Saturday, December 30, 2017

இயற்கை மருத்துவம்

01.தலைவலி போக்க :-
அனைவருக்கும் தலைவலியானது அடிக்கடி ஏற்படும் ஒரு உபாதையாகும் இதனை தீர்க்க ஆங்கில மருத்துவத்தை நாடுவதைவிட பக்க விளைவில்லாத மூலிகை மருந்தினை நாடலாம்.
:- 
நொச்சி இலை:
நொச்சி இலையினை நசுக்கி,சாறாக்கி நெற்றியில் தடவினால் நொடியில் தலைவலி குறைவதை உணரலாம் .சற்று நேரத்தில் முழுவதுமாக தலைவலியானது குணமடையும்.
:-

இயற்கை மருத்துவம்

* சிறிது தண்ணீரில் ஒரு கரண்டி ஓமம் போட்டு கொதிக்க வைத்து, அதில் 100 மில்லி தேங்காய் எண்ணெயை விட்டு மீண்டும் கொதிக்க விட்டு வடிகட்டி கொள்ளுங்கள். வடிகட்டியதோடு கற்பூரப் பொடியைக் கலந்து இளஞ்சூட்டுடன் இடுப்பில் நன்றாகத் தேய்த்து வர இடுப்பு வலி நீங்கும்.
* வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி மூன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் இல்லாமல் போகும்.
* உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படியாமல் தடுக்கலாம்.

Saturday, December 23, 2017

நீரிழிவுக்கான பரிசோதனைகள்

நீரிழிவை உறுதிப்படுத்துவதற்கான சில பரிசோதனைகள் பற்றியும் தெரிந்துகொள்வோம்.
சிறுநீரகப் பரிசோதனை
வெறும் வயிற்றிலும் சாப்பிட்ட பின்னரும் இரண்டு மணி நேரம் கழித்து சிறுநீர் சாம்பிள் எடுக்கப்பட்டு சோதனை செய்யப்படும். இது நோயின் தாக்கத்தைப் பொறுத்து `ப்ளஸ்’ (+) முதல் நான்கு (++++) ப்ளஸ் வரை அளவிடப்படும்.

Thursday, December 14, 2017

பாட்டி வைத்தியத்தின் மகத்துவம்.

பாட்டி வைத்தியத்தின் அற்புதங்கள்...
நாம் விஞ்ஞான உலகமான இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் இருந்தால் கூட நம்முடைய பழமை வாய்ந்த பாட்டி வைத்தியமான கை வைத்தியத்தியத்தின் பலன் பக்க விளைவின்றி நன்மை தரக்கூடிய ஒன்றாகும்.
தலை வலி குறைய
கற்பூரவல்லி இலைச்சாறு, நல்லெண்ணெய், சர்க்கரை ஆகியவற்றை கலந்து நன்கு கலக்கி நெற்றியில் பற்றுப் போட்டு வந்தால் தலைவலி குறையும்.
வெற்றிலையை இடித்துச் சாறு பிழிந்துக் கொள்ளவேண்டும். அந்த சாற்றில் கிராம்பை நன்றாக அரைத்து எடுத்து இரண்டு பொட்டுப் பகுதிகளிலும் கனமாகப் பூசி வந்தால் தலைவலி குறையும்.

Sunday, December 10, 2017

மூட்டு மற்றும் இடுப்பு வலியைப் போக்க எலுமிச்சை

எலுமிச்சையை இப்படி யூஸ் பண்ணுனா, முதுகு மற்றும் மூட்டு வலியில் இருந்து முற்றிலும் விடுபடலாம்!
புவியில் உள்ள ஆரோக்கியமான பழங்களில் ஒன்று தான் எலுமிச்சை. மஞ்சள் நிறத்தில் புளிப்புச் சுவையைக் கொண்டிருக்கும் இப்பழத்தில் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன. இவை ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் சீராக வைத்துக் கொள்ள உறுதுணையாக இருக்கும்.

எலும்பு மூட்டு வலிக்கு நாட்டு மருந்து

இந்த பானத்தை தினமும் மூன்று வேளை பருக வேண்டும். அதுவும் காலை உணவு, மதிய உணவு, இரவு உணவு உண்பதற்கு 1/2 மணிநேரத்திற்கு முன் 50-60 மிலி பருக வேண்டும். தயாரித்த பானம் ஒருவேளை கெட்டியாக இருந்தால், நீர் சேர்த்துக் கொள்ளலாம். தற்போது மூட்டு மற்றும் எலும்பு வலியால் ஏராளமானோர் கஷ்டப்பட்டு வருகின்றனர்.
மூட்டு மற்றும் எலும்புகளில் ஏற்படும் நாள்பட்ட உட்காயங்கள் தான் முக்கிய காரணம். எனவே ஒவ்வொருவரும் தங்களது எலும்புகள் மீது சற்று அதிக அக்கறை காண்பிக்க வேண்டியது அவசியம். பொதுவாக மூட்டு சம்பந்தமான பிரச்சனைகள் வயதான காலத்தில் தான் ஏற்படும். ஆனால் இன்றோ 30 வயதிலேயே மூட்டு பிரச்சனைகள் வர ஆரம்பிக்கிறது. 

Monday, December 4, 2017

8 க்குள் ஒரு நடை பயிற்சி

"எட்டு" போடுகிறவனுக்கு "நோய்"
எட்டிப் போகும் என்பது ஒரு பழமொழி.
மனித உடல் அவரவர் கை அளவுக்கு எண்ஜான் அளவுமட்டும் இருக்கும் !!
உங்கள் வீட்டின் உள்ளோயோ அல்லது மாடியிலோ இடம் தேர்வு செய்து, 6 க்கு 12 அடி அல்லது 8 க்கு 16 அடி அளவில் செவ்வக கோடு இட்டு அதற்குள் 8 வடிவில் வரைந்து கொள்ளுங்கள் !! இது தெற்கு வடக்காக நீளப் பகுதி இருக்கணும் .

Thursday, November 23, 2017

குறட்டைப் பழக்கத்தை போக்கும் அரிய மூலிகை எது தெரியுமா?

குறட்டை என்ற ஒரு வியாதிதான், அந்த வியாதி உள்ளவர்களுக்கு அதன் சிரமம் ஒன்றும் அந்த சமயத்தில் தெரியாமல், அவரைச்சார்ந்தோருக்கு, அதிக அளவில், மன வேதனை, தூக்கம் கெட்டு ஏற்படும் உடல் வேதனை மற்றும் மன உளைச்சல் ஆகிய துன்பங்களை அடைய வைக்கும் ஒரு மோசமான வியாதி.
குடும்பத்தலைவர் விடும் குறட்டையால், எத்தனைக் குடும்பங்கள் பிரிந்திருக்கின்றன, எத்தனை குடும்பத்தலைவிகள், தாங்கள் படும் இன்னலை வெளியே சொல்லமுடியாமல், இரவுநேரம் வந்தாலே அஞ்சி நடுங்கி வாழ்கின்றனர்.
வேலைக்கு செல்லும் குடும்பத் தலைவிகள், தங்கள் கணவர்களின் இந்தக் குறட்டையால் சரியாக தூக்கம் இல்லாமல், காலையில் பணிநேரத்தில் தூங்கிவழிந்து ஆபிஸ் பணிகளில் ஈடுபாடு கட்டமுடியாமல், மேலதிகாரிகளிடம் திட்டு வாங்கின்றனர். இவ்வளவு இன்னல்களுக்கு காரணமான குறட்டை ஏன் வருகிறது?

Monday, September 11, 2017

*பழைய சோத்துல இவ்வளவு விஷயமுள்ளது*

முதல் நாள் சோற்றில் நீரூற்றி, மறுநாள் சாப்பிடும் இந்த *பழைய சாதத்தில்* தான் வைட்டமின் பி6 வைட்டமின் பி12  ஏராளமாக இருக்கிறது என்கிறது புது ஆய்வு. தவிரவும் உடலுக்கு, குறிப்பாக சிறு குடலுக்கு நன்மை செய்யும் 'ட்ரில்லியன்ஸ் ஆஃப் பாக்டீரியாஸ்' (கவனியுங்கள் : 'மில்லியன்' அல்ல 'ட்ரில்லியன்') பெருகி நம் *உணவுப் பாதையையே ஆரோக்கியமாக* வைத்திருக்கிறதாம்!
👉கூடவே இரண்டு சிறிய 🌰 வெங்காயம் சேரும்போது, நோய் எதிர்ப்பு சக்தி அபரிமிதமாக பெருகுகிறதாம். அப்புறம் பன்றிக் காய்ச்சல் என்ன, எந்தக் காய்ச்சலும் நம்மை அணுகாது !

Saturday, September 9, 2017

வாயு தொல்லையை குணமாக்கும் பூண்டு லெமன் டிரிங்.

​வாயு தொல்லை, வயிறு கோளாறு இருப்பவர்கள் இந்த பூண்ட லெமன் டிரிங்கை குடித்தால் உடனடியாக நிவாரணம் பெறலாம்.
​தேவையானவை :​
பூண்டு - 3 பல்,
எலுமிச்சைச் சாறு - 4 டீஸ்பூன்,
தேன் - சிறிதளவு,
தண்ணீர் - ஒரு கப்.

Thursday, September 7, 2017

உடல் பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள் :-

* நெல்லிக்காயை கொட்டை நீக்கி சுத்தம் செய்து, சாறு எடுத்து அதனுடன் சிறிது இஞ்சிச்சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் கொழுப்பு குறையும்.
* கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் (திரிபலா) இவைகளை பொடியாக்கி வெந்நீரில் கலந்து காலையில் குடித்தால் எடை குறையும். சிறிது வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து பருகி வந்தால் உடல் பருமன் குறையும்.
* அருகம்புல் சாறெடுத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர தொப்பை குறையும்.
* ஆமணக்கின் வேரை இடித்து தேன் கலந்து நீரில் இரவு ஊற வைத்து காலையில் கசக்கிப் பிழிந்து, நீரை வடிகட்டி குடித்தால் உடல் பருமன் குறையும்.

உணவு உண்ணாமல் அடம்பிடிக்குதா உங்கள் சுட்டிகள்!

உணவு உண்ணாமல் அடம்பிடிக்கும் குழந்தைகளுக்குச் சிலர் ஜூஸ் கொடுப்பார்கள். ஆனால், நேரம் காலம் தெரியாமல் எந்த ஜூஸை எப்போது கொடுக்க வேண்டும் என்பது புரியாமல் இருப்பார்கள். நெஞ்சுச்சளி, மூச்சுத்திணறல் உள்ளிட்ட பிரச்னை உள்ள குழந்தைகளுக்கு, ஜூஸ் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும் என்ற சில வரைமுறைகள் உள்ளன. வளர்ச்சி குன்றிய குழந்தைக்கு ஆப்பிள் ஜூஸ் தருவது, மலச்சிக்கல் உள்ள குழந்தைக்குத் திராட்சை, வாழைப்பழம் ஜூஸ் தருவது என யாருக்கு எந்த ஜூஸ் தரலாம். குழந்தைகளுக்கு 10-வது மாதத்திலிருந்து பழச்சாறுகள் கொடுக்கலாம். காலை நேரங்களில் ஒரேமாதிரியான பழச்சாறுகள் கொடுப்பதைத் தவிர்க்கலாம். மேலும், சீசன் பழங்களான வாழை, அன்னாசி, முலாம், தர்பூசணி, கிவி போன்றவற்றை மாறிமாறிக் கொடுக்கலாம். இரவு நேரங்களில் சிட்ரிக் ஆசிட் நிறைந்த பழச்சாறுகளைக் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.

வாழைத்தண்டு!

மருத்துவ குணம் நிறைந்த வாழைத்தண்டு!
தமிழர் கலாச்சாரத்தில் வாழை மரத்தின் பயன்பாடு அன்றாடம் இருந்தது. தன்னை முழுமையாக மருத்துவப் பயன்களுக்காகவே அர்ப்பணித்துக் கொண்ட மிக முக்கிய தாவரம் ஆகும். வாழையின் அனைத்துப் பகுதிகளும் பயன்படும். இது பூரண மருத்துவக் குணம் கொண்ட தாவரமாக கருதப்படுகிறது. அந்தக் காலத்தில் வாழை மரத்தை அரம்பை, கதளி, அமணம் என்று அழைத்தார்கள்.
வாழை, அறிவியல் வகைப்பாட்டின் பூண்டுத் தாவரங்களைக் கொண்ட பேரினம் ஆகும். தென்கிழக்கு ஆசியாவில் தோன்றிய வாழை முதன் முதலாக நியூகினியாவில் உருவானதாக கருதப்படுகிறது.

வாழைப்பூ!

கர்ப்பப்பை காக்கும்... ஆயுள் கூட்டும்... குழந்தையின்மை போக்கும்... வாழைப்பூ!
பூக்கள், இயற்கையின் படைப்பில் முக்கியமானவை. அவை காதலுக்குச் சாட்சியாகவும், நறுமணம் தரும் பொருளாகவும், பெண்கள் சூடிக் கொள்வதால் அவர்களது அழகை மெருகேற்றும் ஒரு பொருளாகவும், தமிழர்களின் விழாக்களில் முக்கிய இடம் பிடிக்கும் பொருளாகவும் பயன்படுகிறது. இவை எல்லாவற்றையும்விட, பூக்கள் நம் நோய் தீர்க்கும் மருந்தாகும். உயிர் காக்கும் கவசமாகவும் பயன்படுகின்றன. அந்த வகையில் நம் ஆயுளைப் பெருக்கி நீண்ட காலம் வாழ வைக்கும் அற்புத மருத்துவக் குணங்களைக் கொண்டது 'வாழைப்பூ' . இதன் மகத்துவதைப் பற்றி இங்கே பார்ப்போம்.
வாழைப்பூ
குலை வாழையைத் தலைமகளோடு ஒப்பிடுகிறார்கள், தமிழர்கள். அப்படியென்றால், எந்த அளவுக்கு நமக்கு வாழைப்பூ பயன்படுகிறது என்பது தெள்ளத்தெளிவாக விளங்கும். வாழையின் அனைத்துப் பாகங்களும் நமக்குப் பயன்தரக்கூடியவை. குறிப்பாக, வாழைப்பூ அதிகப் பயன்தரக்கூடியது.பூ

கண்கள் மற்றும் கல்லீரல் தொடர்பான தொந்தரவுகளில் இருந்து எளிதில் விடுபட உத்திகள்!

ஒருமுறை கண்ணாடி அணிந்தால், பிறகு கண்ணாடியைக் கழற்ற வழியே இல்லையா?
பல வழிகள் இருக்கிறது.
‘கண்களைக் காக்கும் யோகா’ பதிவில் சொல்கின்ற கண் சிமிட்டுதல் மற்றும் மூக்கின் நுனியினை பார்த்தல் புருவமத்தியைப் பார்த்தல் என்பவற்றுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள உத்திகளையும் செய்து வந்தால்
கண் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு மட்டுமல்ல கல்லீரல் சம்மந்தப்பட்ட நோய்களையும் குணப்படுத்தலாம்.
கண்கள் மற்றும் கல்லீரல் தொடர்பான தொந்தரவுகளில் இருந்து எளிதில் விடுபட உத்திகள்!
கண்களைக் காக்கும் யோகா!
கண்களில் ஏதேனும் பிரச்சனை வந்தால், மருத்துவரைப் பார்த்து, கண்ணாடி அணிந்து கொள்கிறோம். பிரச்சனை சரியானதும் கண்ணாடியைக் கழட்டிவிட வேண்டும் தானே? ஆனால், ஒருமுறை கண்ணாடி அணிந்தால், அதையே தொடர்கிறோமே ஏன்? ஒருமுறை அணிந்தால், கண்ணாடியைக் கழற்ற வழியே இல்லையா?

Tuesday, September 5, 2017

எளிய பாட்டி வைத்தியம் :-

1) கேழ்வரகு மாவு, எள்ளு, சிறிது வெள்ளம் சேர்த்து இடித்து சமையல் செய்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
2) மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்து பருகினால் வயிற்று வலி,வாயுத் தொல்லை நீங்கும்.
3) சீரகம், திப்பிலி சேர்த்து பொடி செய்து தேனில் குழைத்து அடிக்கடி சாப்பிட்டால் தொடர் விக்கல் விலகும்.
4) ஓமத்துடன் சிறிது சீரகம் சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட்டால் வயிற்று வலி, வயிற்று போக்கு குணமாகும்.
5) பலாப்பழத்துடன் சிறிது கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டால் உடல் அசதி நீங்கி உற்சாகம் ஏற்படும்.

சீரக சூப்

தேவையான பொருட்கள்:
சீரகம் – 1/2 டீஸ்பூன்
இஞ்சி – 1 துண்டு
பட்டை – சிறிதளவு
வெள்ளை பூண்டு – 10 பற்கள்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
தனியா – சிறிதளவு

Sunday, September 3, 2017

பல் வலியா..?நொடியில் போக்குவதற்கான அற்புதமான 40 இயற்கை மருத்துவ முறைகள்!

* மிளகுத் தூளுடன் உப்பு சேர்த்துப் பல் விளக்கி வர சொத்தைப் பல், பல்வலி, ஈறு வலி, வாய் துர்நாற்றம் போகும்.

Saturday, September 2, 2017

தொண்டை வலி, ஒற்றை தலைவலிக்கான அற்புதமான பாட்டி வைத்தியங்கள்!

தொண்டை வலி மற்றும் தொண்டை கவ்வல் போன்ற பிரச்சனைகளுக்கு மிகச்சிறந்த மருந்தாக இருப்பது நாமக்கட்டி. இந்த நாமக்கட்டியை சூடான நீரில் குழைத்து தொண்டையில் மேல் இருந்து கீழாக பற்று போட்டால் தொண்டை வலி குணமாகும்.
தூதுவாளை கீரை வீடுகளிலேயே எளிமையாக வளரக்கூடிய ஒரு மருத்துவ தாவரம். இதனை நன்றாக நெய்யில் வதக்கி சாப்பிட்டாலும் தொண்டை வலி குணமாகும்.
சாதம் வடித்த கஞ்சியை எடுத்து, அதில் பணங்கற்கண்டு சேர்த்து கொள்ள வேண்டும். இதில் நெய் அல்லது வெண்ணெய் சேர்த்து சாப்பிட்டால் தொண்டை வலி விரைவில் குணமாகும்.

குப்பைமேனி / பூனை வணங்கி மூலிகை

குப்பைமேனி
1) வேறுபெயர்கள் :-  பூனை விரட்டி, இந்தியன் அக்கலிப்பா,மரகாந்தா, குப்பி, கஜோதி.
2) தாவரப்பெயர் :-  ACALYPHA INDICA.
3) குடும்பம் :-  EUPHORBIACEAE.
4) வளரும் தன்மை :- 
இது தோட்டங்கனிலும், சாலையோரங்களிலும். பொதுவாக இந்தியாவில் எங்கும் காணப்படுகிறது. குப்பை மேனிக்கு அருகில் பூனை வராது.

நந்தியாவட்டை

ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். இதன் பூவும் இலையும் மருத்துவக் குணங்கள் உடையன.
சங்ககால மகளிர் குவித்து விளையாடியதாகச் சொல்லப்பட்டுள்ள 99 மலர்களில் 'நந்தி' என்னும் பெயரால் நந்தியாவட்டை மலர் சுட்டப்பட்டுள்ளது.
பசுமையாய் கண்களுக்கு குளிர்ச்சியைத்தரும் இந்தச் செடி சுமார் 1.8 - 2.4 மீட்டர் உயரம் வளரும். இலையை காம்புடன் கிள்ளினால் பால் வரும். பூக்கள் வெண்மை நிறத்துடன், வாசனையுடன் கூடியவை.

நெருஞ்சில்

சிறுநீர் சீராக நெருஞ்சில்
பல பயன்களை தரும் நெருஞ்சில் ஒரு வீரியமுள்ள மூலிகை சமஸ்கிருதத்தில் இதன் பெயர் 'கோக்சூரா' - இதன் முட்கள் மாட்டின் கொம்பைப் போல் பிரிவுடையவை.
இதன் பழங்கள் மாட்டின் குளம்புகளை போல் பிரிவுடையவை. தரையில் படரும் முட்செடி. மணற்பாங்கான இடத்தில் நன்கு வளரும்.
கிளைகள் வளைந்து நெளிந்து செல்லும். பட்டு போன்ற முடிகளால் கிளைகள் மூடப்பட்டு இருக்கும். தண்டு, இலைகள் பழங்கள் இவற்றில் எல்லாம் முட்கள் இருக்கும். இதனால் தமிழில் இதற்கு நெருஞ்சி முள் என்றும் பெயர்.

மல்லிகைப் பூ



மல்லிகைப் பூவின் மருத்துவ குணம்
மல்லிகை மொட்டுகளை சாப்பிட்டு வந்தால் சிறுநீரகம் சம்பந்தப்படட கோளாறுகள், கண் நோய்கள், மஞ்சள் காமாலை மற்றும் சில பால்வினை நோய்களும் குணமாகும்.
மல்லிகைப் பூவை நீரில் கொதிக்க வைத்து, அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வந்தால் கண்ணில் வளரும் சதை வளர்ச்ச குறைந்து, படிப்படியாக தெளிவான பார்வை பெறலாம்.
குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாத நிலையில் இருக்கும் தாய்மார்கள், மார்பில் கட்டியுள்ள பாலை வெளியேற்றவும், வலியை நீக்கவும் மல்லிகைப் பூ சிறந்த மருந்தாகும்.

ரோஜா

ரோஜாவை பச்சையாகவும், காயவைத்தும் பயன்படுத்தலாம். ரோஜா இதழ்களை அப்படியே சாப்பிட்டால் வாய்ப்புண் குணமாகும். அத்துடன் கர்ப்பிணிப் பெண்களுக்கு சிறுநீர் சுலபமாகப் போகும். குடல்புண், தொண்டைப் புண் குணமாக்குவதற்கும் ரோஜா மலர் பயன்படுத்தப்படுகின்றது.
ரோஜாப் பூவின் மணம் சளியைக் குணப்படுத்தும் ஆற்றலும், வயிற்றை சுத்தமாக்கும் இயல்பும் கொண்டது. ரோஜாவிலிருந்து தைலம் எடுக்கலாம். காது வலி, காது குத்தல், காதில் ரோகம், காதுப்புண் என்பவற்றுக்கு இத்தைலம் பயன்படுத்தப்படுகின்றது. ரோஜா இதழ்களைக் கொண்டு குல்கந்து தயார் செய்யலாம்.

செம்பருத்தி....!

வீட்டில் அழகுக்காக வளர்க்கப்படும் இதில் பல்வேறு மருத்துவ குணங்களும் இருப்பது பலருக்கு தெரிவதில்லை.
செம்பருத்தி பூக்கள் மற்றும் இலைகள்,தலைமுடி வளர்ச்சிக்கும் தலையில் பொடுகு உள்ளிட்ட பிரச்னைகளுக்கும் தீர்வாகும்.
தேங்காய் எண்ணையில் இதன் காய்ந்த மொட்டுக்களை போட்டு ஊற வைத்து தொடர்ந்து தடவி வந்தால் கூந்தலின் கருமை நிறம் பாதுகாக்கப்படும்.

Wednesday, August 30, 2017

மூக்கடைப்பு பிரச்சனைக்கு

நீங்கள் இரவில் மூச்சு விட முடியாமல் மூக்கு அடைப்பால் கஷ்டப்படுபவராயின், உங்களுக்காக இங்கு மூக்கடைப்பை சரிசெய்யும் எளிய இயற்கை வைத்தியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
• சிறிது பட்டையை எடுத்து பொடி செய்து, நீர் ஊற்றி பேஸ்ட் போல் கலந்து, உச்சந்தலையில் தடவி, சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால், மூக்கடைப்பு ஏற்படுவது குறையும்.
• ஆகாயத்தாமரை மற்றும் ஆதொண்டை வேரை நல்லெண்ணெயில் போட்டு காய்ச்சி, அந்த எண்ணெயை தலைக்கு தடவி, சிறிது நேரம் ஊற வைத்து, பின் குளித்து வந்தால், மூக்கடைப்பு மற்றும் தொண்டைக் கட்டு போன்றவை நீங்கும்.
• நொச்சி இலைகளை அரைத்து சாறு எடுத்து, நல்லெண்ணெயில் சேர்த்து சூடேற்றி, பின் அதனை தலைக்கு தடவி குளித்து வந்தால், மூக்கடைப்பு ஏற்படுவதைத் தடுக்கலாம்.

நாட்டுக் கம்பு:


நம் முன்னோர்கள், தங்களுடைய உணவில் அதிகளவு தானிய வகைகளை சேர்த்து வந்தனர். காலையில் கம்பை கஞ்சியாக்கி அருந்தினர். சிலர் அரிசி உபயோகப்படுத்துவது போல், வேகவைத்து வடித்து சாப்பிட்டனர். ஆனால் இடைப்பட்ட காலத்தில், இந்த தானிய வகைகளை மறந்து, சத்தற்ற உணவுகளை, சாப்பிட்டு வந்தனர். நாவின் சுவையை அதிகம் விரும்பியதால், நோய்களின் வாழ்விடமாக, நம் உடல் மாறிவிட்டது.

இரவு நேரங்களில் துங்காமல் கண் விழிப்பவர்கள், அதிக நேரம் ஒரே இடத்திலிருந்து வேலை செய்பவர்கள், அதிக சூடுடைய பகுதிகளில், வேலை செய்பவர்கள், அதிக மன அழுத்தம் கொண்டவர்களின் உடலானது, அதிக உஷ்ணமடையும். இவர்கள் கம்பை கஞ்சியாக காய்ச்சி, காலை வேளையில் அருந்தி வந்தால் உடல் சூடு குறையும். 

Tuesday, August 29, 2017

பீன்ஸ்

இன்றைய தலைமுறையினர் காய்கறிகளை சரியாக சாப்பிடாமல் ஜங்க்ஃபுட் உணவுகளை மட்டும் அதிகம் உட்கொள்வதால் அவர்களின் உடலில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டு, இதன் மூலம் அடிக்கடி நோய்வாய்படுகின்றனர்.
மேலும் வீட்டில் உள்ளோர் எவ்வளவுதான் காய்கறிகளை வாங்கி நன்கு சமைத்துக் கொடுத்தாலும், அதை சாப்பிடுவதில்லை. குறிப்பாக பீன்ஸ் பொரியல் என்றால் பலர் சாப்பிடாமலேயே இருப்பார்கள்.
புற்றுநோயை‌த் தடுக்கும்:
பீன்ஸ் சாப்பிட்டு வந்தால் அதில் உள்ள ஃப்ளேவோனாய்டுகள் புற்றுநோயை உண்டாக்கும் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து புற்றுநோ‌ய் வருவதற்கான வாய்ப்பைத் தடுக்கும்.

நித்திய கல்யாணி-சக்கரை வியாதி புண்ணை ஒரே நாளில் குணமாக்கும்.

நித்திய கல்யாணி செடி அற்புதமான மருத்துவ குணங்களை கொண்டது. நித்திய கல்யாணி சர்க்கரை அளவை குறைக்க கூடிய தன்மை உடையது. புற்றுநோய்க்கு மருந்தாக அமைகிறது.
உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கவல்லது. புண்களை விரைவில் ஆற்றும் தன்மை கொண்டது.
நித்திய கல்யாணி பூவை பயன்படுத்தி சர்க்கரை நோயாளிகளுக்கான மருந்து தயாரிக்கலாம்.

முக்குரட்டை கீரை-நீரிழிவு மற்றும் மன அழுத்ததிற்கு அருமருந்து.....

நீரிழிவுக்கு அருமருந்து
உடலில் இன்சுலினானது கணையத்தில் உள்ள β-cellகளில் உற்பத்தி ஆகிறது. இது இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. நீரிழிவு நோயாளிகளில் இந்த β-cells குறைந்து விடுவதால் சர்க்கரை அதிகமாக இரத்த்தில் காணப்படுகிறது. முக்குரட்டை கீரையை உணவில் 4 வாரங்கள் சேர்த்தால் β-cells எண்ணிக்கையை குறையாமல் காக்கிறது. இதனால் அவர்களில் உடல் மேலும் பாதிப்படையாது. சர்க்கரை அளவும் கணிசமாக குறைகிறது. 
மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டோர் இக்கீரையின் இலைச்சாற்றைப் பருகினால் மன அழுத்தம் குறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அல்சரை போக்கும் விளாம்பழம்

 வுட் ஆப்பிள் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் விளாம்பழத்தில் புரதம் மற்றும் வைட்டமின் சி சத்தும், இரும்பு, சுண்ணாம்பு, வைட்டமின் ஏ உள்ளிட்ட சத்துக்களும் உள்ளன.
இந்த விளாம்பழம் மற்றும் அதன் மேல்புற ஓடு, மரத்தின் வேர், பட்டை, இலை ஆகியவற்றிலும் மருத்துவ குணம் உள்ளது.
குறிப்பாக விளாம் பழ விதையில் ஒலியிக், பால்மிடிக், சிட்ரிக் உள்ளிட்ட அமிலங்களும், இலையில் சபோரின், வைடெக்சின் உள்ளிட்ட வேதி பொருட்களும், பட்டையில் பெரோநோன், பெரோநோலைடு உள்ளிட்ட மருத்துவ குணங்களும் உள்ளது. விளாங்காயில் பி2 உயிர்சத்தும் உள்ளது.

Sunday, August 27, 2017

மூட்டு வலி நிவாரணம் தரும் முடக்கத்தான் ரசம்

மூட்டு வலியில் இருந்து நிவாரணம் தரும் வல்லமை பெற்றது முடக்கத்தான் கீரை. இந்த கீரையை வைத்து சூப்பரான ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
முடக்கத்தான் கீரை - ஒரு கைப்பிடியளவு,
புளி - நெல்லியளவு,
உப்பு - தேவைக்கு
பூண்டு - 5 பல்,
காய்ந்த மிளகாய் - 3, 
மஞ்சள் தூள் - சிட்டிகை
மிளகு சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்,
நெய், கடுகு, கறிவேப்பிலை - சிறிதளவு.

Saturday, August 26, 2017

மாசிக்காய்


மாசிக்காயின் நன்மைகள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம்.பல்வேறு மருத்துவ குணங்களை உடைய மாசிக்காய் ரத்தத்தை உறைய வைக்கும் தன்மை கொண்டது. இது, புற்றுநோய் வராமல் தடுக்கின்ற உள் மருந்தாக விளங்குகிறது. 

மேல் மருந்தாக பயன்படுத்தும்போது புண்களை ஆற்றுகிறது. வாய் கொப்பளிக்கும் நிலையில் பற்களுக்கு பலம் கொடுக்கிறது. அதிக மாதவிலக்கை நிறுத்த கூடிய தன்மை மாசிக்காய்க்கு உண்டு.

மாசிக்காயை பயன்படுத்தி பல்வலி, ஈறுகளில் ஏற்படும் வீக்கம், வாய் புண்களை ஆற்றும் மருந்து தயாரிக்கலாம். மாசிக்காய் பொடி நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக் கொள்ளவும். இதில் மாசிக்காய் பொடி சேர்த்து 10 நிமிடங்கள் ஊறவைத்த பின் வாய்கொப்பளிக்க வேண்டும். இவ்வாறு செய்துவர ஈறுகளில் ஏற்படும் ரத்த கசிவு, பல்வலி, வாய் புண்கள் குணமாகும். 

Friday, August 25, 2017

மல்லிகைப் பூ

மல்லிகை
மல்லிகைப் பூவை (1 கைப்பிடி) அளவு எடுத்து நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வந்தால் கண்ணில் வளரும் சதை வளர்ச்சி குறைந்து 48 நாட்களில் படிப்படியாக தெளிவான பார்வை பெறலாம்.
மல்லிகைப் பூக்களை நன்றாக கசக்கி நெற்றியின் இரு புறங்களிலும் தடவி வர தலைவலி உடனே குணமடையும்.

பல் வலியில் இருந்து உடனடி நிவாரணம் தரும் சில இயற்கை பொருட்கள்.

நம் வாழ்நாளில் ஒருமுறையாவது பல் வலியால் அவஸ்தைப்பட்டிருப்போம். அக்காலத்தில் பல் வலி வந்தால், அதனைப் போக்குவதற்கு பல் மருத்துவர்கள் இல்லை. மாறாக நம் முன்னோர்கள் இயற்கை வைத்தியங்களைக் கொண்டு தான் தங்களின் பல் வலியைப் போக்கினார்கள்.

தற்போது பல் மருத்துவர்கள் இருந்தாலும், பலரும் பல் மருத்துவரிடம் செல்ல பயந்து செல்லாமல் இருப்போம். நீங்களும் பல் மருத்துவரிடம் செல்ல பயப்படுபவராக இருந்தால், பல் வலியை வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே வைத்தியம் பார்த்து சரிசெய்து கொள்ளுங்கள்.
சரி, இப்போது தாங்க முடியாத பல் வலியில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கும் சில இயற்கை வைத்தியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

Thursday, August 24, 2017

முடி செழித்து வளர

~~~~~~ 🌹🌹 ~~~~~
1.தேங்காய் எண்ணெயை எலுமிச்சை சாற்றில் கலந்து, கூந்தலுக்கு தடவி குளித்து வர, முடிஉதிர்தல் கட்டுப்படும். கூந்தலும் நன்கு வளரும்.
2.முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் (வாரம் ஒருமுறை) தொடர்ந்து மூன்று மாத காலம் குளிக்க முடி கொட்டுவது நின்று விடும் நரை விழுவதை தடுக்கும். கருகருவென முடி வளர தொடங்கும்.
3.முட்டை வெள்ளை கருவை தலையில் தேய்த்து 10 நிமிடம் கழித்து சீகக்காய் போட்டு குளிக்க தலைமுடி உதிர்வது சுத்தமாக நின்று விடும்.
4.செம்பருத்தி பூவுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்துவர முடி உதிராது. கருமையாகவும் மாறும்.ஷ...ரு🌿🌸
5.சிறிய வெங்காயத்தின் சாறை எடுத்து தலையில் தேய்த்து ஊற வைத்து குளிக்க முடி உதிராது...
~~~~~~ 🌹🌹 ~~~~~
நன்றி : ஷங்கர் குரு - பாட்டி வைத்தியம் 

மூலிகைகளும் அதன் சத்துக்களும்

மூலிகைகளும் அதன் சத்துக்களும்
1. அத்தி - இரும்புச்சத்து
2. அம்மான் பச்சரிசி - வெள்ளிச்சத்து
3. அக்கிரகாரம் – செம்புச்சத்து
4. ஆத்தி – இரும்புச்சத்து, தாமிரச்சத்து
5. ஆவாரம் – செம்புச்சத்து
6. ஆரைக்கீரை – இரும்புச்சத்து
7. ஆவாரை, ஆடாதொடா, கற்றாழை, – தாமிரச்சத்து
8. ஊமத்தை – இரும்புச்சத்து, உப்புச்சத்து
9. எட்டி – இரும்புச்சத்து, கந்தகச்சத்து
10. எள்ளு, கடுகு – கந்தகச்சத்து

கர்ப்பம் கலைந்து சிரமப்படுவர்களுக்கு கரு நிலைக்க வழி

கர்ப்பம் கலைந்து சிரமப்படுவர்களுக்கு கரு நிலைக்க வழி
அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்
விளக்கம் :-
தாய் கருவுற்ரும் ,பின்னர் கலைந்துவிட்டால் ,அதற்கு மாதுளம் பழ தோல் உடன் அசோக மரப் பட்டையும் சம அளவு எடுத்து கொதி நீரிட்டுப் பதமுடன் 45 நாள் காலையில்அருந்தி வர உடல் நலம் தேறி ,நலம் பெற்று மீண்டும் கரு உண்டாகி நிலைத்துப் பிறக்கும்.
நன்றி : ஸ்ரீ ஷிரகிரி வேலவன் - அறுசுவை சமையல் - சைவம் 

ராகி என்னும் கேழ்வரகு

தானியங்களில் ஒன்று தான் ராகி என்னும் கேழ்வரகு. அக்காலத்தில் மக்கள் பெரும்பாலும் காலை வேளையில் கேழ்வரகை கூழ் செய்து காலை உணவாக உட்கொண்டு வந்தார்கள். அதனால் தான் அவர்கள் நீண்ட நாட்கள் நோயின்றி ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தார்கள்.

கேழ்வரகு மட்டுமின்றி, கம்பு, மக்காசோளம், கோதுமை போன்றவற்றை தங்களின் உணவுகளில் அதிகம் சேர்த்து வந்தார்கள். ஆனால் மற்றவையோடு ஒப்பிடுகையில் கேழ்வரகில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.

இந்துப்பு

செயலிழந்த கிட்னியை இரண்டே வாரத்தில் சரிசெய்ய உதவும் அற்புதமான மருந்து!
தற்பொழுது எல்லாம் கிட்னி பழுது அடைந்தால் டயாலிசிஸ் என்று ரத்தம் மாற்றுகிறார்கள்,
அதிக சிரமம் மற்றும் செலவு, creatinine level 0.6 to 1.3 இருக்க வேண்டும்,

அப்படி இந்த level உள் இல்லை என்றால் கிட்னி failure, function சரியில்லை, ரத்தம் மாற்ற வேண்டும், கிட்னி மாற்ற வேண்டும் என்பார்கள்,

பல லட்சம் செலவு ஆகும், வேதனை வலி இருக்கும் இதை சரி செய்ய எளிய வழி உண்டு.

எந்த கீரை சாப்பிட்டால் என்ன பலன்...?

கொத்தமல்லி கீரை- மூளை, மூக்கு சம்பந்தமான சகல வியாதிகளும் குணமாகும். பசியைத் தூண்டும்.
அரைக்கீரை- நரம்பு தளர்ச்சியை போக்கும். தாய்ப்பால் பெருகும்.
வள்ளாரை - நினைவாற்றலை அதிகமாகும். யானைக்கால் நோய் குணமாகும்.
அகத்திக்கீரை- மலச்சிக்கலைப் போக்கும்.

பாய் விரித்து உறங்குவதால் கிடைக்கும் நன்மைகள்

*பாய் விரித்து உறங்குவதால் கிடைக்கும் நன்மைகள் - தெரிந்துகொள்வோம்*
1; பொதுவாக பாய் தரையில் விரிப்பதால்...நாம் தரையில் உறங்குவதே ஒரு சிறந்த "யோகாசனம்"
2; பிறந்த குழந்தைகளை பாயில் உறங்க வைப்பதால் அதன் முதுகு எழும்பு நேர்படுத்தப்படுகிறது, குழந்தைகளுக்கு இளம் வயது கூண் முதுகு விழுவதை தடுக்கிறது, [கல்வி கற்க்கும் மாணவ மாணவிகளுக்கு இளம் வயது முதுகு வலி வராமலும் தடுக்கும்,]
3; கர்ப்பினி பெண்கள் பாயில் உறங்குவது சுக பிரசவத்திற்கு உதவிடும், [பாயில் படுக்கையில் பெண்களுக்கு இடுப்பு எழும்பு விரிகிறது, இடுப்பு எழும்பு விரிந்தாலே ஆப்பரேசன் இல்லாத சுக பிரசவம்தான்]
4; மூட்டு வலி, முதுகு வலி, தோள்பட்டை தசை பிடிப்பு போன்ற பிரச்சினை உள்ளவருக்கு பாயில் உறங்குவதே ஒரு சிறந்த தீர்வு,

தெரிந்துகொள்வோம்

No automatic alt text available.
வேர்கடலைக்கு சிறிது வெல்லம்
நன்றி : முஹம்மது அனீஷ்  

Sunday, August 20, 2017

வெற்றிலை-பாக்கு-சுண்ணாம்பு

அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு வெற்றிலை-பாக்கு-சுண்ணாம்பு போடுவது மட்டுமே!
அதிர வைக்கும் பழந்தமிழரின் பண்பாட்டு உண்மைகள்!
பழம்தமிழர் மரபாகட்டும், இந்திய பண்பாடாக இருக்கட்டும் அவை எல்லாமே காரண காரியத்தோடு உருவாக்கபட்டது தான்.
முடி வெட்டுவதில் இருந்து. மன்னர்கள் முடிசூடுவது வரை கடைப்பிடிக்கபடும்
சடங்குகளில் பல்வேறு வாழ்க்கை தத்துவங்கள் அடங்கி உள்ளன.

வாழ்க்கையை நெறிபடுத்தும் தத்துவ முறைகள் மட்டுமல்லாது உடலை வளப்படுத்தும் நல்ல காரியங்கள் கூட அதில் அடங்கி இருக்கும்.
தாம்பூலம் தரிப்பதில் கூட இப்படி ஒரு நல்ல விஷயம் அடங்கி இருக்கிறது.

வெள்ளைப் பூசணி

வெள்ளைப் பூசணி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் - இயற்கை மருத்துவம்
பூசணிக்காயில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் உடல் எடையை குறைக்க மிகவும் உதவும். புண்களை ஆற்ற, தழும்புகளை காணாமல் போகச் செய்யவும் பூசணிக்காய் பயன்படும். பூசணி அடிக்கடி உணவில் சேர்ப்பது நோய் எதிர்ப்பு சக்தியை தக்கவைக்கும். பூசணிக்காய் விரும்பி சாப்பிடுபவர்களுக்கு கண் பார்வை சிறப்பாக இருக்கும்.
உடற்பயிற்சி செய்துவிட்டு சாப்பிடும் உணவில் பூசணிக்காய் சேர்த்துக்கொள்வது எலெக்ட்ரோலைட் சமநிலைக்கு உதவும். காய்ச்சல் மற்றும் சளியை குணப்படுத்தவும் பூசணி மிகவும் ஏற்றது.

Saturday, August 19, 2017

ஒரு வரியில் இயற்கை மருத்துவம்

ஒரு வரியில் இயற்கை மருத்துவம் பற்றி தெரிந்து கொள்வோம்!!!
01. வரட்டு இருமலுக்கு சிறந்தது திராட்சை.!
02. முதுகுத்தண்டு வலிக்கு பாப்பாளிப்பழம் சாப்பிடு!
03. இரத்த அழுத்தம் குறைய எலுமிச்சை!
04. மூளைக்கு வலியூட்ட வல்லாரை!
05. காது மந்தம் போக்கும் தூதுவளை!

Friday, August 18, 2017

விளாம்பழம்

தெய்வத்தை மிஞ்சிய சக்தியும் இல்லை தெய்வகனி விளாம்பழத்திற்க்கு மிஞ்சிய மருந்தும் இல்லை 
விளாம்பழம் பல வியாதிகளை குணப்படுத்தும் சிறந்த பழமாகும். 
இதில் இரும்பு சத்தும், சுண்ணாம் புச்சத்தும், வைட்டமின் …ஏ சத்தும் உள்ளது. 

நரைமுடி, முடி உதிர்தல் , பாதிப்பில்லாமல் முடி அடர்த்தியாகவும் வளர.

தேவையானவை : 
சுத்தமான தேங்காய் எண்ணெய் – 2 கப் அளவு 
நெல்லிக்காய் பெரியது – 4 
மருதாணி இலை – கைப்பிடி 
அளவு கருவேப்பிலை- 1 கப் அளவு 
செம்பருத்தி இதழ்கள் – 2 பூக்கள் 
சீரகம் – 4 ஸ்பூன் கிராம்பு – 3

செய்முறை : 
முதலில் நெல்லிக்காயை கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். மருதாணி மற்றும் கருவேப்பிலையையும் நறுக்கிக் கொள்ளுங்கள்.
 செம்பருத்தி இதழை பிரித்து நன்றாக தண்ணீரில் அதன் மேலுள்ள மருந்துகள் போகும் வரை அலசிக் கொள்ளுங்கள்
சீரகம் கிராம்பையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
முதலில் எண்ணெயை சூடாக வேண்டும். அதில் நெல்லிக்காய், மருதாணி கருவேப்பிலை ஒன்றன்பினொன்றாக போடவும். அதன் நிறம் மாறி அடியில் தங்கும் வரை குறைந்த தீயில் கொதிக்க வையுங்கள்.

*மணத்தக்காளிக் கீரையின் மருத்துவப் பயன்கள்*

1. மணத்தக்காளிக் கீரையுடன் சிறிதளவு உப்பு சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டு வந்தால் நாள்பட்ட வாத நோய்கள் தீரும்.
2. கையளவு மணத்தக்காளிக் கீரையுடன் 4 சிட்டிகை மஞ்சளைபும் சேர்த்துக் கொதிக்கவைத்துச் சாப்பிட்டால், வாய்ப்புண், நாக்குப்புண் போன்றவை குணமாகும்.
3. மணத்தக்காளிக் கீரையில் இருந்து சாறு எடுத்து, அதைத் தேனோடு சேர்த்து சர்பத் (syrup) போல் காய்ச்சி, தினமும் சாப்பிட்டு வந்தால் இளைத்த உடல் பருக்கும்.

Monday, August 14, 2017

கொத்து கொத்தா முடி கொட்டுதா?

முடி கொட்டுவதும் நரை முடி உண்டாவதும் இன்றைய காலக்கட்டத்தில் சிறு குழந்தைகளுக்கும் சகஜமாக போய் விட்டது. இதனை தடுப்பதற்கான எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் வந்த பின் புலம்புவதுதான் நம்மில் பாதி பேர்.
நரை முடியாகட்டும், முடி உதிர்தல் ஆகட்டும் வந்த பின் பழையபடி கொண்டு வருவது அத்தனை எளிதல்ல. இதற்கு மாதங்கள் சிறிது எடுத்தாலும், சிரத்தையாக இங்கு சொல்லப்பட்டுள்ள குறிப்புகளை செய்தால் நல்ல பலனை தரும். நீங்கள் முயற்சித்துப் பாருங்கள்.

Wednesday, August 2, 2017

பழங்களின் பயன்கள்

1.மாதுளை பழம்- வாரம் 1 சாப்பிட்டு வர, கருப்பைக் குற்றம் வராது காக்கும். வயிற்றுக் கோளாறு வராது.
2.நாரத்தம் பழம்- நாரத்தம் பழம் சிறிது சாப்பிட்டுவர வாய்வுக் கோளாறு நீங்கி வயிற்று உப்புசம் விலகும்.
3.முந்திரிப் பழம்- கொடி முந்திரிப் பழம் சாப்பிட்டு வர, கண் பார்வைத் துலங்கும்.
4. கண்டங் கத்திரிப்பழம்- கண்டங்கத்திரிப் பழம் 1 பிடி எடுத்து 2 குவளை நீரில் கொதிக்க வைத்துக் குழம்பு வைத்துக் குழம்புப் பதத்தில் தேங்காய் எண்ணை கலந்து பதத்தில் இறக்கி ஆறவைத்து வெண்புள்ளி மீது தேய்த்துவர அவை மறையும்.
5.தூதுளம் பழம் - தூதுளம் பழத்தை அப்படியே 4 அல்லது 5 தினம் சாப்பிடக் காச நோய் தணியும். கபம் விலகும்.

Saturday, July 29, 2017

சிறுநீரகம் பழுது நீங்கி குணமடைய - காலாநமக் அரிசி


சிறுநீரகம் பழுது நீங்கி குணமடைய சிறந்த தீர்வு .
காலாநமக் அரிசி
காலாநமக் அரிசியை மதிய வேளையில் ஊற வைத்து மூன்று மடங்கு தண்ணீர் விட்டு நன்றாக சாதம் குழையும்படி வேக வைத்து மண் பானையில் வைத்து விடவும் . காலையில் தயிர் இந்துப்பு கலந்து சாப்பிட சிறுநீரகம் முழு குணமடையும் . காலாநமக் அரிசியை மிக்சியில் போட்டு பாதியாக உடைத்து பயன்படுத்தினால் அரிசி சுலபமாக வெந்துவிடும். createnine அளவு சரிசெய்ய இது பெரிதும் உதவுகிறது . 

நன்றி : ராஜேந்திரன் குமரேசன் 

சிறுநீரகக் கல் - இஞ்சி & நெல்லிக்காய் ஜூஸ்

தேவையான பொருட்கள் :

பெரிய நெல்லிக்காய் - 2 
இஞ்சி - சிறிய துண்டு
சர்க்கரை - 2 டீஸ்பூன்

Wednesday, July 12, 2017

ஆரஞ்சு பழம்

ஆரஞ்சு பழம் 
******************
orange-king-of-fruits உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களையும் தரும் பழச்சாறுகளில் ஆரஞ்சும் ஒன்று. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை புத்துணர்வுடன் இருக்கச் செய்கிறது. இதனால் உடலில் அணுக்கள் நன்கு செயல்பட ஆரம்பிக்கும். உடலும் முதுமை அடையாமல் இளமைத் தோற்றத்துடன் காட்சியளிக்கும்.
ஆரஞ்சு பழத்திலுள்ள மிக முக்கிய வைட்டமின் – வைட்டமின் சி. இது மனித உடலில் வளர்ச்சி உண்டாக்கக்கூடிய சத்து கிடைக்கச் செய்கிறது. இந்த சத்து வளரக்கூடிய எலும்புகள் தசை நார்கள், ரத்தக் குழாயின் உட்புறச் சுவர் இவற்றின் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி தவிர மிக முக்கியமாக கருதப்படுவது ஆன்டி ஆக்சிடென்ட் எனப்படும் சத்தாகும். இது புற்றுநோயைத் தடுக்கக்கூடிய மிக முக்கிய காரணியாகும். மேலும் ரத்தத்தில் கொலஸ்ட்ராலைக் குறைக்கக்கூடிய மிக முக்கிய பொருள் ஆரஞ்சில் உள்ளது என்பதை ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர். ஆரஞ்சு பழத்திற்கு உரிய நிறத்தைக் கொடுக்கக்கூடிய பொருள் இது நுரையீரல் புற்றுநோயைத் தடுக்க வல்லது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

Monday, July 10, 2017

ஆவாரம் பூவில் அடங்கியுள்ள மருத்துவ குணங்கள்

ஆவாரம் பூ 100 கிராம், வெந்தயம் 100 கிராம், பயத்தம்பருப்பு அரை கிலோ ஆகியவற்றை கலந்து மெஷினில் அரைத்துக் கொள்ளுங்கள். இந்தப் பவுடரை வெந்நீரில் கரைத்து வாரம் இருமுறை தலைக்கு அலசி வர, கருகருவென கூந்தலை பெறலாம். ஆவாரம்பூவின் பட்டை, வேர், இலை என அத்தனையும் நோய் எதிர்ப்பு சக்தியை தந்து ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
வெயிலில் வெளியே செல்லும்போது ஆவாரம் இலையை தலையில் வைத்து கட்டி சென்றால் உஷ்ணம் தாக்காது. கொத்துக் கொத்தாக முடி கொட்டுவதை தடுக்கும் ஆவாரம் பூ.
ஃப்ரெஷ் ஆவாரம் பூ, செம்பருத்தி பூ, தேங்காய் பால் தலா ஒரு கப் எடுத்துக் கொண்டு, வாரம் ஒரு தடவை அரைத்துத் தலைக்குக் குளியுங்கள். உடல் குளிர்ச்சியாகி, முடி கொட்டுவது உடனடியாக நின்று கூந்தலும் வளரத் தொடங்கும்.

முதுகெலும்பும் முதுகும் நலமாக இருக்க 10 யோசனைகள்

1. தினம் இருபத்தோரு முறையாவது குனிந்து காலைத்தொட்டு நிமிருங்கள். (தோப்புக்கரணம் போடுவதும் மிகச் சிறந்தது)
2.தினம் இருபத்தோரு நிமிடங்கள் வேகமாக நடங்கள்*.
3. அமரும்போது வளையாதீர்கள்*.
4. ஒரு மணி நேரத்திற்கும் மேல் தொடர்ந்து உட்காராதீர்கள்.
5. நிற்கும் போது நிமிர்ந்து நில்லுங்கள்.

Sunday, July 9, 2017

*தேனை எதனுடன் சேர்த்தால் என்ன பலன் கிடைக்கும்?*

*தேனை எதனுடன் சேர்த்தால் என்ன பலன் கிடைக்கும்?*
👉பாலில் தேன் கலந்து இரவில் சாப்பிடநல்ல தூக்கம் வரும், இதயம் பலம் பெறும்
👉பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல சக்தி உண்டாகும்.
👉மாதுளம் பழச்சாறுடன் தேன்கலந்து சாப்பிட்டால் புது ரத்தம் உண்டாகும்.
👉எலுமிச்சை பழச்சாறுடன் தேன்கலந்து சாப்பிட்டால் இருமல் குணமாகும்.

Wednesday, July 5, 2017

இரவில் ஏற்படும் மூக்கடைப்பு

இரவில் படுக்கும் போது மூக்கடைப்பு ஏற்பட்டால், அதனால் நிம்மதியான தூக்கத்தை மேற்கொள்ள முடியாது. அதுமட்டுமின்றி, கடுமையான காது வலியையும் ஏற்படுத்தும். ஆகவே மூக்கடைப்பு ஏற்படும் போது உடனே அதற்கு சிகிச்சை எடுக்க வேண்டும்.
அதிலும் நம் வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே சிகிச்சை அளிக்கலாம். சரி, இப்போது மூக்கடைப்பில் இருந்து விடுபடுவதற்கான சில எளிய இயற்கை வைத்தியங்களைப் பற்றி பார்ப்போம்.

இயற்கை மருத்துவம்

1) ஒரு தேக்கரண்டி பெருங்காயத்தை பொரித்து இடித்து தூள் செய்து ஒரு கப் மோரில் கலந்து சாப்பிட்டு வர வயிற்று வலி குணமாகும்.
2) தினமும் மணத்தக்காளி கீரையை துவையல் செய்து மதிய உணவுடன் உண்டு வர குடல் புண் குணமாகும்.
3) கிஸ்மிஸ் பழம், கொத்தமல்லி இலையை தண்ணீரில் சுட வைத்து காலையில் அரைத்து வடி கட்டி குடித்தால் மார்பு படபடப்பு குணமாகும்.

மிளகுத்தூளின் ஆரோக்கிய நன்மைகள்

நமது முன்னோர்கள் மிளகாய் என்பது யாதென அறியாதவர்கள். ஏனெனில், அவர்கள் சமையல், மருத்துவம் என அனைத்திலும் மிளகை சேர்த்து நன்மை அடைந்து வந்தார்கள். மிளகு ஓர் சிறந்த மூலிகை மருந்து என இப்போது தான் மேல்நாட்டு ஆய்வாளர்களும், மருத்துவர்களும் அறிந்து வருகிறார்கள்.
செரிமானம், தும்மல், சளி, கபம், பொடுகு, பல்வலி என உடல் முழுவதிலும் ஏற்படும் பலவகையான உடல்நல பிரச்சனைக்கு தீர்வளிக்கக் கூடியது மிளகுத்தூள்......

உணவுப்பாதை சில உண்மைகள்

உங்களது அதிக அளவான நோய் எதிர்ப்பு சக்தி உங்களின் உணவுப் பாதையில் உள்ளது. உங்கள் செரிமான ஆரோக்கியமும், நோய் எதிர்ப்பு சக்தியும் தொடர்பு உடையது.
உணவை நன்கு மென்று விழுங்குங்கள். ‘நொறுங்க தின்றால் நூறு வயது என்று சும்மாவா சொன்னார்கள். எல்லாம் தெரியும். ஆனால் இன்று வரை செய்யவில்லை என்கின்றீர்களா! பரவாயில்லை. இப்பொழுதே ஆரம்பித்து விடுங்கள். நன்கு மென்று விழுங்க நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். இவ்வாறு செய்வது ஜீரணத்திற்கு உதவுவதோடு மட்டும் இல்லாமல் உடலை ஒல்லியாக வைத்துக் கொள்ளவும் உதவும். நன்கு உணவை மெல்லுவது வயிற்றில் உணவினை அமிலத்தோடு கலந்து கலோரிகளை எரிக்க உதவும்.

நலமோடு வாழ நோய்கள் தீர்க்கும் காய்கள், கனிகள்!

பலாப்பழம்
சத்துக்கள்: சர்க்கரையின் அளவு அதிகம். ஓரளவு நார்ச் சத்தும், குறைந்த அளவில் புரதம், இரும்பு, கால்சியமும் இருக்கின்றன. 
பலன்கள்: மலச்சிக்கலைப் போக்கி, உடலுக்கு நல்ல தெம்பைக்கொடுக்கும். மாவுச் சத்து உடலுக்குத் தேவை என்பவர்கள், தினமும் மூன்று சுளைகள் சாப்பிடலாம். சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டும்.

பாலில் பூண்டை வேகவைத்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

பூண்டு பால் தாயாரிக்க, ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி அதில் பூண்டைத் தட்டிப் போட்டு நன்கு வேக வைக்க வேண்டும். பூண்டு நன்கு வெந்ததும் பனங்கற்கண்டு, மிளகுத்தூள், மஞ்சள்தூள் ஆகியவை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கி, பூண்டை நன்கு மசித்தால் பூண்டு பால் தயார்.
பூண்டு பாலை குடிப்பதால் சளி மற்றும் காய்ச்சல் பிரச்சனையில் இருந்து உடனடியாக விடுபடலாம். முகப்பரு பிரச்சனைகள் வராமல் தடுக்க, பூண்டு கலந்த பாலை முகத்தில் தடவி, கழுவ வேண்டும். அல்லது அந்த பாலை குடித்து வரலாம்.
பாலில் பூண்டு கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்:

Wednesday, June 28, 2017

சிறுநீர் கோளாறுகளுக்கு தீர்வு காண

மலம் கழிப்பதில் நமது முன்னோர்கள் சிரமம் கண்டதில்லை, அவர்கள் சிறுநீர் கழிக்கும் பிரச்சனைகள் என ஒன்றை அறிந்ததே இல்லை. ஆனால், நாம் அப்படியா... காலை கடன் கழிப்பதே பெரும் போராட்டம் தான் பலருக்கு.
இதோ! நன்னாரி வேர், கறிவேப்பிலை கொண்டு தயாரிக்கப்படும் இந்த ஆயுர்வேத மருந்து எல்லா விதமான சிறுநீர் கோளாறுகளையும் சரி செய்யும்...
தேவையான பொருட்கள்!
நன்னாரி வேர்,
கறிவேப்பிலை,
சின்ன வெங்காயம்,
வெந்தயம்,
மிளகு சோம்பு மற்றும்
சீரகம்

Monday, June 26, 2017

இயற்கை மருத்துவம்

தேள் கொட்டினால்: எலுமிச்சைப் பழ விதைகளையும், உப்பையும் கலந்து அரைத்துக் குடித்து விட்டால் தேள் கடி நஞ்சு இறங்கி விடும்
கல்லில் சில சொட்டுத் தண்ணீரை தெளித்து அதில் புளியங்கொட்டையைச் சூடு உண்டாகும் படி தேய்த்து, தேள் கடித்த இடத்தில் உடனே வைத்தால் ஒட்டிக் கொள்ளும். நஞ்சு இறங்கியதும் புளியங்கொட்டை விழுந்து விடும்.
சிறிது நாட்டு வெல்லத் தூளுடன் கொஞ்சம் சுண்ணாம்புச் சேர்த்துச் சிறிதளவு புகையிலையையும் கலந்து நன்றாகப் பிசைந்து தேள் கடித்த இடத்தில் வைத்துக் கட்டினால் நஞ்சு இறங்கி விடும்.

Sunday, June 25, 2017

வசம்பு

வசம்பு வெப்பத்தை உண்டாக்கி பசியைத் தூண்டி வயிற்றிலே இருக்கின்ற வாயுவை அகற்றக்கூடிய தன்மை உடையது.
வாய் குமட்டலையும், வாந்தியையும் உண்டாக்க வசம்பை நன்கு பொடி செய்து ஒரு கிராம் அளவு உட்கொள்ள வேண்டும்.
வசம்பை வறுத்துப் பொடித்துக் கால் கிராம் தேனில் கொடுத்து வர சளி, வாயு ஆகியவற்றூ அகற்றுப் பசியை மிகுக்கும்.
வசம்பைச் சுட்டுச் சாம்பலாக்கி தேனில் குழைத்து நாவில் தடவ வாந்தி, ஒக்காளம் தீரும்.

இயற்கை மருத்துவம்

1. ஒரு 30 வினாடிகள்...    இரு காது துவாரங்களையும் விரல்களால் அடைத்துக்கொள்ளுங்கள்...
நின்று போகும் தீராத விக்கல்!
2. ஒரே ஒரு சிறு கரண்டி அளவுக்கு சர்க்கரையைவாயில் போட்டு சுவையுங்கள்.. பறந்து போகும் விக்கல்!
3. கொட்டாவியை நிறுத்த...   கொட்டாவி வருவதற்கான காரணம்: Oxygen பற்றாக்குறை தான்..
அதனால்...    ஒரு நான்கு அல்லது ஐந்து தடவை, நன்கு மூச்சை இழுத்து விடுங்கள்...
கொட்டாவி போய், நன்கு சுறுசுறுப்பாகி விடுவீர்கள்!
5. உடல் துர் நாற்றத்தைப்போக்க...   குளிக்கும் போது நீங்கள் குளிக்கும் தண்ணீரில் ஒரே ஒரு தக்காளிப் பழத்தின் சாற்றினை கலந்து பிறகு குளிக்கவும்... அவ்வளவு தான்...   நாள் முழுக்க புத்துணர்வுடன் திகழ்வீர்கள்!
6. வாய் துர்நாற்றத்தால் சங்கடமா? எலுமிச்சை சாற்றில் சிறிது உப்பு சேர்த்து குடித்து வந்தாலும்,
வாயைக் கொப்பளித்து வந்தாலும் வாய் துர்நாற்றம் நீங்கும்.

Saturday, June 24, 2017

இயற்கை மருத்துவம் :-


1) என்றும் 16 வயது வாழ ஓர் 🍈 ""நெல்லிக்கனி.""
2) இதயத்தை வலுப்படுத்த🌺 ""செம்பருத்திப் பூ"".
3) மூட்டு வலியை போக்கும் 🌿 ""முடக்கத்தான் கீரை.""
4) இருமல், மூக்கடைப்பு குணமாக்கும் 🍃""கற்பூரவல்லி"" (ஓமவல்லி).
5) நீரழிவு நோய் குணமாக்கும் 🌿""அரைக்கீரை.""
6) வாய்ப்புண், குடல்புண்களை குணமாக்கும் 🌿""மணத்தக்காளிகீரை"".
7) உடலை பொன்னிறமாக மாற்றும் 🍂""பொன்னாங்கண்ணி கீரை.""
8) மாரடைப்பு நீங்கும் 🍊""மாதுளம் பழம்.""
9) ரத்தத்தை சுத்தமாகும் 🌱""அருகம்புல்.""
10) கான்சர் நோயை குணமாக்கும் 🍈"" சீதா பழம்.""

உணவுப்பொருட்கள் கெட்டுப்போகாமல் இருக்க டிப்ஸ்!...

* பப்பாளிப் பழத்தின் காம்பு, தரையை நோக்கி இருக்குமாறு வைத்தால், பழம் விரைவில் அழுகாது.
* புளியை அப்படியே ஜாடியில் கொட்டி வைத்தால் சீக்கிரம் பிசுபிசுத்துவிடும். அதனால் கொஞ்சம் புளி அதன் மேல் சிறிது அளவு உப்பைத் தூவ வேண்டும். பின்னர் கொஞ்சம் புளி... கொஞ்சம் உப்பு எனச் சேமித்தால், புளியில் பூச்சி, புழு வராமல் தடுக்கலாம். புளியின் இயல்பும் கெட்டுப்போகாமல் இருக்கும்.
* தேங்காயை அதன் கண் பகுதி மேல் நோக்கியவாறு வைத்தால், சீக்கிரம் அழுகாது.

Tuesday, June 6, 2017

முடவாட்டுக்கால் கிழங்கு

மூட்டு வலிக்கு சிறந்த தீர்வு ,
சிறு குழந்தைகளாக இருக்கும்பொழுது நாம் மேற்கொள்ளும் பயிற்சிகளும் உட்கொள்ளும் ஊட்டச்சத்தான உணவுகளுமே, பிற்காலத்தில் நமது உடல் வலுவாக மாறுவதற்கு காரணமாக அமைகின்றன. கலை விளையாட்டாகவும், வீர விளையாட்டாகவும் நாம் பின்பற்றி வந்த பலவிதமான விளையாட்டுகள், நமது முழங்கால் மூட்டுகளுக்கும், குதிகாலுக்கும் வலுவை தருவதாகவே இருக்கின்றன.

Sunday, June 4, 2017

அல்சரை குணப்படுத்தும் அற்புத வீட்டு வைத்தியங்கள்

அல்சரை உண்டாக்குவதில் ஹெலிகோபேக்டர் பைலோரி என்ற கிருமி முக்கியப் பங்கு வகிக்கிறது. தவிர, காரம், மசாலா நிறைந்த உணவுகளாலும் மதுபானம் அருந்துதல், புகையிலைப் பழக்கம், புகைப்பிடித்தல் மற்றும் கணையத்தில் ஏற்படும் கட்டியினாலும், மருத்துவக் கதிரியக்கத்திற்கு உட்படுத்துவதாலும், மனக்கவலை மற்றும் பரபரப்பினாலும் வயிற்றுப் புண் ஏற்படுகிறது. அதற்கான தீர்வுகள் சித்த மருத்துவத்தில் நிறைய குறிப்பிடப்பட்டுள்ளன. 

சர்க்கரை நோயாளிகளுக்கான சிறந்த ஆவாரம் பூ டீ

ஆவாரம்பூவில் இன்சுலின் சுரப்பைத் தூண்டும் இன்சுலின் பூஸ்டர்கள் நிறைந்துள்ளன. சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது. இந்த டீ செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
ஆவாரம் பூ, இலை, பட்டை, வேர், விதை ஐந்தும் சேர்த்துச் செய்த பொடி - 2 டீஸ்பூன்
அல்லது காய்ந்த ஆவாரம் பூ - 10 - 15, 

பசியின்மையை போக்கும் பிரண்டை

பசியின்மையை போக்க கூடியதும், எலும்புக்கு வலு சேர்க்கும் தன்மை கொண்டதும், எதிர்ப்பு சக்தி உடையதுமான பிரண்டையின் சிறப்பை பற்றி இன்று நாம் பார்ப்போம்: பிரண்டை எலும்பை ஒட்டக்கூடிய தன்மை கொண்டது. எலும்பை பலப்படுத்தும் பிரண்டை ரத்த ஓட்டத்தை சீர்படுத்தி உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க கூடியது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. காடு, மலை, சாலை ஓரங்களில் இந்த பிரண்டை கிடைக்கும். அழகுக்காகவும் இது வளர்க்கப்படுகிறது.

தொடர் தும்மல் நீங்க

* பப்ளிமாசு பழங்களை எடுத்து நறுக்கி அதனுடன் எலுமிச்சை பழச்சாறு சேர்த்து நன்றாக காய்ச்சி சிறிது தேன் கலந்து காலை, மாலை குடித்து வந்தால் தும்மல் குறையும்.
* ஒரு கைப்பிடி அளவு ரோஜா இதழ்களை எடுத்து அரை டம்ளர் தண்ணீர் விட்டுச் சுண்டக் காய்ச்சி அந்தத் தண்ணீரை வடிகட்டி, அதனுடன் ஒரு தேக்கரண்டி அளவு சீரகத்தை அரைத்து போட்டு அந்த நீரை ஒரு சுத்தமான துணியில் நனைத்து முகர்ந்து கொண்டு இருந்தால் அடிக்கடி வரும் தும்மல் குறையும்.
* பரட்டைக் கீரை சாறில் திப்பிலியை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி, தேனில் நான்கு சிட்டிகை அளவு குழைத்துச் சாப்பிட்டால் தும்மல் குறையும்.

தெரிந்துகொள்வோம்


  • ஒரு கப் தயிரை தவறாமல் சாப்பிட்டு வந்தால் அல்சர் வரவே வராது.......!
  • தினமும் ஒரு ஏலக்காயை தேனோடு உண்பது கண் பார்வைக்கும், நரம்பு மண்டலத்திற்கும்மிகவும் நல்லது.......!
  • தினமும் இரண்டு அல்லது மூன்று ஓமம் சாப்பிட்டால் ஒரு மனிதனுக்கு தேவையான இரும்புச் சத்தில் பத்து சதவீதம் கிடைக்கிறது.......!
  • குழந்தைகளுக்கு முகத்தில் பாலுண்ணி தோன்றியதும், வெங்காயத்தை வெட்டி அதன் மேல் தேய்த்துவிட்டால் இரண்டு மூன்று தினங்களில் உதிர்ந்து விடும்.......!
  • மஞ்சள், பூண்டு இவை இரண்டையும் பால் விட்டு அரைத்து தலைக்கு பற்றுப் போட்டால், தலைவலி நீங்கும்.......!
நன்றி : தயாளன் 

Saturday, June 3, 2017

சீரகம்

தினமும் 1 டீஸ்பூன் சீரகம் சாப்பிட்டா  15 கிலோ வரை குறைக்க முடியும்…!!!

அன்றாட உணவில் சேர்த்து வரும் வாசனை மிகுந்த மசாலா பொருளான சீரகம் உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் என்பது தெரியுமா? அதிலும் தினமும் சீரகத்தை தொடர்ந்து எடுத்து வந்தால், 20 நாட்களில் நல்ல மாற்றத்தைக் காணலாம். சீரகம் உடல் எடையைக் குறைக்க உதவுமா என்பது குறித்து சமீபத்தில் ஆய்வு ஒன்று நடைபெற்றது.

இயற்கை மருத்துவம்

1. ஒரு 30 வினாடிகள் இரு காது துவாரங்களையும் விரல்களால் அடைத்துக்கொள்ளுங்கள்...
நின்று போகும் தீராத விக்கல்!
2. ஒரே ஒரு சிறு கரண்டி அளவுக்கு சர்க்கரையைவாயில் போட்டு சுவையுங்கள்.. பறந்து போகும் விக்கல்!
3. கொட்டாவியை நிறுத்த... கொட்டாவி வருவதற்கான காரணம் Oxygen பற்றாக்குறை தான் அதனால் ஒரு நான்கு அல்லது ஐந்து தடவை, நன்கு மூச்சை இழுத்து விடுங்கள் கொட்டாவி போய், நன்கு சுறுசுறுப்பாகி விடுவீர்கள்!