Tuesday, December 2, 2014

பேரீச்சம்பழம்

பேரிச்சம்பழம், என்னதான் நம்ம நாட்டிலயும் விளைஞ்சா கூட, வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பேரீச்சம்பழம் என்றால் உடனே எவ்வளவு விலை கொடுத்து வாங்கவும் தயாராக இருப்பனர் நம் மக்கள்.
ஆனால் அதன் மருத்துவ குணங்கள் நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? பெரியவர்களிடம் கேட்டால் பேரீச்சம்பழம் உடம்புக்கு நல்லது ஒழுங்கா சாப்பிடு என்று கூறுவார்கள். ஆனால் என்ன விஷயம் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டாமா?? வாருங்கள்…

இன்றைய ஹெல்த் டிப்ஸ் பகுதியில் பேரிச்சம்பழத்தில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி காணலாம்…பித்தம், மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளை தீர்க்கும் ஆற்றல் மிக்கது பேரீச்சை. தொடர்ந்து பேரீச்சம்பழம் சாப்பிட்டு வந்தால் இதயம் வலுப்பெறும். அன்றாடம் பேரீச்சம்பழத்துடன் ஒரு டம்ளர் பால் சாப்பிட்டு வந்தால் ரத்தம் விருத்தியடையும்.
ரத்தத்தில் சிவப்பணுக்களை அதிகரிக்கச் செய்து, நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும். தினமும் இரவில் இரண்டு அல்லது மூன்று பேரீச்சம்பழங்களை சாப்பிட்டு பின்னர் சுடுதண்ணீர் அருந்தினால் மலச்சிக்கல் தீரும்.
காச நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இழந்த உடல் வலிமையை மீண்டும் பெற பேரீச்சம் பழம் அதிகம் துணை புரியும். உடலில் சர்க்கரைத் தன்மை குறைந்து சோர்வடையும் போது, சில பேரீச்சம் பழங்களைப் சாப்பிட்டாலே போதும். உடனே ரத்தத்தில் சர்க்கரைத் தன்மையை அதிகரித்து உடலை சமநிலைக்கு கொண்டுவரும்.
தினசரி 4 பேரீச்சம் பழங்களை சாப்பிட்டு வருபவர்களுக்கு, வயிற்றுக் கோளாறுகள் வருவதில்லை. எளிதில் ஜீரணமாகும் நார்ச்சத்து கொண்டது. குடற்பகுதியில் இருந்து, கெட்ட கொழுப்புகளை உறிஞ்சி அகற்றும் ஆற்றல் பேரீச்சைக்கு உண்டு.
குழந்தைகளுக்கு பேரீச்சம் பழத்தை தேனுடன் ஊறவைத்து தந்தால் சுறுசுறுப்புடன் ஆரோக்கியமாக இருப்பார்கள். பெண்களுக்கு மாத விலக்கு காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கினால் ஏற்படும் பலகீனத்தைப் போக்க பேரீச்சம் பழத்தை அதிகம் உட்கொள்வது நல்லது.

No comments:

Post a Comment