Friday, September 7, 2018

பேரீச்சம் பழம்

முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழமாக பேரீச்சம் பழம் விளங்குகிறது.🔹

🔻ஆண்கள் தங்களுடைய ஆண்மைத் தன்மையை அதிகரிக்க தேனுடன் பேரீச்சம்பழம் சேர்த்து சாப்பிட ஆண்மை பெருகும். தாது புஷ்டி உண்டாகும்.🔹

🔻பெண்கள் மாதவிலக்கு காலங்களில் கால்சியம் மற்றும் இரும்புச் சத்து குறைபாடு ஏற்படும். இதை சரிசெய்ய பேரீச்சம் பழம் சாப்பிட வேண்டும். ஒழுங்கற்ற மாத விலக்கை ஒழுங்கு படுத்தவும் பேரீச்சம் பழம் உதவுகிறது.🔹

🔻42 வயது முதல் 52 வயது வரை உள்ள காலகட்டத்தில் மாதவிலக்கு முழுமையடையும். அப்போது பெண்களின் எலும்புகள் பலவீனமாக இருக்கும். மேலும் கை, கால் மூட்டுகளில் வலி உண்டாகும். இதற்க்கு பேரீச்சம் பழத்தை பாலில் கலந்து கொதிக்க வைத்து சாப்பிட்டு வந்தால் உடல் என்றும் ஆரோக்கியமாக இருக்கும்.🔹

🔻பேரீச்சம் பழத்தின் கொட்டைகளை நீக்கி பாலில் போட்டு காய்ச்சி சாப்பிடுவதால் சளி, இருமல் குணமாகும். நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் 2 பேரீச்சம் பழம் சாப்பிட்டு வருவதால் எலும்புகள் பலம் பெரும். கால்சியம் மற்றும் இரும்பு சத்து குறைபாடு நீங்கும்.🔹

🔻பேரீச்சம் பழத்துடன் பாதாம் பருப்பு, முந்திரி பருப்பு, சேர்த்து சோயா பாலில் கலந்து கொதிக்க வைத்து சாப்பிடுவதால் நரம்புத் தளர்ச்சி நீங்கும், ஞாபக சக்தி பெருகும் கைகால் தளர்ச்சி குணமாகும். உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும்.🔹

🔻கண் குறைபாடு உள்ளவர்கள் பேரீச்சம் பழம் சாப்பிட கண்பார்வை மேம்படும். மாலைக் கண் நோயால் பாதிக்கப் பட்டவர்கள் பேரீச்சம் பழத்தை தேனுடன் கலந்து ஊறவைத்து சாப்பிடுவதால் மாலைக் கண் நோயிலிருந்து விடுபடலாம்.🔹
நன்றி : 
Ramamurthi Ranganathan to அறுசுவை சைவ உணவுகளும் ஆரோக்கிய குறிப்புகளும்

No comments:

Post a Comment