Tuesday, November 25, 2014

கோபத்தை கையாள எளிய வழிகள்

கோபத்தை தவிர்த்து சிரித்து வாழ்வோம்
1. கோப உணர்ச்சிகள் அதிக இரத்த அழுத்தம், கண் சிவப்பு அமில சுரப்பு, அல்சரை உண்டு பண்ணும் & மிருக குணத்தை உச்ச நிலைக்கு உயர்த்திடும்.
2. தண்ணீர் குடித்திட கோபம் தணியும்.
3. ஒன்று முதல் பத்து வரை எண்ணிடலாம்
4. கோபத்தை இறைவனிடம் சமர்ப்பிக்கலாம்.
5. கோபப்படும் இடம், நபரிடம் இருந்து விலகிச் செல்லலாம்.
6. கோபத்திற்கு காரணமாக சொல், செயல், எண்ணத்தில் இருந்து வேறு செயல் செய்தல்.
7. கோபத்தின் போது முகம் விகாரமாகி, அன்பு, சாந்தம் குறைவதை கண்ணாடி மூலம் உணர்ந்து குறைத்தல்.
8. கோபத்திற்கான காரணத்தை ஒரு பேப்பரில் வரிசையாகப் பட்டியல் இட்டு எழுத கோபம் குறையும்.
9. தியானம், சாந்தி ஆசனம் செய்ய கோபம் குறையும்.
10. வயிறு ஈரத்துணிப் பட்டி, கண் பட்டி, நெற்றிப்பட்டி போடலாம்.
11. நீர்வீழ்ச்சி, ஷவர் பாத், தொட்டிக் குளியல் செய்ய கோபம் குறையும்.
12. தொடர்ந்து இயற்கை உணவுகளை, இயன்ற வரை சாப்பிட்டுப் பழக கோபம் படிப்படியாகக் குறையும்.
13. பழச்சாறுகள், இயற்கை உணவுச் சாறுகள் குடித்து கோபத்தை குறைக்கலாம்.
சிரிப்பு மருந்து
ஒருவர் சிரித்துச் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தாரென்றால், அவரைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்? மனிதர் கொடுத்து வைத்தவர்! தொட்டதெல்லாம் துலங்குகிறது. கவலையில்லாமல் இருக்கிறார், என்பார்கள்.
அதேபோல் ஒருவர் சிடுசிடு என்றோ கடுகடு என்றோ பேசினால் என்ன நினைப்பார்கள்? பாவம், இவர். என்ன பாடுபடுகிறார்! வீட்டில் அலுவலில் தொழிலில் என்று ஆயிரத்தெட்டு பிரச்னைகளை வைத்துக்கொண்டு மனிதர் தள்ளாடுகிறார். அதுதான் சிடுசிடு என்று வெடிக்கிறார் என்பார்கள்.
ஒருவரின் அன்றாட நடவடிக்கை அவரின் வாழ்க்கை நிலையை மனநிலையை அறியக்கூடியதாக இருக்கறது.
ஒருவரின் மனநிலைக்கும் அவரின் மகிழ்ச்சிக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. மனத்தில் மகிழ்ச்சி குறையக்குறைய உடல் நலமும் பாதிக்கத் தொடங்கும்.
வாழ்க்கையில் நிகழும் நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றும் அவரவர் மனத்தைப் பாதிக்கக்கூடியதாக இருக்கும். அவை, மகிழ்ச்சியை அல்லது துன்பத்தைத் தரக் கூடியவையாக அமையும்.
அதனால், வாழ்க்கையில் நிகழும் நிகழ்ச்சிகள் மனத்தைப் பாதிக்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு பாதித்தாலும் அவற்றிலிருந்து விடுபட முயல வேண்டும்.
ஒரு தொழிலில் லாபம் ஈட்ட வேண்டும் என்பதற்காகச் சில உத்திகளைக் கையாண்டு வெற்றி பெறுவதைப்போல், வாழ்க்கையில் இன்பமுண்டாகவும் சில உத்திகள் இருக்கின்றன. அவற்றைப் பயன்படுத்த முன்வந்தால், வாழ்வே மகிழ்ச்சிதான்!
செய்யும் செல்கள் சீராகவும், உடலும் மனமும் வளமாகவும் கவலைகள் கழிய வாழ்க்கை உத்திகள் வகை செய்யும். வாழ்க்கையில் சென்றடைய வேண்டிய தூரம் அதிகம். வாழ்க்கைப் பாதைகளோ பல. எந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்தால் எளிதாகச் சென்றடையலாம் என்பதைத் தீர்மானிக்க வேண்டியதும் அவரவர்களே!
வாழ்க்கையில் எது எளிதாக இருக்கிறதோ அதை நாடிச் செல்வது, மனத்தின் இயல்பு. மனத்துக்கு எளிதாக இருப்பது, இரண்டு. ஒன்று திருப்தி, மற்றொன்று பேராசை. இந்த இரண்டு மனத்தின் இரண்டு பக்கங்கள்.
மனத்தின் ஒரு புறத்தில் பேராசை இருந்தால், அதன் மறுபுறத்தில் மகிழ்ச்சியும் திருப்தியும் இருக்கிறது என்று பொருள்.
திருப்தியை மகிழ்ச்சியை விரும்புகின்ற மனம், அந்தப் பெறுவதற்காகக் கடுமையாக உழைக்கும். அதனால் மனத்தில் இயல்பு மாறி என இறுக்கம், மனச்சோர்வு, மன உளைச்சல், மனப்புழுக்கம் என்பவை தோன்றும்.
இவற்றைப் போக்கிவிட்டால், மனத்தின் உழைப்புக்கு உரிய திருப்தியும் மகிழ்ச்சியும் கிடைக்கும்.
மன இறுக்கம், மனச்சோர்வு, மன உளைச்சல், மனப்புழுக்கம் என்பவை எதனால் எப்படித் தோன்றியது? எப்படிப் போக்குவது? என்று தெரியாமல் குழப்பிப் போகின்றவர்கள், பலர்.
இந்த மன இயல்பு மாற்றத்துக்கு மா மருந்தாக இருப்பது, சிரிப்பு. சிரிப்புக்குச் செலவு செய்வாருண்டா?
வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும்! என்றால் வாய் மூடிக்கிடக்கலாமா?
சிரிப்பைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.
சிரிப்பு பல வகை. அவை,
நமுட்டுச் சிரிப்பு
அவுட்டுச் சிரிப்பு
வெடிச்சிரிப்பு
புன்சிரிப்பு
வெறிச்சிரிப்பு
கபடச்சிரிப்பு
அசட்டுச்சிரிப்பு
ஆணவச்சிரிப்பு
அகந்தைச்சிரிப்பு
கள்ளச் சிரிப்பு
காதல் சிரிப்பு
என்று கூறப்பட்டாலும், மகிழ்ச்சிக்காகச் சிரிக்கும் சிரிப்பே சிரிப்பு.
நகைச்சுவைக்காகவும் பிறரைக் கேலி செய்வதற்காகவும் சிரிப்பு பயன்படுகிறது. சிலரது நகைச்சுவை, சிந்தையைத் தூண்டக்கூடியதாகவும்அறிவுக்கு விருந்தாகவும் இருக்கும். சிலரது நகைச்சுவைப் பொருள் பொதிந்ததாகவும் இருக்கக் காணலாம்.
நகைச்சுவையினால் ஏற்படக்கூடிய சிரிப்பு மனத்துக்கு ஊட்டமாக அமைகிறது. மனத்தின் சுமையைக் குறைக்கிறது. உடலுக்கு ஆரோக்கியத்தை, புத்துணர்ச்சியைத் தருகிறது.
சிரிக்கச்சிரிக்க மலரும் தாமரை போல், மனம் மணம்ம வீசத் தொடங்குகிறது. மனத்துக்கு என்று இருக்கும் ஒரே மருந்து சிரிப்பு மட்டுந்தான். அந்தச் சிரிப்பு மருந்து கசப்போ புளிப்போ உவர்ப்போ கார்ப்போ துவர்ப்போ இல்லை. சிரிப்புக்கு என்றிருப்பதும் ஒரே சுவை. அது இனிப்பு. இனிப்பு பிடிக்கும் போது சிரிப்பு பிடிக்காமல் இருக்குமா? சிரியுங்கள்.
மருந்துகளை ஆராய்ச்சி செய்த ஆராய்ச்சியாளர்கள், மருந்துகளுக்கெல்லாம் மருந்தாக இருப்பது சிரிப்பு மருந்து என்று கூறியிருக்கின்றார்கள். காரணம், சிரிப்பு என்னும் மருந்தே நோய்களை விரைவாகக் குணப்படுத்துகிறது. நோய்களைப் போக்கவும் மீண்டும் அவை வராமலிருக்கவும் நோய் எதிர்ப்புச் சக்தியை உடலுக்குத் தருகிறது சிரிப்பு.
உடம்பிலுள்ள நரம்புகள் ஒரு வகையான ரசாயனத்தை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. அதற்கு சிநிஸிறி என்று பெயரிட்டுள்ளார்கள். என்னும் ரசாயனம் அதிக அளவில் உற்பத்தியாகி நோய் எதிர்ப்புச் சக்தியை ஊக்குவிக்கிறது. மேலும், நாம் சிரிக்கும்போது, மூக்கிலுள்ள சளியில் 'இம்யூனோகுளோபுலின்&ஏ’ (மினீனீuஸீஷீரீறீஷீதீuறீவீஸீ - கி) என்னும் நோய் எதிர்ப்புப் பொருள் அதிகரிக்கிறது. அதனால், பாக்டீரியா, வைரஸ், புற்றுநோய்த் திசுக்கள் உடலுக்குள் சென்று விடாதவாறு தடுக்கப்படுகிறது.
கொழுப்பின் மிகுதியினால் மாரடைப்பு என்னும் நோய் மரணத்தைத் தருவதாக இருக்கிறது. அவ்வாறான நிலை ஏற்படாதிருக்க வேண்டுமானால், நாள் தோறும் குறைந்த அளவு ஒரு மணி நேரமாவது, சிரித்துப்பழகவேண்டும். நகைச்சுவைப் படங்கள், வசனங்கள், கதைகள், சொற்பொழிவுகள் போன்றவற்றைக் கேட்டுக் கேட்டுச் சிரித்துப் பழகவேண்டும்.
உடம்பில் நோயெதிர்ப்பு என்னும் சக்தியாகச் செயல்படுகின்ற வெள்ளை அணுக்களுக்கு மிகவும் விருப்பமானது சிரிப்பு. சிரிப்பைக் கேட்டால் வெள்ளை அணுக்கள்அதிக அளவில் உற்பத்தியாகின்றன.
சிரிப்பினால், ரத்தம் தூய்மையாகிறது. ரத்த அழுத்தம் குறைகிறது. நுரையீரல் நன்கு செயல்படுகிறது. சிரிப்பினால், 'என்சிபேலின்ஸ்’ என்னும் ஹார்மோன் சுரக்கிறது. அது தசைகளில் ஏற்படும் வலிகளை நீக்குகிறது. ஸெப்டிக் அல்சர் என்னும் இரைப்பைப் புண் குணமாகிறது.
மூளை நரம்புகள் சிறப்பாகச் செயல்படத் தொடங்குகின்றன. எனவே, நோய் வராமல் தடுக்கவும் வந்த நோயிலிருந்து விடுபடவும் சிரித்துப் பழகுங்கள்.
நகைச்சுவையினால் நாலாயிரம் நன்மைகள் இருக்கட்டும். ஆனால், நான் சிரிப்பதாக இல்லை! என்று இருப்பவர்களைக் கண்டாவது, சிரிக்கலாம் அல்லவா?
நகைச்சுவை உணர்வு உள்ளவர்களுக்கு நண்பர்கள் வட்டம் பெரிதாக இருக்கும். உறவு பலமாக இருக்கும்.
புன்னகை என்பது ஆன்மாவின் உருவம். கண்ணுக்குத் தெரியாமல் உள்ளுக்குள் மறைந்திருக்கும் ஆன்மா, தனது அழகை வெளிப்படுத்தும்போது, புன்னகை தோன்றுகிறது. ஆன்மா உடலுக்கு எவ்வளவு முக்கியமோ அதைப்போல உடல் நலத்துக்கு ஆன்மா வழங்கும் புன்னகை முக்கியம்.
சிரிப்பினால், உடல் நலம் பெறும். சிரிப்பினால் செல்வம் பெருகும். சிரிப்பினால், இந்த உலகம் உள்ளங்கைக்குள் வரும் என்பதை நம்பினால், சிரியுங்கள். நம்பாமலும் சிரியுங்கள்.

No comments:

Post a Comment