Tuesday, October 23, 2018

பழங்கள்

நிறைய பேருக்கு தெரியாத விஷயம் என்னவென்றால் நமது மூளை சுறுசுறுப்பாக வேலை செய்ய அதிகம் உதவுவது பழங்கள்தான். தினமும் பழங்கள் சாப்பிட்டால் நமது மூளைக்கு நேர்மறை அதிர்வுகளைத் தருகின்றன.
சித்தர்களும் காய் கனிகளையே பல நாட்கள் உண்டு நீண்ட ஆயுளுடன், திடகாத்திர ஆரோக்கியத்துடன் வாழ்ந்திருந்ததை நமது வரலாறு கூறும்.
பழங்கள்... நார்ச்சத்து, நீர்ச்சத்து, வைட்டமின் சி நிரம்பியவை. அதோடு நமது திசுக்களை அழித்துவிடாமல் பாதுகாக்கும் பைடோ கெமிக்கல்ஸ் நிரம்பியவை. அன்றாடம் பழங்களைச் சாப்பிடுவதால் புற்று நோய், இருதய நோய், மாரடைப்பு, மறதி, காட்ராக்ட் மற்றும் மூப்பில் வரக்கூடிய பல நோய்களைத் தடுக்கலாம். பழங்களைச் சாப்பிடுவதால் நமக்கு மன அழுத்தம் ஏற்படாமல் தடுக்கலாம்.

எந்தவகையான பழங்கள் என்றாலும் சரி ஒரு கப் அளவு பழங்களை அதாவது 250 கிராம் அளவிற்கு தினமும் சாப்பிடுவதை கட்டாயமாக வைத்துக் கொள்ளுங்கள்.
ரத்த சோகைக்கு :
அன்னாசி பழத்தில் வைட்டமின் ...பி உயிர்சத்து அதிக அளவில் உள்ளது. அது உடலில் ரத்தத்தை விருத்தி செய்வதாகவும், உடலுக்கு பலத்தை தருவதாகவும் இருப்பதோடு பித்தம் சம்மந்த அனைத்து கோளாறுகளும் நீங்கும். அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை நோய் குணமாகும்.
மலச்சிக்கலுக்கு :
மாதுளம் பழத்திற்கு மலத்தை இளக்கும் சக்தி உணடு. மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலிலிருந்து குணம் பெறலாம். வறட்டு இருமல் உள்ளவர்கள் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மாதுளம் பழம் சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும்.
மாதுளம் பழத்தின் தோலை அம்மியில் மை போல் வைத்து அரைத்து அதில் எலுமிச்சம்பழம் அளவு எடுத்து தயிரில் கலந்து மூன்று நாள் காலையில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால்
பிற மருந்துகள் கொடுத்தும் குணமாகாத சீதபேதி உடன் நிற்கும்.
ஜீரண நோய்களுக்கு
மூலநோய் இருப்பவர்கள் தினமும் வாழைப்பழம் ஒன்றை சாப்பிட்டு வந்தால் மூல நோயிலிருந்து விடுபடலாம். மேலும் தினமும் இரவு உணவிற்கு பின் ஒரு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் நல்ல ஜீரண சக்தி உண்டாகும்.
எந்த வயதினராக இருந்தாலும், கண்பார்வை குறைய ஆரம்பித்தவுடன் அவர்களுக்கு தினசரி உணவில் செவ்வாழைப்பழம் வேளைக்கு ஒன்று வீதம் 21 நாட்களுக்கு கொடுத்து வந்தால் கண் பார்வை கொஞ்சம் கொஞ்சமாக தெளிவடைய ஆரம்பிக்கும்.
குழந்தை பேறின்மைக்கு :
திருமணமாகி பல ஆண்டுகளாகியும் கர்ப்பமே தரிக்கவில்லை என்று மனம் வருந்தி கொண்டிருக்கும் தம்பதியர்கள் செவ்வாழை பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் உயிர் சக்தி அணுக்கள் போதுமான அளவில் பெருகி கருத்தரிக்க வாய்ப்பாகும்.
வறட்டு இருமலுக்கு :
வறட்டு இருமல் இருந்தால், எலுமிச்சை சாறுடன் சிறிய இஞ்சி துண்டை நறுக்கிப் போட்டு கொதிக்க வைத்து ஆற வைத்து வடிகட்டி அந்த நீரை குடியுங்கள். இதேபோல் தொடர்ந்து காலை மாலையாக மூன்று தினங்கள் கொடுத்து வந்தாலும் இருமல் நின்று விடும்.
தூக்கமின்மைக்கு :
ஆரஞ்சில் வைட்டமின் ஏ அதிகமாகவும், வைட்டமின் சி, பி-2ம் உள்ளன. மேலும் இதில் சுண்ணாம்புச்சத்தும் மிகுந்து காணப்படுகிறது. இரவில் தூக்கமில்லாமல் கஷ்டப்படுபவர்கள் படுக்க போவதற்கு முன்பாக அரை டம்ளர் ஆரஞ்சு பழச்சாறுடன் சிறிது சுத்தமான தேனை சேர்த்து சாப்பிட இரவில் நன்றாக தூக்கம் வரும்.
பல் தொடர்பான பாதிப்புகள் :
பல் சதை வீக்கம், சொத்தை விழுந்து வலி ஏற்படுதல், பல் வலி, பல் ஈறுகளில் ரத்தக் கசிதல் போன்ற பிரச்சனை இருப்பவர்கள் ஒரு வாரம் அரை டம்ளர் ஆரஞ்சு பழச்சாறை கொப்பளித்து விழுங்க உடன் நிவாரணம் பெறலாம்.
மாதவிடாய் பாதிப்புகளுக்கு :
பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகளுக்கு திராட்சை சாறு ஒரு சிறந்த வரப்பிரசாதமாகும். மாத விலக்கு தள்ளிப்போதல், குறைவாக வும், அதிகமாகயும் போதல் போன்ற குறைபாடுகளுக்கு கருப்பு திராட்சை சாறு அரை டம்ளரில் சிறிது சர்க்கரை சேர்த்து தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் முறையான கால இடைவெளியில் மாதவிலக்கு வெளியாகும். திராட்சை சாற்றினை தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும்.
இரைப்பை புண்
வயிற்றில் இரைப்பை, குடல்களில் புண் ஏற்பட்டிருந்தால், வாயிலும் புண் ஏற்படும். வாயில் உள்ள புண்ணை ஆற்ற வேண்டுமானால் முதலில் வயிற்றில் உள்ள புண்ணை ஆற்ற வேண்டும். தினமும் ஒரு வாழைப் பழம் காலை இரவு என் இரு வேளை சாப்பிட்டால் இரைப்பை புண் ஆறும்.
நரம்பு சம்பந்த கோளாறுகளுக்கு :
தினமும் இரவில் படுக்க செல்லும் முன்னர் ஒரு டம்ளர் காய்ச்சிய பசும் பாலையும், இரண்டு பேரீட்ச்சம் பழத்தினையும் உண்டு வந்தால் உடல் நல்ல பலம்பெறும். புதிய
ரத்தமும் உண்டாகும். தோல் பகுதிகள் மிருதுவாகவும், வழுவழுப்பாகவும் இருக்கும். கண் சம்மந்தமான கோளாறுகளும், நரம்பு சம்மந்தமான கோளாறுகளும் நீங்கும்.
தொற்று நோய் கிருமிகள் நம்மை அணுகாது.

சரும வியாதிகளுக்கு :
சொறி, சிரங்கு, ரத்த சோகை இருப்பவர்கள் கொய்யாப்பழம் சாப்பிட்டு இவற்றை குணப்படுத்தி கொள்ளலாம். விஷ கிருமிகளை கொல்லும் சக்தி கொய்யாப் பழத்திற்குஇருப்பதால் வியாதியை உண்டு பண்ணும் விஷக் கிருமிகள் ரத்தத்தில் கலந்தால் அதை உடனேயே கொன்று விடும்.
கல்லீரல் கொழுப்பு
கல்லீரல் கொழுப்பு பிரச்சனைக்கு வைட்டமின் சி நிரம்பிய சிட்ரஸ் பழங்கள் உங்களுக்கு கை கொடுக்க காத்திருக்கின்றன.
ஆரஞ்சு அல்லது எலுமிச்சை சாற்றை வெறும் வயிற்றில் நீங்கள் குடித்துப் பாருங்கள். விளைவுகள் உங்களை ஆச்சரியப்படுத்தும்.
மார்பக புற்று நோய்க்கு :
தினமும் இரு அத்திப் பழங்களை சாப்பிட்டால் பெண்களுக்கு வரும் முக்கிய புற்று நோயான மார்பக புற்று நோய் தடுக்கப்படுகிறது. உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும்.
சிறு நீரக கற்கள் இருப்பவர்கள் தினமும் நாவல் பழங்களை சாப்பிடுவது நல்லது. அத்துடன் நாவல் விதைகளை பொடி செய்து தயிருடன் கலந்து சாப்பிட்டால் சிறு நீரக கற்கள் கரையும்.
தைராய்டு பாதிப்பு இருப்பவர்கள் பலாப்பழத்தை சாப்பிடுவதால் தைராய்டு ஹார்மோன் சுரப்பது தூண்டப்படுகிறது.எலும்புகள் வலுவடைகின்றன.
மாம்பழம்:
மாம்பழத்தில் தாது உப்புக்கள், நார்ச்சத்து, பீட்டாக்கரோட்டீன், மாவுச்சத்து மற்றும் விட்டமின் சி ஆகியன உள்ளன. இரும்புச் சத்து, பாஸ்பரஸ், கால்சியம் ஆகியவை குறைவாகவே உள்ளது. எனவே, மாம்பழம் சாப்பிடுவதன் மூலம் மலச்சிக்கலை போக்கும், கண்களுக்கும் நன்மையைத் தரும், நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கும். ஆனால் சர்க்கரை நோயாளிகள் உணவுக்கு இடைப்பட்ட நேரத்தில் நாள் ஒன்றுக்கு இரண்டு மட்டுமே சாப்பிட வேண்டும்.
பலாப்பழம்:
பலாப்பழத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக உள்ளது. இதில் ஓரளவு நார்ச்சத்து குறைந்த அளவு புரோட்டீன், இரும்பு, கால்சியம் உள்ளது. இதில் உள்ள பயன்கள் மலச்சிக்கலைப் போக்கும். மாவுச்சத்து நமது உடலுக்குத் தேவை என்று நினைப்பவர்கள் ஒரு நாளைக்கு மூன்று சுளைகளைச் சாப்பிடலாம். சர்க்கரை நோயாளிகள் இதனை தவிர்க்கவும்.
வாழைப்பழம்:
வாழைப்பழத்தை இதய நோயாளிகள் சாப்பிடலாம். உடல் எடை குறைவாக உள்ளவர்கள் ஒரு நாளைக்கு இரண்டு பழங்கள் வீதம் சாப்பிடலாம். வாழைப்பழம் நல்ல ஜீரண சக்தியைக் கொடுக்கும், மலச்சிக்கல் மற்றும் மூலநோய் பிரச்சனை இருந்தால் அதனையும் குணமாக்கும். கண் பார்வை குறைவது போன்று இருந்தால் செவ்வாழைப் பழத்தை 21 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் கண் பார்வைக்கு எந்த பிரச்சனையும் ஏற்படாது.
ஆரஞ்சு பழம்
ஆரஞ்சு பழத்தை அதிக அளவில் முக அழகிற்கு பயன்படுத்துவர். ஏனெனில் அதில் அதிக அளவு விட்டமின் எ, விட்டமின் சி, விட்டமின் பி2 ஆகியன உள்ளன. இரவில் தூக்கம் இல்லாமல் இருப்பவர்கள் அரை டம்ளர் ஆரஞ்சு பழச்சாற்றுடன் சிறிது தேன் கலந்து சாப்பிட வேண்டும்.
மாதுளை பழம்:
மாதுளையில் நார்ச்சத்து, நீர்ச்சத்து, மாவுச்சத்து என அதிக அளவுச் சத்துக்கள் உள்ளன. இந்தப் பழத்தை இதய நோயாளிகள் சாப்பிடலாம். உடலில் உள்ள நச்சுக்களை இது வெளியேற்றும் எனவே நாவறட்சியைப் போக்கி உடல் சோர்வை நீக்கும். முக்கியமாக கர்ப்பிணிப் பெண்கள் மாதுளையை தாராளமாக சாப்பிடலாம் என்றுக் கூறுவர். வறட்டு இருமலைப் போக்கி பித்தம் தொடர்பான பிரச்சனைகளையும் போக்கும். ஆனால் சிறுநீரக நோயாளிகள் மாதுளையை சாப்பிடக் கூடாது.
திராட்சைப்பழம்
நமது உடலுக்கு ஆற்றல் தரக்கூடிய திராட்சையில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய சத்துக்கள் உள்ளன. இவ்வாறு பல சத்துக்கள் இருந்தாலும் மருந்து மாத்திரையை சாப்பிடுபவர்கள் இதனை எடுத்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில் அமிலத்தன்மை இதில் அதிக அளவில் உள்ளது. அதேபோன்று அசிடிட்டி, வாய்வுத்தொல்லை, நெஞ்செரிச்சல், அல்சர் பிரச்சனை உள்ளவர்களும் இதனை சாப்பிடக் கூடாது. திராட்சையை கொட்டையோடு சாப்பிட்டால் உடலில் நார்ச்சத்து சேரும். கருப்புத் திராட்சை ஜுஸில் சிறிது சர்க்கரை சேர்த்துக் குடித்தால் நன்றாக பசி ஏற்படும் மற்றும் மந்தநிலை சரியாகும்.
அன்னாசி பழம்
நார்ச்சத்து, பொட்டாசியம், பாஸ்பரஸ், கால்சியம் ஆகிய சத்துக்கள் உள்ள பழம் தான் அண்ணாச்சி பழம். அன்னாசி பழம் நமது உடலுக்கு நல்ல ஆற்றலைக் கொடுக்கும். அதுமட்டுமின்றி மலச்சிக்கல் வராமல் தடுக்கும்.
சர்க்கரை நோயாளிகள் இந்த பழத்தை சாப்பிடக் கூடாது. ஏனெனில் இதில் சர்க்கரையின் அளவு அதிகமாக உள்ளது.
கொய்யா பழம்
பாலூட்டும் தாய்மார்கள் அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டிய பழம் கொய்யாப்பழம். கொய்யா பழத்தில் விட்டமின் சி மற்றும் நார்ச்சத்து அதிகமாகவே உள்ளது. நெல்லிக்காய் சாப்பிட முடியாதவர்கள் கூட கொய்யா பழத்தை தாராளமாக சாப்பிடலாம். முக்கியமாக வளரும் குழந்தைகளுக்கு கொய்யா பழத்தைக் கொடுத்தால் அவர்களது எலும்பு வலிமையாக இருக்கும். சொரி, சிரங்கு, இரத்த சோகை இருந்தால் கொய்யா பழத்தை சாப்பிட்டு வரும்போது சீக்கிரத்தில் குணமாகும்.
பப்பாளி பழம்
பப்பாளி பழத்தில் விட்டமின் சி, பீட்டாக்கரோட்டீன், நார்ச்சத்து ஆகியன அதிகமாகவே உள்ளது. இந்த பப்பாளி பழத்தை முக்கியமாக குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். ஏனென்றால் குழந்தைகளுக்குக் கொடுக்கும் போது அவர்களது உடல் மற்றும எலும்பு நன்றாக வளரும். நரம்புத்தளர்ச்சி இருப்பவர்கள் பப்பாளி பழத்தில் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் விரைவில் குணமாகும். அதுமட்டுமின்றி கல்லீரல் வீக்கம் குறையும், சருமம் பொலிவு பெரும்.
சப்போட்டா பழம்
சப்போட்டா பழத்தில் மாவுச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம் ஆகியன அதிக அளவில் உள்ளது. எனவே, இது நமது உடல் இரத்த ஓட்டத்திற்கு மிக மிக நல்லது. ஆனால் சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் இந்தப் பழத்தை குறைவாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக சர்க்கரை நோயாளிகள் இந்த பழத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
பதிவு : மூலிகைகளும் பயன்களும்

No comments:

Post a Comment