்யும்போது வெந்தயத்தையும், துவரம்பருப்பையும் சேர்த்து வேக வைத்துக் கடைந்து சாப்பிடலாம்.

Tuesday, November 4, 2014

துளசி

துளசியை நிழலில் உலர்த்திப் பின் பொடித்து எடுத்து வைத்துக் கொண்டு ஒரு தேக்கரண்டி துளசிப் பொடியை 1தம்ளர் நீரில் இட்டுக் காய்ச்சிக் குடிப்பதால் சர்க்கரை நோயாளிகளின் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுபடுத்தப்படும் ஒரு நாளைக்கு மூன்று வேளை இப்படித் துளசித் தீநீர் சாப்பிட சர்க்கரை அளவு நாளடைவில் குறைந்துவிடும். 

தலைமுடியின் வளர்ச்சியை தூண்டும் வெந்தயக்கீரை

தலை முடியின் வளர்ச்சியைத் தூண்டும் அற்புத மருந்து வெந்தயக் கீரையில் இருக்கிறது. 2 கட்டு வெந்தயக் கீரை எடுத்து, காம்பை நீக்கிவிட்டு கெட்டியான விழுதாக அரைத்துக் கொள்ளுங்கள். 

ஃபுட் பாய்சன் ஏற்பட என்ன காரணம்?

சமீபத்தில் சிக்கன் பிரியாணியுடன் வேர்க்கடலையும் சேர்த்துச் சாப்பிட்ட சிறுவன் இறந்து போன செய்தியைப் படித்தேன். ஃபுட் பாய்சன் ஏற்பட என்ன காரணம்? எந்த காம்பினேஷன் உணவுகளைச் சாப்பிட்டால் ஃபுட் பாய்சன் ஏற்படும்? 

வெந்தயம்

சர்க்கரை மற்றும் கொலஸ்டிரால் அளவுகளைக் குறைக்க உதவும் வெந்தயம்: ரத்தத்தில் சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிப்பதன் விளைவாக மற்ற உடல்நல குறைபாடுகள் ஏற்படுகின்றன.

கீரை

கீரை ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம்: கீரைகள், காய்கறிகள் உடல் வளர்ச்சிக்கும், நல்ல ஆரோக்கியத்திற்கும் மிகவும் அவசியம். இவை அதிகளவில் முக்கிய சத்துக்களை கொண்டுள்ளன. இந்தியாவில் பல வகை கீரைகள் உணவாக உட்கொள்ளப்படுகின்றன. அவற்றில் மிகவும் பெயர் பெற்றவை, அரக்கீரை, பாலக்கீரை, தண்டு கீரை, புளிச்சக்கீரை, வெந்தயக்கீரை, முருங்கைக் கீரை மற்றும் புதினா தழை போன்றவையாகும். கீரைகள் தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம், ரத்த சோகை வருவதை தடுத்து, நல்ல உடல் நலனை பெறலாம். கீரை சுண்ணாம்புச் சத்து, பீட்டா கரோடின், வைட்டமின் சி போன்றவற்றை அதிகம் கொண்ட முக்கிய மூலப்பொருளாகும்.

இயற்கை மருத்துவம்,

* வேப்பிலையை அரைத்து சாப்பிட்டு வெந்நீர் குடித்தால் ரத்த சோகை குணமாகும்.
* பூண்டை உணவில் அதிகமாகச் சேர்த்துக் கொண்டால் பிபீ பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். ரத்த அழுத்தம் சீராகும்.

Monday, November 3, 2014

"காராமணி ரைஸ்"

தேவையான பொருட்கள்:
பச்சரிசி, காராமணி, தக்காளி, சின்ன வெங்காயம், புளி தண்ணீர், குழம்பு மிளகாய் தூள், காய்ந்த மிளகாய், பூண்டு, எண்ணெய், கொத்தமல்லி, கறிவேப்பிலை, கடுகு, உளுத்தம் பருப்பு, மஞ்சள் தூள்.

இயற்கை மருத்துவம்,

* வேப்பிலையை அரைத்து சாப்பிட்டு வெந்நீர் குடித்தால் ரத்த சோகை குணமாகும்.
                                                                                                                                                                                                                          * பூண்டை உணவில் அதிகமாகச் சேர்த்துக் கொண்டால் பிபீ (BP) பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். ரத்த அழுத்தம் சீராகும்.

கடுகு

* கடு‌கி‌‌ற்கு ஏராளமான மரு‌த்துவ குண‌ங்க‌ள் உ‌ள்ளன.

* ஜீரணத்திற்கு மிகவும் உதவுகிறது கடுகு.

தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள வீட்டுக் குறிப்புகள்...!

1. கோடை காலத்தில் மதிய உணவில் வெஜிடபிள் சாலட் அவசியம் சேர்க்க வேண்டும். அதிக எண்ணெயில் பொரித்த உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.
2. வீட்டில் எறும்புப் புற்று இருந்தால் அங்கே கொஞ்சம் பெருங்காயத் தூளைத் தூவிவிட்டால் எறும்புத் தொல்லை இருக்காது.

சுண்டைக்காய்

கிருமிகளை அழிப்பதில் சுண்டைக்காய்க்கு நிகரே இல்லை எனலாம். உணவின் மூலம் நம் உடலுக் குள் சேர்கிற கிருமிகள் அமைதியாக உள்ளே பலவித பாதிப்புகளை உருவாக்கலாம். அடிக்கடி சுண்டைக்காய் சாப்பிடுகிறவர்களுக்கு இந்த நச்சுக் கிருமிகள் உடலில் தங்குவது தவிர்க்கப்படும்.

கரிசலாங்கண்ணியின் மருத்துவ பயன்கள்

கரிசலாங்கண்ணியின் பொதுவான குணம் கல்லீரல், மண்ணீரல், நுலையீரல், சிறு நீரகம், ஆகியவற்றைத் தூய்மை செய்யும் சுரபிகளைத்தூண்டுகிறது. உடல் தாதுக்களை உரமாக்குகிறது. உடலை பொன்போல் மாற்றுகிறது. இரும்பு சத்திக்களை உடையது. காமாலை எதுவாயினும் குணமாக்குகின்றது. நீரிழிவைக் கட்டுப் படுத்துகின்றது. சளி, இருமல், தோல்பற்றிய நோய்களுக்கும் மருந்தாகும்.

தாய்ப்பால் சுரக்க மூலிகை கசாயம் :-

பிறந்த குழந்தைகளின் முதல் உணவு தாய்ப்பால். தாய்பாலில் இருந்து தான் குழந்தைகளுக்கான அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களும் கிடைக்கிறது. இதனால்தான் 6 மாதங்கள் வரை குழந்தைகளுக்கு தாய்ப்பால் தரவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். உடல்நிலை காரணமாகவும், சத்தான உணவுகளை உட்கொள்ளாததாலும் சில பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பதில் பாதிப்பு ஏற்படும்.

ஆண்களுக்கு முடி கழிதலை தடுக்க 20 சிறந்த வழிகள்:-

நம் அழகை மேம்படுத்த பலவற்றை நாம் செய்கின்றோம். அவற்றில் முக்கிய பங்கு வகிப்பது சிகை அலங்காரம். ஆள் பாதி, ஆடை பாதி என்று சொல்வர். அதே போல் ஒருவருடைய அழகை தீர்மானிப்பதில், தலை முடி சமபங்கு வகிக்கிறது. அப்படிப்பட்ட தலை முடி கொட்டினால் முடி கழிதல் என்பது உலகளாவிய பிரச்சினை ஆகும்.

பிளம்ஸ் பழம்

நல்ல இனிப்பு சுவை கொண்ட பிளம்ஸ் பழங்கள், ஏராளமான சத்துக்களும் அடங்கிய கனி வகையாகும். புதர்ச்செடிபோல குள்ளமாக வளரும் மரவகையில் கொத்துக் கொத்தாக காய்த்துத் தொங்கும் பிளம்ஸ் கனிகளின் உள்ள சத்துக்களை பார்ப்போம்...

மெட்ராஸ் ஐ தாக்கத்தில் இருந்து விரைவில் விடுபட சில வீட்டு வைத்தியங்கள்!

மெட்ராஸ் ஐ என அழைக்கப்படும் விழி வெண்படல அழற்சி பொதுவாக பச்சிளம் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரையும் பாதிக்கிறது. வைரஸ் அல்லது பாக்டீரியாக்களால் உருவாக்கப்படும் இது குழந்தைகளைப் பரவலாக பாதிக்கிறது. கண்ணின் வெள்ளைப் பகுதியில் தோன்றும் இந்த பாதிப்பு, கண்ணையும் இமைகளையும் கலங்கிய வண்ணம் ஈரப்பதத்துடன் வைக்கிறது.

முகப் பருக்களுக்கு முழுமையான தீர்வு!

இயற்கை தரும் இளமை வரம்!
அரை டீஸ்பூன் எலுமிச்சைச் சாறுடன், 5 துளி தேன், ஒரு டீஸ்பூன் பார்லி பவுடர் கலந்து, முகத்தில் பூசி 5 நிமிடம் கழித்து கழுவுங்கள். எலுமிச்சைச் சாறு முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயை நீக்கிவிடும். பார்லி பவுடர் சேர்ப்பதால் முகம் ‘ப்ளீச்’ செய்ததுபோல் பளிச்சென்று பிரகாசிக்கும்.

Sunday, November 2, 2014

தொப்பையை குறைக்கும் அன்னாசி பழம்! ! ! !

இயற்கையின் கொடையான அன்னாச்சி பழத்தில் உடலுக்கு தேவையான பல்வேறு சத்துக்கள் உள்ளன. வைட்டமின் ஏ, பி, சி சத்துகள் நிறைந்துள்ள இந்த அன்னாச்சி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தொப்பை குறையும். முகம் பொலிவு பெறும். நார்ச் சத்து, புரதச்சத்து, இரும்பு சத்துகளை கொண்ட அன்னாச்சி பழம் ஜீரண சக்தியை அதிகரிக்கும்.

உப்பின் மகத்துவம்

* உப்பு என்பது ருசிக்காக மட்டுமல்ல, மருந்தாகவும் பயனளிக்கும் வலிமை கொண்டது. அதனால் உப்பு நமது உடலில் இருப்பது அவசியம். அதேநேரத்தில் அதிகமான உப்பு ஆளையே தின்று விடும்.

மழை காலங்களில் சிறந்த உணவு எது?’

பலருக்கு சந்தேகம் இருக்கும் மழை காலங்களில் எதை சாப்பிடலாம், எதை சாப்பிடக் கூடாதுனு குழப்பமா இருக்கும். சிலருக்கு ஒத்துக்கொள்ளும்; சிலருக்கு ஒவ்வாமை ஏற்படுத்தும். 

உஷ்ணக்கட்டிகளை குணப்படுத்தும் சப்பாத்திக்கள்ளி :-

சப்பாத்திக்கள்ளி இது ஒரு பாலைவனத்தாவரம் வறண்டபகுதியில் செழித்து, வளர்ந்து காணப்படும் ஒருவகை தாவரம்தான் சப்பாத்திக்கள்ளி. நமது இரத்தத்தில் பலவிதமான செல்கள், கனிம, கரிமப்பொருட்கள் கலந்துள்ளன. இவை உறுப்புகளுக்கு தேவையான ஊட்டச்சத்தை தருவதுடன் செல் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றன.

கழுத்து கருமை நிறம் மறைய எளிய வழிகள்

சிலர் பார்க்க அழகாக இருப்பார்கள். ஆனால், அவர்களது கழுத்துப் பகுதி மட்டும் கருத்துப்போய் காணப்படும். வெயிலில் அலைவது கூட இதற்கு காரணமாக இருக்கலாம். அதனால், முகத்திற்கு பயன்படுத்தும் மேக்-அப்பை கழுத்து பகுதிக்கு சேர்த்துப் போடுவது நல்லது. கழுத்து கருமை நிறம் மறைய சில எளிய வழிமுறைகள் இதோ..

Saturday, November 1, 2014

உடலில் ஏற்படும் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் போக்கும் ரகசிய மற்றும் சக்தி வாய்ந்த எளிய வழி

உடலில் ஏற்படும் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் போக்கும் ரகசிய மற்றும் சக்தி வாய்ந்த எளிய வழி        ( பிரச்சினை உள்ள ஆண்களுக்கு குழந்தை வரம் உண்டாக )

ஆண்களே! வெயிலால் சரும நிறம் மங்குகிறதா? வீட்டிலேயே சரிசெய்யுங்க!

கோடைகாலம் துவங்கியதுமே தோலின் நிறம் மங்கத் தொடங்கிவிடுகிறது. சூரியன் வெளியிடும் புறஊதாக்கதிர்கள், சருமத்தில் அதிக அளவு மெலனின் என்ற ஒரு பொருளைச் சுரக்கச் செய்கின்றன. ஒரு காலத்தில் பெண்கள் மட்டுமே அதைப் பற்றி மிகவும் எச்சரிக்கையாக இருந்தனர். ஆனால் இன்று ஆண்களும் இதைப் பற்றி அக்கறை கொள்ளத் துவங்கியுள்ளனர். இதை சரிசெய்ய வீட்டிலேயே செய்யக்கூடிய பல இயற்கையான வழிமுறைகள் ஆண்களுக்காக உண்டு.

இரண்டே வாரங்களில் தொப்பையை குறைக்க சில சூப்பரான வழிகள்!!!

நன்கு தூங்கவும்
நல்ல தூக்கத்துடன், தூங்கும் போது குப்புறப்படுத்து தூங்குங்கள். இதனாலும் தொப்பை குறையும். அதிலும் இரண்டே வாரங்களில் தொப்பை குறைய வேண்டுமானால், குப்புறப்படுங்கள்.

துளசி

துளசியோடு லவங்கம், ஏலக்காய், பச்சைக் கற்பூரம் சேர்ந்த கலவை ஓர் அருமையான மருந்தாக அங்கம் முழுவதற்கும் பயன்படுகிறது. துளசி, நற்துளசி, நிலத்துளசி, கல்துளசி, முள்துளசி, செந்துளசி, கருந்துளசி எனப் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. பொதுவாக துளசியில் இருவகை துளசியைத் தான் உபயோகப்படுத்துவது வழக்கம். 

கோவைக்காய்

கோவையைப் பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. வேலிகள், தோட்டங்கள், காடுகளில் இந்த கொடி படர்ந்து காணப்படும். இதன் பழங்கள் இனிப்பு, புளிப்பு, கசப்பு தன்மை கொண்டது. கோவையின் நிறத்தையும், வடிவத்தையும் கொண்டு மூவிரல் கோவை, ஐவிரல் கோவை, நாமக்கோவை, கருங்கோவை என பலவகையாகப் பிரிக்கின்றனர். இதன் இலை, காய், வற்றல், தண்டு, கிழங்கு அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை.

பீன்ஸ்

பீன்ஸ் மருத்துவ குணம் !!!
மனிதர்களுக்குத் தேவையான அனைத்து உயிர்ச் சத்துக்களும் கீரை, காய், கனி, விதை இவற்றில் உள்ளன. இதில் மனிதன் தினமும் உணவுக்காக அதிகம் உபயோகிப்பது காய்களையே..

மூளை

1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது
காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச் சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும்.

உங்களுக்கு என்ன நோய்?

உறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து தெரிந்து கொள்ளலாம்
1 கண்கள் உப்பியிருந்தால் என்ன வியாதி?
சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது.
சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை.

ஆரோக்கியமாக வாழ சில அறிவுரைகள்

* தூங்கப் போவதற்கு முன், தினமும் கை, கால்கள், முகத்தை கழுவுங்கள்; பற்களையும் சுத்தம் செய்யுங்கள். சிறிது நேரம் வாய்க்குள் தண்ணீரை வைத்து, நன்றாக வாயை கொப்பளியுங்கள்.

ரத்த புற்றுநோயை குணமாகும் வெண்டைக்காய்



வெண்டைக்காய் எந்தவிதமான நச்சுத் தன்மையையும் பெற்றிருக்கவில்லை என்பதாலும் சுவை மிக்கது என்பதாலும் இளஞ்சிறார்களுக்கும், கர்ப்பிணிகளுக்கும் கூட தருவதற்கு பாதுகாப்பானதும் பயன் உள்ளதாகும்.