Friday, September 16, 2016

தலைமுடி நன்கு கருப்பாக நீண்டு வளர - இயற்கை மருத்துவம்

இயற்கையான முறையில் தலைமுடி நன்கு கருப்பாகவும், நீண்டும் வளர ஏற்ற அரிய மூலிகைகள் உள்ளன. இவை இளம் வயதில் ஏற்படும் இளநரையை போக்கி முடிக்கு நல்ல பொலிவை தருகிறது.
1. முடி அடர்த்தியாகவும் நீண்டும் வளர: சதா மஞ்சளை நல்லெண்ணையில் காய்ச்சி வாரம் 1 முறை தலைக்கு தேய்த்து குளித்து வரவும்.
2. முடி நன்றாக வளர: காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெய்யில் காய்ச்சி தேய்த்து வரலாம்.
3. செம்பட்டை முடி நிறம் மாற: மரிக்கொழுந்து இலையையும், நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து மைய அரைத்து தலைக்கு தடவி வந்தால் சில நாட்களில் நிறம் மாறும்.

அல்சரால் அவதிபடுவோர் குணமடைய பின்பற்றவேண்டிய வழிமுறைகள்

இரைப்பையில் சுரக்கும் அமிலங்கள்தான், நாம் உண்ணும் உணவின் செரிமானத்துக்கு உதவுகின்றன.
இரைப்பை மற்றும் சிறுகுடலின் உட்பகுதியை மூடி உள்ள சளிச்சவ்வுகள் இந்த அமிலங்களின் தாக்குதலில் இருந்து இரைப்பை மற்றும் சிறுகுடலைப் பாதுகாக்கின்றன.
இந்த சளிச்சவ்வுகள் சரிவர செயல்படாதபோது அல்லது சளிச்சவ்வுகளின் தொடர்ச்சியில் இடைவெளி (breakdown)ஏற்படும்போது அமிலமானது இரைப்பை மற்றும் சிறுகுடலைப் பாதித்து சிவந்து வீக்கம் மற்றும் வலியுடன் கூடிய புண்ணை (ulcer) ஏற்படுத்துகிறது.

பாதுகாப்பு குடிநீர்

"நீரின்றி அமையாது உலகு"
பத்து ஆண்டுகள் முன்பு நிலத்தடி நீரை குடிநீராக பயன்படுத்தி வந்தோம் .நம் உடலுக்கு தேவையான தாதுப் பொருள்கள் கிடைத்தது , உலகமையமாக்கள் கொள்கையால் குடிநீர் இன்று ஆண்டிற்கு 6000 கோடி ருபாய் ஈட்டும் வணிக பொருளாக இன்று மாறியுள்ளது. இந்திய முழுவதுமாக பாட்டில் குடிநீர் ,கேன் வாட்டர் என அன்னிய கார்ப்ரேட் நிறுவனங்கள் மூலம் பாதுகாப்பு குடிநீர் என்று விளம்பரம் படுத்தப்படுறது .

எளிய பாட்டி வைத்தியம்

1) புளியங்கொட்டை தோலை எடுத்து உலர்த்தி இடித்து தூள் செய்து தினமும் பாலில் சேர்த்து குடித்து வர நீர்க்கடுப்பு குறையும்.
2) கவிழ் தும்பை இலையைத் தேன் விட்டு வதக்கி நீரில் கொதிக்க வைத்து காலை, மாலை சாப்பிட்டு வர சூதக வலி தீரும்.
3) பூவரச மர வேர் மற்றும் அதன் பட்டையை எடுத்து கஷாயம் செய்து வாய் கொப்பளித்து வர தொண்டை தொடர்பான அனைத்து நோய்களும் விலகும்.

கிராம்பு

சுடுநீரில் கிராம்பு சேர்த்து குடிப்பதால் பெறும் ஆரோக்கிய நன்மைகள் 
சோர்வை பொக்கம், சுறுசுறுப்பாக இயங்க நம்மில் பெரும்பாலானோர் தேர்ந்தெடுக்கும் கருவி தான் டீயில். இன்று கிரீன் டீ, பிளாக் டீ என டீக்களில் பல வகைகள் வந்துவிட்டன.

Thursday, September 15, 2016

உங்கள் நகத்தில் இதுபோன்ற அறிகுறி தோன்றுவது எதனால் தெரியுமா?

நமது உடலினுள் ஏதேனும் உறுப்பில் பாதிப்பு ஏற்பட்டால், அதன் மூலம் ஏற்படும் மாற்றங்கள் நமது வெளிப்புற உடலில் அறிகுறிகளாக தென்பட ஆரம்பிக்கும்.
உதாரணமாக, தோல், நகம், மலம், சிறுநீர் போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்படுவதை கண்டு, நமது உடலில் எந்த பாகத்தில் கோளாறு உண்டாகி இருக்கிறது என்பதை அறிந்துக் கொள்ளலாம்.

* அவுரி பொடி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இயற்கையாக இது கருமை நிறத்தை தரும். இதனை முடிகேற்ற அளவில் எடுத்து, சம அளவு மருதாணிபொடியுடன் அல்லது மருதாணி இலையுடன் அரைத்து தலையில் தடவுங்கள். அரை மணி நேரம் கழித்து குளித்தால் முடி கருமை நிறத்தில் மாறும்

* தேயிலையை பொடியை வெதுவெதுப்பான நீரில் ஊறவைத்து அரைமணி நேரம் கழித்து அதனை அரைத்து அதில் எலுமிச்சை சாறு கலந்து கொள்ளுங்கள். இதனை தலையில் தடவி அரைமணி நேரம் ஊற வைத்து பின் குளித்தால் நரை முடி கருமையாக மாறும்.

கருஞ்சீரகத்தின் மருத்துவ குணங்கள்

ஒரு தேக்கரண்டி கருஞ்சீரகத்தை தூள் செய்து 50 மி.லி. தேங்காய் எண்ணெய்யில் சூடு செய்து, வடிகட்டி அதில் இரண்டு துளி மூக்கில் விட்டால் மூக்கடைப்பு நீங்கும்.
கருஞ்சீரகத்தில் நறுமண எண்ணெய் உள்ளது. அது வயிற்று உப்புசம் மற்றும் வலியை நீக்கி, கழிவுகளை எளிதாக வெளியேற்றும்தன்மை கொண்டது. இரைப்பையில் பாக்டீரியாவால் உண்டாகும் நோய்த் தொற்று மற்றும் குடலில் உள்ள தேவையற்ற பூச்சிகளை அழிக்கும்.
கருஞ்சீரக பொடியை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து, சுடுநீரில் கலந்து, சிறிதளவு தேனும் சேர்த்து பருகினால் சிறுநீரக கற்களும், பித்தப்பை கற்களும் கரையும். இதை காலை, மாலை இருவேளை சாப்பிடலாம்.