Friday, October 31, 2014

நோயற்ற வாழ்விற்கு 30 குறிப்புகள்.....

1. தண்ணீர் நிறைய குடியுங்கள்.
2. காலை உணவு ஒரு அரசன்/அரசி போலவும், மதிய உணவு ஒரு இளவரசன்/இளவரசி போலவும்,இரவு உணவை யாசகம் செய்பவனைப் போலவும் உண்ண வேண்டும்.

பாதாம்

நட்ஸ்களின் ராஜாவாக விளங்கும் பாதாமில் நிறைய நன்மைகள் உள்ளங்கியுள்ளன. இந்த சூப்பர் நட்ஸ் உடல், சருமம் மற்றும் முடி என பலவற்றிற்கு ஆரோக்கியத்தை தருவதில் சிறந்ததாக உள்ளது. அதிலும் இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் கனிமங்கள் உடலை வலுவுடனும், எந்த ஒரு நோயும் அண்டாமல் பாதுகாக்கிறது.

அடிவயிற்றில் தங்கியுள்ள கொழுப்பை குறைக்க வேண்டுமா?

இன்றைய இளைய தலைமுறையாகட்டும், பெரியவர்களாகட்டும் அவர்களுடைய எடையை, குறிப்பாக வயிற்றை குறைக்க படும் பாடுகளை சொல்லி மாளாது. இவ்வாறு வயிற்றுப்பகுதி பெரியதாக இருப்பதை அதை விட பெரிய குறையாக கருதுபவர்கள் பலரும் உண்டு.

வெங்காயம்.

பாதம் வைத்தியம்:-
நறுக்கிய வெங்காயத்தை பாதத்தின் கீழ் வைத்து உடல் சோர்வு போக்கலாம்...
வெங்காயம் நச்சுக்களை உறிஞ்சும் தன்மை உடையது.

பொடுகினை அழிக்க.....

*தேங்காய் பால் - 1/2 கப்
எலுமிச்சை சாறு - 4 தேக்கரண்டி
வெந்தயம் சிறிதளவு ஊறவைத்து அரைத்தது

மலச்சிக்கல் நீங்க

உலர்ந்த கறிவேப்பிலை, உலர்ந்த நிலாவரை இரண்டையும் சம அளவு எடுத்து பொடியாக்கி, தினமும் இரவு உணவுக்குப் பிறகு ஒரு ஸ்பூன் அளவுக்குச் சாப்பிட்டால் பெருவயிறு மறையும். மலச்சிக்கலும் தீரும்.

மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும்:-

*அருகம்புல் பவுடர் :- அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி
*நெல்லிக்காய் பவுடர் :- பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் "சி" உள்ளது

Thursday, October 30, 2014

சமைய‌ல் கு‌றி‌ப்புக‌ள்,

*சப்பாத்திக்கு மாவு பிசைவதற்கு முன்னால் கையில் சிறிதளவு உப்பைத் தடவிக் கொண்டால் கையில்
சப்பாத்தி மாவு ஒட்டாது.
*உருளைக்கிழங்கு வேக வைத்த தண்ணீரில் பாத்திரங்களை கழுவினால் பாத்திரங்கள் பளபளப்பாக
இருக்கும்.

கண்ணுக்கு கீழ் உள்ள கருப்பு வளையம் மறைய

*சில பெண்களுக்கு கண்களைச் சுற்றி கருப்பு வளையம் இருக்கும். இந்த பிரச்சினை தான் பெண்களை வயதானவர் போல் காட்டும். இதை எளிதாக நீக்கி விடலாம். வெள்ளரிக்காய், உருளைக்கிழங்கு இரண்டையும் சம அளவு எடுத்து அதை நன்றாக அரைத்து கொள்ளவும்.

சி‌ன்ன ‌சி‌ன்ன சமைய‌ல் கு‌றி‌ப்புக‌ள்

முட்டையை வேக வைக்கும் போது அதனுள் இருப்பவை வெளியில் வராமல் இருப்பதற்கு, வேக வைக்கும் தண்ணீரில் ஒரு டீ‌ஸ்பூன் வினிகரை விடவும். அவ்வாறு விட்டால், முட்டையின் ஓடு வெடித்தாலும் கூட உள்ளே இருப்பவை வெளியில் வராது.

முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்க…

* வாழைப்பழத்தை மசித்து பால் கலந்து முகத்தில் பூசி, சில நிமிடங்கள் கழித்து தண்ணீரால் கழுவினால், முகம் பொலிவுடன் காணப்படும்.
* பாதாம் பருப்பு, தேன் மற்றும் தயிர் ஆகியவற்றை சம அளவு எடுத்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், முகத்தின் பொலிவு அதிகரிக்கும்.

தேனின் மருத்துவ குணங்கள்

தேனீயின் வயிற்றிலிருந்து பலவித நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது; அதில் மனிதர்களுக்கு (பிணி தீர்க்க வல்ல) சிகிச்சை உண்டு; நிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது. (அல்குர்ஆன் 16:69)

காலை உணவு அவசியம்

காலையில் சாப்பிடும் உணவை எக்காரணம் கொண்டும் தவிர்க்கவே கூடாது; எட்டு அல்லது பத்து மணி நேரம் இடைவெளிக்கு பின், உடலுக்கு "பெட்ரோலாக" தேவைப்படும் உணவு அது.

Wednesday, October 29, 2014

சின்ன வெங்காயம்

தினமும் சாப்பிடவேண்டிய காய்கறிகளில் சின்ன வெங்காயத்துக்குத்தான் முதல் இடம். ஆனால், உரிக்க சோம்பல்பட்டு பலரும் பெரிய வெங்காயத்தையே நாடுகின்றனர்.  உணவில் ருசியைக் கூட்டி, வாசனையைச் சேர்க்கும் சின்ன வெங்காயம் அதிக மருத்துவக் குணங்களைக்கொண்டது.

அத்திப்பழத்தில் உள்ள மருத்துவ குணங்கள்:-

அத்திப் பழத்தைத் சாப்பிடுவதால் கால் விரல்களில் உண்டாகும் ஒருவித நோயையும் வராமல் தடுக்கிறது. அத்திப்பழம் தின்பதால் வாய்நாற்றம் நீங்குவதுடன் தலைமுடியும் நீளமாக வளர்கிறது. 2 அத்திப்பழத்தை தினசரி சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும்.

தொண்டைச் சதை(டான்சில்)

  • பூண்டு தோலுடன் துவையல் அரைத்துச் சாப்பிட தொண்டைச் சதை வலி குறையும். 

உடல் எடை / பருமன் கூட :

ஒவ்வொரு சாப்பாட்டின் போதும் நெய் ஒரு தேக்கரண்டி சேர்க்க. வேக வைத்த துவரம்பருப்பும் நெய்யும் சோற்றில் கலந்து பகலில் மட்டும் சாப்பிட வேண்டும். ஒல்லியாக இருப்பவர்கள் உடம்பு பெருக்கவும் எடை கூடவும் முலாம்பழம், வாழைப்பழம் உதவும்; 

இயற்கை மருத்துவம்,

* மாதுளம் பழத்தை பிழிந்து கற்கண்டு சேர்த்து பருகி வர உடல் வெப்பம் தணிந்து குளிர்ச்சி உண்டாகும்.

தெரிந்துகொள்வோம்-செம்புப் பாத்திரம் குடிநீர்,

அந்த காலங்களில் நமது வீடுகளில் தண்ணீர் செம்பு குடங்களில் பிடித்து வைப்பார்கள் ஏன் தெரியுமா..?

இயற்கை மருத்துவம்,

வயிற்றில் வாய்வுத் தொந்தரவு
கேழ்வரகு, புழுங்கல் அரிசி கஞ்சி, பால் ஒரு நாளைக்கு 2 அல்லது 3 வேளை கொடுக்கவும். மோர் எவ்வளவு அதிகம் சேர்க்க முடியுமோ அவ்வளவு சேர்க்கவும். கோதுமைக் கஞ்சியும் பிறகு சப்பாத்தியும் கொடுக்கலாம். காய்கறிகள், தக்காளி, புளிப்பில்லாத திராட்சை, ஆரஞ்சு சாப்பிடலாம். வெந்த சோறு, புளி நீக்கிய பொரித்த குழம்பு, பொரித்த ரசம் சேர்க்கலாம்.

நச்சுக்கடி முறிவு

மருத்துவரை உடனடியாக அணுக முடியாத நிலையில் மட்டுமே கீழ்க்கண்ட
அவசர மருத்துவதத்தைப் பின்பற்றவும். பின்னர் மருத்துவர் ஆலோசனை அவசியம்

வயிற்றைச் சுத்தமாக்கும் உணவுகள்


  • அஜீரணப் பிரச்சினை என்பது இன்று அதிகமான பேரை அவதிக்குள்ளாக்குகிறது. உண்ணும் உணவு ஒழுங்காக செரிக்காவிட்டால் உடல்நலத்துக்குப் பாதிப்பு ஏற்படும். வயிற்று வலி, புளித்த ஏப்பம் போன்றவை ஏற்பட்டு சிரமத்தைத் தரும்.எனவே வயிறு சுத்தம் என்பது அவசியம். அப்போது தான் செரிமான மண்டலத்தின் இயக்கம் சிறப்பாக இருக்கும்.
  • பச்சைக் காய்கறிகள் வயிற்றைச் சுத்தமாக்கும். கீரைகள், செலரி, புராக்கோலி, பீன்ஸ் போன்ற உணவுகள் எளிதில் ஜீரணமாகும்.
  • அதேபோல கேரட், வெங்காயம், பச்சைப்பட்டாணி, உருளைக்கிழங்கு போன்ற உயர்தர கார்போஹைட்ரேட் உணவுகள் வயிற்றுக்கு ஏற்றவை. புளிப்புச் சுவையுள்ள சிட்ரஸ் பழங்கள், செரிமான மண்டலத்தை நல்ல நிலையில் வைக்கும். பழங்களில் உள்ள நார்ச்சத்து வயிற்றுக்கு ஏற்றது.
  • எலுமிச்சை, ஆரஞ்சு, திராட்சை, ஸ்ட்ராபெர்ரி போன்றவை செரிமான மண்டலத்துக்கு ஏற்ற உணவுகள். அதே போல் தினசரி இரண்டு வாழைப்பழம் சாப்பிடுவது மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும். தானிய உணவுகள், கோதுமை ரொட்டி போன்றவை எளிதில் ஜீரணமாகும்.
  • தேவையற்ற கழிவுகள் வெளியேற உதவும். அதே போல, தினசரி உண்ணும் உணவுகள் எளிதில் செரிப்பதற்கு நிறைய தண்ணீர் பருக வேண்டும். பால், பழரசங்களையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். மூலம் செரிமான மண்டல கோளாறுகள் ஏற்படாமல் தவிர்க்க முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.
  • சத்தான உணவு சாப்பிடுவதன் மூலம் உடம்பில் தேவையற்ற கொழுப்பு சேர்வது தடுக்கப்படும். தொப்பை ஏற்படாது. வயிறு தட்டையாக இருக்கும். வாயில் வைக்கும் உணவில் நாம் கவனமாக இருந்தால், வயிற்றில் பிரச்சினை ஏற்படாது

Monday, October 27, 2014

பருப்பு பொடி

எளிய மருத்துவ குறிப்பு
கறிவேப்பிலை - 100 கிராம்
சுக்கு - 10 கிராம்

குடல் புண்களை ஆற்றும் வாழைப்பூ :-

வாழையின் மருத்துவப் பயன்கள்: ஒரு சாதாரண அளவுடைய வாழைப் பழத்தில் 95 கலோரி சத்தும் வைட்டமின் `சி' சத்தும் நிறைந்துள்ளது. இது உடலுக்கு உடனடியாகப் புத்துணர்வு தருவதோடு எளிதில் செரிமானமாகக் கூடியது. கொழுப்புச் சத்தோ உப்புச் சத்தோ இல்லாதது.

ஆப்பிள்பழத்தின் மருத்துவ குணங்கள் :-

* அன்றாடம் உடல் ஆரோக்கியம் மேம்படவும் நம் உண்ணும் உணவிலுள்ள நச்சுகளை நீக்கவும், ரத்தத்தில் கலந்துள்ள நுண்கிருமிகளை நீக்கி ரத்தத்தை சுத்தம் செய்யவும் பழங்களை உண்ணுதல் நல்லது. இவற்றில் முதலிடத்தை பிடிப்பவை ஆப்பிள் பழங்களே.

முருங்கை

முருங்கை மரத்தை அதிசய மரம் என்றே அழைக்கலாம். அந்தளவுக்கு இந்த மரத்தின் ஒவ்வொரு பாகமும் உபயோகமாக உள்ளது. இலைகள் மட்டுமின்றி, வேர்கள், விதைகள் ஆகியவை சமையல் மற்றும் மருத்துவத்துக்கு உபயோகப்படுத்தப்படுகின்றன.

இயற்கை மருத்துவம்,

1. மஞ்சள் நீரில் ஒரு சிறிய வெள்ளைத் துணியை நனைத்து நிழலில் உலர்த்தி வைத்துக்கொண்டு கண் நோய் உள்ளவர்கள் கண்களை துடைத்துக் கொண்டால் கண் சிவப்பு, கண் அருகல், கண்வலி, கண்ணில் நீர் கோர்த்தல் ஆகியவை தணியும். சிறந்த கிருமிக் கொல்லி, மணத்திற்காகவும் நிறத்திற்காகவும் உணவில் சேர்க்கப்படுகிறது.

வீட்டுக்கு ஒரு வேம்பு!

வீட்டு வாசலில் வேம்பு - நிழலுக்காகவும் குளிர்ச்சியான காற்றுக்காகவும் நம் முன்னோர்கள் பின்பற்றிய வழக்கம் இது. கிராமங்களில் வழிபாடு தொடங்கி பல் துலக்குவது வரை வேப்ப மரம்தான் வரம்! 

பளிச்சென முகம் பிரகாசிக்க..

சருமத்தை சோர்வில்லாமல் எப்போதும் பொலிவுடன்வைத்திருக்க என்ன செய்ய வேண்டும் என்று அழகுக் கலைஞர் சுமதி சக்தியும், சருமப் பராமரிப்புக்கான விஷயங்களை அரசு மருத்துவர் ஹேமானந்தும், இங்கே விரிவாகத் தருகின்றனர்.

தொப்பையை குறைக்கும் இயற்கை மருத்துவம்

தொப்பையை குறைக்க இயற்கையாக கிடைக்கும் பழங்கள், காய்கறிகள் மற்றும் கீரைகள் கொண்டு சுலபமாக செய்யலாம்.

மருத்துவக் குறிப்புகள்,

முடக்கத்தான் இலையை சீரகம் சேர்த்து கஷாயம் வைத்து குடிக்க உடல்வலி நீங்கும்.
* இலந்தைபழம் தொடர்ந்து சாப்பிட்டு வர மார்பு வலி குணமாகும்.

Sunday, October 26, 2014

மருத்துவக் குறிப்புகள்,

ஆண்மைக் குறைவு நீங்க : 
தினசரி இரவு படுக்கைக்குச் செல்லும் மூன்று மணி நேரத்திற்கு முன் ஒரு மாதுளம் பழம் முழுவதும் சாப்பிட்டு வர ஆண்மைக் குறைவு நீங்கும்.

மருத்துவக் குறிப்புகள்,

* முடக்கத்தான் இலையை சீரகம் சேர்த்து கஷாயம் வைத்து குடிக்க உடல்வலி நீங்கும்.
* இலந்தைபழம் தொடர்ந்து சாப்பிட்டு வர மார்பு வலி குணமாகும்.

மந்தாரையின் மருத்துவ பயன்பாடு :-

இரத்தபேதி, இரத்தவாந்தி, போன்றவற்றிற்கு மந்தாரை மொக்குகள் மிகச் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. மந்தாரை மலர்களும், மந்தாரை மரத்தின் பட்டைகளும் கூட மருத்துவச்சிறப்பு பெற்று திகழ்கின்றன.

சுக்கான் கீரை

நாம் அறியாத அரிய வகைக் கீரைகள் எவ்வளவோ உள்ளன. அவற்றில் ஒன்று சுக்கான் கீரை. மருத்துவக் குணங்கள் நிறைந்த சுக்கான் கீரையைத் தொடர்ந்து சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது. குடல்புண் குணமாகும். மலச்சிக்கல் சரியாகும். வாயுத்தொல்லை, நீர்க்கடுப்பு, வாந்தி, வயிறு தொடர்பான அனைத்து நோய்களுக்கும் சிறந்த மருந்து சுக்கான். ரத்த அழுத்தத்தை சரிசெய்யும். இதயத்தைப் பலப்படுத்தும். வைட்டமின் ஏ, சி மற்றும் கால்சியம், இரும்புச் சத்து இதில் அதிகம் இருப்பதால், குழந்தைகளுக்கு அடிக்கடி கொடுக்கலாம்.

Saturday, October 25, 2014

அசிடிட்டியா - சேர்க்க வேண்டிய சில உணவுகள்!

மோர் அதிகம் அருந்துவது மிகவும் நல்லது.
கீரை, பீன்ஸ், கேரட் மற்றும் அனைத்து நீர்க் காய்கள்.
காரத்துக்கு மிளகு, சீரகம் சேர்த்துச் சாப்பிடலாம்.

மருத்துவ குணமிக்க தேங்காய் எண்ணெய்

தேவையான பொருட்கள் 
ஒரு லிட்டர் சுத்தமான தேங்காய் எண்ணெய்
நெல்லிக்காய் சாறு 50 மிலி 

நீங்கள் வாங்கிய மருந்து உண்மையானதா போலியானதா என்று தெரிந்து கொள்ளவேண்டுமா ?

நீங்கள் வாங்கும் அனைத்து மருந்துக்களுக்கு பின்னால் ஒரு பிரத்தியேக 9 இலக்க எண் இருக்கும் அதை 9901099010 என்ற எண்ணுக்கு மெஸேஜ் செய்யவும்.

தாங்க முடியாத தலைவலிக்கு

தலைவலி என்பது பொதுவாக அனைவருக்கும் ஏற்படக்கூடிய ஒரு பிரச்சினை. அனைத்து வயதினரும், அனைத்து தரப்பினரும் அனுபவிக்கக்கூடிய சாதாரண விஷயம் தலைவலி. தலைவலி என்றாலே எல்லோரும் உடனே ஏதாவது மாத்திரைகளை வாங்கிப்போட்டுக் கொள்கிறோம்.

இயற்கை மருத்துவம்,

உடல் சக்தி பெற:
இரவு உணவாக வாழைப்பழம் 2, தேங்காய் 1மூடி சாப்பிட்டு வர உடல் சக்தி பெறும்.
வெட்டுக்காயம் குணமாக:
நாயுருவி இலையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்து, வெட்டுக் காயத்தின் மீது பூசிவர விரைவில் ஆறிவிடும்.

நாட்டு பொன்னாங்கண்ணி

சாதாரணமாக கீரையின் காம்புகளை கிள்ளி வைத்தாலே எந்த சூழலிலும் வளரக்கூடிய கீரை இது. இதில் ஊட்டச்சத்து, நீர்ச்சத்து, கொழுப்புச்சத்து, மினரல் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், புரதம் அடங்கிய கீரை.

நெல்லி

இதயத்திற்கு வலிமையை வழங்கும் நெல்லிக்கனியை உண்டு தண்ணீரை குடித்தால் அது எப்பேர்பட்ட தண்ணீராக இருந்தாலும் இனிக்கும்.......!
தினம் ஒரு நெல்லிக்காயை உண்டால் அது தேகத்திற்கு புத்துணர்ச்சியைக் கொடுத்து நாம் இளமையாக இருக்க உதவும் டானிக்காக இருக்கும். தொற்று நோய்கள் எதவும் தொற்றாது. இருதயம், சிறுநீரகம் பலப்படும்.......!

கண்டங்கத்தரி

கண்டங்கத்தரிக்கு கண்டகாரி, முள்ளிக்காய் என்கின்ற வேறு பெயர்கள் உண்டு. சித்த மருந்துகளில் புகழ் பெற்ற மருந்து "தசமூலம்" என்பதாகும். இது பத்து மூலிகைகளின் வேர்களை கொண்டு தயாரிக்கப்படுவதாகும். இந்த பத்து வகை மூலிகைகளில் கண்டங்கத் திரியும் ஒன்றாகும்.

முருங்கை கீரை

கிராமங்களில் முருங்கை தின்னா முன்னூறு வராது என்று சொல்வார்கள். முருங்கை இலைகளை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்கள் 300 நோய்களுக்கு மேல் வராமல் பாதுகாக்கப்படுவார்கள் என்கிறது பழமொழி. முருங்கை இலை, பூக்கள், காய் என அனைத்தும் மிகச்சிறந்த உணவுப்பொருளாகப் பயன்படுகிறது.

Friday, October 24, 2014

அஜினா மோட்டோ பற்றிய தகவல்

ருசிக்காக உங்களை நீங்கள் அழித்துக் கொள்ளாதீர்கள். அஜினா மோட்டோ பற்றிய தகவல்... அஜினா மோட்டோ என்பது கரும்பு மற்றும் மரவள்ளிக் கிழங்கு ஆகியவற்றின் ஊரல்களிலிருந்து தயாரிக்கப்படுகின்றது. இதன் வேதிப் பெயர் மோனோ சோடியம் குளுடோமேட் ஆகும்.

செம்பருத்தி

செம்பருத்தி இலைகளில் உள்ள உடல்நல நன்மைகள்!!!
செம்பருத்தி என்ற பூச்செடி, உலகத்தில் உள்ள வெப்ப மண்டல மற்றும் மிதவெப்ப மண்டல வட்டாரங்களில் அதிகமாக காணப்படும். இதனை "மார்ஷ் மாலோ" என்றும் அழைக்கின்றனர். செம்பருத்தி இலைகள் என்பது நம் இந்தியாவில் பொதுவான ஒன்றாகும். பல ஆண்டு காலமாக பலவித சிகிச்சைக்காக இதனை ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பற்களில் காரை படிந்துள்ளதா....?

பற்களில் காரை படிந்துள்ளதா....?இனி கவலை எதற்கு....?
என்ன தான் டூத் பிரஷ் உபயோகித்து ஒருமுறைக்கு இரண்டு முறை பல் தேய்த்தாலும் நமது பற்களில் காரை (decay) கொஞ்சம் கொஞ்சமாக படிந்து விடுகிறது.பல் மருத்துவக்கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு முதலில் சொல்லித் தருவதே, அவர்களின் பற்களை சுத்தம் செய்து கொண்டு வரச் சொல்வது தான்.
நீண்ட நாட்களாக இருக்கும் காரைப் படிவங்களை சுத்தம் செய்வது மிகவும் எளிது.

சர்க்கரை நோயைக் குறைப்பதற்கான உணவுகள் ..

''ஆண்டு தோறும் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், சர்க்கரை நோயைக் குறைப்பதற்கான உணவு எவை என்பது பற்றிய பல்வேறு சந்தேகங்கள் பலருக்கும் இருந்து கொண்டேயிருக்கிறது. உணவோடு, உடற்பயிற்சி, உடலுக்கு ஏற்ற எடை என சீரான வாழ்க்கையால் மட்டுமே... சர்க்கரை நோய் நெருங்கவிடாமல் செய்ய முடியும். சர்க்கரை நோய் வந்துவிட்டாலும், அதனைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும்'' என்கிறார் டாக்ட‌ர் கு.கணேசன்.

இயற்கை மருத்துவம்,

1. இலவங்கப் பூ சூரணத்தை முலைப்பால்விட்டு உறைத்து நெற்றியில் பற்றிட ஜலதோஷம் போகும்.
2. நெருப்பில் சுட்ட வெங்காயத்தை சாப்பிட்டு வர இருமல் கபக்கட்டு முதலியன நீங்கும்.
3. பல் கூச்சம் இருந்தால் புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஒரிரு நாளில் குணமாகும்.
4. படிகாரத்தை குளிக்கும் நீரில் கலந்து குளித்தாலும் வியர்வை நாற்றம் மட்டுப்படும்.
5. நெற்றியில் குங்குமம் வைத்துப் புண்ணாகி உள்ள இடத்தில் வில்வமரத்துக் கட்டையுடன் சந்தனமும் சேர்த்து இழைத்துத் தடவி வந்தால், புண் குணமாகி விடும்.
6. நீர்ச்சுருக்கு வெயில் காலத்தில் முக்கியமாக பெண்களுக்கு நீர்க்கடுப்பு ஏற்படுகிறது. இதற்கு காரணம் வெயில் காலத்தில் அதிகமாகத் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் நீர்ச்சுருக்கு ஏற்படும். தாராளமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். பார்லி அரிசி ஒரு கைப்பிடி எடுத்து 8 தம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு குடிப்பது நல்லது. இளநீரில் வெந்தயப் பொடி கலந்து குடிக்கலாம்.
7. இரவில் மூக்கடைப்புக்கு மின் விசிறியின் நேர் கீழே படுக்க வேண்டாம். சற்று உயரமான தலையணை பயன்படுத்தவும். மல்லாந்து படுக்கும் போது மூக்கடைப்பு அதிகமாகும். பக்கவாட்டில் படுக்கவும். காலையில் பல் தேய்க்கும் போது நாக்கு வழித்து விட்டு மூன்று முறை மாறி மாறி மூக்கைச் சிந்தவும். சுவாசப் பாதையைச் சுத்தப் படுத்த நமது முன்னோர் காட்டிய வழி இது.
8. மலச்சிக்கலுக்கு இரவில் இரண்டு வாழைப்பழம் சாப்பிடலாம். அதிகாலையில் இலேசான சுடுநீரில் அரை டீஸ்பூன் கடுக்காய்ப் பொடி சேர்த்துக் குடித்து விட்டால் பதினைந்து நிமிடங்களில் குடல் சுத்தமாகி விடும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.
9. கை சுளுக்கு உள்ளவர்கள் நீரில் மிளகுத் தூளும், கற்பூரத்தையும் போட்டுக் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைத் துணியில் நனைத்துச் சுளுக்கு உள்ள இடத்தின் மீது போடுங்கள். அல்லது டர்ப்பன்டைன் எண்ணெயைத் தடவினாலும் சுளுக்கு விட்டு விடும்.
10. வேனல் கட்டியாக இருந்தால் வலி அதிகமாக இருக்கும். அதற்குச் சிறிதளவு சுண்ணாம்பும் சிறிது தேன் அல்லது வெல்லம் குழைத்தால் சூடு பறக்க ஒரு கலவையாக வரும் அதை அந்தக் கட்டியின் மீது போட்டு ஒரு வெற்றிலையை அதன் மீது ஒட்டி விடவும்.
11. ஒரு டம்ளர் அளவு பட்டாணியை தண்ணீரில் வேகவைத்து குளிர்ந்ததும் தக்காளி சாறு சேர்த்துத் தினமும் சாப்பிட்டு வர உடல் வலுவலுப்பு பெறும்.
12. கர்ப்பிணிப் பெண்கள் அடிக்கடி இளநீர், தர்ப்பூசனி பழம் ஆகியவை சாப்பிட்டால் குழந்தை வெளுப்பாகப் பிறக்கும். அழகாகவும் இருக்கும்.
13. கடுக்காயை வாயில் ஒதுக்கி வைத்தால் வாய்ப்புண் ஆறும்.

தடுப்பூசிகள்... ஆலோசனையும்.. அட்டவணையும்!

''வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் 
வைத்தூறு போலக் கெடும்'னு வள்ளுவர் சொல்லியிருக்கிறதுதான்... தடுப்பூசியோட தத்துவமும்!'’

ஃபிரிட்ஜில் உணவுப் பொருட்களை எவ்வளவு காலம் வைக்கலாம்?

இப்பொழுது பெரும்பாலான வீடுகளிலும் ஃபிரிட்ஜ் இருப்பதால் இல்லத்தரசிகளுக்கு தினமும் காய்கறி வாங்க வேண்டும், தினமும் சமையல் செய்ய வேண்டும், மேலும் சமைத்ததை உடனுக்குடன் செலவு செய்துவிட வேண்டும் போன்ற கவலைகள் எதுவும் கிடையாது, என்றாலும் வாங்கி வரும் ஒரு சில பொருட்கலளை வெளியில் வைத்திருந்தும் பயன்படுத்தலாம். அவ்வாறு எங்கு வைத்திருந்தாலும் சரி அவைகளை ஒரு குறிப்பிட்ட காலவரைக்குள் வைத்திருந்து பயன்படுத்திவிட வேண்டும்.

Thursday, October 23, 2014

# ஒரு மனிதனை பருக்கச் / இளைக்கச் செய்யும் சிகிச்சை

ஆயுர்வேத அறிவியல்படி மெலிந்திருப்பதுதான் சிறந்தது. மெலிந்திருக்கிறோமா, பருத்திருக்கிருக்கிறோமா என்பதைவிட ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதுதான் மிகவும் முக்கியமானது. இதற்கான சிகிச்சைகள் இரண்டு வகைப்படுகின்றன.
# ஒரு மனிதனைப் பருக்கச் செய்யும் சிகிச்சை
# ஒரு மனிதனை இளைக்கச் செய்யும் சிகிச்சை
உடலுக்கு வலு அளிக்கும் சிகிச்சை ‘பிரம்ஹணம்’ என்று ஆயுர்வேதம் கூறுகிறது. பழைய காலத்தில் உடல் வலிவு பெறுவதற்கு மாம்ஸ ரஸம் (மாமிச சூப்), பால், சர்க்கரை, நெய், பகல் உறக்கம், எண்ணெய் தேய்த்துக் குளித்தல், நிம்மதியான நித்திரை, கவலையைத் தவிர்த்தல் ஆகியவற்றையெல்லாம் வலியுறுத்தினார்கள். அதேநேரம், இவற்றை அளவுக்கு மீறிச் செய்யக் கூடாது என்றும் கூறியிருக்கிறார்கள்.
உடல் அதிகம் பருத்தால் கொழுப்புக் கட்டிகள், சர்க்கரை நோய், நடக்கும்போது மூச்சு முட்டுதல், வியர்வைக் கோளாறுகள், இதய நோய்கள், ஆண்மைக் குறைவு, கல்லீரலில் கொழுப்பு படிதல் போன்ற பல நோய்கள் வர வாய்ப்புண்டு. கொழுப்பு, கபம் ஆகியவை அதிகம் சேரும். பின்பு இளைக்கச் செய்கின்ற சிகிச்சையை, நாம் செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.
ஆயுர்வேத அறிவியலில் மாமிசம் உடலுக்கு வலு அளிப்பது போல, மற்றப் பொருட்கள் எதுவும் தருவதில்லை என்றும், மாமிசத்தைத் தின்று வாழும் பிராணிகளின் மாமிசம், மாமிசத்தினால் போஷிக்கப்பட்டதால் விசேஷப் பலனைத் தரும் என்றும் கூறப்படுகிறது. உடல் இளைத்திருப்பவர்களுக்குக் கோதுமை மிகச் சிறந்த உணவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
உடல் பருமனாக இருக்க வேண்டும் என்றால் சீரணமாகின்ற சக்தி முறையாக இருக்க வேண்டும். அதற்குப் பிறகு போஷாக்கு அளிக்கின்ற மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். உணவில் நெய் சேர்த்துச் சாப்பிடுவது போஷாக்கு தரும். புரதச் சத்து, கொண்டைக் கடலை, பால், பால் பொருட்கள் போன்றவை வலுவை உண்டாக்கும்.
பால்முதப்பன் கிழங்கு, நிலப்பனைக் கிழங்கு (SafedMusali-asparagus adescendens), நிலப் பூசணி, பாதாம் பருப்பு, சாரைப் பருப்பு, அக்ரூட் பருப்பு (Walnut), பிஸ்தா பருப்பு, அத்திப் பழம், சாலாமிசிரி (Orchismascula), வெள்ளரி விதை, பூசணி விதை, முருங்கை விதை, அமுக்குரா, பருத்திப் பால், நெல்லிக் கனி, பேரீச்சம்பழம், முருங்கைப் பூ, முருங்கை பிசின், சர்க்கரை, பசும்பால் ஆகியவை உடல் போஷாக்கு தருபவை.
மேலும் அஸ்வகந்தா (அமுக்குரா - Withaniasomnifera), திராட்சை போன்றவற்றையும் மருத்துவரின் அறிவுரைப்படி பயன்படுத்தலாம். ஆட்டு மாமிசத்தால் செய்யப்பட்ட சூப், அஜமாம்ஸ ரசாயனம் (ஆட்டு இறைச்சி சேர்ந்தது) போன்றவை அசைவம் சாப்பிடுபவர்களுக்கு ஏற்றது.
கறுப்பு எள், வேர்க்கடலைப் பருப்பு, கறுப்பு உளுந்து, உலர்ந்த திராட்சை, பனைவெல்லம் ஆகியவை அனைத்தையும் நன்றாக அரைத்து, தினமும் காலை, மதியம், மாலை என மூன்று வேளையும் சாப்பிட்டு வந்தால், இளைத்த உடல் பருக்கும். அத்துடன் விந்து வீர்யம் அடைந்து, உறவில் நாட்டம் அதிகரிக்கும்.
நன்றி : டாக்டர் எல். மகாதேவன், தி ஹிந்து September 2, 2014 

முகப்பரு, கரும்புள்ளி நீங்க

தேவையான பொருட்கள் :
 முல்தானிமட்டி 200கிராம்                            கஸ்தூரி மஞ்சள் பொடி 50கிராம்    பூலாங்கிழங்கு பொடி 50கிராம்                   கோரைகிழங்கு பொடி 50கிராம் 
 நன்னாரி வேர் பொடி 50கிராம் 

மணலிக்கீரை

மணலிக்கீரையின் இலை, தண்டு, வேர் ஆகிய அனைத்துமே மருத்துவக்குணம் வாய்ந்தது.

சிறுநீரக நோய்கள் நீங்க மூலிகை மருத்துவம்

*இசங்கு இலையுடன் சீரகம் சேர்த்து அரைத்து ஐந்து கிராம் அளவுக்கு காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து 21 நாட்களுக்கு சாப்பிட்டால் ரத்தம் சுத்தம் ஆகும்.
*உளுந்தை முதல் நாள் இரவு தண்ணீரில் ஊற வைக்கவும். அந்தத் தண்ணீரை மறுநாள் காலையில் குடித்தால் சிறுநீரகம் தொடர்பான நோய்களில் இருந்து விடுபடலாம்.

நீரிழிவை விரட்டும் நாவல்

சித்தர்கள் தவநிலையிலேயே நோய்களுக்கு ஏற்ற மருந்துகளைக் கண்டறிந்தனர். 
ஒரு பொருளின் வடிவம், தன்மை, நிறம் மூன்றையும் உடலின் பாகங்களோடு ஒப்பிட்டு, ஒத்துப்போகும் குணங்களையுடையவற்றை அப்பகுதியில் வரும் நோய்களுக்கு மருந்தாக்கினர். 

தவிர்க்க கூடாத பத்து உணவுகள்!

நம் உடல் பாதுகாப்பாக இயங்கப் பத்து சூப்பர் உணவுகள் உள்ளன. காற்று, நீர் மூலம் பரவும் நோய்த் தொற்றைப் படுசுத்தமான மனிதர் கூடத் தடுக்க முடியாது. நாம் சாப்பிடும் முக்கியமான உணவு வகைகள், நம் உடலில் சேரும் இத்தகைய நோய் நுண்மங்களை எளிதில் தடுத்து அழித்துவிடும். நோய் பரவுவதைத் தடுக்கும் அந்தப் பத்து சூப்பர் உணவுகள்.

ஊமத்தை

ஊமத்தை இலையை நல்லெண்ணெயில் வதக்கிக் கட்ட வாதவலி, மூட்டு வீக்கம், வாயுக்கட்டிகள், அண்ட வாயு, தாய்பால் கட்டிக்கொண்டு வலித்தல், நெரிகட்டுதல், ஆகியவை குணமடையும்.

உலர் திராட்சை மருத்துவ பயன்கள்

உலர் பழங்களை உண்பதிலும் அதிக ருசியும் சத்துக்களும் காணப்படுகின்றன. நாம் உணவில் ருசிக்காக சேர்த்துக் கொள்ளும் உலர் திராட்சையானது கிஸ்மிஸ்பழம் என்று அழைக்கப்படுகிறது. உலர் திராட்சை பழத்தில் உடலுக்கு வலிமை தரும் சத்துக்கள் நிறைந்துள்ளன.

சதகுப்பை!

சீரகச் செடியைப் போல நாலைந்து அடி உயரம் வளரக் கூடியது. குடை விரித்தாற்போல் நரம்புகள் தோன்றும். அவற்றின் இடையே சிவப்பு மலர்கள் பூக்கும். ஒவ்வொரு காம்பிலும் நூற்றுக்கணக்கான மலர்கள் தோன்றும். அதனால் இது "சதபுஷ்பா" என்று பெயர் பெற்றது.

மனித உடல்: ஆச்சரியப்படத்தக்க செய்திகள்..............

> நாம் பிறக்கும்போது சுமார் 300 எலும்புகளுடன் பிறந்து முழுவளர்ச்சியடைந்த பின் 206 எலும்புகளே இருக்கும். நாளடைவில் ஒன்றோடொன்று இணைவதால் சுமார் 94 எலும்புகள் குறைகின்றன.

மூலிகைகளும், தீரும் நோய்களும்..!

1) அகத்தி                               - வலி, கபம், சோகை, குன்மம்
2) அதிமதுரம்            - பித்தம், ரத்த தோஷம், வாந்தி, நீர் வேட்கை, சோர்வு,
3)
வலிஅரளி            - அரிப்பு, கண் நோய், கிருமி

Wednesday, October 22, 2014

வாழைத்தண்டு மருத்துவ குணம்

வாழைத்தண்டு மருத்துவ குணம்:-
அதிக நீர்ச்சத்து- நார்ச்சத்து கொண்டது. சர்க்கரைச் சத்தும் உள்ளது. கொழுப்பைக் குறைக்கும். வயிற்றுப் புண்களைச் குணப்படுத்தும். சிறுநீர் எரிச்சலைப் போக்கும். ஊளைச் சதையைக் கரைத்து, உடல் பருமனைக் குறைக்கும்.

இதயத்தை பலப்படுத்தும் சீதாப்பழம்

கஸ்டர்டு ஆப்பிள் என்றும் பட்டர் ஆப்பிள் என்றும் ஆங்கிலத்தில் அழைக்கப்படும் சீதாப்பழம் சுவை மிக்க இனிய பழமாகும். குளூகோஸ் வடிவில் நிறைந்த அளவு சர்க்கரைச் சத்தைக் கொண்டிருக்கும் இப்பழம் குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பப்படுகிறது.
வெப்பம் மிகுந்த பகுதிகளில் எளிதாக வளரும் சீதா சிறு மர வகையைச் சார்ந்தது.
சீத்தாப்பழம் தனிப்பட்ட மணமும், சுவையும் கொண்டது. சீத்தாப்பழத்தின் தோல், விதை, இலை, மரப்பட்டை அனைத்துமே அரிய மருத்துவ பண்புகளை கொண்டது.
இதன் தாவரவியல் பெயர் Annona squamosa என்று பெயர். சீத்தாப்பழத்தில் நீர்சத்து அதிகமாக உள்ளது. மேலும் மாவுசத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புக்கள், நார்ச்சத்து, சுண்ணாம்புச் சத்து, பாஸ்பரஸ், இரும்பு சத்து போன்றவை அடங்கியுள்ளன.
மருத்துவ பயன்கள்:
சீத்தாப்பழத்தை உண்ண செரிமானம் ஏற்படும். மலச்சிக்கல் நீங்கும்.
சீத்தாப்பழச்சதையோடு உப்பை கலந்து உடையாத பிளவை பருக்கள் மேல் பூசிவர பிளவை பழுத்து உடையும்.
இலைகளை அரைத்து புண்கள் மேல் போட்டுவரை புண்கள் ஆறும்.
விதைகளை பொடியாக்கி சம அளவு பொடியுடன் சிறுபயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்து வர முடி மிருதுவாகும். பேன்கள் ஒழிந்து விடும்.
சீத்தாப்பழம் குளிர் மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும்.
சீத்தாப் பழ விதை பொடியோடு கடலை மாவு கலந்து எலுமிச்சை சாறில் குழைத்து தலையில் தேய்த்து ஊறிய பின்னர் குளித்து வர முடி உதிராது.
சீத்தாப்பழ விதைப்பொடியை மட்டும் தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிராது.
சிறுவர்களுக்கு சீத்தாப்பழம் கொடுத்துவர எலும்பு உறுதியாகும். பல்லும் உறுதியாகும்.
சிறிதளவு வெந்தயம், சிறுபயிறு, இரண்டையும் இரவு ஊறவைத்து பின்னர் காலையில் அரைத்து இதோடு சீத்தாப்பழ விதைப்பொடியை கலந்து தலையில் தேய்த்து ஊறிய பின்னர் குளித்துவர தலை குளிர்ச்சி பெறும். முடியும் உதிராது. பொடுகு காணாமல் போகும்.
சீத்தாப்பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் இதயம் பலப்படும். காசநோய் இருந்தாலும் மட்டுப்படும்.
100 கிராம் சீதாப்பழத்தில் அடங்கியுள்ள சத்துக்களின் உணவு மதிப்பீடு
ஈரப்பதம்-70.5%, புரதம்-1.6%, கொழுப்பு-0.4%, மணிச்சத்து-0.9%, நார்ச்சத்து-3.1%, கால்சியம்-17மி.கி., பாஸ்பரஸ்-47மி.கி., இரும்புச்சத்து-4.31மி.கி., வைட்டமின் ‘சி’-37மி.கி., வைட்டமின்’பி’ காம்ப்ளக்ஸ் சிறிதளவு, மாவுச்சத்து-23.5%.,கலோரி அளவு-10.4% ஆகும்.
பேன் தொல்லைக்கு
சீதாப்பழத்தின் விதைகளை சிறிதளவு சீயக்காய் அறைக்கும் பொழுது சேர்த்து அரைத்து வைத்துக் கொண்டு வாரம் ஒரு முறை தலைக்கு தேய்த்து குளித்து வர பேன்கள் நீங்கும்.

சளித் தொல்லையில்லா மூலிகை கொசுவிரட்டி!

தேவையான பொருட்கள் : 
வேம்பு, நொச்சி, நுனா, ஆடாதொடா, ஆடு தின்னாப் பாளை, காட்டாமணக்கு, துளசி, திருநீற்றுப் பச்சிலை, தும்பை, காஞ்சாங்கோரை, துத்தி, பேய்மிரட்டி, மிளகாய்ப் பூண்டு, பப்பாளி, குப்பைமேனி, சீந்தில், செம்பருத்தி, நாகமல்லி, சிறியா நங்கை, குமர், கற்பூரவள்ளி.

காய்ச்சல் குணமாக - மிளகு

மிளகை ஒரு கைப்பிடி அளவு எடுத்து சட்டியில போட்டு தீயில கருகுற அளவுக்கு வறுத்து, பிறகு ஒரு கிளாஸ் தண்ணியை ஊத்தி நாலுல ஒரு பங்கா வத்தின பிறகு, ஆற வெச்சு குடிச்சா... எப்பேர்ப்பட்ட காய்ச்சலும் விலகிடும். 

புத்துணர்வு தரும் வெந்தயக்களி

தேவையானவை: அரிசி  ஒரு கப், உளுத்தம் பருப்பு, வெந்தயம்  தலா கால் கப், கருப்பட்டி  ஒன்றரை கப், நல்லெண்ணெய்  100 மி.லி.

முகப்பருக்கள் விட்டுச்சென்ற வடுக்களை விரட்டலாம்!!

பருக்கள் முகத்தில் தங்கியிருக்கும் நாட்களில் ஏற்படும் பாதிப்பை விட, அவை விட்டுச் செல்லும் வடுக்கள்தான் அதிக பாதிப்பை ஏற்படுத்துகின்றன

மருத்துவக் குறிப்புகள்

1. பச்சை கொத்துமல்லித் தழைகளை மிக்ஸில் அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும்.
2. வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.

மருத்துவக் குறிப்புகள்,

* சின்னவயதில் முகத்தில் அடிக்கடி பரு வரும். காய்ந்த பருவை வேரோடு நீக்க, முட்டையின் வெள்ளைக்கருவை ஒரு சுத்தமான துணியில் நனைத்து பருமீது பரப்புங்கள். முட்டை காய்ந்ததும் துணியை உரித்து எடுத்தால் பருவும் துணியோடு சேர்ந்து வந்துவிடும். கரும்புள்ளிகளையும் இந்த முறையில் நீக்கலாம்.

தலைமுடி நன்றாக வளர தக்காளி

*தலைமுடி செழித்து வளர தக்காளி சூப்பர் மருந்து தெரியுமா? இரண்டு பெங்களூர் தக்காளியை ஜூஸ் அடித்து.. நோ..நோ! குடிக்கக்கூடாது. அப்படியே தலையில் பூசுங்கள். அரைமணி ஊறியதும் மைல்டு ஷாம்பூ போட்டு தலைமுடியை அலச வேண்டியதுதான். தக்காளியிலுள்ள அமிலம் நம் தலைமுடியின் காரத் தன்மை மற்றும் அமிலத்தன்மையை சரியான அளவு பாலன்ஸ் பண்ணுமாம். அதனால் முடி ஹெல்த்தியாகப் பளபளக்கும்.

Tuesday, October 21, 2014

சளி விலக... தூதுவேளை துவையல், பூண்டுபால்!

சளி, காய்ச்சல் நம்மை பாடாய்ப்படுத்தக் காத்திருக்கும் இந்த நாட்களில், அதிலிருந்து தற்காத்துக்கொள்ளும் ‘அஞ்சறைப் பெட்டி’ வைத்தியம் இதோ..!

ஒற்றைத் தலைவலி

ஒற்றைத் தலைவலியால் (Migraine headache) அவதிப்படுகிறவர்கள் மிக அதிகம். ரத்தநாளங்களை அழுத்தமாகத் துடிக்கச் செய்கிற, தலையின் ஒருபகுதியில் மட்டும் வலியை உண்டாக்குகிற, வாந்தி அல்லது வாந்தி எடுக்கும் உணர்வுடன் கூடிய, சூரிய ஒளியைக் கண்டால் அதிகரிக்கிற தலைவலியை ஒற்றைத் தலைவலி என்கிறார்கள்.

வெள்ளரி

வெள்ளரியின் மருத்துவ குணங்கள்:-
வெள்ளரியில் மிகுந்துள்ள நீர்ச்சத்து கடும் வறட்சியை விரட்டுவதோடு, பசியையும் உண்டாக்கும். உடலைக் குளிரவைக்கும். இத்தகைய வெள்ளரியை பற்றி, நாம் அறிந்துக்கொள்வது
அவசியம்.

இயற்கை மருத்துவம்,

சிறிது தண்ணீரில் ஒரு கரண்டி ஓமம் போட்டு கொதிக்க வைத்து, அதில் 100 மில்லி தேங்காய் எண்ணெயை விட்டு மீண்டும் கொதிக்க விட்டு வடிகட்டி கொள்ளுங்கள். வடிகட்டியதோடு கற்பூரப் பொடியைக் கலந்து இளஞ்சூட்டுடன் இடுப்பில் நன்றாகத் தேய்த்து வர இடுப்பு வலி நீங்கும்.

வெந்நீர் அருந்துங்கள் இளமையாக இருக்கலாம்,,,,,,,,,,,

என்றென்றும் இளமையாக இருக்க தண்ணீரை அதிகளவில் உட்கொள்வது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது என பெரியவர்கள் முதல் மருத்துவர்கள் வரை சொல்லக்கேட்டிருப்போம்.

உயிருக்கு உலை வைக்கும் கலர் பொடி கலந்த உணவு வகைகள்............


உணவுப் பொருட்கள் மற்றும் குளிர்பானம், ஸ்வீட், ஜாம், கேக் வகைகள் பிஸ்கெட்டுகள், ரோஸ்மில்க் பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் குழந்தை உணவுகள், கேசரி போன்றவற்றில் அளவுக்கு அதிகம் கலர் கெமிக்கல் சேர்க்கப்படுகிறது. இந்த கலர் கெமிக்கல்கள் பெரும்பாலும் நிலக்கரி தாரிலிருந்தும், பெட்ரோலில் இருந்தும் பிரித்து எடுக்கப்பட்டு உணவு பொருட்களில் சேர்க்கப்படுகின்றன.

முகப்பரு

முகப்பரு நீங்க :
1. சந்தனம் or டூத் பேஸ்டை பரு மீது 10 நிமிடம் வைக்கவும் அல்லது இரவில்                           வைக்கலாம் அதிகமாக இருந்த பரு காய்ந்து குறைந்து விடும்.
2. சின்ன சீரகத்தை நன்கு அரைத்து பால் கலந்து இரவில் முகத்தில் பூசவும்.

நுங்குவின் மருத்துவ குணங்கள்

வெயிலின் உஷ்ணத்தை தணிக்க பலவித பானங்களை அருந்துகிறோம். தர்ப்பூசணி, ஆரஞ்சு போன்ற விதவிதமான பழவகைகளை சாப்பிடுகிறோம். ஆனால் அவைகளை எல்லாம்விட சிறந்தது, நுங்கு. உடலுக்கு குளிர்ச்சியை தருவதில் இது முதலிடத்தை வகிக்கிறது.

Monday, October 20, 2014

பொடுகை விரட்ட வேப்பம்பூ

பலசரக்குக் கடையில் காய்ந்த வேப்பம்பூ கிடைக்கும். உப்பு கலக்காத வேப்பம்பூ 50 கிராம் கேட்டு வாங்கி, அதை 100 கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். இளம் சூடு பதத்திற்கு ஆறியதும், வேப்பம் பூவுடன் சேர்த்து எண்ணெயை தலையில் நன்றாகத் தேய்த்து அரை மணிநேரம் ஊறிக் குளித்தால், பொடுகு பிரச்னை தீரும்.

திராட்சை

* திராட்சை என்றதும் நம் நினைவில் வருவது சிகப்பு, கருப்பு, பச்சை, பன்னீர் திராட்சை தான். ஆனால் திராட்சையில் பல வகைகள் உள்ளன. அதில் நிறைய சத்துக்கள் உள்ளது. திராட்சை சாறிலிருந்து ஒயின் தயாரிக்கபடுகிறது.

முதுகுவலி வராமல் தடுக்க...!

1. எப்போதும் சுறுசுறுப்போடு இருப்பது, பொதுவான உடற்பயிற்சிகள் செய்வது. (உதாரணமாக) நடப்பது, நீச்சல் அடிப்பது, சைக்கிள் ஓட்டுவது.
2. தாழ்ந்த நாற்காலியில் அதிக நேரம் அமர வேண்டாம்.

ஜலதோஷத்தின் போது ஏற்படும் மூக்கடைப்பு.

~~ வெண்ணீர் கலந்த உப்பு
  • தண்ணீரை நன்கு வேக வைத்து வெதுவெதுப்பாக இருக்கும் நிலையில் சிறிது உப்பை போட்டு, அதை நன்கு கலக்கி கொள்ளவும்.
  • பின்பு அதனை மூக்கின் அருகில் வைத்து ஆழமாக உறிஞ்ச வேண்டும். அந்த நீராவி மூக்கினுள் பரவ  வேண்டும்.
  • இதன் மூலம் மூக்கடைப்பு எளிதாக நீங்குவதுடன், ஜலதோஷத்தை கட்டுப்படுத்த முடியும்.


உப்பின் பயன்கள்

* நெய்யில் ஒரு தேக்கரண்டி உப்பைப் போட்டு சுடவைத்தால் நெய் நீண்ட நாள் கெடாமல் இருக்கும்.
* மண்ணெண்ணெயில் சிறிது உப்பு கலந்து விளக்கேற்றினால் மண்ணெண்ணெய் சீக்கிரம் தீராது.

கட்டாயம் தேவை கலர்புல் உணவு ..

Tuesday, October 14, 2014

முகபரு மறைய

1. தேனுடன் சிறிது லவங்க பட்டையின் தூளை சேர்த்து முகத்தில் தடவலாம்.
2. கடுகை அதனுடன் சிறிது தேனை கலந்து முகத்தில் தடவ முகபரு நீங்கும்.
3. தக்காளி சாற்றினை முகத்தில் தடவி வர முகபரு நீங்கும்.

Monday, October 13, 2014

உப்பும் ,,,,,தேனும் ,,,,,நோயும் ......

நாம் தினமும் பயன்படுத்தும் உப்பு & தேன் பற்றி தகவல் தான் இந்த பதிப்பு ..
உப்பு இல்லாத உணவு குப்பையில் என்று என் பாட்டி சொல்வார்கள் .
உப்பு நமக்கு உணவுகளில் சுவைகளை கூட்டி தரும் என்று மட்டும் நமக்கு தெரிந்த விவரம் ...
உப்பின் தன்மை என்ன ?
சித்தர்கள் உப்பை பற்றி என்ன சொல்லி உள்ளார்கள் ?
இறந்தவைகளை பாதுகாக்க பயன்படுவது உப்பு...
உப்பு மனிதன் குருதியில் கலந்தவுடன் மிருக குணம் வந்து விடும் ,இது இறை நிலைக்கு எதிர் மறையான பலனை உடையது. இறைவனுக்கு படைக்கும் எந்த உணவிலும் உப்பை சேர்க்க மாட்டார்கள்
இனிப்பு இல்லாமல் செய்ய மாட்டார்கள் ..
ஒரு உடல் இறந்த பின்பும் பதபடுத்த வேண்டும் என்றால் உப்பை கலந்து வைத்தால் அவை அப்படியே இருக்கும் .
உப்பு மனிதர்களுக்கு நிறைய நோய்களை கொடுக்கும் .சித்த வைத்திய முறையில் உப்பை சேர்க்காமல்
உணவு உன்ன பத்தியம் உண்டு ,கைதேர்ந்த வைத்தியர்கள் இதை அறிவார்கள் ...
தேன்:-
தேன் இனிப்பு சுவை உடையது என்று எல்லோருக்கும் தெரியும் .
சித்தர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா ?
தேன் தன்னுடன் சேரும் பொருளை கெடுக்காது தானும் கெடாது ..
தேன் நாக்கில் மட்டும் இனிப்பை தரும் ஆனால் தொண்டை வழியே உள்ளே சென்றவுடன் இது கசப்பாக மாறிவிடும் தன்மை உடையது .
இதனால் தான் தேனனை கொண்டு மருந்தை கலந்து தந்தார்கள் .
மேலும் தேன் உயிர் சக்திகளை தரும் பொருளை அப்படியே வைத்து இருக்கும் .
ஒரு நெல்லி கனியை தேனில் ஊரப்ப்போட்டு அதை 50 வருட காலம் கழித்து எடுத்து சாப்பிட்டால் அதன் உயிர் சக்தி அப்படியே இருக்கும் .
இதனால் சித்த மருத்துவத்தில் தேனில் கலந்த லேகியம் தருவார்கள் .
மனிதன் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ:1.மாதம் 2 முறையாவது 3 வேலையும் உப்பு இல்லாமல் உண்ண பழகி கொள்ளவேண்டும் .
2.அடிக்கடி தேன் சேர்த்து உண்ணவேண்டும் . தேன் சர்க்கரை நோய்களை தூண்டது .
3.தேனுடன் பால் கலந்து சாப்பிட சுண்ணாம்பு சக்தி நிறைய கிடைக்கும் நோய்கள் உப்பின் தேக்கத்தால் வருகிறது . 
உப்பு அதிகமாக உள்ள மிருக உடல்கள் (அசைவ உணவுகள் ) இவைகளை நாம் தின்று (உப்பினால் ) வரும்
நோய்களை குணபடுத்த உப்பை வைத்து தயாரித்த மருந்துகள் தருகிறது இன்றைய மருத்துவம்(alaopathy )
இனிப்பை வைத்து வைத்யும் செய்வது homeopathi .
உப்பும் ,தேனும் தன்னுடன் எது சேர்த்தாலும் கெடுக்காது.
நல்ல தேனை எறும்பு தீண்டாது ,,உப்பையும் எறும்பு தீண்டாது "கருவாடு ,ஊ ]றுகாய், போன்றவைகள் 
ஆகவே உப்பை குறைத்தும் ,தேனை சேர்த்தும் சாப்பிட்டு பழகி கொள்வோம் ..

பலாபழத்தில் உள்ள சத்துக்கள்

பலாச்சுளைகள் பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ் ஆகிய உப்பு சத்துக்களும் உயிர்ச்சத்து ஏ மற்றும் சி யும் அதிக அளவில் கொண்டுள்ளன. கொட்டைகள் உயிர்ச்சத்து பி1இ பி2 ஆகியவை கொண்டுள்ளன. பலாப்பலத்தில் புரதச்சத்துக்களும், மாவுச்சத்துக்களும், வைட்டமின்களும் அதிகம் காணப்படுகின்றன.
ஏ, சி மற்றும் சில பி வைட்டமின்களும் உள்ளன. தவிர கால்சியம், துத்தநாகம், பாஸ்பரஸ் உள்ளிட்ட கனிமப்பொருட்களும் பலாப்பழத்தில் அடங்கியுள்ளன. வைட்டமின் ஏ உயிர்சத்து அதிகம் காணப்படுகிறது. இது உடலுக்கும், மூளைக்கும் வலுவை அளிக்கும்.
மேல் தோலை மிருதுவாக செய்யும், பல் தொடர்பான நோய்களைப் போக்கும் ஆற்றலும் இதற்கு உண்டு. தொற்றுக்கிருமிகளை அழிக்கும் சக்தியும் இதற்கு உண்டு. பெண்கள் மாதவிடாய் காலங்களில் பலாபழத்தை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
குழந்தைகளுக்கு மந்தநோய் ஏற்படும். மூல நோய் உள்ளவர்கள் அதிகம் சாப்பிட்டால் தொல்லை அதிகமாகும். வாதநோய்க்கும் ஆகாது. இருமல் நோய் உள்ளவர்கள் சாப்பிட்டால் இருமல் அதிகமாகும்

வாழைத்தண்டு

அதிக நீர்ச்சத்து- நார்ச்சத்து கொண்டது. சர்க்கரைச் சத்தும் உள்ளது. கொழுப்பைக் குறைக்கும். வயிற்றுப் புண்களைச் குணப்படுத்தும். சிறுநீர் எரிச்சலைப் போக்கும். ஊளைச் சதையைக் கரைத்து, உடல் பருமனைக் குறைக்கும்.

சளித்தொல்லை நீங்க - இயற்கை மருந்து


  • எலுமிச்சை சாற்றில் உப்பு சேர்த்து குடித்தால் சளியால் ஏற்படும் வாந்தி நிற்கும். 
  • எலுமிச்சை பழச்சாற்றை காபியில் கலந்து குடிப்பதன் மூலம் தலைவலி தீரும். 
  • எலுமிச்சை இலைகளை தேநீரில் போட்டு கொதிக்க வைத்துக் குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும்.

இள நரை மறைய

இன்றைய காலத்தில் சுத்தமான நீர் இல்லாததாலும், இயற்கை முறையில் தலைக்குக் குளிக்காமல், இரசாயனக் கலப்பு நிறைந்த ஷாம்பு, சோப்பு போன்றவற்றால் குளிப்பதாலும் இளம் வயதிலேயே தலை முடி கொட்டி விடுகிறது.

காய்கறிகளும் அதன் பயன்களும் !!!

இன்றைய நிலையில், 10 நபரில் 4பேர் நீரிழிவு நோயின் தாக்குதலுக்கு ஆளானவராகவும், 3 பேர் இருதய சம்பந்தப்பட்ட நோயாளியாகவும், மீதம் 3 பேர் ஏதேனும் வேறு நோயின் தாக்குதலுக்கு ஆளானவராகவும் இருப்பார்கள்.

மருத்துவக் குறிப்புகள்,

  • தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவி வர சளி குணமாகும். 
  • ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் வைத்து தடவிவர தலைவலி குணமாகும். 

பாதாம் பருப்பின் மருத்துவ பயன்கள்:-

பாதாம் என்பதும் ஒருவகை எண்ணெய் வித்துதான். புரதமும் கொழுப்புச்சத்தும் அதிகமுள்ள ஒரு கொட்டை வகை இது. டயட் செய்கிறவர்களுக்கும், கொழுப்பைத் தவிர்க்கச் சொல்கிறவர்களுக்கும் எண்ணெய் வித்துகள் வேண்டாம் என வலியுறுத்தப்படும். ஆனால், பாதாம் மட்டும் விதிவிலக்கு. பாதாமின் தோலில் உள்ள ஃப்ளேவனாயிட்ஸ் மற்றும் வைட்டமின் இ சத்தானது, இதய நோயைக் கட்டுப்படுத்த வல்லது. 100 கிராம் பாதாமில் 58 சதவிகிதம் கொழுப்பு உள்ளது. ஆனாலும், அது நல்ல கொழுப்பு என்பதால் பாதகமில்லாதது!

உடற்சூட்டுக்கு.........வெந்தயம்

வெந்தயம் சிலருக்குப் பிடிக்கும், சிலருக்குப் பிடிக்காது. ஆனால் பிடிக்குதோ பிடிக்கவில்லையோ உடற் சூடு உள்ளவர்கள் இதனை சாப்பிட்டால் உங்களுக்கு நன்மை கிடைக்கும். 

Sunday, October 12, 2014

குழந்தையின் முதல் 4 மாதத்திற்க்கு பின்னால் கொடுக்கும் உணவுமுறை :

குழந்தை பிறந்த முதல் 4 மாதம் வரை தண்ணீர் கூட கொடுக்க தேவையில்லை.
தாய் பால் மட்டுமே கொடுத்தால் போதும் அதிலே எல்லா சத்துக்களும் குழந்தைகளுக்கு கிடைத்துவிடும்.

Saturday, October 11, 2014

வெங்காயம்

உணவுக்கும் மருந்துக்கும் பயன்படும் வெங்காயம் :-
தூக்கமில்லாமல் கஷ்டப்படும் குழந்தைகளுக்கு சிறிய வெங்காயத்தைத் தண்ணீரில் கொதிக்க வைத்து எடுத்த தண்ணீரில் இரண்டு ஸ்பூன் சர்க்கரை சேர்த்துக் கொடுக்க நல்ல தூக்கம் வரும்.

Friday, October 10, 2014

உங்கள் காபியில் சிக்கரி இருக்கா?

உங்கள் காபியில் சிக்கரி இருக்கா?
Posted Date : 16:58 (09/10/2014)Last updated : 16:58 (09/10/2014)


காலையில் எழுந்ததும், ‘பெட்காபி’ இல்லை என்றால், நம்மில் பலருக்கு வேலையே ஓடாது. அதுவும் சிக்கரி கலக்காத ஃபில்டர் காபி, பியூர் ப்ளண்டட் காபி, இன்ஸ்டன்ட் காபி என்று காபியில் பல வகைகள் உண்டு. ஒவ்வொருத்தரும் சுவைக்கேற்ற மாதிரி அருந்தி வருகிறார்கள். போதாக்குறைக்கு இந்த காபி வகைகளையே  உயர்வாகவும், கெத்தாகவும் சொல்லிக் கொள்வதுமுண்டு. ஆனால், சிக்கரியில் உள்ள மகத்துவம் புரியாமல்தான் இவர்கள் இப்படி நடந்து கொள்கிறார்கள். எளிதாகவும், விலை குறைவாகவும் உள்ள பொருட்களை கேவலமாக எண்ணும் மனோபாவம் நம் நாட்டினரிடம் மிகுதியாக உள்ளது.
உணவில் வொயிட்டா... ப்ரவுனா..? உங்கள் சாய்ஸ்!
Posted Date : 20:35 (10/10/2014)Last updated : 20:35 (10/10/2014)
உங்களுக்கு வொயிட் பிடிக்குமா? ப்ரவுன் பிடிக்குமா? என்றால், அவரவருக்குப் பிடித்த நிறத்தை சொல்வார்கள். ஆனால், உணவு விஷயத்தில் நிறத்தைப் பார்த்து அதன் சத்துக்களை நிர்ணயிக்க முடியாது. எந்த நிற உணவுகள் நல்லது என்பதை முதலில் தெரிந்துக் கொள்வதன் மூலம் ஆரோக்கியம் காக்கலாம்.

சுரைக்காய்

சுரைக்காயின் இலை, கொடி, காய், விதை அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை.
  • சுரைக்காயை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து வந்தால் உடல் சூடு குறையும், வெப்ப நோய்கள் ஏதும் அணுகாது.

Wednesday, October 8, 2014

இயற்கை மருத்துவம்,

  • ஒரு கப் தயிரை தவறாமல் சாப்பிட்டு வந்தால் அல்சர் வரவே வராது.......!
  • தினமும் ஒரு ஏலக்காயை தேனோடு உண்பது கண் பார்வைக்கும், நரம்பு மண்டலத்திற்கும் மிகவும் நல்லது.......!

சத்துமாவு...

தேவையான பொருட்கள் :
கேப்பை (கேழ்வரகு) -------- 250 கிராம்                                                                                               கம்பு        ------------------------    250 கிராம்      

இருதய இரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க

இருதய இரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க அருந்தும் பானத்திற்கு உரிய
மூலப்பொருள்கள்

இயற்கை மருத்துவம்

* பசுநெய், தயிர் கலந்து சாப்பிட்டு வந்தால் நரைமுடி கருமையாக மாறும்.
* விளாம்பழம் கிடைக்கும் காலங்களில் தினசரி ஒன்று சாப்பிட்டால் பித்தத்தைக்                   குறைக்கலாம்.

வீட்டுக் குறிப்புகள்-1

  • சப்பாத்திக்கு மாவு பிசைவதற்கு முன்னால் கையில் சிறிதளவு உப்பைத் தடவிக் கொண்டால் கையில் சப்பாத்தி மாவு ஒட்டாது.
  • உருளைக்கிழங்கு வேக வைத்த தண்ணீரில் பாத்திரங்களை கழுவினால் பாத்திரங்கள் பளபளப்பாக இருக்கும்.

வீட்டில் இருந்தே உடல் எடையை குறைக்கும் வழிகள்

அதிக தண்ணீர் குடித்தல் (நீர் சிகிச்சை) அதிகரிக்கும்:
தண்ணீர் அதிகமாக குடிப்பது தான். இதனால் வயிறு நிறைவதோடு, உடலில் இருக்கும் நச்சுக்களை முழுவதும் வெளியேற்றி, குடல் இயக்கத்தை அதிகரிக்கும். சுமார் 4 முதல் 5 லிட்டர் ஒவ்வொரு நாளும் குடிக்க வேண்டும்.

Tuesday, October 7, 2014

இலவங்கம் (கிராம்பு)

* இலவங்கத்தை நீர்விட்டு மைய அரைத்து நெற்றி மீதும் மூக்குத் தண்டு மீதும் பற்றாகப் போட்டு வைக்க தலை பாரம், தலையில் நீரேற்றம், மூக்கடைப்பு ஆகியன குணமாகும். 

கொய்யா

நெல்லிக்கு அடுத்து கொய்யாவில் அதிக அளவு விட்டமின் சி உள்ளது. கொய்யா தற்சமயம் எல்லா காலங்களிலும் கிடைக்கிறது. வெள்ளைக் கொய்யா, சிவப்புக் கொய்யா என இருவகை உள்ளது. குறைந்த விலையில் அதிகச் சத்துக்கள் பெற கொய்யாச் சாறு தினமும் அருந்தலாம். இனிப்பும், அமிலச் சத்துகளும் கலந்த ருசியான பழம். குளிர்ச்சி மிகுந்தது.
கொய்யாப்பழத்தில் உள்ள சத்துக்கள்:
நீர்=76%
மாவுப்பொருள்=15%
புரதம்=1.5%
கொழுப்பு=0.2%
கால்சியம்=0.01%
பாஸ்பரஸ்=0.04%
இரும்புச்சத்து=1 யூனிட்
வைட்டமின் C=300 யூனிட்
இவை அனைத்தும் 100 கிராம் கொய்யாப்பழச்சாறில் உள்ள சத்துக்கள்.
மருத்துவக் குணங்கள்:
உடல் சூடு, மூலவியாதி குறைந்து நலம் கிட்டும்.
ஒரே நாளில் மலச்சிக்கல் நீங்கும் அருமையான கனிச்சாறு. நீரிழிவுப் பிணியாளர்களும் சாப்பிடக் கூடிய கனி. குடல் புண்ணைக் குணப்படுத்தும்.
அமிலத்தன்மை, நெஞ்சு எரிச்சல், புளியேப்பம் விலகும்.
கண் கோளாறுகள் விலகி, தோல் மினுமினுப்பு தரும்.
தொப்பையைக் குறைக்கும்.