Monday, February 23, 2015

அன்னாசிப் பழம் :

பல்வேறு பூக்களின் மகரந்தங்கள் இணைந்து உருவாகும் பழம்தான் அன்னாசிப்பழம். அதனால்தானோ என்னவோ இப்பழத்திற்குப் பலவித உடல்நலக் குறைவுகளைச் சரி செய்யும் தன்மை உள்ளது.

ஆண்மைக் குறைவுக்கு ஆயுர்வேதத்தில் என்னென்ன மருந்துகள் உள்ளன?

ஆண்மைக் குறைவுக்கு ஆயுர்வேதத்தில் என்னென்ன மருந்துகள் உள்ளன?
ஆண் மலட்டுத் தன்மை என்பது ஆண் உறுப்பு விறைப்புத்தன்மை அடையாமல், இல்வாழ்க்கையில் ஈடுபட முடியாத நிலை. இது பல நோய்களின் தொகுப்பு. ஒரு மனிதனுக்கு மூன்று விஷயங்கள் இன்றியமையாததாக ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளன. இவை த்ரயோ உபஸ்தம்பங்கள் என்று ஆயுர்வேதப் பெரியோர்களால் கூறப்படுகின்றன.

Tuesday, February 17, 2015

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் இயற்கை மருத்துவம் :-

சர்க்கரை நோய்க்கு இயற்கை கஷாயம் மிகவும் நல்லது. முள்ளங்கி கிழங்கு 2 எடுத்து கொண்டு நசுக்கி கொள்ள வேண்டும். வேப்பிலை, மா இலைகளை பொடி செய்து கொள்ள வேண்டும். பின்னர், மண் பாத்திரத்தில் 1 லிட்டர் தண்ணீரில் நன்கு காய்ச்சி கொள்ள வேண்டும். தண்ணீரின் அளவு பாதியாக வற்றிய பிறகு வடிகட்டி வைத்து கொள்ள வேண்டும்.

சளி, இருமல் போக்கும் கஷாயம்

குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை சளி, இருமல் என்று அவதிப்படும் சீஸன் இது. இந்த கை வைத்தியத்தை முயற்சி செய்து பாருங்கள். செய்வதும் எளிது, உடலுக்கும் நல்லது, விளைவுகளும் இல்லாதது.

Sunday, February 15, 2015

உடல் நலத்தை பாத்துகாக்கும் பிஸ்தா பருப்பின் மருத்துவ குணங்கள்:-

பிஸ்தாவில் அதிக அளவில் வைட்டமின் பி6 உள்ளது. இது, இரத்ததில் ஹீமோகுளோபின் உற்பத்திக்கு மிகவும் அவசியமானது. அதோடு மட்டுமில்லாது செல்களுக்கு ஆக்ஸிஜனை கொடுக்கிறது.
பிஸ்தா பருப்பில் டெரிபின்தினேட், இனிப்புச் சுவையுடைய நறுமண எண்ணெய், காலோடானிக் அமிலம் ஆகியன காணப்படுகின்றன. இவை நரம்பு மணடலத்தை தூண்டி, ஹார்மோன்களின் சுரப்பை அதிகப்படுத்தி, புத்துணர்ச்சியை உண்டாக்குகின்றன.

திராட்சையில் உள்ள மருத்துவ குணங்கள்:-

ஊட்டச்சத்து மிக்க பழங்களில் திராட்சையும் ஒன்று. இதில் வைட்டமின் பி1, பி2, பி3, பி6, பி12, சி, இரும்புச்சத்து, பாஸ்பரஸ் சத்து ஆகியவை உள்ளன. ரத்த சோகை, மலச்சிக்கல், ஜீரண கோளாறு, சிறுநீரகக் கோளாறுகளைப் போக்கும் சக்தி திராட்சைக்கு உண்டு.

வேம்பு

வீட்டு வாசலில் வேம்பு - நிழலுக்காகவும் குளிர்ச்சியான காற்றுக்காகவும் நம் முன்னோர்கள் பின்பற்றிய வழக்கம் இது. கிராமங்களில் வழிபாடு தொடங்கி பல் துலக்குவது வரை வேப்ப மரம்தான் வரம்!

பிரண்டை


மணத்தக்காளித் துவையல்

தேவையானவை: 
மணத்தக்காளிக் கீரை - ஒரு கட்டு, மிளகு - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 6, பூண்டு - 4 பல், இஞ்சி - ஒரு துண்டு, தேங்காய் - ஒரு கீற்று, கடலைப் பருப்பு - ஒரு கைப்பிடி, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவைக்கு.

எளிய இயற்கை வைத்தியம்

நோய் வந்துவிட்டாலே உடனே மருத்துவரிடம் ஓடுவதை விட, வீட்டிலுள்ள பொருட்களை கொண்டே எளிதாக குணப்படுத்தலாம்.
1. நெஞ்சு சளி
தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

Saturday, February 14, 2015

நுரையீரலை சுத்தப்படுத்தும் உணவுகள்

பல்வேறு காரணிகளால் காற்று மாசுபாட்டில் ஏற்பட்டுள்ள பன்மடங்கு உயர்வு, மிகக் கடுமையான சுவாசக் கோளாறுகளுக்கு வித்திட்டு நுரையீரலுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக விளங்குகிறது.

சத்துப்பட்டியல் : பூசணி விதைகள்

கொறித்து உண்ணும் பருப்பு வகைகளில் பூசணிக்காய் விதைகளையும் சேர்த்துக் கொள்ளலாம். பல்வேறு அத்தியாவசிய வைட்டமின்களும், நோய் எதிர்ப்பு பொருட்களும் அதில் அடங்கி உள்ளன. பூசணிக்காய் விதைகள் அதிக ஆற்றல் தரக்கூடியது. 100 கிராம் பருப்பில் 559 கலோரிகள் ஆற்றல் உடலுக்கு கிடைக்கிறது.

பாத வெடிப்பு போவதற்கான டிப்ஸ் - இயற்கை வைத்தியம்:-

* பப்பாளி பழத்தை நன்கு நைசாக அரைத்து, அதை பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதிகளில் தேய்க்க வேண்டும். அவை உலர்ந்ததும், பாதத்தை தண்ணீரில் நனைத்து தேய்க்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால், பித்த வெடிப்பு குணமாகும்.

Friday, February 13, 2015

பித்தவெடிப்பு,(கால் ஆணி) சரியாக... மூலிகை வைத்தியம்!

பித்தவெடிப்பு சரியாக...
நன்னாரிவேர் 10 கிராம் எடுத்துக்கோங்க, அதோட ஒரு டம்ளர் தண்ணி சேர்த்து கொதிக்க வச்சு, அரை டம்ளரா குறுகினதும் வடிகட்டி வச்சிக்கோங்க. அதுல பனங்கல்கண்டு சேர்த்து குடிச்சிட்டு வந்தா... பித்தவெடிப்பு மறைஞ்சிரும். ஒரு தடவை பயன்படுத்தின நன்னாரிவேரை 3, 4 தடவைகூட பயன்படுத்தலாம்.

பழங்கள், காய்கறிகள், மூலிகைகளின்.. மருத்துவக் குணங்கள்;

1) என்றும் 16 வயது மார்க்கண்டையனாக வாழ ஓர் ""நெல்லிக்கனி.""
2) இதயத்தை வலுப்படுத்த ""செம்பருத்திப் பூ"".
3) மூட்டு வலியை போக்கும் ""முடக்கத்தான் கீரை.""

Thursday, February 12, 2015

முடி வளர

எவ்வளவு கஷ்டப்பட்டவது முடி வளர்க்கவேண்டும் என்றும் அதனை பாதுகாக்க பல ஆங்கில மருத்துவ முறைகளை பின்பற்றுவார்கள் நம் இளசுகள்.பக்க விளைவுகள் ஏற்படுத்தும் ஆங்கில மருந்துகள் எதற்கு?? நம் இயற்கையே நமக்கு நல்ல மருந்துதான். நம் முடியை பாதுகாக்க இயற்கை பல வழிகளை கொண்டுள்ளது.அவற்றில் ஐந்தே ஐந்தை மட்டுமே நாம் இன்று ஹெல்த் டிப்ஸ் பகுதியில் பார்க்கப் போகின்றோம்.

மணத்தக்காளி மருத்து குணங்கள்:-

வாய்ப் புண் உள்ளவர்களுக்கு வயிற்றிலும் புண் இருக்கும். இந்த பிரச்சனைக்கு நல்ல மருந்து மணத்தக்காளி கீரை. இக்கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வர வாய்ப் புண்ணும், வயிற்றுப் புண்ணும் குணமாகும். 100 கிராம் கீரையில் ஈரப்பதம் 82.1%, புரதம் 5.9%, கொழுப்பு 1%, தாது உப்புகள் 2.1%, மாவுச்சத்து 8.9% உள்ளன.

இயற்கை மருத்துவம்,

1. உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்!
2. துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் ஏற்படாது.
3. 1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கோப்பை நீரில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை 3-4 மாதங்களுக்கு தொடர்ந்து எடுத்துக் கொண்டுவந்தால் உடல் எடை குறையும்.

Wednesday, February 11, 2015

எண்ணெய் கொப்பளித்தல் செய்யும் முறை :-

சுத்தமான நல்லெண்ணெய் 10 ml அளவு எடுத்து, வாயில் விட்டுக் கொண்டு அதை வாய் முழுவதும் படும்படியாக கொப்பளிக்க வேண்டும். 15 முதல் 20நிமிடங்கள் வரை கொப்பளிக்கலாம். பற்களின் இடைவெளிகளுக்குள் எண்ணெய் போகும்படி செய்ய வேண்டும். 15 நிமிடத்தில் எண்ணெய் நுரைத்து, வெண்மையாகி நீர்த்துப் போகும்.

உங்களுக்கு என்ன நோய்? உறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து தெரிந்துகொள்ளலாம்:-

1. கண்கள் உப்பியிருந்தால் என்ன வியாதி....?
சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவர வேலை செய்யவில்லை என்றால், உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற முடியாமல் போகும். இவை கண்களைச் சுற்றித் தேங்கி விடுவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும்.

குப்பைமேனி

பயன்கள்
1. வயிற்றுப்பூச்சிகளை வெளியேற்ற - குப்பைமேனி செடியை வேருடன் எடுத்து, செடியை (வேர் உள்பட) நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி உலர வைக்க வேண்டும். இதில் ஒரு கைப்பிடி எடுத்து, இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு காய்ச்சி, ஆற வைத்து வடிகட்டவும்.

அழகுக்கு அழகு சேர்க்க உதவும் அழகு குறிப்புகள்

முகப் பொலிவு பெற, கரும் புள்ளிகள் மறைய, முகப்பரு நீங்க, கண்ணில் கருவளையம் நீங்க, தோல் வியாதிகள் குணமாக, உடல் பொன்னிறமாக, பற்கள் வெண்ணிறமாக உங்களுக்கு உதவும் அழகுக் குறிப்புகள்

சிகரெட்... புகையிலை... தீர்வுக்கு அகத்திக் கீரை!

கத்திக் கீரையின் தாயகம் மலேசியா என்று சொல்கிறார்கள். அகத்தில் உள்ள தீயைப் போக்குவதால் அகத்திக் கீரை என்று அழைக்கப்படுகிறது என்கிறது சித்த மருத்துவ நூல்கள். அகத்திக் கீரை தமிழ்நாட்டு மக்கள் உணவில் முக்கிய பங்கு வகித்து வருகிறது.

தேமல் மறைய

முகத்தில் தேமல் அகல
பூவரச மரத்தில் காய்களை அம்மியில் உரசி வரும் மஞ்சள் நிறப் பாலை முகத்தில் தேமல் உள்ள இடங்களில் பூசி வர முகத்தில் காணும் தேமல் அகலும். 

தேமல் மறைய

கீழாநெல்லி இலை, கொத்துமல்லி இலை ஆகியவற்றை பாலில் அரைத்து, முகத்தில் தேமல், கரும்புள்ளி  உள்ள பகுதிகளில் பூசி முப்பது நிமிடங்கள் கழித்துக் குளித்து வந்தால் தேமல், கரும்புள்ளி ஆகியவைகள் குறையும்.

Tuesday, February 10, 2015

கடுமையான ஒற்றைத் தலைவலியா? இந்த உணவுகளை சாப்பிடுங்க...

அனைவருக்கும் பொதுவாக இருக்கும் உடல் பிரச்சனைகளில் தலைவலியும் ஒன்று. அதிலும் ஒற்றைத் தலைவலி தான் மிகவும் கொடியது. நிறைய மக்கள் இந்த ஒற்றை தலைவலியால் வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை உள்ளாவார்கள்.

உடல் எடையை குறைக்கும் இந்திய உணவு பொருட்கள்:-

உலகில் பெரும்பாலானோர் கஷ்டப்படும் பிரச்சினைகளில் ஒன்று தான் உடல் பருமன். இத்தகைய உடல் பருமனானது ஏற்படுவதற்கு அதிகப்படியான கொழுப்பு உள்ள உணவுகளை அதிகம் உட்கொள்வதால், கொழுப்புக்களானது உடலில் ஆங்காங்கே தங்கி, உடல் எடையை அதிகரித்து விடுகிறது.

சீரகம்

தினமும் தண்ணீருடன் சிறிது சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து ‘சீரகக் குடிநீர்’ தயார் செய்து வைத்துக் கொள்ளவும். இதை, நாள்முழுவதும், அவ்வப்போது பருகி வர, எந்தவித அஜீரணக் கோளாறுகளும் வராது. நீர்மூலம் பரவும் நோய்களைத் தடுக்கலாம். பசி ருசியைத் தூண்டும் தன்மையும் ஆகும் இந்தச் சீரக நீர்.

Sunday, February 8, 2015

உடற்பயிற்சி செய்யாமலேயே தொப்பையைக் குறைக்க(How to loss weight without exercise)

1).விடியற்காலையில், மிதமான சுடுநீரில் தேன் கலந்து பருகி வந்தால், இரண்டு மாதங்களில் உடல் இளைத்து விடும். உடம்பிலுள்ள கூடுதல் கொழுப்பை தேன் எளிதில் கரைத்து விடும்.

தலைமுடி சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு - இயற்கை மருத்துவம்

* வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேக வைத்த நீரைக் கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.
* கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.

Friday, February 6, 2015

இருமலை‌ப் போ‌க்கு‌ம் தூதுவளை :-

ச‌ளி ‌பிடி‌ப்பதா‌ல் ஏ‌ற்படு‌ம் ப‌ல்வேறு உட‌ல் உபாதைக‌ளி‌ல் இருமலு‌ம் ஒ‌ன்று. ச‌ளி போனாலு‌ம் இரும‌ல் போகாம‌ல் பாடுபடு‌த்து‌ம்.

அவித்த முட்டை ஆனியன் குழம்பு"

தேவையான பொருட்கள் :
இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி, மிளகு தூள், தனியா தூள், சீரகத் தூள், மஞ்சள் தூள், முட்டை, எண்ணெய், 

உடல் நலத்தை பாதுக்காக்கும் இலந்தை பழத்தின் மருத்துவ குணங்கள் :-

இலந்தையில் மாவுப் பொருள் , புரதம், தாது உப்புகள், மற்றும் இரும்புசத்தும் உள்ளது. இலந்தைப்பழம் நினைவாற்றலை அதிகரிக்கும் என்பதால் மாணவர்கள் இதைச் சாப்பிடலாம்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க..

பருப்பை வேகவிடும்போது, சிட்டிகை மஞ்சள்தூள், ஒரு டீஸ்பூன் வெந்தயம், சிறிது மிளகு, சீரகம் சேர்த்தே வேகவிடலாம். இதனால் ஒருநாள் வரை பருப்பு கெடாமல் இருக்கும். உடலில் சத்துக்களும் சேரும். காய்கறிகள், கூட்டு, சாம்பார் என எல்லாவற்றிலும் மஞ்சள்தூளைச் சேருங்கள்.

Thursday, February 5, 2015

மீன் எண்ணெய் மாத்திரை...!

உடல் ஆரோக்கியத்திலேயே மிகவும் சிறந்த உணவுப் பொருள் என்று சொன்னால் அது மீன் எண்ணெய் தான் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். மீன் எண்ணெயில் நிறைய நல்ல கொலஸ்ட்ரால் இருக்கிறது ஆனால் நிறைய மக்களுக்கு இந்த எண்ணெய் பற்றிய சரியான உண்மைகள் மற்றும் பலன்களைப் பற்றி தெரியாது. நமது முன்னோர்கள் சொல்வார்கள் என்று தான் இன்றும் சாப்பிடுகிறார்களே தவிர இதனைப் பற்றி முழுவதும் தெரிந்து சாப்பிடவில்லை.