Friday, January 30, 2015

ஆரோக்கியம் தரும் மூலிகை தண்ணீர்


வயிற்றில் பூச்சி, வாய்வு பிரிதல் பிரச்சனை, வயிற்றுவலி, குடல் இறைச்சல், போன்ற பிரச்சனைகளுக்கு தீர ஒரு லிட்டர் தண்ணீரில் அரை  தேக்கரண்டி ஓமம் போட்டு சூடாக்கி வடிக்கட்டி குடித்தால் பிரச்சனைகள் தீரும். ஒருலிட்டர் தண்ணீரில் அரைதேக்கரண்டி சீரகம் போட்டு சிறிது  சூடாக்கி குடித்து வந்தால் அஜீரணக்கோளாறு, வயிற்று உப்புசம் மற்றும் உடல்சூடு போன்றவை தணியும்.
ஒரு லிட்டர் தண்ணீரில் சிறிதளவு சுக்கு, மிளகு, கொத்தமல்லியை ஆகியவற்றை தட்டிப்போட்டு போதுமான அளவு சூடாக்கி கொஞ்சம் கொஞ்சமாக  குடித்து வந்தால் அதிக சோர்வு, சளித்தொல்லை, முகத்தில் ஏற்படும் கருவளையம், தொண்டைக்கட்டு ஆகியவை குணமாகும். ஒருலிட்டர் தண்ணீரில்  ஒரு கடுக்காயை தட்டிப்போட்டு சூடாக்கி குடித்து வந்தால் வாய்ப்புண், தொண்டைப்புண், வயிற்றுப்புண் குணமாகும்.
ஒருலிட்டர் தண்ணீரில் நாவப்பழக் கொட்டைகளை தட்டிப்போட்டு சிறிது சூடாக்கி குடித்து வந்தால் அதிக சக்கரை குறையும். ஒருலிட்டர் தண்ணீரில்  10 கிராம் பால்காயத்தை தட்டிப்போட்டு சூடாக்காமல் 2 மணி நேரம் அப்படியே ஊறவைத்து பிறகு குடித்து வந்தால் வாய்வு பிடிப்பு, ஏப்பம், மூட்டுவலி  குணப்படும்.
ஒருலிட்டர் தண்ணீரில் சிறிது புளி, கருப்பட்டி, உப்பு போன்றவற்றை கலந்து அப்படியே குடித்துவந்தால் உடல்சோர்வு, அதிக தாகம் அடங்கும். ஒருலிட்டர் தண்ணீரில் அரைமூடி எலுமிச்சைப்பழம், தேன், சிறிது இந்துப்பு கலந்து குடித்து வந்தால் உடல் உற்சாகம் பெருகும் உடலில் உள்ள  நாள்ப்பட்ட சளியை கரைத்து வெளியேற்றும்.
இதுபோன்ற இன்னும் பலவித மூலிகை நீர் சிகிட்சை உண்டு. ஒருவர் தொடர்ந்து ஒரேவிதமான நீர்சிகிட்சையை செய்யக்கூடாது. ஒருலிட்டர் என்பது  ஒரு அளவீடுதான் நமக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு நீர் தேவைப்படுமோ அவ்வளவு நீரையுமே இந்த முறையில் தயாரித்து குடித்து வந்தாலும்  மிகவும் நல்லதுதான்.
ஒருமுறை தயாரித்த நீரை அதிகப்பட்சம் 9 மணிநேரம் வரையில் மட்டுமே வைத்துக்கொள்ளலாம். மூலிகை நீர் தயாரிப்பதற்கு சாதாரண குழாய்  குடிநீரையே பயண்படுத்தலாம் அல்லது மண்பானை நீரை பயண்படுத்தலாம். 

No comments:

Post a Comment