Wednesday, December 31, 2014

வீட்டுத்தோட்டம்

* சிறிதளவு எப்சம் உப்பை தண்ணீரில் கரைத்து செடிகளுக்கு ஊற்றலாம். செடிகள் நன்கு வளரத் தேவையான மெக்னீசியம், சல்பேட் இரண்டையும் இந்த உப்பு கொடுக்கும் . வாரம் ஒருமுறை உபயோக்கிக்கலாம்.
* முட்டை ஓடுகளை காய வைத்து நன்கு தூளாக்கி போட வேண்டும். இதில் இருக்கும் கால்சியம் செடிகளுக்கு நல்ல உரமாகும்.
செடி வளர்க்கும் பைகள் :
Size in Cms
Price Per Bag
30x16x16 - Rs.20
35x20x20 - Rs.30
40x24x24 - Rs.40
60x28x28 - Rs.50
400 GSM
Shipping cost extra.தகவல்களுக்கு call 7845971111
* 4 ஸ்பூன் வினிகர் ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஊற்றவேண்டும்.
* அலங்கார மீன் தொட்டியில் தண்ணீர் மாற்றும்போது வெளியேற்றப்படும் கழிவு நீரை செடிகளுக்கு ஊற்றலாம். செடிகள் செழிப்பாக வளரும்.
* சாம்பல் சிறந்த உரம் , கிடைத்தால் போடலாம்.
* ஓக் மர இலைகள் அல்லது வேப்பமர இலைகளை வாளியில் உள்ள நீரில் போட்டு வெயிலில் வைக்கவேண்டும் , நீரின் நிறம் நன்றாக மாறியதும் குளிர வைத்து செடிகளுக்கு ஊற்றலாம்.
* காய்கறி கழிவுகளை செடியின் அடியில் போட்டு வரலாம்.

No comments:

Post a Comment