Saturday, March 21, 2015

வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை ஜூஸ் போட்டு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்....

அனைவருக்குமே எலுமிச்சை ஜூஸை வெதுவெதுப்பான நீரில் போட்டு குடிப்பது நல்லது என்று தெரியும். அதிலும் உடல் எடையைக் குறைக்க நினைப்போர் இப்படி குடித்து வந்தால் நல்ல பலனை விரைவில் காணலாம்

Friday, March 20, 2015

படர்தாமரைக்கான சில எளிய கை வைத்தியங்கள்!!!

உங்கள் சருமத்தில் அழற்சி போன்று வட்ட வடிவில் சிவப்பாக ஏதேனும் இருந்தால், அது தான் படர்தாமரை. இந்த படர்தாமரையானது பூஞ்சையினால் ஏற்படக்கூடியது. மேலும் இந்த படர்தாமரை சருமம், நகம், ஸ்கால்ப், உள்ளங்கை அல்லது பாதங்களில் தான் அதிகம் ஏற்படும். இந்த நிலை முற்றினால், அது கடுமையான அரிப்புகளை ஏற்படுத்தும்.

கோடை காலத்தில் மோர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

கோடையில் அடிக்கும் வெயிலில் பலருக்கும் அடிக்கடி தாகம் எடுக்கும். ஆகவே பலரும் தங்களுடன் ஒரு பாட்டில் தண்ணீரை வைத்திருப்பார்கள். ஆனால் சிலருக்கு தண்ணீர் குடித்து அலுத்துப் போயிருக்கும்.

Thursday, March 19, 2015

மலச்சிக்கல் மற்றும் சிறுநீரகக்கல் நோய்களுக்கு....!

நார்த்தம் பழம் எலுமிச்சை வகையைச் சார்ந்தது. இதன் பழங்கள் பெரிதாக அளவில் காணப்படும். காய்கள் நன்கு பச்சையாக இருக்கும். நார்த்தம் பழத்தின் மணத்திற்கு மற்ற மணங்களைக் கட்டுப்படுத்தும் குணமுண்டு. நார்த்தம் பழத்தில் நன்கு கனிந்த பழமே சாப்பிட உகந்தது. இந்தப் பழம் எல்லாக் காலங்களிலும் கிடைக்கும்.

பன்றிக் காய்ச்சல்... என்ன டயட்?

1.வறுத்த அரிசி அல்லது வறுத்த நொய்யில் கஞ்சி செய்து அருந்தலாம். தொட்டுக்கொள்ள, தூதுவளை அல்லது இஞ்சித் துவையல் நல்லது.
2.வடித்த சோற்றில், மீண்டும் ஒரு முறை தண்ணீர் ஊற்றி, அதில் இஞ்சி, பூண்டு சேர்த்து வேகவைத்து, அந்தத் தண்ணீரை வடித்து அருந்தலாம்.

Wednesday, March 18, 2015

நரம்பு தளர்ச்சி, பக்கவாதம், போன்ற பிரச்சினைகளுக்கு மருந்து

ஆந்திராவின் பலமனேர் அருகே விருபாட்சிபுரம் என்ற ஒரு குக்கிராமத்தில் உள்ள சித்தவைத்திய சாலை. இங்கு நரம்பு தளர்ச்சி, பக்கவாதம், போன்ற பிரச்சினைகளுக்கு மருந்து கொடுக்கப்படுகிறது .நடக்க முடியாதவர்கள் காரிலேயே உட்கார்ந்து இருந்தால் போதும் அவரே வந்து மருந்து கொடுக்கிறார். ஓய்வறைகளும் உள்ளது.

முருங்கைக்கீரையின் வித விதமான சமையல் வகைகள் :

முருங்கைக்கீரைக் குழம்பு:
தேவையான பொருட்கள்:
முருங்கைக்கீரை -2 டம்ளர்; துவரம்பருப்பு-100 கிராம்; சாம்பார் பொடி- 2 ஸ்பூன்; புளி- நெல்லிக்காயளவு; வெங்காயம்-2; தக்காளி-2; மஞ்சள் தூள்,எண்ணெய் உப்பு.

Sunday, March 15, 2015

இயற்கை மருத்துவம்,

வறட்டு இருமல் குணமாக :
மாதுளம்பழச் சாறுடன் சமமாக இஞ்சி சாறு கலந்து, இத்துடன் தேன் கலந்து சாப்பிட, நாள்பட்ட வறட்டு இருமல் குணமாகும்.
இதயம் வலிமையாக :
நன்றாகப் பழுத்த அரை நேந்திரம் பழத்தை தினமும் இரவு சாப்பிட்டு வந்தால் இதயம் வலிமையாகும். மூச்சு சீராகும்.

தாய்ப்பால் சுரக்க மூலிகை கசாயம்

பிறந்த குழந்தைகளின் முதல் உணவு தாய்ப்பால். தாய்பாலில் இருந்து தான் குழந்தைகளுக்கான அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களும் கிடைக்கிறது. இதனால்தான் 6 மாதங்கள் வரை குழந்தைகளுக்கு தாய்ப்பால் தரவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

இயற்கை மருத்துவம்

*அகத்தி கீரைச்சாற்றில் கடல் சங்கை இழைத்து மருக்கள் மீது தடவினால் விரைவில் உதிர்ந்து விடும். 
*அருகம்புல் வேர், சிறியாநங்கை வேர் இரண்டையும் சம அளவில் எடுத்து அரைத்து சாப்பிட்டால் தோல் நோய்கள் குணமாகும். 

இயற்கை மருத்துவம்

  • நெல்லிக்காயை தினமும் சாப்பிட்டு வந்தால் கல்லீரல் நோய் குணமாகும். இதயமும் வலுவடையும். 
  • இஞ்சி சாறு மற்றும் எலுமிச்சை சாறு  ஆகியவற்றுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் மார்பு வலி குணமாகும். 
  • குப்பை மேனி இலை, மஞ்சள் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து  அரைத்து உடலில் பூசி ஒரு மணிநேரம் கழித்து குளித்தால் தோல் நோய் குணமாகும்.

அல்சரை போக்கும் அகத்திக்கீரை

அகத்தி என்றாலே முதன்மை, முக்கியம் என்று பொருளாகும். நமது அகத்தில் உள்ள கழிவுகளை அகற்றுவதால் இது அகத்தி என்று பெயர் பெற்றுள்ளதாம். தமிழ்நாட்டில் மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி விரதம் இருப்பவர்கள் மறுநாள் துவாதசி அன்று இறைவனை வணங்கி உண்ணும் உணவில் அகத்திக்கீரை முக்கிய உணவாக இடம் பெறுகிறது.

இயற்கை மருத்துவம்

1. பச்சை கொத்துமல்லித் தழைகளை மிக்ஸில் அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும்.
2. வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.

முருங்கை காய்

முருங்கை காய் அனைவரும் விரும்பி சாப்பிடகூடிய ஒரு பொதுவான காய்கறி ஆகும். முருங்கைகாயின் மென்மையான நெற்று தான் மதிப்பிடப்படுகிறது. இது கிருமியை எதிர்த்து உடலை தூய்மை படுத்தக்கூடிய ஒரு அற்புதமான தூய்மையாக்கியாகும்.    

பொடுகினை அழிக்க..... இய‌ற்கை வைத்தியம் :-

தேவையான பொருட்கள் :
*தேங்காய் பால் - 1/2 கப்
எலுமிச்சை சாறு - 4 தேக்கரண்டி
வெந்தயம் சிறிதளவு ஊறவைத்து அரைத்தது
இம்மூன்றையும் ஒன்றாக கலந்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்துவந்தால் பொடுகு தொல்லை நீங்கும். கூந்தல் நுனி வெடிக்காமல் நீண்டு வளரும்.

ரத்தசோகையை விரட்டும் உணவே மருந்து!!

''உடலின் ரத்த உற்பத்திக்கு ஹீமோகுளோபின் மிகவும் அவசியம். 100 மி.லி ரத்தத்தில் 13 முதல் 15 கிராம் வரை ஹீமோகுளோபின் அளவு இருக்க வேண்டும். இந்த அளவு 10 கிராமுக்குக் கீழே இருந்தால், ரத்த சோகை இருக்கிறது என்று அர்த்தம். உணவில் இரும்புச் சத்து குறையும்போது ரத்தத்தின் அளவும் குறையும். மேலும், பெண்களுக்கு மாதவிலக்கின் போது ஏற்படும் அதிக உதிரப்போக்கும் ரத்தசோகை ஏற்பட ஒரு காரணம்.

நெல்லிக்கனி



சித்த மருத்துவத்தில் அளிக்கப்படும் முக்கியமான சிகிச்சைகளுள், காயகற்ப சிகிச்சையும் ஒன்று. இந்த சிகிச்சையானது, நோய் வராமலேயே நமது ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவி புரிகிறது.

கருஞ்சீரகம் சிறந்த நோய் நிவாரணி

குளிர்ச்சியால் ஏற்படும் நோய்களுக்கு கருஞ்சீரகம் நல்ல நிவாரணியாகும். கருஞ்சீரகத்தை வறுத்துத் தூளாக்கி எண்ணெயில் ஊறவைத்துப் பிறகு மூக்கில் சொட்டுகள் விட்டால் கடுமையான ஜலதோஷம் நீங்கும்.கபம்,குளிர் காய்ச்சல், குறட்டை, மூக்கடைப்பு ஆகியவற்றுக்குக் கருஞ்சீரகம் நல்ல பலன் தரும்.

Saturday, March 14, 2015

கேன்சர், கிட்னி செயல் இழந்தவர்கள, டயாலிசிஸ் செய்பவர்கள் மற்றும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குகான தீர்வு

அனைத்து வகையான கேன்சர்,கிட்னி செயல் இழந்தவர்கள,டயாலிசிஸ் செய்பவர்கள் மற்றும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள்,நோயாளிகள் நேரில் செல்ல வேண்டும் என்று கட்டாயம் இல்லை அவர்களை சார்ந்து மற்றொருவர் சென்றால் போதும்,