Tuesday, January 20, 2015

தூதுவளை அடை

தேவையான பொருட்கள்:
தூதுவளை கீரை – 100 கிராம் புழுங்கல் அரிசி – 200 கிராம் துவரம் பருப்பு – 50 கிராம் 
கடலை பருப்பு – 50 கிராம் காய்ந்த மிளகாய் – 3 உப்பு – தேவைக்கு பெருங்காய பொடி – 1 தேக்கரண்டி நல்லெண்ணெய் – தேவைக்கு 
செய்முறை: 
* அரிசி மற்றும் பருப்பு வகைகளை இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊறவையுங்கள். தண்ணீரை வடிகட்டி எடுத்து அவைகளோடு காய்ந்த மிளகாய், உப்பு, பெருங்காய பொடி ஆகியவைகளை கலந்து மிக்சியில் நன்றாக அரையுங்கள். 
* மாவை இரண்டு மணி நேரம் புளிக்க வையுங்கள். 
* அடை செய்ய தொடங்கும்போது தூதுவளை கீரையை அரைத்து மாவுடன் கலந்து அடையாக தயார் செய்யுங்கள். * குழந்தைகள் இதை ருசித்து சாப்பிடுவார்கள். 
* சளி, இருமலை போக்கும் சக்தி தூதுவளை கீரைக்கு உண்டு. 

No comments:

Post a Comment