Tuesday, June 30, 2015

முருங்கைகாய் சாதம்

தேவையான பொருட்கள் :
சாதம் - 1 கப் 
முருங்கைக்காய் - 5 
நல்லெண்ணெய் - 25 மி.லி. 
மிளகாய் வற்றல் - 2 
எலுமிச்சை பழம் - பாதி 
மஞ்சள் பொடி - சிட்டிகை 
பெருங்காயப்பொடி, தனிவத்தல் பொடி, கடுகு, கறிவேப்பிலை, உப்பு - தேவைக்கேற்ப. 
செய்முறை :

• எலுமிச்சை பழத்திலிருந்து சாறு பிழிந்து தனியாக வைக்கவும். 

• முருங்கைக்காய்களை பெரிய துண்டுகளாக நறுக்கி நன்றாகக் கழுவிய பின், தண்ணீர் விட்டு வேக வைக்கவும். வெந்தவுடன் தோல் விலக்கி, அதன் சதைப்பாகத்தை ஒரு ஸ்பூனினால் வழித்து எடுத்து வைக்கவும். 

• அதனுடன் ஒரு சிட்டிகை மஞ்சள்தூள், காரத்துக்குத் தேவையான தனிவத்தல்பொடி, தேவையான அளவு உப்பு சேர்க்கவும். 

• கடாயில் தேவைக்கு கொஞ்சம் அதிகமாகவே நல்லெண்ணெய் விட்டு கடுகு தாளித்து மிளகாய் வற்றல், கறிவேப்பிலை, சிறிது பெருங்காயத்தூள் சேர்க்கவும். 

• மஞ்சள், வத்தல்பொடி, உப்பு சேர்த்து கலந்து வைத்த கலவையை வாணலியில் இடவும். 

• நன்றாக வதக்கி எண்ணெய் கக்கும்போது தேவையான அளவு எலுமிச்சைச்சாறு கலக்கவும். ஒரு கிண்ணத்தில் முருங்கைக்காய் ஊறுகாயை எடுத்து வைக்கவும். 

• அதே வாணலியில் சிறிது ஊறுகாயோடு கொஞ்சம் சாதம் சேர்த்து கிளறி எடுத்தால் சுவையான முருங்கைகாய் சாதம் ரெடி.

No comments:

Post a Comment