Saturday, July 6, 2019

கண் பார்வையை சரிசெய்ய

மனிதருக்கு மட்டுமல்ல உயிரினங்கள் அனைத்திற்குமே முக்கியமான உறுப்பு என்ன என்றால் அது கண்கள்தான். கண்கள் மூலம் தான் நாம் இவ்வுலகத்தை அறிகிறோம்.இத்தகைய சிறப்பு வாய்ந்த கண்களில் ஒரு சில கோளாறுகள் ஏற்படுவதை நிவர்த்தி செய்வது பற்றிய குறிப்புகள் தான் இப்போது நாம் இந்த கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.
நாற்பது வயதை தாண்டும் சமயத்தில் அனைவரும் சந்திக்கும் ஒரு விஷயம் கண்பார்வை மங்குதல் அல்லது கண் காசம் என்றும் இதனை கூறுவார்கள்.நீரழிவு நோயாளிகளை அதிகம் பாதிப்புக்குள்ளாக்குவதும் இந்த கண் நோய்தான்.இந்த கண் பார்வை கோளாறுகளை சரிசெய்ய நாம் செய்யவேண்டியது ஒரே ஒரு விஷயம்தான்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளின்படி தைலம் போன்ற காய்ச்சி எடுத்து வைத்துக் கொண்டு வாரம் மூன்று முறை தலையில் தேய்த்து வந்தால் கண் பார்வைக் கோளாறுகள் நீங்கி பார்வை தெளிவாகும்.
கண்கள் சிவந்து போதல், அரிப்பு, பூ விழுதல் (கேட்ராக்ட்) போன்ற நோய்களையும் இந்த தைலம் குணப்படுத்தும்.
தேவையான பொருட்கள்
நல்லெண்ணெய் – 100 மில்லி லிட்டர் , கீழாநெல்லி சாறு – 100 மில்லி லிட்டர் , பொன்னாங்கண்ணிச் சாறு – 100 மில்லி லிட்டர் , அதிமதுரம் – 5 கிராம் பல அற்புத பலன்கள் கொண்ட கீழாநெல்லி கீரையை உபயோகித்து இதற்கான மருந்தை தயார் செய்ய வேண்டும்.


கீழாநெல்லி பித்தத்தை குறைக்கும் மற்றும் கிருமி நாசினி. காச நோய் வராமல் பாதுகாக்கும். ஈரல் கல்லீரலுக்கு கீழாநெல்லி அருமருந்து.தேவையான அளவிற்கு கீழாநெல்லியை எடுத்து சிறிது நீர் விட்டு அரைத்து சாறு போல எடுத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்ததாக பொன்னாங்கண்ணி கீரை உடலுக்கு வனப்பு தரும், முடிக்கு பலம் தரும், கண்களுக்கு மிகவும் நல்லது.இந்த பொன்னாங்கண்ணி கீரையை சிறிதளவு எடுத்துக்கொள்ள வேண்டும். முன்பு செய்தது போல சிறிது நீர் விட்டு அரைத்து சாறு போல எடுத்துக் கொள்ளவும்.


இதனுடன் தலத்தின் வீரியத்தன்மை அதிகரிக்க அதிமதுரம் சிறிதளவு எடுத்துக் கொள்ளவும்.
அடுத்து தைலம் காய்ச்சுவதற்கு தேவையான பொருள் நல்லெண்ணெய் அதனை 100 மில்லி லிட்டர் அளவில் எடுத்துக் கொள்ளவும்.

முதலில் அடுப்பை பற்ற வைத்து ஒரு வாணலியில் 100 மில்லி லிட்டர் நல்லெண்ணெய் ஊற்ற வேண்டும். அதனுடன் கீழாநெல்லி இலை சாறு மற்றும் பொன்னாங்கண்ணி இலைச்சாறு ஆகியவற்றை ஊற்றி விட வேண்டும். அதிமதுரத்தின் ஒரு துண்டையும் சேர்த்து விட்டு வாணலியை மூடி வைத்து நடுத்தரத் தீயில் வேக விடவும்.


எண்ணெய் நன்கு கொதித்து வந்தவுடன் அடுப்பை அணைக்கவும். ஆறிய பின் காய்ச்சிய கீழாநெல்லி தைலத்தை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்திற்கு மாற்றி விடவும்.இந்த தைலத்தை வாரம் மூன்று முறை தலையில் தேய்த்து சிறிது நேரம் ஊற வைத்து குளித்து வந்தால் கண் பார்வை மங்குதல்,கண் காசம், கண்கள் சிவப்பாதல் போன்றவை குணமாகும்.

தகவல் :https://startamils.com/?p=7556

No comments:

Post a Comment