Wednesday, December 28, 2016

ஊட்டச்சத்தை கிரகிக்க உதவும் நெல்லி

துவர்ப்புச் சுவை மிகுந்தது பெருநெல்லிக் காய். மற்ற காய்களை விடவும் சிறிதாக இருந்தாலும் இந்தக் காய் சத்து நிறைந்தது. விலை மலிவாகவும் கிடைக்கும் இதை நாம் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை.
பெருநெல்லிக் காய் தரும் பலன்கள் என்ன?
> பெருநெல்லிக்காயை ஊறுகாயாகவோ, உப்பு வைத்தோ சாப்பிடுவதைக் காட்டிலும், தனியாகச் சாப்பிடுவதே சிறந்தது. தனியாகச் சாப்பிட விரும்பாத பட்சத்தில் சாலட், சட்னி போன்றவற்றில் கலந்து சாப்பிடலாம்.
> பெருநெல்லிக்காய் வைட்டமின் சி சத்து நிறைந்து காணப்படுகிறது.
> உணவு செரிமானம் அடையப் பெருநெல்லிக்காய் உதவுகிறது. ஊட்டச்சத்துகளை உட்கிரகிக்கவும், உடல் அவற்றைத் தன்வயமாக்கிக்கொள்ளவும் நெல்லிக்காய் பெரிதும் உதவுகிறது.
> நெல்லிக்காயைத் தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் உடலில் உள்ள நச்சுகள், சிறுநீர் வழியாக வெளியேற உதவுகிறது.
> மாதவிடாய் தசைப்பிடிப்பு, வலிகளைக் குறைப்பதற்கு உதவும் என்று நம்பப்படுகிறது.
நன்றி : நேயா, தி ஹிந்து, December 24, 2016 11:34 IST

No comments:

Post a Comment