Friday, August 25, 2017

மல்லிகைப் பூ

மல்லிகை
மல்லிகைப் பூவை (1 கைப்பிடி) அளவு எடுத்து நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வந்தால் கண்ணில் வளரும் சதை வளர்ச்சி குறைந்து 48 நாட்களில் படிப்படியாக தெளிவான பார்வை பெறலாம்.
மல்லிகைப் பூக்களை நன்றாக கசக்கி நெற்றியின் இரு புறங்களிலும் தடவி வர தலைவலி உடனே குணமடையும்.

மல்லிகைப் பூக்களை நிழலில் வைத்து உலர்த்தி அவை காகிதம் போல ஆனதும், அவற்றை பொடியாக அரைத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இதனை தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் சிறுநீரக கற்கள் தானாகவே கரைந்து போகும். எந்த உயர் சிகிச்சையும் தேவைப்படாது .நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் மல்லிகைப்பூக்கள் ஒன்றிரண்டை உண்டு வந்தால் நோய் எதிர்ப்புச் சக்தி உயரும்.
மல்லிகைப் பூவை தண்ணீரில் கொதிக்க வைத்து அந்த நீர் பாதியாக சுண்டவைத்து பின்பு வடிகட்டி அந்த நீரை காலை மாலை என இரு வேளையும் அருந்தி வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண் நீங்கும்.
மல்லிகைப்பூவை (10) தண் ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை அருந்தி வர வேண்டும். இவ்வாறு அருந்தி வந்தால் வயிற்றில் உள்ள கொக்கிக் புழு, நாடாப் புழு போன்றவை அழியும்.இந்த அறிகுறிகள் இருப்பவர்கள் மட்டுமல்லாமல் பொதுவாக அடிக்கடி பூச்சி மருந்து சாப்பிடுபவர்கள் தவிர அனைவருமே இந்த மல்லிகைத் தண்ணீரை அருந்தலாம்.
மூலம் : கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் Foot and Hand Reflexologist
KOVAI HERBAL CARE
Cell : 96557 58609, Covaibala15@gmail.com

No comments:

Post a Comment