Wednesday, March 7, 2018

பாதாள மூலி






Image may contain: food





பாதாள மூலி
சித்த மருத்துவத்தில், சப்பாத்திக்கள்ளிச் செடிகளுக்கு, தனி இடம் உண்டு, நச்சு நீக்கவும், "அல் சைமர்" எனும் ஞாபக மறதி வியாதிக்கு சரியான மருந்தாகவும் எல்லாவற்றுக்கும் மேலாக, மனிதர்களை அச்சுறுத்தும் புற்று வியாதிகளைப் போக்கும் மருந்தாகவும், அவை வராமல் தடுக்கும் ஒரு உடல் மெய்க்காப்பாளனாக, விளங்குகின்றன, சப்பாத்திக்கள்ளிச் செடிகள். மிகச்சிறந்த நோய் எதிர்ப்பு மூலிகையான இது இரத்தத்தில் வெள்ளை அணுக்கள் உற்பத்திக்கு பெருந்துணையாகிறது.

சப்பாத்திக்கள்ளியின் முட்களை முழுவதும் நீக்கி, அதன் சதைப்பகுதியை சேகரித்து அத்துடன் சிறிது மிளகுகளைப் பொடியாக்கி கலந்து சாப்பிட, உடலில் தேங்கியிருந்த விஷங்கள் செயல் இழந்து, விஷத்தால் ஏற்பட்ட உடல் நல பாதிப்புகள் யாவும் விலகி விடும். ஆர்த்ரைடிஸ் நோய்க்கு : சப்பாத்திக்கள்ளி சதைப்பகுதியை ஒரு பாத்திரத்தில் விளக்கெண்ணை ஊற்றி அதை சற்று நேரம் சூடாக்கி, ஒரு பருத்தித்துணியில் வைத்து, கைகால் மூட்டுகளில் ஒத்தடம் கொடுத்துவர, 'ருமாட்டிக் ஆர்த்தரைத்டிஸ்' எனும் உடல் கைகால் மூட்டுகளை அதிகம் பாதிக்கும் முடக்கு வாத வியாதியைக் குணப்படுத்தும் பால் மருவை குணப்படுத்த : சப்பாத்திக்கள்ளி சாற்றை, கை கால் மற்றும் உடலில் வைரஸ் கிருமிகளால் உண்டாகும் 'வைரஸ் வார்ட்ஸ்' என்று ஆங்கிலத்திலும், 'பாலுண்ணிகள்' என்று தூய தமிழிலும் அழைக்கப்படும் மருக்களின் மேல் தடவி வர, அவை விரைவில் மறைந்து விடும். காது வலிக்கு : சப்பாத்திக்கள்ளியை சற்றே தீயில் இட்டு, அதன் சாற்றின் சில துளிகளைக் காதில் விட, காதில் உள்ள வலிகள் மற்றும் அனைத்து விதமான காது சம்பந்தமான பாதிப்புகளும் சரியாகி விடும். ஆஸ்துமா : ஆஸ்துமா எனும் இளைப்பு வியாதி உள்ளவர்கள், சப்பாத்திக்கள்ளியை தீயில் இட்டு எடுத்த சாற்றில் சிறிது தேன் கலந்து, தினமும் மூன்று வேளை தொடர்ந்து நீரில் கலந்து பருகி வர, இளைப்பு வியாதிகள் விலகி விடும். இருமலுக்கு : தொடர் இருமல் பாதிப்பு உள்ளவர்கள், சப்பாத்திக்கள்ளி சாற்றில் இந்துப்பு கலந்து, தினமும் இருவேளை நீரில் கலந்து பருகி வர, இரத்தத்தை அதிகரித்து, இருமலால் உண்டான இரத்த சோகையை சரி செய்து, இன்னல்கள் தந்த இருமல் பாதிப்புகளை, உடலில் இருந்து நீக்கி விடும். சிறுநீர் பிரியாமல், சிறுநீர்ப்பையில் தேங்கி இருந்து உடலை வருத்தும் பாதிப்பை சரிசெய்ய, தீயில் வாட்டிய சப்பாத்திக்கள்ளியை, அடி வயிற்றில் வைத்து, கட்டி வர, சிறுநீர் பாதிப்புகள் நீங்கி, சிறுநீர் இயல்பான அளவில் வெளியேறும். 

ஹார்ட் அட்டாக் தடுக்கும் : சப்பாத்திக்கள்ளியை உணவில் சேர்த்து வர, அந்த உணவில் உள்ள நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் தாதுக்கள், இரத்த குழாய்களின் செயல்திறனை சரியாக்கி, இரத்த அழுத்த பாதிப்புகள் இல்லாமல் சீரான இரத்த ஓட்டத்தை உண்டாக்குகிறது. இதனால், இரத்தக் குழாய் அடைப்பால் ஏற்படும் ஹார்ட் அட்டாக் பாதிப்புகள் ஏற்படாமல், உடலை பாதுகாக்கிறது. மலச்சிக்கல், கல்லீரல் நோய்களுக்கு : சத்துகளற்ற உணவுகள், மலச்சிக்கல், குடலில் சேர்ந்த நச்சு வாயு போன்ற காரணங்களால் உண்டாகும் பருத்த பெரு வயிறு பாதிப்புகள் சரியாகி, உடல் நலம் தேற, ஐம்பது மிலி சப்பாத்திக்கள்ளி பாலில், ஐந்து கிராம் என்ற அளவில் கடுக்காய் பொடி அல்லது அதன் விதை நீக்கிய தோல் பகுதி இவற்றை நன்கு கலக்கி, ஐந்து அல்லது ஆறு வாரங்கள் நிழலில் உலர்த்தி பொடியாக்கிக் கொள்ளவும். இந்தப் பொடியை சிறிதளவு, கைவிரல் நுனிகளால் எடுத்து, தினமும் காலையில் நீரில் கலந்து பருகி வர, தொல்லைகள் தந்த பெரு வயிறு பிரச்னைகள் விலகி, நீண்ட நாட்களாக ஆறாத உடல் காயங்கள், வயிற்றுப் புண்கள், கல்லீரல் வீக்கம் போன்ற பாதிப்புகள் குணமாகி, உடலும் மனமும் புத்துணர்வாகும். நார்ச்சத்து மிக்க சப்பாத்திக்கள்ளியை, உணவில் சேர்த்து வர, நாள்பட்ட மலச்சிக்கல் சரியாகி, உடல் பொலிவாகும். சப்பாத்திக்கள்ளியின் மஞ்சள் நிறப்பூக்களை அரைத்து கட்டிகளின் மேல் தடவி வர, கட்டிகள் குணமாகும். சப்பாத்திக்கள்ளி பூக்களை, நீரில் காய்ச்சி பருகி வர, வயிற்று வலி, குடல் சார்ந்த பிரச்னைகளை சரிசெய்து விடும். விஷப்பூச்சி கடி பாதிப்பில் இருந்து காக்கும் சப்பாத்திக்கள்ளி வேரை சிறிது மிளகுகளுடன் சேர்த்து நன்கு சுட வைத்து, தினமும் தேனுடன் கலந்து ஓரிரு வேளை சாப்பிட்டு வர, விஷ வண்டு, பூச்சி கடி, பூரான் கடி போன்ற விஷ பாதிப்புகள் நீங்கி விடும். மேலும், விஷம் என்று தெரியாமல் சாப்பிட்ட விஷச்செடிகளின் விஷத்தையும், உடலில் இருந்து போக்கும். சப்பாத்திக்கள்ளியை சற்று சுண்ணாம்பு சேர்த்து நன்கு கலக்கி, உடலில் தேள், தேனீ, குளவி போன்ற விஷப்பூச்சிகள் கடித்த இடத்தில் அடர்த்தியாக தடவி வர, விஷக்கடியினால் தோலில் ஏற்பட்ட வீக்கம், தோல் கன்றிப் போதல் போன்ற விஷத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை, உடலில் இருந்து நீக்கி விடும். சுவைமிக்க சப்பாத்திக்கள்ளி 
மேல் பாகத்தில் அடர் சிவப்பு நிறத்தில் பரவலாகத் தோன்றும் பழங்கள், காண்பதற்கு அழகு மட்டுமல்ல, உண்பதற்கும் சுவையானவை, இந்த பழங்களிலும் முட்கள் மிகுந்து காணப்படும், பழங்களை நடுவில் பிளந்து, கவனமாக முட்களை எடுத்து விட்டு
தொடர் வறட்டு இருமல் உள்ளவர்களிடம் உண்ணக் கொடுக்க, இருமல் சரியாகும். இளமையில் முதுமையடைவதை தடுத்து, கண் பார்வைத்திறனை மேம்படுத்தி, நரம்பு இயக்க ஆற்றலை சரிசெய்யும் இயற்கையாக நீரை சுத்திகரிக்க கிராமங்களில் மக்களுக்கு சிக்கனமான, எளிமையான தண்ணீர் சுத்திகரிப்பானாக செயல்படுகிறது.
சத்துமிக்க உணவான சப்பாத்திக்கள்ளியில் உள்ள நார்ச்சத்து, கரோட்டின், பெட்டாலைன், பொட்டாசியம், கால்சியம் போன்ற தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் மனிதரின் உடலுக்கு நிவாரணம் தரும் வீரியத்துக்கு, காரணமாக அமைகின்றன. சப்பாத்திக்கள்ளியின் சதைப்பகுதியை, உணவில் சேர்த்து வர, அதில் அடங்கியுள்ள வேதிப்பொருட்கள், உடல் முழுவதும் செயல்பட்டு, உடலில் புற்று பாதிப்புகளை உருவாக்கக் கூடிய நச்சுக் கிருமிகளை அழித்து வெளியேற்றும் வல்லமை மிக்கது.

சப்பாத்திக்கள்ளி உடலில் உள்ள கொழுப்புகளை கரைத்து, உடல் எடையைக் குறைத்து, உடல் வீக்கத்தை சரியாக்கி, உடலின் சீரண உறுப்புகள் வலுவுடன் இயங்க துணையாகிறது. எலும்புகளின் வளர்ச்சிக்கு துணையாகி, பற்களின் வியாதிகளை போக்குகிறது.
SOURCE : 
Chandrasekar Rengaraj shared Ambuli's post to the group: Siddha Portal சித்தா தளம்., 
Ambulito
 
நாட்டு மருந்து

No comments:

Post a Comment