Sunday, July 19, 2015

பற்களை ஆரோக்கியமாக வைக்க சில குறிப்புகள்

# புதினா இலைகளை வெயிலில் காயவைத்துப் பொடி செய்து, இதில் கால்பங்கு உப்பு சேர்த்து பல் துலக்கி வந்தால் பல் வலி தீரும்.
வேப்பங்குச்சியினால் பல் துலக்கி வந்தால் பற்கள் நல்ல ஆரோக்கியமாக இருக்கும்.
# கிராம்பு, ஓமம், கற்பூரம்ஆகியவற்றைஎடுத்து நன்றாகத் தட்டி வீக்கம் உள்ளபல் ஈறுகளில் வைத்து சிறிது நேரத்திற்குப்பின் வாய் கொப்பளிக்க பல் ஈறுவீக்கம் தீரும்.

# கொய்யா இலையை நன்றாக மென்று வெந்நீரில் வாய்கொப்பளிக்க பல் கூச்சம் விலகி விடும்.
# வெண்மையான பற்களைப் பெற ஒவ்வொரு முறையும் சாப்பிட்ட பின்பும் வாயை நன்றாகக் கழுவ வேண்டும்.
# தூங்கப் போகும் முன்பும், தூங்கி எழுந்த பின்பும் பல்தேய்க்க வேண்டும்.
# பல்தேய்த்துக் கழுவும் போது ஈறுகளைத் தேய்த்துத் தடவி கழுவவேண்டும். இதனால் பற்களும் ஈறுகளும் வலுவடையும்.
# அடிக்கடி முருங்கைக்காயை சமைத்து சாப்பிட்டு வந்தால் பற்கள் வலுவடையும். தினமும் சாப்பிட்டால் வயோதிகத்திலும் பற்கள் நன்கு உறுதியாக இருக்கும்.
# பச்சை வெங்காயத்தை தினமும் நன்றாக மென்று சாப்பிட்டுவர பல் சம்பந்தமான நோய்கள் நம்மை அணுகாது.
# நெல்லிக்கனியை நன்றாக மென்று சாப்பிட்டுவர பற்களும்ஈறுகளும் உறுதியாகும்.
# நீரில் துத்தி இலையை சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து, அந்த நீரில் வாயை கொப்பளித்து வந்தால் பல் ஈறுகளில் ஏற்படும் நோய்கள் தீரும்.
# வெந்நீரில் வெங்காயச் சாற்றைக் கலந்து அந்நீரில் வாய் கொப்பளித்து, பின்வெறும் வெங்காயச் சாற்றை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.
# கிராம்பை பொடி செய்து வைத்துக்கொண்டு, இதனை பற்பொடியுடன் கலந்து பயன்படுத்தி வர, வாய்நாற்றம், ஈறு வீக்கம், பல்வலி ஆகியவை குணமாகும். மற்றும் கிராம்பு எண்ணெயை பாதிக்கப்பட்ட ஈறுகளில் தடவிவர குணம் கிடைக்கும்.
# எலுமிச்சை சாற்றில் சிறிது உப்புத் தூள் கலந்து, பற்களை நன்றாக தேய்க்க வேண்டும். ஈறுகளையும் விரலால் நன்றாக தேய்த்து வந்தால் ஈறுகள் பலம் பெறும்.
# கடுக்காய் தூள் 100 கிராம், காவிக்கல் பொடி 50 கிராம், கிராம்புத்தூள் 10 கிராம், பொறித்த படிகாரத்தூள் 10 கிராம் ஆகியவற்றை சேர்த்து நன்றாக சலித்து வைத்துக் கொள்ள வேண்டும். அதைக் கொண்டு காலை-இரவு இரு வேளையும் துலக்கிவர பல் வலி, பல் கூச்சம், ஈறு நோய்கள் தீரும்.
நன்றி - சிறகு.காம்

No comments:

Post a Comment