Friday, September 16, 2016

எளிய பாட்டி வைத்தியம்

1) புளியங்கொட்டை தோலை எடுத்து உலர்த்தி இடித்து தூள் செய்து தினமும் பாலில் சேர்த்து குடித்து வர நீர்க்கடுப்பு குறையும்.
2) கவிழ் தும்பை இலையைத் தேன் விட்டு வதக்கி நீரில் கொதிக்க வைத்து காலை, மாலை சாப்பிட்டு வர சூதக வலி தீரும்.
3) பூவரச மர வேர் மற்றும் அதன் பட்டையை எடுத்து கஷாயம் செய்து வாய் கொப்பளித்து வர தொண்டை தொடர்பான அனைத்து நோய்களும் விலகும்.

4) சோம்பு , கொத்தமல்லி,சுக்கு, பனைவெல்லம் சேர்த்து கஷாயம் செய்து குடித்து வர மார்பு எரிச்சல் குணமாகும்.
5) கடுக்காய் பொடியைப் பற்பொடியுடன் கலந்து பல் தேய்த்து வர ஈறுவலி, வீக்கம், இரத்தம் கசிதல் ஆகியவை தீரும்.
6) மருதாணியை எலுமிச்சம் பழச்சாறுடன் கலந்து பாதத்தின் மீது தடவினால் பாத எரிச்சல் குணமாகும்.
7) செம்பருத்தி இலை, பூ ஆகியவற்றை சேர்த்து அரைத்து தீப்பட்ட புண்ணின் மீது பூசி வந்தால் தீப்பட்ட புண்ணில் ஏற்படும் எரிச்சல் குறையும்.
8) அரைக்கீரை, சிறுபருப்பு, மிளகு சேர்த்து கொதிக்க வைத்து சாதத்தில் கலந்து கொடுத்தால் காய்ச்சல் குறையும்.
9) துளசி விதை மற்றும் திப்பிலி இரண்டையும் பொடி செய்து சாப்பிட்டு வெந்நீர் குடித்து வந்தால் பசியின்மை குறையும்.
10) வெள்ளை எருக்கின் இலைகளை அரைத்து தினமும் காலை, மாலை இரண்டு வேலை பத்து போட கால் ஆணி மறையும்.

No comments:

Post a Comment