Tuesday, December 2, 2014

நரம்பு பிடிப்பு குறைய

தவிர்க்க வேண்டியவை :
குடலில் வாயு- மலத்தேக்கலை ஏற்படுத்தும் நெய்,எண்ணெய்ப் பசையில்லாத வறட்சியான பண்டங்களைச் சாப்பிடுதல், பச்சைக் கறிகாய்களைத் தேவையான அளவு உணவில் சேர்த்துக் கொள்ளாமல் தனி வறட்டுச் சாதமாகவே சாப்பிடுதல், பால், பழம், தண்ணீர் சேர்த்துக் கொள்ளாதது, பக்குவம் சரியான முறையில் ஆகாத உணவு வகைகள், உலர்ந்து போன காய்கள், குடலில் நீர்ப்பசையை சுண்ட வைக்கும் மிளகாய், மிளகு, பெருங்காயம் ஆகியவற்றை அதிகம் சேர்ப்பது, கொத்துக் கடலை, மொச்சை, சோளமுத்து, மரவள்ளிக் கிழங்கு, ஜவ்வரிசி இவற்றினுடைய மாவுகளை அப்படியே கூழாக்கிச் சாப்பிடுதல், தீட்டிய அரிசி, வாழைப்பூ, அத்திப் பிஞ்சு, சுண்டை வத்தல் இவற்றைத் தொடர்ந்து சாப்பிடுதல், மதுபானம், அதிகப்பட்டினி, மிதமிஞ்சி சாப்பிடுதல் போன்றவை உங்களுடைய உபாதையை மேலும் பெரிதாக்கிவிடக் கூடும்.
குடலில் வாயு - மலச் சேர்க்கையை தவிர்ப்பதற்கும், நரம்புகளின் வலுவைக் கூட்டவும் கடைப்பிடிக்கவேண்டியவை :
காலையில் 5 மணிக்கு எழுந்ததும் ஒரு பெரிய டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரை மெதுவாய்ப் பருகவும்.
காலையில் 7 மணிக்கு 2 வாழைப்பழம் உருக்கிய நெய்யில் தோய்த்துச் சாப்பிட்டு ஒரு டம்ளர் (சுமார் 250 - 300 மி.லி.) வெதுவெதுப்பான காய்ச்சிய பால் குடிக்கவம்.
காலையில் இட்லி, தோசை போன்ற மாவுப் பலகாரம் தவிர்த்து சூடான புழுங்கலரிசிச் சாதத்துடன் நெய் கலந்து பருப்பு ரசம், நன்றாக வேக வைத்த கறிகாய்க் கூட்டு அல்லது பொரியல், கடைந்து வெண்ணெய் நீக்கிய மோர் என்ற வகையில் சாப்பிடவும். தயிர் நல்லதல்ல.
காலையில் 11 மணிக்கு இளநீர் குடிக்கவும்.
மதியம் 12 1/2 மணிக்கு ஆரஞ்சு, சாத்துக்குடி, திராட்சை, அத்திப் பழம், தக்காளி ஜூஸ், ஆப்பிள் பழம் இழற்றில் கிடைத்த பழங்கள் சாப்பிடவும்.
மதியம் 2 மணிக்கு காலை, உணவு வகைகளைப் போலவே சாப்பிடவும்.
மாலை 5 மணிக்கு ஒரு டம்ளர் பால் குடிக்கவும்.
இரவு சாப்பாட்டில் புளி - புளிப்புச் சேர்க்காமல் பச்சைக் கறிகாய் சேர்த்த கூட்டு சாதம், மோருடன் சாப்பிடவும். இரவு படுக்கும் முன் வெந்நீர் அருந்தவும்.
மூலிகை சிகிச்சை மு‌றை :
உடலெங்கும் மூலிகைத் தைலத்தைத் தடவி, மூலிகை இலைகளைத் தண்ணீரில் கொதிக்க விட்டு, அதிலிருந்து வெளியாகும் நீராவியை உடலெங்கும்படுமாறு செய்வதும், மூலிகை எண்ணெய் மற்றும் மூலிகைக் கஷாயங்களைக் கொண்டு செய்யப்படும் வஸ்தி எனும் எனிமா சிகிச்சை முறையாலும், தலையில் எண்ணெய்யை நிறுத்திவைக்கும் சிரோவஸ்தி முறையும், உடலிலுள்ள நாடி நரம்புகளுக்கு வலுவூட்டும் சிறந்த ஆயுர்வேத சிகிச்சைமுறைகளாகும். இவற்றால் நீங்கள் நல்ல பயனைப் பெறலாம்.

No comments:

Post a Comment