சமையலறையில் இருக்கும் பிரியாணி இலை, சமையலில் உணவின் மணத்தையும்,
ருசியையும் அதிகரிக்க மட்டுமின்றி, அதன் நறுமணம் பல அரோமாதெரபிகளில் சுவாச
பிரச்சனை மற்றும் சரும பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படுகிறது.
ரஷ்ய ஆய்வாளர் கென்னடி பிரியாணி இலை மன அழுத்தத்தைக் குறைப்பதாக
கண்டறிந்தார். மேலும் இதை எவ்வாறு பயன்படுத்தினால், மன அழுத்தம் நீங்கும்
எனவும் கூறியுள்ளார்.
மனதை ரிலாக்ஸ் அடையச் செய்வதற்கு பிரியாணி இலையை வீட்டின் ஒரு அறையினுள்
ஒரு பாத்திரத்தில் போட்டு 10 நிமிடம் எரிக்க வேண்டும். பின் அந்த அறையிலேயே
10 நிமிடம் இருந்து, அதன் நறுமணத்தை நன்கு சுவாசிக்க வேண்டும்.
பிரியாணி இலையின் நறுமணம் தீங்கு விளைவிக்கும் மன அழுத்த ஹார்மோன்களின்
உற்பத்தியைக் குறைத்து, மனதை அமைதியுடனும், ரிலாக்ஸாகவும் வைத்துக்
கொள்ளும்.
பிரியாணி இலையை வீட்டினுள் எரித்தால், வீட்டில் இருக்கும் துர்நாற்றம்
வெளியேறி, வீடே நல்ல நறுமணத்துடன் இருக்கும். மேலும் இந்த நறுமணம் வீட்டில்
நேர்மறை ஆற்றல்களை உற்பத்தி செய்யும்.
நன்றி : Boldsky | 30th Nov, 2016 12:33 PM
No comments:
Post a Comment