Wednesday, October 22, 2014

மருத்துவக் குறிப்புகள்,

* சின்னவயதில் முகத்தில் அடிக்கடி பரு வரும். காய்ந்த பருவை வேரோடு நீக்க, முட்டையின் வெள்ளைக்கருவை ஒரு சுத்தமான துணியில் நனைத்து பருமீது பரப்புங்கள். முட்டை காய்ந்ததும் துணியை உரித்து எடுத்தால் பருவும் துணியோடு சேர்ந்து வந்துவிடும். கரும்புள்ளிகளையும் இந்த முறையில் நீக்கலாம்.
* பாதங்கள் மென்மையா, பளபளப்பா ஜொலிக்க ஒரு வழி இருக்கு. ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான தண்ணீர் எடுத்து, அதில் கல்உப்பை ஒரு கைப்பிடி போட்டு கரையுங்கள். அதில் கால்களை அரைமணி நேரம் அமிழ்த்தி வைத்துவிட்டு, பிறகு பியூமிஸ் கல் ( எல்லா ஃபேன்ஸி ஸ்டோர்களிலும் கிடைக்கும்) கொண்டு மென்மையாகத் தேய்த்தால் கால்களின் வெடிப்பு நீங்கி மென்மையாக ஒளிரும்.
முகத்தில் வாயோரம், கண்ணோரம் ஏற்படக்கூடிய சின்னச் சின்ன சுருக்கங்களைச் சரி பண்ண ஒரு இயற்கை வழி சொல்லட்டுமா? விதையில்லாத பச்சை திராட்சைப் பழங்களின் சாற்றை எடுத்து இந்தச் சுருக்கங்களின்மேல் பூசுங்கள். நாளாவட்டத்தில் சுருக்கம் காணாமலே போய், முகம் பளிச்சென ஆகும்

No comments:

Post a Comment