Wednesday, October 29, 2014

உடல் எடை / பருமன் கூட :

ஒவ்வொரு சாப்பாட்டின் போதும் நெய் ஒரு தேக்கரண்டி சேர்க்க. வேக வைத்த துவரம்பருப்பும் நெய்யும் சோற்றில் கலந்து பகலில் மட்டும் சாப்பிட வேண்டும். ஒல்லியாக இருப்பவர்கள் உடம்பு பெருக்கவும் எடை கூடவும் முலாம்பழம், வாழைப்பழம் உதவும்; 
நெல்லிக்காயும் வெண்பூசணியும் உளுத்தம்பருப்புக் கஞ்சி அல்லது களியும் அடிக்கடி சாப்பிடலாம். 
இனிப்புக் கடைகளில் வெண்பூசணி அல்வா கிடைக்கிறது. அடிக்கடி உளுத்தங்கஞ்சி, வெந்தயக் களி சேர்க்க. தயிரை இரவு மெல்லிய துணியில் கட்டித் தொங்கவிட்டு மறுநாள் காலையில் சிற்றுண்டியுடன் சாப்பிடுவதால் உடம்பு பெருக்கும். “இளைச்சவனுக்கு எள்ளு, கொழுத்தவனுக்குக் கொள்ளு” என்பது பழமொழி. நாள்தோறும் எள்ளுத் துவையல் சேர்க்கலாம்; பருப்புப் பொடிகள் நல்லெண்ணெய் அல்லது நெய்விட்டுச் சாப்பிடலாம்.

No comments:

Post a Comment