Wednesday, August 30, 2017

மூக்கடைப்பு பிரச்சனைக்கு

நீங்கள் இரவில் மூச்சு விட முடியாமல் மூக்கு அடைப்பால் கஷ்டப்படுபவராயின், உங்களுக்காக இங்கு மூக்கடைப்பை சரிசெய்யும் எளிய இயற்கை வைத்தியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
• சிறிது பட்டையை எடுத்து பொடி செய்து, நீர் ஊற்றி பேஸ்ட் போல் கலந்து, உச்சந்தலையில் தடவி, சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால், மூக்கடைப்பு ஏற்படுவது குறையும்.
• ஆகாயத்தாமரை மற்றும் ஆதொண்டை வேரை நல்லெண்ணெயில் போட்டு காய்ச்சி, அந்த எண்ணெயை தலைக்கு தடவி, சிறிது நேரம் ஊற வைத்து, பின் குளித்து வந்தால், மூக்கடைப்பு மற்றும் தொண்டைக் கட்டு போன்றவை நீங்கும்.
• நொச்சி இலைகளை அரைத்து சாறு எடுத்து, நல்லெண்ணெயில் சேர்த்து சூடேற்றி, பின் அதனை தலைக்கு தடவி குளித்து வந்தால், மூக்கடைப்பு ஏற்படுவதைத் தடுக்கலாம்.

நாட்டுக் கம்பு:


நம் முன்னோர்கள், தங்களுடைய உணவில் அதிகளவு தானிய வகைகளை சேர்த்து வந்தனர். காலையில் கம்பை கஞ்சியாக்கி அருந்தினர். சிலர் அரிசி உபயோகப்படுத்துவது போல், வேகவைத்து வடித்து சாப்பிட்டனர். ஆனால் இடைப்பட்ட காலத்தில், இந்த தானிய வகைகளை மறந்து, சத்தற்ற உணவுகளை, சாப்பிட்டு வந்தனர். நாவின் சுவையை அதிகம் விரும்பியதால், நோய்களின் வாழ்விடமாக, நம் உடல் மாறிவிட்டது.

இரவு நேரங்களில் துங்காமல் கண் விழிப்பவர்கள், அதிக நேரம் ஒரே இடத்திலிருந்து வேலை செய்பவர்கள், அதிக சூடுடைய பகுதிகளில், வேலை செய்பவர்கள், அதிக மன அழுத்தம் கொண்டவர்களின் உடலானது, அதிக உஷ்ணமடையும். இவர்கள் கம்பை கஞ்சியாக காய்ச்சி, காலை வேளையில் அருந்தி வந்தால் உடல் சூடு குறையும். 

Tuesday, August 29, 2017

பீன்ஸ்

இன்றைய தலைமுறையினர் காய்கறிகளை சரியாக சாப்பிடாமல் ஜங்க்ஃபுட் உணவுகளை மட்டும் அதிகம் உட்கொள்வதால் அவர்களின் உடலில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டு, இதன் மூலம் அடிக்கடி நோய்வாய்படுகின்றனர்.
மேலும் வீட்டில் உள்ளோர் எவ்வளவுதான் காய்கறிகளை வாங்கி நன்கு சமைத்துக் கொடுத்தாலும், அதை சாப்பிடுவதில்லை. குறிப்பாக பீன்ஸ் பொரியல் என்றால் பலர் சாப்பிடாமலேயே இருப்பார்கள்.
புற்றுநோயை‌த் தடுக்கும்:
பீன்ஸ் சாப்பிட்டு வந்தால் அதில் உள்ள ஃப்ளேவோனாய்டுகள் புற்றுநோயை உண்டாக்கும் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து புற்றுநோ‌ய் வருவதற்கான வாய்ப்பைத் தடுக்கும்.

நித்திய கல்யாணி-சக்கரை வியாதி புண்ணை ஒரே நாளில் குணமாக்கும்.

நித்திய கல்யாணி செடி அற்புதமான மருத்துவ குணங்களை கொண்டது. நித்திய கல்யாணி சர்க்கரை அளவை குறைக்க கூடிய தன்மை உடையது. புற்றுநோய்க்கு மருந்தாக அமைகிறது.
உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கவல்லது. புண்களை விரைவில் ஆற்றும் தன்மை கொண்டது.
நித்திய கல்யாணி பூவை பயன்படுத்தி சர்க்கரை நோயாளிகளுக்கான மருந்து தயாரிக்கலாம்.

முக்குரட்டை கீரை-நீரிழிவு மற்றும் மன அழுத்ததிற்கு அருமருந்து.....

நீரிழிவுக்கு அருமருந்து
உடலில் இன்சுலினானது கணையத்தில் உள்ள β-cellகளில் உற்பத்தி ஆகிறது. இது இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. நீரிழிவு நோயாளிகளில் இந்த β-cells குறைந்து விடுவதால் சர்க்கரை அதிகமாக இரத்த்தில் காணப்படுகிறது. முக்குரட்டை கீரையை உணவில் 4 வாரங்கள் சேர்த்தால் β-cells எண்ணிக்கையை குறையாமல் காக்கிறது. இதனால் அவர்களில் உடல் மேலும் பாதிப்படையாது. சர்க்கரை அளவும் கணிசமாக குறைகிறது. 
மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டோர் இக்கீரையின் இலைச்சாற்றைப் பருகினால் மன அழுத்தம் குறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அல்சரை போக்கும் விளாம்பழம்

 வுட் ஆப்பிள் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் விளாம்பழத்தில் புரதம் மற்றும் வைட்டமின் சி சத்தும், இரும்பு, சுண்ணாம்பு, வைட்டமின் ஏ உள்ளிட்ட சத்துக்களும் உள்ளன.
இந்த விளாம்பழம் மற்றும் அதன் மேல்புற ஓடு, மரத்தின் வேர், பட்டை, இலை ஆகியவற்றிலும் மருத்துவ குணம் உள்ளது.
குறிப்பாக விளாம் பழ விதையில் ஒலியிக், பால்மிடிக், சிட்ரிக் உள்ளிட்ட அமிலங்களும், இலையில் சபோரின், வைடெக்சின் உள்ளிட்ட வேதி பொருட்களும், பட்டையில் பெரோநோன், பெரோநோலைடு உள்ளிட்ட மருத்துவ குணங்களும் உள்ளது. விளாங்காயில் பி2 உயிர்சத்தும் உள்ளது.

Sunday, August 27, 2017

மூட்டு வலி நிவாரணம் தரும் முடக்கத்தான் ரசம்

மூட்டு வலியில் இருந்து நிவாரணம் தரும் வல்லமை பெற்றது முடக்கத்தான் கீரை. இந்த கீரையை வைத்து சூப்பரான ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
முடக்கத்தான் கீரை - ஒரு கைப்பிடியளவு,
புளி - நெல்லியளவு,
உப்பு - தேவைக்கு
பூண்டு - 5 பல்,
காய்ந்த மிளகாய் - 3, 
மஞ்சள் தூள் - சிட்டிகை
மிளகு சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்,
நெய், கடுகு, கறிவேப்பிலை - சிறிதளவு.

Saturday, August 26, 2017

மாசிக்காய்


மாசிக்காயின் நன்மைகள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம்.பல்வேறு மருத்துவ குணங்களை உடைய மாசிக்காய் ரத்தத்தை உறைய வைக்கும் தன்மை கொண்டது. இது, புற்றுநோய் வராமல் தடுக்கின்ற உள் மருந்தாக விளங்குகிறது. 

மேல் மருந்தாக பயன்படுத்தும்போது புண்களை ஆற்றுகிறது. வாய் கொப்பளிக்கும் நிலையில் பற்களுக்கு பலம் கொடுக்கிறது. அதிக மாதவிலக்கை நிறுத்த கூடிய தன்மை மாசிக்காய்க்கு உண்டு.

மாசிக்காயை பயன்படுத்தி பல்வலி, ஈறுகளில் ஏற்படும் வீக்கம், வாய் புண்களை ஆற்றும் மருந்து தயாரிக்கலாம். மாசிக்காய் பொடி நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக் கொள்ளவும். இதில் மாசிக்காய் பொடி சேர்த்து 10 நிமிடங்கள் ஊறவைத்த பின் வாய்கொப்பளிக்க வேண்டும். இவ்வாறு செய்துவர ஈறுகளில் ஏற்படும் ரத்த கசிவு, பல்வலி, வாய் புண்கள் குணமாகும். 

Friday, August 25, 2017

மல்லிகைப் பூ

மல்லிகை
மல்லிகைப் பூவை (1 கைப்பிடி) அளவு எடுத்து நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வந்தால் கண்ணில் வளரும் சதை வளர்ச்சி குறைந்து 48 நாட்களில் படிப்படியாக தெளிவான பார்வை பெறலாம்.
மல்லிகைப் பூக்களை நன்றாக கசக்கி நெற்றியின் இரு புறங்களிலும் தடவி வர தலைவலி உடனே குணமடையும்.

பல் வலியில் இருந்து உடனடி நிவாரணம் தரும் சில இயற்கை பொருட்கள்.

நம் வாழ்நாளில் ஒருமுறையாவது பல் வலியால் அவஸ்தைப்பட்டிருப்போம். அக்காலத்தில் பல் வலி வந்தால், அதனைப் போக்குவதற்கு பல் மருத்துவர்கள் இல்லை. மாறாக நம் முன்னோர்கள் இயற்கை வைத்தியங்களைக் கொண்டு தான் தங்களின் பல் வலியைப் போக்கினார்கள்.

தற்போது பல் மருத்துவர்கள் இருந்தாலும், பலரும் பல் மருத்துவரிடம் செல்ல பயந்து செல்லாமல் இருப்போம். நீங்களும் பல் மருத்துவரிடம் செல்ல பயப்படுபவராக இருந்தால், பல் வலியை வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே வைத்தியம் பார்த்து சரிசெய்து கொள்ளுங்கள்.
சரி, இப்போது தாங்க முடியாத பல் வலியில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கும் சில இயற்கை வைத்தியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

Thursday, August 24, 2017

முடி செழித்து வளர

~~~~~~ 🌹🌹 ~~~~~
1.தேங்காய் எண்ணெயை எலுமிச்சை சாற்றில் கலந்து, கூந்தலுக்கு தடவி குளித்து வர, முடிஉதிர்தல் கட்டுப்படும். கூந்தலும் நன்கு வளரும்.
2.முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் (வாரம் ஒருமுறை) தொடர்ந்து மூன்று மாத காலம் குளிக்க முடி கொட்டுவது நின்று விடும் நரை விழுவதை தடுக்கும். கருகருவென முடி வளர தொடங்கும்.
3.முட்டை வெள்ளை கருவை தலையில் தேய்த்து 10 நிமிடம் கழித்து சீகக்காய் போட்டு குளிக்க தலைமுடி உதிர்வது சுத்தமாக நின்று விடும்.
4.செம்பருத்தி பூவுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்துவர முடி உதிராது. கருமையாகவும் மாறும்.ஷ...ரு🌿🌸
5.சிறிய வெங்காயத்தின் சாறை எடுத்து தலையில் தேய்த்து ஊற வைத்து குளிக்க முடி உதிராது...
~~~~~~ 🌹🌹 ~~~~~
நன்றி : ஷங்கர் குரு - பாட்டி வைத்தியம் 

மூலிகைகளும் அதன் சத்துக்களும்

மூலிகைகளும் அதன் சத்துக்களும்
1. அத்தி - இரும்புச்சத்து
2. அம்மான் பச்சரிசி - வெள்ளிச்சத்து
3. அக்கிரகாரம் – செம்புச்சத்து
4. ஆத்தி – இரும்புச்சத்து, தாமிரச்சத்து
5. ஆவாரம் – செம்புச்சத்து
6. ஆரைக்கீரை – இரும்புச்சத்து
7. ஆவாரை, ஆடாதொடா, கற்றாழை, – தாமிரச்சத்து
8. ஊமத்தை – இரும்புச்சத்து, உப்புச்சத்து
9. எட்டி – இரும்புச்சத்து, கந்தகச்சத்து
10. எள்ளு, கடுகு – கந்தகச்சத்து

கர்ப்பம் கலைந்து சிரமப்படுவர்களுக்கு கரு நிலைக்க வழி

கர்ப்பம் கலைந்து சிரமப்படுவர்களுக்கு கரு நிலைக்க வழி
அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்
விளக்கம் :-
தாய் கருவுற்ரும் ,பின்னர் கலைந்துவிட்டால் ,அதற்கு மாதுளம் பழ தோல் உடன் அசோக மரப் பட்டையும் சம அளவு எடுத்து கொதி நீரிட்டுப் பதமுடன் 45 நாள் காலையில்அருந்தி வர உடல் நலம் தேறி ,நலம் பெற்று மீண்டும் கரு உண்டாகி நிலைத்துப் பிறக்கும்.
நன்றி : ஸ்ரீ ஷிரகிரி வேலவன் - அறுசுவை சமையல் - சைவம் 

ராகி என்னும் கேழ்வரகு

தானியங்களில் ஒன்று தான் ராகி என்னும் கேழ்வரகு. அக்காலத்தில் மக்கள் பெரும்பாலும் காலை வேளையில் கேழ்வரகை கூழ் செய்து காலை உணவாக உட்கொண்டு வந்தார்கள். அதனால் தான் அவர்கள் நீண்ட நாட்கள் நோயின்றி ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தார்கள்.

கேழ்வரகு மட்டுமின்றி, கம்பு, மக்காசோளம், கோதுமை போன்றவற்றை தங்களின் உணவுகளில் அதிகம் சேர்த்து வந்தார்கள். ஆனால் மற்றவையோடு ஒப்பிடுகையில் கேழ்வரகில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.

இந்துப்பு

செயலிழந்த கிட்னியை இரண்டே வாரத்தில் சரிசெய்ய உதவும் அற்புதமான மருந்து!
தற்பொழுது எல்லாம் கிட்னி பழுது அடைந்தால் டயாலிசிஸ் என்று ரத்தம் மாற்றுகிறார்கள்,
அதிக சிரமம் மற்றும் செலவு, creatinine level 0.6 to 1.3 இருக்க வேண்டும்,

அப்படி இந்த level உள் இல்லை என்றால் கிட்னி failure, function சரியில்லை, ரத்தம் மாற்ற வேண்டும், கிட்னி மாற்ற வேண்டும் என்பார்கள்,

பல லட்சம் செலவு ஆகும், வேதனை வலி இருக்கும் இதை சரி செய்ய எளிய வழி உண்டு.

எந்த கீரை சாப்பிட்டால் என்ன பலன்...?

கொத்தமல்லி கீரை- மூளை, மூக்கு சம்பந்தமான சகல வியாதிகளும் குணமாகும். பசியைத் தூண்டும்.
அரைக்கீரை- நரம்பு தளர்ச்சியை போக்கும். தாய்ப்பால் பெருகும்.
வள்ளாரை - நினைவாற்றலை அதிகமாகும். யானைக்கால் நோய் குணமாகும்.
அகத்திக்கீரை- மலச்சிக்கலைப் போக்கும்.

பாய் விரித்து உறங்குவதால் கிடைக்கும் நன்மைகள்

*பாய் விரித்து உறங்குவதால் கிடைக்கும் நன்மைகள் - தெரிந்துகொள்வோம்*
1; பொதுவாக பாய் தரையில் விரிப்பதால்...நாம் தரையில் உறங்குவதே ஒரு சிறந்த "யோகாசனம்"
2; பிறந்த குழந்தைகளை பாயில் உறங்க வைப்பதால் அதன் முதுகு எழும்பு நேர்படுத்தப்படுகிறது, குழந்தைகளுக்கு இளம் வயது கூண் முதுகு விழுவதை தடுக்கிறது, [கல்வி கற்க்கும் மாணவ மாணவிகளுக்கு இளம் வயது முதுகு வலி வராமலும் தடுக்கும்,]
3; கர்ப்பினி பெண்கள் பாயில் உறங்குவது சுக பிரசவத்திற்கு உதவிடும், [பாயில் படுக்கையில் பெண்களுக்கு இடுப்பு எழும்பு விரிகிறது, இடுப்பு எழும்பு விரிந்தாலே ஆப்பரேசன் இல்லாத சுக பிரசவம்தான்]
4; மூட்டு வலி, முதுகு வலி, தோள்பட்டை தசை பிடிப்பு போன்ற பிரச்சினை உள்ளவருக்கு பாயில் உறங்குவதே ஒரு சிறந்த தீர்வு,

தெரிந்துகொள்வோம்

No automatic alt text available.
வேர்கடலைக்கு சிறிது வெல்லம்
நன்றி : முஹம்மது அனீஷ்  

Sunday, August 20, 2017

வெற்றிலை-பாக்கு-சுண்ணாம்பு

அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு வெற்றிலை-பாக்கு-சுண்ணாம்பு போடுவது மட்டுமே!
அதிர வைக்கும் பழந்தமிழரின் பண்பாட்டு உண்மைகள்!
பழம்தமிழர் மரபாகட்டும், இந்திய பண்பாடாக இருக்கட்டும் அவை எல்லாமே காரண காரியத்தோடு உருவாக்கபட்டது தான்.
முடி வெட்டுவதில் இருந்து. மன்னர்கள் முடிசூடுவது வரை கடைப்பிடிக்கபடும்
சடங்குகளில் பல்வேறு வாழ்க்கை தத்துவங்கள் அடங்கி உள்ளன.

வாழ்க்கையை நெறிபடுத்தும் தத்துவ முறைகள் மட்டுமல்லாது உடலை வளப்படுத்தும் நல்ல காரியங்கள் கூட அதில் அடங்கி இருக்கும்.
தாம்பூலம் தரிப்பதில் கூட இப்படி ஒரு நல்ல விஷயம் அடங்கி இருக்கிறது.

வெள்ளைப் பூசணி

வெள்ளைப் பூசணி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் - இயற்கை மருத்துவம்
பூசணிக்காயில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் உடல் எடையை குறைக்க மிகவும் உதவும். புண்களை ஆற்ற, தழும்புகளை காணாமல் போகச் செய்யவும் பூசணிக்காய் பயன்படும். பூசணி அடிக்கடி உணவில் சேர்ப்பது நோய் எதிர்ப்பு சக்தியை தக்கவைக்கும். பூசணிக்காய் விரும்பி சாப்பிடுபவர்களுக்கு கண் பார்வை சிறப்பாக இருக்கும்.
உடற்பயிற்சி செய்துவிட்டு சாப்பிடும் உணவில் பூசணிக்காய் சேர்த்துக்கொள்வது எலெக்ட்ரோலைட் சமநிலைக்கு உதவும். காய்ச்சல் மற்றும் சளியை குணப்படுத்தவும் பூசணி மிகவும் ஏற்றது.

Saturday, August 19, 2017

ஒரு வரியில் இயற்கை மருத்துவம்

ஒரு வரியில் இயற்கை மருத்துவம் பற்றி தெரிந்து கொள்வோம்!!!
01. வரட்டு இருமலுக்கு சிறந்தது திராட்சை.!
02. முதுகுத்தண்டு வலிக்கு பாப்பாளிப்பழம் சாப்பிடு!
03. இரத்த அழுத்தம் குறைய எலுமிச்சை!
04. மூளைக்கு வலியூட்ட வல்லாரை!
05. காது மந்தம் போக்கும் தூதுவளை!

Friday, August 18, 2017

விளாம்பழம்

தெய்வத்தை மிஞ்சிய சக்தியும் இல்லை தெய்வகனி விளாம்பழத்திற்க்கு மிஞ்சிய மருந்தும் இல்லை 
விளாம்பழம் பல வியாதிகளை குணப்படுத்தும் சிறந்த பழமாகும். 
இதில் இரும்பு சத்தும், சுண்ணாம் புச்சத்தும், வைட்டமின் …ஏ சத்தும் உள்ளது. 

நரைமுடி, முடி உதிர்தல் , பாதிப்பில்லாமல் முடி அடர்த்தியாகவும் வளர.

தேவையானவை : 
சுத்தமான தேங்காய் எண்ணெய் – 2 கப் அளவு 
நெல்லிக்காய் பெரியது – 4 
மருதாணி இலை – கைப்பிடி 
அளவு கருவேப்பிலை- 1 கப் அளவு 
செம்பருத்தி இதழ்கள் – 2 பூக்கள் 
சீரகம் – 4 ஸ்பூன் கிராம்பு – 3

செய்முறை : 
முதலில் நெல்லிக்காயை கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். மருதாணி மற்றும் கருவேப்பிலையையும் நறுக்கிக் கொள்ளுங்கள்.
 செம்பருத்தி இதழை பிரித்து நன்றாக தண்ணீரில் அதன் மேலுள்ள மருந்துகள் போகும் வரை அலசிக் கொள்ளுங்கள்
சீரகம் கிராம்பையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
முதலில் எண்ணெயை சூடாக வேண்டும். அதில் நெல்லிக்காய், மருதாணி கருவேப்பிலை ஒன்றன்பினொன்றாக போடவும். அதன் நிறம் மாறி அடியில் தங்கும் வரை குறைந்த தீயில் கொதிக்க வையுங்கள்.

*மணத்தக்காளிக் கீரையின் மருத்துவப் பயன்கள்*

1. மணத்தக்காளிக் கீரையுடன் சிறிதளவு உப்பு சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டு வந்தால் நாள்பட்ட வாத நோய்கள் தீரும்.
2. கையளவு மணத்தக்காளிக் கீரையுடன் 4 சிட்டிகை மஞ்சளைபும் சேர்த்துக் கொதிக்கவைத்துச் சாப்பிட்டால், வாய்ப்புண், நாக்குப்புண் போன்றவை குணமாகும்.
3. மணத்தக்காளிக் கீரையில் இருந்து சாறு எடுத்து, அதைத் தேனோடு சேர்த்து சர்பத் (syrup) போல் காய்ச்சி, தினமும் சாப்பிட்டு வந்தால் இளைத்த உடல் பருக்கும்.

Monday, August 14, 2017

கொத்து கொத்தா முடி கொட்டுதா?

முடி கொட்டுவதும் நரை முடி உண்டாவதும் இன்றைய காலக்கட்டத்தில் சிறு குழந்தைகளுக்கும் சகஜமாக போய் விட்டது. இதனை தடுப்பதற்கான எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் வந்த பின் புலம்புவதுதான் நம்மில் பாதி பேர்.
நரை முடியாகட்டும், முடி உதிர்தல் ஆகட்டும் வந்த பின் பழையபடி கொண்டு வருவது அத்தனை எளிதல்ல. இதற்கு மாதங்கள் சிறிது எடுத்தாலும், சிரத்தையாக இங்கு சொல்லப்பட்டுள்ள குறிப்புகளை செய்தால் நல்ல பலனை தரும். நீங்கள் முயற்சித்துப் பாருங்கள்.

Wednesday, August 2, 2017

பழங்களின் பயன்கள்

1.மாதுளை பழம்- வாரம் 1 சாப்பிட்டு வர, கருப்பைக் குற்றம் வராது காக்கும். வயிற்றுக் கோளாறு வராது.
2.நாரத்தம் பழம்- நாரத்தம் பழம் சிறிது சாப்பிட்டுவர வாய்வுக் கோளாறு நீங்கி வயிற்று உப்புசம் விலகும்.
3.முந்திரிப் பழம்- கொடி முந்திரிப் பழம் சாப்பிட்டு வர, கண் பார்வைத் துலங்கும்.
4. கண்டங் கத்திரிப்பழம்- கண்டங்கத்திரிப் பழம் 1 பிடி எடுத்து 2 குவளை நீரில் கொதிக்க வைத்துக் குழம்பு வைத்துக் குழம்புப் பதத்தில் தேங்காய் எண்ணை கலந்து பதத்தில் இறக்கி ஆறவைத்து வெண்புள்ளி மீது தேய்த்துவர அவை மறையும்.
5.தூதுளம் பழம் - தூதுளம் பழத்தை அப்படியே 4 அல்லது 5 தினம் சாப்பிடக் காச நோய் தணியும். கபம் விலகும்.