Tuesday, July 17, 2018

இஞ்சி கேரட் ஜூஸ்

உடலில் தேங்கி இருக்கும் கெட்ட கொழுப்புக்களை 24 மணிநேரத்தில் வெளியேற்ற இதைக் குடிங்க
இஞ்சி கேரட் ஜூஸ் தயாரிப்பு முறை :
எத்தனை கிளாஸ் வேண்டுமோ அதற்கேற்ப கேரட் எடுத்துக் கொள்ளுங்கள். இங்கே ஒரு கிளாஸ் இஞ்சி கேரட் ஜூஸ் செய்யும் முறை விளக்கப்பட்டிருக்கிறது.

ஒரு கேரட் எடுத்து நன்றாக தோல் நீக்கி சுத்தம் செய்து கொள்ளுங்கள். பின்னர் அதனை சிறிது சிறுதாக நறுக்கி அரைத்து பேஸ்டாக்க வேண்டும்.பின்னர் அதில் ஒரு இன்ச் அளவுள்ள இஞ்சியை சேர்த்து அரைக்க வேண்டும்.
அதனை அப்படியே கிளாஸில் ஊற்றலாம். அல்லது வடிகட்டியும் ஊற்றலாம்.இஞ்சியை அப்படியே அரைப்பதற்கு பதிலாக இஞ்சிச் சாறு எடுத்தும் சேர்க்கலாம். உடன் ஒரு ஸ்பூன் தேன் மற்றும் சிறிதளவு மிளகுத்தூளைச் சேர்த்து பருகலாம். (வெள்ளைச் சர்க்கரை, கூடுதலான தண்ணீர் சேர்க்க வேண்டாம்.)
கண்கள் :
கேரட்டில் இயற்கையாகவே பீட்டா கரோட்டீன் நிறைந்து காணப்படும்.

இவை நம் கண்களுக்கு மிகவும் நல்லது. உடன் இஞ்சியும் சேர்ந்திருப்பதால் அதிலிருக்கும் ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் நச்சுக்களை வெளியேற்ற உதவிடும்.
இருமலுக்கு :
சாதரண காய்ச்சல் மற்றும் இருமலைப் போக்குவதில் முக்கியப் பங்காற்றுகிறது. இதில் சேர்க்கப்பட்டிருக்கும் இஞ்சி மற்றும் மிளகுத்தூள் ஆரம்ப காலத்தில் மருத்துவத்திற்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. வீட்டு மருத்துவத்திலும் அவை முக்கியப் பங்காற்றுகின்றன. காய்ச்சலை ஏற்படுத்தக்கூடிய பாக்டீரியாவிடமிருந்து நம்மை பாதுகாப்பதால் நோய்கள் நம்மை அண்டாமல் பார்த்துக் கொள்ளலாம்.

புற்றுநோய் :
உலகையே ஆட்டி படைத்துக் கொண்டிருக்கும் ஓர் கொடிய நோய் இது. ஆரம்ப நிலையில் கண்டுபிடித்தால் சிகிச்சைகளை மேற்கொண்டு காப்பாற்றி விடலாம் என்றாலும் அதனால் ஏற்படுகிற பின் விளைவுகள் தான் நமக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது.

நம் உடலில் உள்ள செல்களை சுறுசுறுப்பாக இயக்கவும் புற்றுநோய் தாக்காமல் நம்மை காக்கவும் இந்த சாறு உதவுகிறது.
ஆர்த்ரைட்டீஸ் :
ஆர்த்ரைட்டீஸ் பிரச்சனை தாக்காமலிருக்க இந்த இஞ்சி கேரட் சாறு பெரிதும் உதவிடும். இஞ்சியில் இருக்கக்கூடிய சத்துக்கள் இயற்கையாகவே மூட்டு வலியை குறைக்கும் ஆற்றல் உள்ளது.

இதயம் :
இந்தச் சாறு உங்களுடைய இதய ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது. இதில் ஏரளாமன மினரல்கள் இருக்கின்றன. இவை தொடர்ந்து குடித்து வந்தால் நம் உடலில் வேதியல் மாற்றங்களை செய்து இதயம் தொடர்பான பிரச்சனைகள் வராமல் தடுத்திடும்.

ஃபோலிக் அமிலம் :
கர்ப்பிணிகளுக்கு இந்த ஃபோலிக் அமிலம் மிகவும் அத்தியாவசியமான ஒன்று. ஏனென்றால் குழந்தையின் உடல் ஆரோக்கியத்திற்கும் வளர்ச்சிக்கும் இது முக்கியப்பங்காற்றுகிறது.

கர்ப்பிணிகள் இந்தச் சாறை குடித்தால் அவர்களுக்குத் தேவையான ஃபோலிக் அமிலம் கிடைத்திடும். மருத்துவ ஆலோசனையுடன் தினமும் தொடரலாம்.
வயிற்றுப் பிரச்சனைகள் :
வயிறு தொடர்பான பிரச்சனைகள் நீக்குவதில் இஞ்சி முக்கியப்பங்காற்றுகிறது. அதோடு வயிற்றில் சேரும் வாயுக்களையும் இவை நீக்கிடும். வயிறு உப்புசம், அஜீரணம் போன்ற கோளாறுகளை உடனே தீர்க்க இந்த ஜூஸ் குடிக்கலாம்.

மைக்ரேன் :
இந்தச் சாறு மைக்ரேன் வலிக்கும் மாதவிடாய் வலிக்கும் தீர்வாக இருக்கும். தினமும் குடித்து வந்தால் அந்த வலி ஏற்படாமல் தடுத்திட முடியும்.

ஆஸ்துமா :
ஆஸ்துமாவிற்கான வீட்டு மருத்துவத்தில் இஞ்சி இடம்பெற்றிருக்கும். கேரட் மற்றும் இஞ்சி, பெப்பர் ,தேன் ஆகியவை கலந்திருக்கும் இந்த சாற்றினை தினமும் குடித்து வந்தால் ஆஸ்துமா வராமல் தடுக்கலாம்.

ஸ்பர்ம் :
உடல் ஆரோக்கியத்திற்கு உதவுவதுடன் உடலுறவு சார்ந்த பிரச்சனைகளுக்கும் இது முக்கியப் பங்காற்றுகிறது. கேரட்டில் இருக்கக்கூடிய தாதுக்கள் இதற்கு உதவுகின்றன.

இவை ஆண்களின் விந்தணு உற்பத்திக்கு முக்கிய பங்காற்றுகிறது.
நன்றி : ராஜாசேட் - நாட்டு மருந்து  

No comments:

Post a Comment