Saturday, December 31, 2016

குடி தண்ணீரை RO பில்டர் செய்யக் கூடாது. ஏன்???.

நல்ல குடி நீர் என்பதற்கும், சுத்தமான குடி நீர் என்பதற்கும் உள்ள வித்தியாசத்தை நாம் உணர வேண்டும்..
நம் வீடுகளில் ஆர்.ஓ.சிஸ்டம் எனும் தண்ணீரைச் சுத்தம் செய்வதற்கு சாதனங்களை வைத்திருக்கிறோம்.
இந்த R.O சாதனத்தில் மூன்று மாதத்திற்குப் பிறகு அந்த பில்டரை வெளியில் எடுத்துப் பார்த்தால் வெள்ளையாக இருந்த வாட்டர் பில்டர் ஒரு மஞ்சள் நிறம் அல்லது பச்சை நிறத்தில் தூசுகளோடு இருக்கும்.

மூல நோய் நீங்கிட...துத்தி இலை

மூலநோய் அறுவை சிகிச்சைக்கு பின்பும் மீண்டும் வர வாய்ப்பு உண்டு.
எந்த வகை மூலநோயாக இருந்தாலும் ...
எங்கும் சாதாரணமாக காணப்படக்கூடிய துத்தி இலைகளை நன்கு அலசி எடுத்து துவரம்பருப்பு சேர்த்து வேகவைத்து கீரை சைமைப்பதுபோல் செய்து தினசரி மதியம் சாப்பாட்டுடன் சாப்பிட்ட வேண்டும்.
காலை ,மாலை துத்திஇலையை அரைத்து ஒரு நெல்லி காய் அளவு சாப்பிட்டு விட்டு மோர் குடிக்க வேண்டும்.
துத்தி இலையை ஆமணக்கு எண்ணையில் வதக்கி அதை சூடு ஆறினதும் ஆசனவாயில் வைத்து கட்டி அதன் மேல் இன்னொரு துணியை லங்கோடு கட்டிக்கொண்டு இரவு உறங்கவும்.
காரமான உணவு தவிர்க்கவும்.
வாரம் ஒருமுறை ஆயில் பாத் செய்யவும்.
மேற்கண்டவாறு தொடர்ந்து 40 நாட்கள் செய்துவர மூலநோய் குணமாகும்.

Friday, December 30, 2016

துத்திக்கீரை

கீரைகளின் பயன்களை அனைத்து மக்களும் உணரத் தொடங்கிவிட்டனர். காலை நேரங்களில் கீரைக் கட்டுகளை மக்கள் வாங்கிச் செல்வதை நாம் காண்கிறோம்.

குறைந்த விலையில் கிடைக்கிறது என்பதால் இதன் மகிமையை சில காலம் மறந்து நோய்களின் உறைவிடமாக தங்கள் உடம்பை ஆக்கிக் கொண்டு விட்டனர் பலர்.

ஆரோக்கியத்தை அள்ளித்தரும் குணம் கீரைகளுக்கு அதிகம் உண்டு என்பதை விளக்கும் வகையில் ஒவ்வொரு மாதமும் மூலிகை சமையல் என்னும் தலைப்பில் ஒவ்வொரு கீரையைப் பற்றி அறிந்து வருகிறோம்.

இந்த இதழில் கிராமங்களில் அதிகம் கிடைக்கும் துத்திக்கீரையைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

துத்திக் கீரை


சுமையான இலைகளை உடைய துத்திக் கீரை பருத்தி இனத்தைச் சார்ந்த ஒரு கீரை வகையாகும். மஞ்சள் நிறத்தில் அழகாக பூக்கும் இதன் இலை, பூ, காய், விதை, வேர் அனைத்தும் மருத்துவக் குணம் நிறைந்தவை. துத்தியின் இலைகள் இதய வடிவில் இருக்கும். புதர்களாக சாலை ஓரங்களில் வளரும்.

மூலநோய் கட்டி முளை புழுப்புண்ணும் போகுஞ் 
சாலவதக் கிக்கட்ட தையலே-மேலும் அதை
எப்படியேனும் புசிக்க எப்பிணியுஞ் சாந்தமுறும்
இப்படியீற் றுத்தியிலை யை

தினம் 3 உலர்ந்த அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

உலர்ந்த அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருக்கிறது. அதிலும் 3 துண்டு உலர்ந்த அத்திப்பழத்தில் ஒரு நாளைக்கு உடலுக்கு வேண்டிய 5 கிராம் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இதனால் மலச்சிக்கல் மற்றும் இதர செரிமான பிரச்சனைகள் நீங்கி, குடலியக்கம் சீராக நடைபெறும்.

உலர்ந்த அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதோடு, கலோரிகள் மிகவும் குறைவாக உள்ளது. ஒரு துண்டு உலர்ந்த அத்திப்பழத்தில் 47 கலோரிகள் உள்ளது. இதனால் 0.2 கிராம் கொழுப்பைத் தான் இதில் இருந்து பெற முடியும். எனவே உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு, இது மிகவும் சிறப்பான ஸ்நாக்ஸ்.

Thursday, December 29, 2016

பளபள கூந்தலுக்கு....

எல்லா பெண்களும் அடிக்கடி முடி உதிராத, நீண்ட, பளபளப்பான, பொடுகு இல்லாத கூந்தல் வேண்டும் என்ற ஆசை நிச்சயம் இருக்கும். நீங்களும் கூந்தல் அழகியாக சில டிப்ஸ்:
ஒரு கையளவு வேப்பிலை எடுத்து 4 கப் தண்ணீரில் நன்கு கொதிக்கவிடுங்கள். ஆறியதும் அந்த தண்ணீரால் தலையை அலசி வந்தால் பொடுகு வராமல் தடுக்கலாம். வினிகரை தலையில் தடவி குளித்து வந்தாலும் பொடுகு தொல்லை குறையும்.
வெந்தயம், வேப்பிலை, கறிவேப்பிலை, பாசிபருப்பு, ஆவாராம் பூ ஆகியவற்றை வெயிலில் காய வைத்து மெஷினில் நன்கு பொடித்துக் கொள்ளுங்கள். இந்த பொடியை ஷாம்புக்கு பதிலாக வாரம் இருமுறை கூந்தலில் தேய்த்து அலசி குளியுங்கள். உங்கள் கூந்தல் பளப்பளக்க தொடக்கிவிடும்.

வறுத்த பூண்டுகளை சாப்பிட்ட ஒரே நாளில் உடலில் ஏற்படும் நன்மைகள்!

சுவையிலும் சரி, ஆரோக்கியத்திலும் சரி, பூண்டு ஒரு பிரமாதமான உணவுப்பொருள். பலர் அதனை உணவில் சேர்த்துச் சமைக்கிறார்கள், சிலர் அப்படியே  பச்சையாகச் சாப்பிட்டு விடுகிறார்கள்.
பூண்டைச் சாப்பிடுவதன்மூலம் ஒருவருடைய ரத்த அழுத்தப் பிரச்னைகள், கொலஸ்ட்ரால் கோளாறுகள் போன்றவை சரியாகும், இரத்த நாளங்கள் லகுவாகும், இதன்மூலம் இதயம் சார்ந்த பிரச்னைகளைத் தூரத் துரத்திவிடலாம்.
அதேபோல், பூண்டுகள் நம் உடலில் கெட்ட கொழுப்பு அதிகம் சேராமல் பார்த்துக்கொள்கின்றன, ஆன்ஜியோடென்சின் II ஹார்மோனைத் தடுக்கின்றன.

எப்படியெல்லாம் அரிசி கழுவிய தண்ணீரைப் பயன்படுத்த முடியும்?

·         அரிசி கழுவிய தண்ணீரை  வீணாக்காமல் சருமத்தை அழகு படுத்தப் பயன்படுத்தலாம்.
·         அரிசி கழுவிய தண்ணீர் கொண்டு முடியை அலசினால் முடி உதிர்வது தடுக்கப்படுகிறது.
· அரிசி கழுவிய தண்ணீரை கொண்டு சுண்டைக்காய் கார குழம்பு, பாகற்காய் போன்றவற்றைச் சமைக்கும் போது பயன்படுத்தலாம். குறிப்பாக, துவர்ப்புச் சுவையுடைய காய்கறிகளைச் சமைக்கும் போது, இந்த தண்ணீரைப் பயன்படுத்தினால்,துவர்ப்பு குறையும். சமையலில் இந்த தண்ணீரைப் பயன்படுத்துவதால் உணவின் சுவை கூடும்.

Wednesday, December 28, 2016

வழுக்கையில் முடி வளர


அளவுக்கு அதிகமாக முடி உதிர்தல்தான் சொட்டைக்கு அடித்தளம். ஆரம்பத்திலேயே போதிய பராமரிப்பு கொடுத்தால் இதனை தடுக்க சொட்டையை முழுவதும் தடுக்க முடியும். அப்படியே முடி ஆங்காங்கே கொத்து வந்தால் உங்களுக்கு சொட்டை விழுவதற்கான அறிகுறி.

ஆகவே உடனடியாக அதனை கவனிக்க வேண்டும். இங்கே சொல்லப்பட்டிருக்கும் குறிப்புகளை பயன்படுத்திப் பாருங்கள். சொட்டையிலும் முடி வளரும் சித்த வைத்தியங்கள் இவை.

செம்பு பாத்திரத்தில் தண்ணீர் வைத்துக் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா!

ம்மிள் பெரும்பாலானோரும் தண்ணீர் குடிக்க பிளாஸ்டிக் பாட்டில்களையே பயன்படுத்திவரும் சூழலில்....செம்பு ஃப்ளாஸ்கில் தண்ணீர் ஊற்றிவைத்துக் குடிப்போர்களின் எண்ணிக்கையும் பரவலாக அதிகரித்துக்கொண்டே வருகிறது. பொதுவாக மற்ற பாத்திரங்களை விடவும் செம்பு பாத்திரங்கள் பயன்படுத்துவதே சிறந்தது என பலராலும் சொல்லப்படும் நிலையில், செம்பு பாத்திரங்கள் பயன்படுத்துவதைக் குறித்து விளக்கம் அளிக்கிறார், சித்த மருத்துவர் காசி பிச்சை.

மணத்தக்காளி கீரை

வாய்ப் புண் உள்ளவர்களுக்கு வயிற்றிலும் புண் இருக்கும். இந்த பிரச்சனைக்கு நல்ல மருந்து மணத்தக்காளி கீரை. இக்கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வர வாய்ப் புண்ணும், வயிற்றுப் புண்ணும் குணமாகும். 100 கிராம் கீரையில் ஈரப்பதம் 82.1%, புரதம் 5.9%, கொழுப்பு 1%, தாது உப்புகள் 2.1%, மாவுச்சத்து 8.9% உள்ளன.
நோயைக் குணமாக்கி உடலின் கட்டுமானப் பகுதியைப் பார்த்துக் கொள்ள 410 மில்லி கிராம் கால்சியமும், மூளை வளர்ச்சி, மனத்திற்கு சுறுசுறுப்பு ஆகிய அளிக்க 70 மில்லி கிராம் எரியம் (Phosphorus), நோய் எதிர்ப்புச் சக்தி அளிக்கும் 11 மில்லி கிராம் வைட்டமின் ‘சி’யும் இக்கீரையில் உள்ளன. மூலநோய்க்கும் குடல் பிரச்னைக்கும் இந்த கீரை நல்ல மருந்து.

ஊட்டச்சத்தை கிரகிக்க உதவும் நெல்லி

துவர்ப்புச் சுவை மிகுந்தது பெருநெல்லிக் காய். மற்ற காய்களை விடவும் சிறிதாக இருந்தாலும் இந்தக் காய் சத்து நிறைந்தது. விலை மலிவாகவும் கிடைக்கும் இதை நாம் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை.
பெருநெல்லிக் காய் தரும் பலன்கள் என்ன?
> பெருநெல்லிக்காயை ஊறுகாயாகவோ, உப்பு வைத்தோ சாப்பிடுவதைக் காட்டிலும், தனியாகச் சாப்பிடுவதே சிறந்தது. தனியாகச் சாப்பிட விரும்பாத பட்சத்தில் சாலட், சட்னி போன்றவற்றில் கலந்து சாப்பிடலாம்.
> பெருநெல்லிக்காய் வைட்டமின் சி சத்து நிறைந்து காணப்படுகிறது.
> உணவு செரிமானம் அடையப் பெருநெல்லிக்காய் உதவுகிறது. ஊட்டச்சத்துகளை உட்கிரகிக்கவும், உடல் அவற்றைத் தன்வயமாக்கிக்கொள்ளவும் நெல்லிக்காய் பெரிதும் உதவுகிறது.
> நெல்லிக்காயைத் தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் உடலில் உள்ள நச்சுகள், சிறுநீர் வழியாக வெளியேற உதவுகிறது.
> மாதவிடாய் தசைப்பிடிப்பு, வலிகளைக் குறைப்பதற்கு உதவும் என்று நம்பப்படுகிறது.
நன்றி : நேயா, தி ஹிந்து, December 24, 2016 11:34 IST

சுவாச நோய்களுக்கு - கண்டங்கத்திரி

மனிதனுக்கு நீண்ட ஆயுளையும், ஆரோக்கியத்தையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் கொடுப்பவைதான் கற்ப மூலிகைகள். கற்பம் என்றால் உடலை நோயின்றி ஆரோக்கியமாக வைப்பது. இதில் மூலிகைகள் பல உள்ளன. ஒவ்வொரு மூலிகைகளுக்கும் அதனதன் தன்மைப்படி தனித்தனி மருத்துவக் குணங்கள் உண்டு. இதில் கண்டங்கத்திரி ஒரு கற்ப மூலிகை. இதனுடைய மருத்துவப் பயன்கள் ஏராளம்.

கண்டங்கத்திரி படர்செடி வகையைச் சார்ந்தது. இது எல்லா இடங்களிலும் செழித்து வளரும் தன்மை கொண்டவை.

Sunday, December 25, 2016

அத்திப்பழம் பலன்கள் .

அத்திப் பழங்கள் பழமாகவும், உலர் பழமாகவும் பயன்படுத்தப்படுகிறது. அத்திப் பழம் என நாம் பார்க்கக் கூடியது உண்மையான பழமல்ல. அது பூவேயாகும். அத்திமரத்தில் விநோதமான பூவும் விதைகளும் சேர்ந்தே பழம் எனும் ஒரு தோற்றத்தை தருகின்றது. அத்திப் பழங்கள் 6-8 மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய மரங்களில் காய்க்கின்றன. பெரிய முட்டை வடிவிலான இலைகள் இருக்கும். அத்திப்பழம் இரு வகைப்படும். சீமை அத்தி எனவும், நாட்டு அத்தி எனவும் தாவரவியலில் திகழ்கின்றது.

தொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால்?...

பொதுவாக உணவில் நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் கறிவேப்பிலையை அனைவரும் தூக்கி எறிந்துவிடுவோம். ஆனால் அந்த கறிவேப்பிலையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக சாப்பிட்டு வந்தால் என்ன நன்மைகளெல்லாம் கிடைக்கும் என்று தெரியுமா?

Saturday, December 24, 2016

கண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டியவை....

கண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது, நம் கண்ணாடி அணிகிறோம் இந்தக் கன்னாடியினுடைய பவர் நாள் செல்ல நாள் செல்ல அதிகரிக்கிறதா? அல்லது குறைகிறதா? கண்டிப்பாக அதிகரிக்கிறது, இதிலிருந்து என்ன புரிகிறது, கண்ணாடியின் பவர் அதிகமாகிறது என்றால் உங்கள் கண்ணினுடைய பவர் குறைகிறது என்று அர்த்தம்.
பாதி கெட்டுப்போன கண்ணை முழுவதுமாகக் கொடுப்பதற்குக் கண்ணாடி அணிய வேண்டுமா? இது என்ன மருத்துவம்? கண்ணில் நோய் வந்தால் குணப்படுத்துவதற்கு வைத்தியர் தேவையா? நோயை அதிகப்படுத்துவதற்கு வைத்தியர் தேவையா?

வள்ளலார்_அருளிய_ஞான_மூலிகை


வெள்ளை கரிசலாங்கண்ணி கீரை 200 கிராம்,
தூதுவளை கீரை 50 கிராம்,
முசுமுசுக்கை கீரை 50 கிராம்,
சீரகம் 50 கிராம்
மேற்குறிப்பிட்டுள்ள பொருட்களை பொடியாக நாட்டு மருந்து கடைகளில் வாங்கி கொள்ளவும் அல்லது மேற்குறிப்பிட்ட கீரை வகைகளை வாங்கி நன்கு சுத்தம் செய்து (தண்ணீரில் நன்கு அலச வேண்டும்) பிறகு நிழலில் உலர வைத்து பொடியாக்கி அவற்றுடன் சீரகத்தையும் பொடிசெய்து கலந்து கொள்ளவும்
தினமும் காலையில் பல் துலக்கியவுடன் ஒரு டம்ளர் பாலில் மேற்சொன்ன பொடியை ஒரு டேபிள் ஸ்பூன் கலந்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைத்து சர்க்கரை கலந்து லேசான சூட்டில் சிறிது சிறிதாக சுவைத்து சாப்பிட வேண்டும்.இந்த மருந்து சர்வரோக நிவாரணியாகும்.இதனைத் தொடர்ந்து
சாப்பிட்டு வர மனிதவுடலை வாட்டும் அனைத்து நோய்களும் குணமாகும்
சர்க்கரைக்கு பதில் நாட்டு சர்க்கரையை சேர்த்து கொள்ளலாம்.                                        நன்றி :🍁ஷங்கர்குரு

🍃

Wednesday, December 21, 2016

ரத்த உற்பத்திக்கு என்ன உணவுகள் சாப்பிடலாம்?

உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும். இயற்கை உணவுகள் மூலம் இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படி? ரத்தத்தை எப்படி உடலுக்கு உற்பத்தி செய்யலாம் என பார்ப்போம்.
நாவல் பழத்தைத் அடிக்கடி சாப்பிட்டு வர‌ இதயத்திற்கு மிகுந்த பலத்தைக் கொடுப்பத்துடன் உடலில் இரத்தம் அதிகமாக‌ ஊறும். பேரீச்சம் பழத்தை தேனில் மூன்று நாட்களுக்கு ஊற வைத்து பிறகு வேளைக்கு 2 அல்லது மூன்று வீதம் சாப்பிட்டு வந்தால் உடலில் ரத்தம் ஊறும். தினசரி இரவு அரை தம்ளர் தண்ணீரில் உலர்ந்த 3 அத்திப்பழத்தை போட்டு, காலை வெறும் வயிற்றில் குடித்தால் ரத்தம் பெருகும்.

கண்களின் எற்படும் தொந்தரவுகளில் இருந்து எளிதில் விடுபட உத்திகள்!

ஒருமுறை கண்ணாடி அணிந்தால், பிறகு கண்ணாடியைக் கழற்ற வழியே இல்லையா?
பல வழிகள் இருக்கிறது.
கண்கள் தொந்தரவுகளில் இருந்து எளிதில் விடுபட உத்திகள்!
கண்களைக் காக்கும் பயிற்சி
கண்களில் ஏதேனும் பிரச்சனை வந்தால், மருத்துவரைப் பார்த்து, கண்ணாடி அணிந்து கொள்கிறோம். பிரச்சனை சரியானதும் கண்ணாடியைக் கழட்டிவிட வேண்டும் தானே? ஆனால், ஒருமுறை கண்ணாடி அணிந்தால், அதையே தொடர்கிறோமே ஏன்? ஒருமுறை அணிந்தால், கண்ணாடியைக் கழற்ற வழியே இல்லையா?

மாதுளம் எண்ணெய் தயாரிக்கலாமா!

ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான தண்ணீரை எடுத்துக்கொள்ளவும். அதில் ஒரு மாதுளம்பழத்தை நான்காக நறுக்கிப் போடவும். பாத்திரத்தில் கைகளை அமிழ்த்தி மாதுளம் முத்துக்களைப் பிரிக்கவும். மாதுளம் தோல்களை வெளியே எடுத்துவிடவும். இப்போது பாத்திரத்தின் அடிப்பகுதியில் நல்ல மாதுளம் முத்துக்கள் இறங்கியிருக்க, பூச்சி அரித்த, சொத்தை மற்றும் அழுகிய மாதுளம் முத்துக்கள் மேலே மிதக்கும். தண்ணீரோடு அவற்றை வடித்துவிடவும். அடிப்பகுதியில் தங்கியிருக்கும் நல்ல மாதுளம் முத்துக்களை ஒரு காட்டன் துணியில் பரப்பி, ஃபேன் காற்றில் உலர்த்தவும். இதனை ஒரு கனமான கண்ணாடி பாட்டிலில் சேமித்துக்கொள்ளவும்.

புற்று நோய் நீக்கும் அருமருந்து - " நித்தியகல்யாணி"

எந்த வகை புற்றுநோயாக கண்டறியப்பட்டிருந்தாலும் கவலை வேண்டாம்.Image may contain: flower, plant, nature and outdoor
நித்தியகல்யாணி மூலிகை குணப்படுத்தும்.

சிறிய - அரிய பயனுள்ள மருத்துவ குறிப்புகள்

* காலையில் எழுந்தவுடன் உங்களை அறியாமல் நீங்கள் உங்கள் கைளை நீட்டுவீர்கள். முதுகை பின்புறம் வளைப்பீர்கள். கழுத்தினை இருபுறமும் திருப்புவீர்கள். இது நீங்கள் உணராமலேயே நீங்கள் உங்களுக்கு செய்து கொள்ளும் ‘ஸ்டிரெச்’ பயிற்சி யோகா. இதனை சில நிமிடங்கள் முறையான பயிற்சியாக செய்து விடுங்கள் . உங்கள் ரத்த ஓட்டத்தை சீராக்கும். ஜீரண சக்தி கூடும். முதுகு வலியினை நீக்கும்.

எலும்பு தேய்மானம்

இப்போதெல்லாம் 40 வயதை தாண்டிவிட்டாலே பல்வேறு நோய்களுடன் முட்டுவலியும் சேர்ந்தே வந்து ஒட்டிக்கொள்கிறது. இந்த பாதிப்பில் இருந்து `ஸ்லிம்’ ஆனவர்கள் பெரும்பாலும் தப்பித்துவிடும் அதேநேரத்தில், உடல் பருமன் கொண்டவர்கள் இதனால் படாதபாடு படுகிறார்கள்.

Monday, December 19, 2016

இயற்கை மருத்துவம்

1) தினமும் ஒரு செம்பருத்தி பூவை காலை உணவிற்கு முன் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர சூடு தணிந்து இரத்தம் விருத்தியாகும்.
2) முருங்கை பட்டை மற்றும் சுக்கு இவற்றை ஊற வைத்து பின்பு அதை நன்றாக மைய அரைத்து கால் வலி ஏற்பட்ட இடத்தில் பூச வலி குறையும்.
3) விஷம் உள்ள வீட்டுப் பூச்சிகள் கடித்துவிட்டால் ஆடாதொடை இலையை சுத்தம் செய்து அரைத்து சிறிதளவு வெந்நீரில் கலந்து குடிக்க விஷம் முறியும்.
4) சுக்கு, ஆவாரம்பட்டை சம அளவு எடுத்து 200 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆற வைத்து சாப்பிட்டு வர கை, கால் வலி குறையும்.

பெரும்பாலான பிரச்சனைகளை தீர்க்கும் ஒரே தைலம்

சித்த மருத்துவத்தில் செடி, கொடி, பட்டை, வேர், தழை முதலியவற்றை கொண்டு மருந்து செய்வது ஒரு முறை.
மற்றொன்று வீரம், பூரம்,லிங்கம்,தாளகம், துத்தம் போன்ற பாஷணாங்களை கொண்டு மருந்து செய்வது ஒரு முறை.
மற்றொன்று தங்கம், வெள்ளி, செம்பு, அயம், பித்தளை போன்ற உலோகங்களை கொண்டு மருந்து செய்வது ஒரு முறை.
மற்றொன்று வெடியுப்பு, இந்துப்பு, போன்ற உப்புக்களை கொண்டு செய்வது ஒரு முறை.

தாய்ப்பாலுக்கு இணை தேங்காய் பால்

தாய்ப்பாலுக்கு இணை தேங்காய் பால் பகிர்ந்து கொள்ளுங்கள் மக்கள் அறிந்து கொள்ளட்டும்!
தேங்காய் உபயோகம் மாரடைப்பில் முடியும் என்று நிறைய பேர் கைவிட்டனர்.
உண்மை இதோ,
பச்சை தேங்காயின் பயன்கள்:-
தேங்காயை பச்சையாக ஒரு வேளை உணவாக எடுப்பதினால் ஏற்படும்
நன்மைகள்....
பொதுவாக தேங்காயில் அதிகமாக கொழுப்பு உள்ளது என்பது உண்மைதான்....!

Saturday, December 17, 2016

தொப்பையின் கொழுப்பை கரைக்க

இன்றைய உலகில் பெரும்பாலான மக்கள் தினசரி எதிர்கொள்ளும் இரண்டு பிரச்சனை காலை கடனும், உடல் பருமனும் தான். உடல் பருமன் இருந்தாலே காலை கடன், செரிமானத்தில் பிரச்சனைகள் எழுவது சாதாரணம் தான். இது மட்டுமின்றி, உடல் பருமன் விந்தணு திறன் குறைபாடு, சர்க்கரை நோய் போன்றவை உண்டாக காரணியாக இருக்கிறது.

பப்பாளியின் மருத்துவப் பண்புகள்.....!

* நல்ல மலமிளக்கி. மலச்சிக்கல் வயிற்றுக் கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை போன்ற பிரச்சனைகளுக்குஅருமருந்து......!
* பித்தத்தைப் போக்கும்......!
* உடலுக்குத் தென்பூட்டும்......!
* இதயத்திற்கு நல்லது......!
* மனநோய்களைக் குணமாக்குவதில் உதவும்......!
* கல்லீரலுக்கும் ஏற்றது......!

Friday, December 16, 2016

நரை முடியை வளரவிடாமல் செய்யும் மூலிகை எண்ணெய்

நீங்கள் பாத்திருக்கலாம். இப்போதும் நமது பாட்டிகளுக்கு கூந்தல் கருப்பாகவும், நீளமாகவும் இருக்கும். இதற்கு காரணம் அவர்கள் எண்ணெய் உபயோகப்படுத்தியதே. ஆனால் நாம் தோற்றத்திற்கு நன்றாக இல்லை என்று எண்ணெய் வைக்கும் பழக்கத்தை மறந்துவிட்டோம்.

விஷப்பூச்சிகள் கடித்து விட்டால்

உங்களை விஷப்பூச்சிகள் கடித்து விட்டால் விஷத்தை நீக்கும் உடனடி இயற்கை வைத்தியம்!
விஷப்பூச்சிகள் கடித்து விட்டால், இயற்கை வைத்தியத்தின் மூலம் நஞ்சை சரிசெய்து விடலாம்.
தேள் கொட்டினால்
எலுமிச்சைப் பழ விதைகளையும், உப்பையும் கலந்து அரைத்துக் குடித்து விட்டால் தேள் கடி நஞ்சு இறங்கி விடும்.
கல்லில் சில சொட்டுத் தண்ணீரை தெளித்து அதில் புளியங்கொட்டையைச் சூடு உண்டாகும் படி தேய்த்து, தேள் கடித்த இடத்தில் உடனே வைத்தால் ஒட்டிக் கொள்ளும். நஞ்சு இறங்கியதும் புளியங்கொட்டை விழுந்து விடும்.

Thursday, December 15, 2016

இருதயம் பலம் பெற

நன்றாகப் பழுத்த நெல்லிக் கனியில் ஒன்றை தினசரி தின்றுவிட்டு, தேக்கரண்டி அளவு தேனையும் சாப்பிட வேண்டும். தொடர்ந்து நாற்பது நாட்கள் சாப்பிட்டு வந்தால் இருதயம் பலம் பெறும், நல்ல இரத்தம் உண்டாகும்.
இருதய பட படப்பு குறைய:-
மாசிக்காயைப் பால் விட்டு உரைத்து காலை மாலை இரு வேளையும் ஒன்று அல்லது இரண்டு குன்றி மணி அளவில் நாவிற் தடவி சுவைத்து வர இருதய பட படப்புத் தீரும்.

உடலில் ஏற்படும் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் போக்கும் ரகசிய மற்றும் சக்தி வாய்ந்த எளிய வழி

தற்போது நிலவி வரும் பருவ மாற்றத்தால் நம்மில் பலருக்கு உடலில் அதிக உஷ்ணம்(வெப்பம்) ஏற்படுகிறது,
இது முக்கியமாக அதிக நேரம் வெளியில் பயணங்கள் மேற்கொள்வோருக்கும், அதிக நேரம் நாற்காலி, சோபா மீது உட்கார்ந்திருப்பதாலும் ஏற்படுகிறது, இதனால் நம் தலை முடி முதல் கால் வரை உள்ள அனைத்தும் ஆரோக்கியத்தை இழக்கிறது,

ஒரே நாளில் சளி மற்றும் காய்ச்சலில் இருந்து விடுதலை அளிக்கும் அற்புத கை மருந்து!

தற்போது பலரும் சளி மற்றும் காய்ச்சலால் அடிக்கடி அவஸ்தைப்படுவார்கள். இப்படி ஒருவருக்கு அடிக்கடி சளி, காய்ச்சல் பிடிப்பதற்கு முக்கிய காரணமாக இருப்பது, பலவீனமான நோயெதிர்ப்பு சக்தி தான். ஆரம்பதிலேயே இதற்கு சரியான மருந்துகளை எடுத்து வந்தால், அடிக்கடி அவஸ்தைப்படுவதைத் தவிர்க்கலாம்.

Tuesday, December 13, 2016

வெண் குஷ்டம் என்ற வெண்புள்ளி நோய்க்கு

உள் மருந்தாக காலையில் வெறும் வயிற்றில் ஒரு கைப்பிடி கறிவேப்பிலை கொழுந்துசம அளவு கீழாநெல்லி கொழுந்துடன் சேர்த்து மெதுவாக மென்று விழுங்க வேண்டும்
.நீர் அதிகமாக அருந்த வேண்டும்
,
உணவை குறைத்து பழங்கள் அதிக அளவு எடுக்கவும்

Sunday, December 11, 2016

இயற்கை முறையில் வெள்ளை முடியைஎப்படி கருமையாக்குவது

தேங்காய் எண்ணெய்தேங்காய் எண்ணெயில் சிறிது எலுமிச்சைசாறு சேர்த்து கலந்து, அதனை தலை முடியில் தடவிநன்கு மசாஜ் செய்து, ஊற வைத்து அலசவேண்டும். இதனால் நரைமுடி மறைய ஆரம்பிக்கும்.ஹென்னாஹென்னா என்னும் மருதாணிபொடியைக் கொண்டு முடியைப்பராமரித்தால், முடி அதன் இயற்கை நிறத்தைப்பெறுவதோடு பட்டுப் போன்றுமென்மையாகவும் இருக்கும்.

தலையில் நீர் கோர்த்துக்கொள்வதற்கான காரணமும் - தீர்வும்

தலையில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் கோர்த்துக்கொள்வதற்கு நிறைய காரணங்களை சொல்லலாம். தொடர்ந்து தலைக்கு குளிப்பதாலும் மழையில் நீண்ட நேரம் நனைவதாலும் தலையில் நீர் கோர்த்துக் கொள்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தி இன்மை, புகை மற்றும் காற்று மாசடைந்த இடங்களில் நீண்ட நேரம் இருப்பதாலும், மழை மற்றும் பனிக்காலங்களில் இரு சக்கர வாகனங்களில் அதிக தூரம் செல்லும்போது தலைக்கு எந்த பாதுகாப்பும் செய்து கொள்ளாமல் செல்வதாலும் தலையில் நீர் கோர்த்துக் கொள்கிறது.

எப்படி தூங்க வேண்டும்?

பூமிக்கு இரண்டு துருவங்கள் உண்டு. வட துருவம் நேர் மின்னோட்டம் உடையது. தென் துருவம் எதிர் மின்னோட்டம் உடையது. இந்த மின்னோட்டம் வடக்கில் இருந்து தெற்கிற்கும், தெற்கில் இருந்து வடக்கிற்கும் செல்லும்.
அதே போல் மனிதனின் தலை நேர் மின்னோட்டம் கொண்டது. கால் எதிர் மின்னோட்டம் கொண்டது.நாம் தெற்கு பக்கம் தலை வைத்து, வடக்கு பக்கம் கால் நீட்டி படுக்கும் போது, பூமியின் நேர் மின்னோட்டம் மனிதனின் எதிர் மின்னோட்டத்துடன் இருக்கும்.

முடி உதிர்தல் - முடக்கத்தான் கீரை



தற்போதுள்ள இளைஞர்களுக்கு பெரும் பிரச்சனையாக இருப்பது இந்த முடி உதிர்தல்தான். முறையான பராமரிப்பு இல்லாததால் இளம் வயதிலேயே அதிகமாக முடி உதிர ஆரம்பித்து விடுகிறது. இதனை முடக்கத்தான் கீரைக் கொண்டு சரி செய்யலாம்.

பீட்ரூட்

பீட்ரூட்டை எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. பீட்ரூட் சாப்பிடுவதால் கிடைக்கும் உடலுக்கு கிடைக்கும் பயன்கள் என்னவென்று கீழே பார்க்கலாம்.
புதிய இரத்த அணுக்களை உருவாக்கும் பீட்ரூட்

















பீட்ரூட்டை சமையல் செய்து சாப்பிடுவதுடன் பச்சையாகவும் சாப்பிடலாம். கல்லீரல் கோளாறுகளுக்கும் பீட்ரூட் ஒரு சிறந்த மருந்து.

எலும்புகளை வலிமையாக்கும் முருங்கைக்காய்

முருங்கைக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், எலும்புகளின் அடர்த்தி அதிகரித்து, குழந்தைகளின் எலும்புகளின் ஆரோக்கியம் மேம்படும்.
எலும்புகளை வலிமையாக்கும் முருங்கைக்காய்

















பலரும் விரும்பி சாப்பிடும் முருங்கைக்காயில் ஊட்டச்சத்துக்களானது நிரம்பியுள்ளது. முருங்கைக்காயில் உள்ள அதிக அளவு கால்சியம் சத்து, இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் போன்றவை எலும்புகள் வலிமையடைய உதவுகின்றன.

Saturday, December 10, 2016

இரத்தம் விருத்தியாக, சுத்தமாக சாப்பிட வேண்டியவை!!

உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும். இயற்கை உணவுகள் மூலம் இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படி? இரத்தத்தை விருத்தி செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.

தாங்க முடியாத பல்வலிக்கு - தேங்காய் எண்ணெய், கிராம்பு

தாங்க முடியாத பல்வலியால் அவதிப்படுபவர்களுக்கு சூப்பரான ஒரு இயற்கை வைத்தியம் உள்ளது. அது என்னவென்று கீழே படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மருதாணிப் பூக்கள்



மருதாணி ஒரு ஆயுர்வேத மூலிகை, சருமம் மற்றும் கூந்தல் அழகிற்காக உபயோகப்பட்டாலும் இது உடலுக்கும் ஆரோக்கியத்தை தருகிறது. அதன் குணங்களையும், நோய்களுக்கு உபயோகிக்கும் முறையும் இங்கு காண்போம்.

இதய அடைப்பு, இதயவலி, மற்றும் இதயம் தொடர்புடைய அனைத்து நோய்களையும் நீக்கும் மருந்து.

இதய அடைப்பு, இதயவலி, மற்றும் இதயம் தொடர்புடைய அனைத்து
நோய்களையும் நீக்கும் மருந்து.
வெண்தாமரை பூ- 4 பங்கு
ஆடுதிண்ணாபாளை வேர் – 1 பங்கு

சுக்கு - மல்லி காபி - சளி, தொண்டை வலிக்கு

சளி, தொண்டை வலியால் அவதிப்படுபவர்கள் இந்த மல்லி காபியை குடிக்கலாம். மேலும் இந்த காபி உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைக்கும்.
சளி, தொண்டை வலிக்கு சுக்கு - மல்லி காபி

தேவையான பொருட்கள் :  
தனியா - 150 கிராம்,
சுக்கு - 50 கிராம்,
மிளகு - 10 கிராம்,
திப்பிலி - 10 கிராம்,
சித்தரத்தை - 10 கிராம்,
பனை வெல்லம் அல்லது கருப்பட்டி - தேவையான அளவு.

செய்முறை : 

* பனை வெல்லம் அல்லது கருப்பட்டி நீங்கலாக  மற்ற பொருட்களை தனித்தனியே வெறும் வாணலியில் வறுத்து, ஆற வைத்து, மிக்ஸியில் நைஸாக பொடித்து கொள்ளவும். இந்தப் பொடியை காற்றுப் புகாத, ஈரமில்லாத டப்பாவில் போட்டு வைக்கவும்.

* தேவையான போது ஒரு டம்ளர் தண்ணீருக்கு இரண்டு டீஸ்பூன் பொடி, தேவையான அளவு பனை வெல்லம் அல்லது கருப்பட்டி சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு, இறக்கி வடிகட்டினால்... மணமான மல்லி காபி ரெடி!

குறிப்பு: சித்தரத்தையை நன்கு தட்டி உடைத்த பின் வறுக்கவும். நன்றி : மாலைமலர் பதிவு: டிசம்பர் 10, 2016 08:56

Wednesday, December 7, 2016

சிறுநீரகக் கல்... இஞ்சி - நெல்லிக்காய் ஜூஸ்!

  • இரண்டு பெரிய நெல்லிக்காய்களை நறுக்கிக் கொள்ளவும். 
  • ஒரு சிறு துண்டு இஞ்சியின் தோல் சீவித் துருவவும். 
  • நெல்லிக்காய்,இஞ்சியுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். 
  • பிறகு, இதில் இரண்டு டீஸ்பூன் சர்க்கரை, ஒரு டீஸ்பூன் தேன், ஒரு சிட்டிகை உப்பு, கால் டீஸ்பூன் சீரகத்தூள் சேர்த்து மேலும் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். 
  • இதை வடிகட்டி, தேவைப்பட்டால் குளிரவைத்துப் பரிமாறவும்.
  • இந்த ஜூஸை தொடர்ந்து குடித்து வந்தால், சிறுநீரகக் கல் கரையும்.

Thursday, December 1, 2016

உடலில் உள்ள கொழுப்பை குறைக்க வெந்தயத்தை எப்படி சாப்பிடலாம்?


கேலக்டோமேனன் என்கிற நீரில் கரையக்கூடிய கார்போஹைட்ரேட் வெந்தயத்தில் அதிகமாக உள்ளது. இந்த வேதிபொருள் பசியை கட்டுப்படுத்துகின்றது. அதன் காரணமாக நாம் பசியை உணர மாட்டோம். அதன் விளைவாக நம் உடலில் தேங்கியுள்ள அதிகமான கலோரிகள் எரிக்கப்பட்டு நம்முடைய உடல் எடை கட்டுப்படுத்தப்படுகின்றது.

எலும்புகளை உறுதியாக்க 18 ஈஸி டிப்ஸ் !


லும்புகள்தான் ஆரோக்கியமான உடலின் அஸ்திவாரம். நாம் நிற்க, அமர, நடக்க, ஓட என துடிப்பான எந்தச் செயலைச் செய்யவும் எலும்புகள் உறுதியாக இருப்பது அவசியம். எலும்பு ஆரோக்கியமாக, வலிமையாக இருக்கவும், முறிந்த எலும்பு விரைவில் ஒன்றுசோர உதவும் உணவுகள் என்னென்ன என்று சீஃப் டயட் கவுன்சலர் கிருஷ்ணமூர்த்தி கூறுகிறார்.